Friday, March 27, 2009

என்னது, செடி வளர்ந்திருச்சா....?

விஜய், "யேய்ய்ய்ய்..."னு பிரஸ் மீட்ல அதட்டுன க்ளிப்பிங்ஸ் ஒன்னு வேல்டு முழுக்க 'ப்ளே' ஆகிட்டு இருக்கு. (இந்த படம் வில்லுவை விட நல்லா ஓடுதாம்) நாலு நாளைக்கு முன்னே இதை பார்த்த அரசியல் பத்திரிகை ஆசிரியர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி, அப்படி என்னதான் கேட்டீங்க அந்த நிருபர்கள் கூட்டத்திலேன்னாரு. கேட்டீங்கன்னு அவரு கேட்டது என்னையில்லே, என்னை மாதிரி நிருபர்களை!

"அது இங்கே நடந்த பிரஸ்மீட் இல்லே. சென்னை நிருபர்கள் விஜயிடம் அப்படி கோவப்படுறா மாதிரி கேட்க மாட்டாங்க. இது திருச்சியில் நடந்த பிரஸ்மீட். அவங்களுக்கு தெரியாதில்லையா, விஜய் இப்படி கேட்டா கோவப்படுவாருன்னு. அதனாலே கேட்டுட்டாங்க" என்றேன் அப்பாவியாக! இப்படி பதில் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? அவரு கோவப்பட்டா நீங்க(ள்ளாம்) விட்ருவீங்களா? என்னய்யா பத்திரிகைகாரங்கன்னு பொறிஞ்சாரு. கேட்க மாட்டோம்னு சொல்றதுக்கே கோவப்படுறாரே, எப்படி கேட்போம்னு தெரிஞ்சா எப்படியெல்லாம் கோவப்படுவாரோ?

நான் பல வருஷமா பார்த்திட்டு இருக்கிற மூத்த பத்திரிகையாளர் அவரு. கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போதே ஏதோ எதிராளியை மடக்கி மல்லாக்கொட்டை திங்க வைச்சுருவாரோங்கிற மாதிரியே இருக்கும். ஒரு முறை விஜயகாந்திடம் இப்படி கேட்டார். "கேப்டன், நான் உங்களை பல வருசமா வாட்ச் பண்ணிகிட்டே இருக்கேன். அப்பப்போ உங்க வீட்டு முன்னாடி கூடுற ரசிகர்களையும் வாட்ச் பண்றேன்"னுட்டு கொஞ்சம் பிரேக் விட்டார். (ஐயய்யோ பெரிய குண்டை போட்டுறப் போறாருன்னு காதை கூர்மையாக்கிட்டு கேட்டால், மீதி கேள்வியை முடிச்சாரே பார்க்கலாம்) "நீங்க அவங்ககிட்டே பழகிற விதமும், அவங்க உங்களை வாழ்த்துறதையும் பார்த்தா உங்களை கருப்பு எம்ஜிஆர்னு சொல்றதிலே தப்பில்லேன்னு தோணுது. இது பற்றி என்ன சொல்றீங்க"ன்னாரு. இதுக்கு விஜயகாந்த் சொன்ன பதில்தான் இன்னும் சிறப்பு. அட போங்கண்ணே... ரசிகர்கள் விரும்புறாங்க. அவங்க ஆசையை ஏன் வேணாம்னு சொல்லணும்?

இது நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கறதால வர்ற தயக்கம், அல்லது பிரச்சனைன்னு கூட சொல்லலாம்.

அஜீத்தை பார்க்க போயிருந்தார் இன்னொரு நிருபர். ஒரு பேச்சுக்கு "என்னண்ணே, நம்ப ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு"ன்னாரு அஜீத். அதுக்கு இவரு வேற ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். இவர் ஒரு பதிலை சொல்லப்போக அப்போதைக்கு (பல்லை கடிச்சிகிட்டு) அமைதியா இருந்த அஜீத், அவரு போன பிறகு விழுந்து விழுந்து சிரிச்சாராம். ஏன்?

"ஆமா ஆமாம். போன தடவை நான் வந்திருக்கும்போது இந்த செடி சின்னதா இருந்திச்சு. இப்போ பாருங்க வளர்ந்து என் தோளுக்கு நிக்குது" என்றார் நிருபர். வேடிக்கை என்னவென்றால், அந்த செடி அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் செடி. பல மாதங்களாக அதே உயரத்துடன் அங்கேதான் நிக்குது. இதைதான் நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார் அஜீத்.

அதே நேரத்தில் கடுமையான கேள்விகளோடு நேருக்கு நேர் மோதுற நிருபர்களும் உண்டு. இதே விஜயிடம் பேட்டியெடுக்க போயிருந்தார் நண்பர் இரா.த.சக்திவேல். முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டுதான்....

எல்லா கேள்விகளுக்கும் வேண்டா வெறுப்பாக ம்... ம்ஹ§ம்... இல்லை... என்று ஒற்றை வரியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சக்தி, "சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் பாட்டுக்கு எந்திருச்சு போயிடுறேன். அதை விட்டுட்டு இப்படி பதில் சொன்னா எப்படி எழுதறது?" என்று கேட்டுவிட்டு விருட்டென்று சீட்டில் இருந்து எழுந்து கொண்டார். அவ்வளவுதான்.... பதறிப்போன விஜய், "ங்ணா ஏன்னா கோவிச்சிக்கிறீங்க? கொஞ்சம் வேற விஷயத்திலே அப்செட்டா இருந்தேன். எப்படி வேணும்னு கேளுங்க, சொல்றேன்" என்றார். அதற்கு பின் அந்த பேட்டி பல மணி நேரம் நீடித்தது.

7 comments:

ARASIAL said...

அது....

AKISAMY said...

romba cinma karankalai putu putu vakiringa.keep it up sir.

Bleachingpowder said...

Interesting article :)) தமிழ்மணத்தில் இனையலாமே

Sridhar said...

arumai. appadiye ella nadigar pathiyum ezuthunga.

வினோத் கெளதம் said...

Nalla irukkunga..

நா.இரமேஷ் குமார் said...

சினிமாவுல இதெல்லாம் சகஜம்ண்ணே...
‍இரமேஷ்

நா.இரமேஷ் குமார் said...

இன்றைய பெரிய பத்திரிக்கை நிரூபர்கள் எப்படி அசின், நயன்தாரா, விஜய் பேட்டியையெல்லாம் பேசாமலேயே எடுக்கறாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?