<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430</id><updated>2012-01-23T19:23:11.347+05:30</updated><title type='text'>அடிக்கடி...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>77</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-1931603030323492577</id><published>2010-07-30T22:13:00.004+05:30</published><updated>2010-07-30T22:20:58.393+05:30</updated><title type='text'>மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...! (மீ‌ள்‌ பதி‌வு‌)</title><content type='html'>&lt;span class="Apple-style-span"   style="  color: rgb(51, 51, 51); line-height: 18px; font-family:Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;font-size:13px;"&gt;&lt;div class="post-body entry-content" style="width: 536px; position: relative; line-height: 1.4; "&gt;&lt;span class="Apple-style-span"    style="font-family:Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif;font-size:6;color:#D52A33;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: normal;font-size:22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="post-header" style="line-height: 1.6; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; "&gt;&lt;div class="post-header-line-1"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="post-body entry-content" style="width: 536px; position: relative; line-height: 1.4; "&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s1600-h/spiritual_comm.jpg" style="text-decoration: none; color: rgb(213, 42, 51); "&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s320/spiritual_comm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355009947611153810" border="0" style="border-top-style: solid; border-right-style: solid; border-bottom-style: solid; border-left-style: solid; border-width: initial; border-color: initial; position: relative; padding-top: 8px; padding-right: 8px; padding-bottom: 8px; padding-left: 8px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(255, 255, 255); border-top-width: 1px; border-right-width: 1px; border-bottom-width: 1px; border-left-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-right-color: rgb(204, 204, 204); border-bottom-color: rgb(204, 204, 204); border-left-color: rgb(204, 204, 204); -webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.199219) 0px 0px 20px; border-top-left-radius: 5px 5px; border-top-right-radius: 5px 5px; border-bottom-right-radius: 5px 5px; border-bottom-left-radius: 5px 5px; margin-top: 0pt; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px; " /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!&lt;br /&gt;&lt;br /&gt;பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?&lt;br /&gt;&lt;br /&gt;டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-1931603030323492577?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/1931603030323492577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=1931603030323492577' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1931603030323492577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1931603030323492577'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/07/blog-post_30.html' title='மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...! (மீ‌ள்‌ பதி‌வு‌)'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s72-c/spiritual_comm.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-5071689668075606929</id><published>2010-07-02T18:12:00.003+05:30</published><updated>2010-07-30T22:04:40.439+05:30</updated><title type='text'>படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/TC3f1JfvJjI/AAAAAAAAAZI/x8Y-G7mmW1E/s1600/nayanthara.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 302px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/TC3f1JfvJjI/AAAAAAAAAZI/x8Y-G7mmW1E/s320/nayanthara.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5489289625009595954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. 'ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது'ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே 'அதோ டாக்டரே வந்திட்டாரேன்'னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். 'தேங்காய் உடைச்சேன். பூ வந்திச்சு. நல்ல சகுனம்'னு ஆனந்த கூத்தாட  வைப்பாங்க. படம் ரிலீஸ் ஆகி நாலாவது வாரத்துல அதே புரட்யூசர், எங்காவது கோயில்ல தேங்கா பொறுக்கிட்டு இருப்பாரு. "பூ வந்திச்சே... பொருள் வந்திச்சா?"ன்னு கேட்கறதுக்கோ, நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ ஒருத்தரும் தயாரா இல்லாததால இதே ஜோசியரு அடுத்த கம்பெனியில தேங்கா உடைப்பாரு. அங்கேயும் தேங்காய்க்குள்ளே பூ இருக்கும்! ஃப்பூ... இதுக்கெல்லாம் மயங்குறமே நினைச்சு ஒதுங்கின ஒரு தயாரிப்பாளரும் இங்க இல்லாததுதான் இவங்க ஆட்டத்துக்கு காரணம். இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒரு ஆட்டம் பாம் வைக்க மாட்டியான்னு நினைச்சுட்டு இருந்த நேரத்திலதான் ஒரு ஜோசியரு மண்டையில நச்சு நச்சுன்னு கேள்வியால அடிச்சு, கிறுக்கு பிடிக்க வச்சுச்சு நயன்தாரா.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யால... அது எப்போ?&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். 'வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்'னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. 'மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்' ன்னு திரியுது ஜோடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதே'ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.&lt;br /&gt;&lt;br /&gt;'நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்'னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. "சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?" வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. "ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு..."ன்னு இழுக்க, 'கோக்' இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, "சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா"ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, "உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?"னாரு முதல் கேள்வியாக.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, 'ரோஸ்'னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. "என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே"ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. "உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?" ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. "நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!"&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். "சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க" என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு 'லாக்' போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம 'பிரசன்னம்' போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. "ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி"ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, "இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு"ன்னாரு விடாப்பிடியாக!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! "இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?"ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு  எடுத்தாரே ஓட்டம்....! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி "நயன்தாரா என்ன சொன்னாங்க?"ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?&lt;br /&gt;&lt;br /&gt;"வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!" &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-5071689668075606929?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/5071689668075606929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=5071689668075606929' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5071689668075606929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5071689668075606929'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/07/blog-post.html' title='படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/TC3f1JfvJjI/AAAAAAAAAZI/x8Y-G7mmW1E/s72-c/nayanthara.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7681264310638017316</id><published>2010-06-12T17:11:00.002+05:30</published><updated>2010-06-12T17:15:21.768+05:30</updated><title type='text'>அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/TBNzQPsW5nI/AAAAAAAAAZA/8C61jeXnKe8/s1600/kamal-hassan4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 248px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/TBNzQPsW5nI/AAAAAAAAAZA/8C61jeXnKe8/s320/kamal-hassan4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5481851894367708786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னை வருத்திக்கிற ஹீரோ தமிழ்சினிமாவுல யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு சொல்லிடலாம், கமல்தான்னு! அவ்வை சண்முகி மட்டுமில்ல, அன்பே சிவம்ல கூட அவரோட மேக்கப்பும் அர்ப்பணிப்பும் அற்புதம். இந்த அதிசயத்தை சிலேட்ல எழுதினாலும் அழிக்க முடியாது. சிஸ்டத்தில எழுதினாலும் வழிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரை கிணறு, அரை கம்பம் இதெல்லாம் அவலத்துக்கான அடையாளம். ஆனால் கமலோட அரை நு£ற்றாண்டு அனுபவம் இருக்கே, அது அரை குறையானது அல்ல. அந்த அரையும் நிறையானது! இவ்வளவு பில்டப்பும் கடைசி பாராவுல என்னாகுதுங்கிற மேட்டருக்கு வர்றதுக்கு முன்னே, அசிஸ்டென்ட் டைரக்டர்களோட அவசியத்தையும் பேசியாகணும். அனுபவத்தையும் பேசியாகணும். (ஹலோ, எங்க அதுக்குள்ளே கடைசி பாராவுக்கு ஓடுறீங்க?)&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டகத்தை உரிச்சாதான் குர்பானி. ஆனா உரிக்காமலே குர்பானியாகிற ஒரே ஜந்து அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான். விடிஞ்சா கல்யாணம், வெளக்கு வச்சா சாந்தி முகூர்த்தம்னு ஒரே நாளில் பெரிய மனுசனாக்கிடுது இல்லறம். ஆனால் இந்த அசிஸ்டென்ட்டுங்க பொழப்பு இருக்கே, விடிஞ்சா பொறப்பு. வெளக்கு வச்சாலும் பொறப்புதான். வருஷத்தை இவங்களும், வருஷம் இவங்களையும் உருட்டி உருட்டி விளையாடிக்கிட்டே இருக்கும். நல்ல வாய்ப்பு வர்றதுக்குள்ளே தல நரைச்சு போறவங்களும், குடல் இளைச்சு போனவங்களும்தான் இந்த ஃபீல்டுல ஜாஸ்தி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு உதவி இயக்குனரானாரு. இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி அவர் ஒரு பத்திரிகையாளர். போன இடத்தில சிங்கம் மாதிரி கர்ஜிக்கறதும், எவ்வளவு பெரிய மனுசனா இருந்தாலும் கேள்விகள கேட்டு அவங்களை கிறுக்கு புடிக்க வைக்கிறதும் அவருக்கு புடிச்ச விளையாட்டு. காலம் அவரையும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக்கிருச்சு. முன்னணி டைரக்டர் ஒருத்தரிடம் உதவி இயக்குனரா சேர்ந்தாரு. ஏவிஎம்ல படப்பிடிப்பு. ஆளை பார்த்து நலம் விசாரிக்கலாம்னு போயிருந்தேன். போன இடத்தில நான் பார்த்த கோலம், மார்கழி மாசத்து மங்கல கோலமில்ல. கத்தரி வெயிலில் கட்டாந்தரையில் போட்ட தண்ணீர் கோலம். புஸ்ஸ§ன்னு வாயிலேர்ந்து பெருமூச்சு வர, ஒரு பெரிய பெட்டிய தலையில வச்சுகிட்டு அந்த யூனிட்டை சுத்தி சுத்தி ஓடி வந்துகிட்டு இருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து போன நான் அவரு பொட்டிய வச்சிட்டு ஒதுங்குற வரைக்கும் காத்திருந்தேன். வந்த பிறகு என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவரு சொன்ன பதில் ஆட வச்சிருச்சு. அது பனிஷ்மென்ட்டாம். டைரக்டர் சொன்ன ஏதோ ஒரு வேலைய செய்யாம விட்டுட்டாரு. டைரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல் வச்சிருக்கிற பொட்டிய தலையில ஏத்தி, சுத்தி சுத்தி வான்னு சொல்லிட்டாரு இயக்குனரு. மண்டைய சுற்றி அறிவு வெளிச்சம் அடிச்சாலும், தொண்டைய மூடிக்கிட்டு சொன்னதை செய்யலேன்னா போயிட்டு வா ராசாதான்! அதனாலதான் பணிவா அந்த வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு டைரக்டரால பிரச்சனை. சிலருக்கு ஹீரோ, ஹீரோயின்னு பலராலும் பிரச்சனை வரும். 'என்னவோ எனக்கு அவன புடிக்கல. அவன் முழியே சரியில்ல. வேற யாராவது அனுப்பி டயலாக் படிக்க சொல்லுங்க' என்று ஹீரோ காய்வார். காஸ்ட்யூம் மாத்துறதுக்குள்ளே கதவிடுக்கால பார்த்திட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணி படம் முடியுற வரைக்கும் பக்கத்திலேயே வராத மாதிரி படுத்துற ஹீரோயினுங்க இருப்பாங்க. அதுக்கு காரணம் செல்போன் கடலைக்கு இடையூறா 'ஷாட் ரெடி மேடம்'னு அடிக்கடி போயிருப்பாரு அந்த பக்கம்! இப்படி அசிஸ்டென்ட் டைரக்டருங்களுக்கு மே மாச வெயிலை மண்டைக்கு அனுப்பிட்டு, டிசம்பர் மாச மழைய கண்ணுல வரவழைப்பானுங்க, அல்லது ....ப்பாளுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்தை பிடிச்சா டை. அதுவே கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நாக்கு தள்ள வைக்கிற டைய்! சிலரோட கண்டிப்பும் இப்படிதான் இருக்கும். ஆனால் அது பர்பெக்ஷனுக்கான பாராயணம்ங்கறது போக போகதான் தெரியும். யானை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டியும் வாலாட்டின கதையா சில டைரக்டர்களும், நடிகர்களும் கோவத்தை வலிய வரவழைச்சுகிட்டு அலட்டிக்கறதும் இங்க நடக்கும். கடந்த பாராவில் நான் சொன்ன விஷயம் அப்படிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கலையை கருவறையா நினைக்கிற கமலுக்கும் அடிக்கடி கோவம் வரும். அவர் நடிக்கிற படத்தில யாரு வேணும்னாலும்  டைரக்டரா இருக்கலாம். ஆனா காட்சியை வரையறுக்கிற அதிகாரம் கமலுக்கு மட்டும்தான். (பாலசந்தர் காலத்தை விட்ருங்க. நான் சொல்றது இப்போ) படத்தில இவர் கோட் போட்டுக் கொண்டு வர்ற காட்சியா இருக்கும். அதில ஒரு மயிரிழை சுருக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவரு அவர். ஷாட்ல கழற்றி அரை நிமிஷம் கழிச்சு திரும்ப மாட்டினா கூட அதுக்குள்ளே அயர்ன் பண்ணியிருக்கணும் அந்த கோட். இல்லைன்னா இஸ்திரி பொட்டி கோபத்தோட சம்பந்தப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டரை  படுக்க வச்சு பரேட் எடுப்பாரு கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு மனசில நினைக்கறதை 'மானிட்டர்' பண்ணுற அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கணும். அவரு கட்டளையிட்டு வாயை மூடுவதற்குள்ளே விஷயம் முடிஞ்சுருக்கணும். இல்லைன்னா ஒரே ஒரு பார்வையிலேயே 'ஒண்ணுக்கு' வர வைக்க முடியும் அவரால். அந்த பார்வையில கலங்கரை விளக்கமும் தெரியும். காசிமேடு அருவாளும் தெரியும். சார் அடுத்ததா என்ன சொல்லப் போறாரோன்ங்கிற அவஸ்தையிலேயே அடி வயித்தில வைப்ரேட்டரோட சுத்தி வர்ற உதவி இயக்குனர்களுக்கு அந்த படத்தின் ரிலீஸ் நேரத்திலதான் சுவாச குழாயே திறக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாப்பட்ட கமல் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சொன்ன பதில்தான் நான் இப்போ சொல்லப்போற விஷயம். அதை படிச்சுட்டு எங்க அந்த நாதாரின்னு விரட்டுனாலும் சரி, இவன்தாண்டா சர்தாரின்னு பாராட்டுனாலும் சரி, அது உங்க விருப்பம். கமல் நடிச்ச ஒரு படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கதை பனிப்பொழியுற ஏதோ ஒரு பிரதேசத்தில நடக்குது. காஷ்மீரோ, ஊட்டியோன்னு வச்சுக்கோங்களேன். ஆனா அப்படத்தின் விட்டுப் போன ஒரு பகுதிய சென்னையில எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா பனி பிரதேசத்தில புகை மாதிரி மிஸ்ட் நடமாடிக்கிட்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணியில் இந்த 'மிஸ்ட்' வரணும்னு நினைச்ச கமல், விறகு கட்டைகளை போட்டு எரிங்கன்னு சொல்லிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம். ஷாட்ல விழாத இடத்தில கட்டைய போட்டு கற்பூரத்தை ஏத்துறதுக்குள்ளே "எங்கய்யா புகை வரலே... வேலை ஆச்சா"ன்னு பத்து முறை குரல் கொடுத்திட்டாரு கமல். அடுத்த முறை அவரு நேர்ல வந்து கத்தறதுக்குள்ளே ஊதி புகையை வர வச்சுரணும்னு நாலைஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து ஊதிகிட்டேயிருந்தாங்க. அதுக்குள்ளே பொசுக்குன்னு அங்க என்ட்ரி கொடுத்த கமல், "என்னய்யா இவ்வளவு நேரம், புகை வந்திச்சா?"ன்னு கேட்க, "ஒரு நிமிஷம் இருங்க சார்"னு சொன்னாரு அந்த உதவி இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கீழே குனிஞ்சு விறகு கட்டைக்கு கேட்கிற மாதிரி, "கமல்ஹாசன்....கமல்ஹாசன்... கமல்ஹாசன்"னு சத்தமா மூணு தடவ கூவுனாரு. பிறகு தலையை து£க்கி, "சார் உங்க பேர சொன்ன பிறகும் பத்த மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?"ன்னு சொல்ல, மத்த அசிஸ்டென்ட்டுகளுக்கு இப்போ பேண்ட் நனையுற அளவுக்கு பதட்டம். ஆனால் கமல் என்ன செஞ்சாரு தெரியுமா? அப்படியே அவரை தீர்க்கமா சில வினாடிகள் பார்த்திட்டு அந்த இடத்திலிருந்தே அகன்றுவிட்டார். அப்புறம் விறகு தானாக எரியுற வரைக்கும் அந்த பக்கமே வரலை!&lt;br /&gt;&lt;br /&gt;சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7681264310638017316?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7681264310638017316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7681264310638017316' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7681264310638017316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7681264310638017316'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/06/blog-post_12.html' title='அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/TBNzQPsW5nI/AAAAAAAAAZA/8C61jeXnKe8/s72-c/kamal-hassan4.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-1771046025247513801</id><published>2010-06-04T21:55:00.002+05:30</published><updated>2010-06-04T21:57:31.752+05:30</updated><title type='text'>ரீமாசென்னும், ஒரு நாகரீக சியர்சும்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/TAkpZDF-DuI/AAAAAAAAAY4/fq3FWcSACtM/s1600/Reema-Sen26.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/TAkpZDF-DuI/AAAAAAAAAY4/fq3FWcSACtM/s320/Reema-Sen26.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5478955931976732386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;'சோழரே...பாடுவீரோ' ன்னு நாக்கை சைசா இழுத்து, கண்ணை லைட்டா செருகி ரீமாசென் கூப்பிடும்போது பாழாப்போற பார்த்திபன் படார் தீடீர்னு ஒரு ஸ்டெப்பு வைப்பாரே, அது ஆட்டம்னு நினைக்கிறீங்க? அதெல்லாம் இல்ல. கடுகு ஒன்ணு மேல விழுந்து கடப்பாரய நசுக்குன மாதிரி ரீமாசென்னோட பார்வை தாங்கமுடியாம பார்த்திபன் போட்ட பல்லாங்குழி பரதம்! யாராயிருந்தாலும் அந்த 'லுக்'குக்கு முன்னாடி மிக்சியில போட்ட மிளகா சட்னிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலுன்னு பேரு வச்சாரு பாரதிராஜா. அதுக்கு பொறுத்தமா மயிலாட்டமே இருந்தாரு ஸ்ரீதேவி. அதுக்கு பிறகு தேவதைங்கிற படத்தில நடிச்ச கீர்த்தி ரெட்டிக்கும், படத்தின் தலைப்புக்கும் அப்படி ஒரு தேவ பொருத்தம். அந்த வரிசையில மின்னலேங்கிற படத்தில அறிமுகமாகி ஆயிரம் வோல்டேஜ் அழகோட ரசிகர்களின் ப்யூசை பிடுங்கின ஒரே அழகி நம்ம ரீமாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பத்திரண்டு தும்ப பூவை, வரிசைக்கு பதினாறா வகுந்து வச்சா அதுதான் அவரோட சிரிப்பு. அதுக்காக பார்க்கிறவங்க எல்லாருக்கும் தும்ப பூ பிரசாதம் கொடுத்தா தப்பா போயிரும்னு ஷ§ட்டிங் ஸ்பாட்ல உம்முன்னே நிப்பாராம் நம்ம ரீமா. இந்த உம் ஒருகட்டத்தில எரிச்சலை உண்டாக்க, வல்லவன் படத்திலே வகையா வேக வச்சாரு சிம்பு. இனிமே அந்தாளு படத்தில நடிக்கவே மாட்டேன்னு அறிக்கை விடுற அளவுக்கு சூடான ரீமா, காத்திருந்து நடிச்ச படம்தான் ஆயிரத்தில் ஒருவன். கோழி செத்தாலும் பரவால்ல, முட்டை உடையாம பார்த்துக்கோன்னானாம் ஒரு முட்டாப்பய. அப்படிதான் ரீமாசென்னை வெயில்ல போட்டு வறுத்தெடுத்தாய்ங்க படத்துல. 'அவுட் புட்' நல்லா வந்தா போதும்ங்கறதுக்காக, 'இன் புட்' கொடுக்கிற மீராவ செம திட்டு திட்டுவாராம் செல்வா. அப்படியிருந்தும் காடு மலையெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கச்சிதமா படத்தை முடிச்சு கொடுத்தது ரீமாசென்னோட பெரிய மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ரிலீஸ். ஆஹான்னு பாராட்டவும், ஓஹோன்னு தாலாட்டவும் மீடியாவுக்குள்ளேயே ஒரே போட்டி. அந்தளவுக்கு ஸ்கோர் பண்ணியிருந்தாரு ரீமா. உங்க நடிப்புக்கு ஒரு ஆஸ்கர். இடுப்பு மடிப்புக்கு ஒரு ஆஸ்கர். கடைசியா வாளெடுத்து சுத்துனீங்களே, அதுக்கொன்னுன்னு பர்மா பஜார் பேட்டரி செல்லு கணக்கா ஆஸ்கர் விருதை மலிவாக்கினாய்ங்க அத்தனை பேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சியா இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தடவயாவது சலவைக்கு போனாதான் பளீர்னு இருக்க முடியும்ங்கறது ரீமாவோட பாலிஸி. இந்த நேரம் பார்த்துதான் பார்ட்டி எப்பம்மான்னு பரபரப்பை கிளப்புனாய்ங்க ரீமாசென்கிட்ட பிரண்ட்ஷிப்பு வச்சிருந்த கோடம்பாக்க ஹீரோக்கள். (அதாரு...?) நுனி நாக்கு இங்கிலீஸ்ல கொஞ்சூண்டு ஒயினை மிதக்க விட்டு வழுக்கி வழுக்கி பேசுறதுல கில்லாடி ஹீரோக்களும் இருக்காய்ங்க இங்க. அவங்ககிட்ட மடங்கி ஒடுங்கி மனசொடுங்கி போறதுல பல நடிகைகளுக்கு தனி கிறக்கமே உண்டு. அப்படிதான் ரீமா கிறங்குவார்னு நினைச்சுது அந்த கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பா கேட்டா அத்தனையும் கொடுக்கிற ரீமா, ஒரு பார்ட்டி கொடுக்க மாட்டாரா என்ன? மவுண்ட் ரோடு பக்கத்தில இருக்கிற ஐந்து நட்சத்திர ஓட்டல். வாட்ச்மேன், செக்யூரிடிங்க கூட இங்க வாஷிங்குக்கு போட்ட மாதிரியே பளிச்சுன்னு இருப்பாய்ங்க. அந்தளவுக்கு சுத்தமான ஓட்டலை அழுக்கு பண்ணுறதுக்காகவே கூடுறது நம்ம கோடம்பாக்க கூட்டத்துக்கு பிடிச்ச விளையாட்டு. டாப் ஹீரோ நாலு பேர விட்டுடுங்க. அதுக்கு அடுத்த ஸ்டெப்ல இருக்கிற ஹீரோ அத்தனை பேரும் ஒண்ணு கூடிட்டாய்ங்க. இந்த பக்கம் அந்தகால ஆன்ட்டிகளில் ஆரம்பிச்சு, இந்த கால 'அடல்ட்'டிகள் வரைக்கும் லிப்ஸ்ட்டிக் மினுமினுக்க வந்திட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாலாட்டுற திமிங்கல கூட்டத்தில வத்திப்போன கருவாடு ஒன்ணும் வந்து சேர்ந்திருச்சு. யாரு அழைச்சதுன்னும் தெரியல. எதுக்காக வந்தாருன்னும் புரியல. மார்க்கெட்ல முன்னணியில் இருந்தாதான் நேர்ல நின்று கொட்டாவி விடுறதுக்கு கூட வாய திறப்பாய்ங்க. அந்தளவுக்கு சந்தர்பவாதிங்க இவய்ங்க. அப்படி ஒரு அந்தஸ்து பேதம் தலைவிரிச்சு ஆடுற கூட்டத்தில நடிக்கிற எல்லா படத்தையும் பிளாப் படமாவே கொடுக்கிற இளம் ஹீரோதான் அந்த வந்திப்போன கருவாடு. ஒரு க்ளு. இவர் சுறா ஸ்டார் விஜய்க்கு ரொம்ப நெருக்கமான ஆளு!&lt;br /&gt;&lt;br /&gt;கிளாஸ்களுக்கு நடுவே நடக்கிற கபடி ஆட்டத்தில, இவரோட கிளாசும் செம சறுக்கல் போட, 90 ப்ளஸ் 90 ப்ளஸ் 90 ப்ளஸ் என்று ஏறிக்கொண்டே போனது அளவு. பக்தி படமா இருந்தாலும் அதுல பதற வைக்கிற க்ளைமாக்ஸ் இல்லாம படம் முடியாது இல்லையா? இங்கயும் அப்படிதான் வந்தது அந்த பதற வைக்கிற க்ளைமாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டைக்குள்ளே மங்காத்தா நடக்கிற ஸ்டேஜ் வந்திருச்சு அத்தனை பேருக்கும். கல்கி ஆசிரமத்தில கர்ண கடூரமா பக்தைகள் சிரிக்கிற கிளிப்பிங்ஸ் ஒன்று யூ ட்யூப்ல வெள்ளிவிழா கொண்டாடுதே, அதே ஸ்டைலில் அசுர சிரிப்பு சிரிச்சுகிட்டே அள்ளி அணைக்க தயாராச்சு ஒரு கூட்டம். ப்ளஸ்சும், மைனசும் கூட்டணி அமைத்துக் கொண்டு காணாமல்போக, ஸ்டடியாக நின்றது ரீமா மட்டும்தான். வந்த அழைப்பையெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டே வந்த ரீமா, பார்ட்டி ஹாலை நோட்டம் விட, வசந்த மாளிகை சிவாஜி மாதிரி, வகை தொகையில்லாம கிளாசையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தோல்விப்பட ஹீரோ.&lt;br /&gt;&lt;br /&gt;சில அரிதான நேரங்களில் லைட் ஹவுஸ் குனிஞ்சு சுண்டலுக்கு கை நீட்டும். அதுதான் நடந்தது அங்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி. பார்ட்டிக்கு வந்து பரிதாபமா குடிக்கிறீயே, அப்படியென்ன கவலை உனக்கு? எங்கிட்ட சொல்லு"ன்னு அரை குறை தமிழ்ல ரீமாசென் ஆறுதல் சொல்ல, அதுவா... அதுவான்னு கேட்டபடியே மாருல சாஞ்சு 'கோ...'ன்னு அழ ஆரம்பிச்சாரு ஹீரோ. அவரு கண்ணை துடைக்கவும், கவலை போக்கவும் துடியா துடிச்ச ரீமா மெல்ல அவரை அணைச்சபடி 'ரஞ்சிதா வைத்தியம்' செய்ய, அத்தனை வருட தோல்விகளும் கண்ணுக்கு வராம கரைஞ்சே போனார் ஹீரோ. அதுக்கு பிறகு அவரு தெளிஞ்சு கண்ண தெறக்கும்போது பக்கத்தில் கிடந்த பஞ்சலோகத்தை அவராலேயே நம்ப முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜோர்லயே மறுநாள் ரீமாவுக்கு போன் அடிச்ச இளம் ஹீரோ, மறுநாள் ராத்திரியும் டாஸ்மாக் சரக்கை குடிச்சுட்டு வாந்தி எடுத்ததுக்கு காரணம், ரீமாவின் இங்கிலீஸ் திட்டுகள்தான் என்பது பல பேருக்கு தெரியாத பதி விரத ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு- கடந்த பதிவுக்கே கடைசியா க்ளு கொடுத்திருந்தேன். இந்த பதிவுக்கு ரொம்ப அலுத்துக்க வேண்டாம். நடிகர் மூன்றெழுத்து ஹீரோவின் உறவினரும் கூட! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-1771046025247513801?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/1771046025247513801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=1771046025247513801' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1771046025247513801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1771046025247513801'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/06/blog-post.html' title='ரீமாசென்னும், ஒரு நாகரீக சியர்சும்...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/TAkpZDF-DuI/AAAAAAAAAY4/fq3FWcSACtM/s72-c/Reema-Sen26.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7471013340580402215</id><published>2010-05-28T15:02:00.002+05:30</published><updated>2010-05-28T15:05:50.349+05:30</updated><title type='text'>கருப்பு நடிகை, கண்றாவி ஹீரோ!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/S_-Oa1AJRKI/AAAAAAAAAYs/JHm86DDay0k/s1600/Lady.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/S_-Oa1AJRKI/AAAAAAAAAYs/JHm86DDay0k/s320/Lady.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5476252263461242018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்களே ரெண்டு மானிட்டர் தெரியுமான்னாரு நண்பர். அவசரப்படாதீங்க, அவரு சொன்னது கம்யூட்டரோட மானிட்டரை! பிடிச்ச நடிகையை வர்ணிக்கும்போது உணர்ச்சி ஓவராகி, வார்த்தைகளை பிரிச்சு மேயும்போதுதான் கண்கள் பற்றி இப்படி ஒரு ஒப்பீடு. இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலேயே கதைகள் படிக்கிற வசதி இருப்பதால் மானிட்டர் என்றதில் தப்பில்லை. ஏனென்றால் அந்த நடிகையின் கண்கள் இருக்கிறதே, அது சொல்லும் கதைகள் ஏராளம்!&lt;br /&gt;&lt;br /&gt;'ஒப்பாரும் மிக்காருமில்லாத...'ன்னு மீட்டிங்ல பேசும்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரு ராதாரவி. அவங்க அப்பாரு இல்லன்னா இவரு எதுக்கு இப்படி கவலைப்படுறாருன்னு அரைகுறையா கேட்பவங்க அதிர்ந்துதான் போவாங்க. அப்படி ஒரு புகழ் மொழியோடுதான் பேசுவாரு எல்லாரையும். நான் சொல்லப் போற நடிகை இருக்காங்களே, அவங்களும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நல்ல நடிகைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்ட முகம், கருப்புக்கே மெருகேத்துற கலர், டயர் சைஸ் இடுப்பு என்றாலும் அதில் ஃபயர் வரவழைக்கும் கவர்ச்சி! நடிப்பில் இவங்க இன்னொரு சிவாஜி. பொம்பளை சிவாஜி என்றே வர்ணிப்பார்கள் பலரும். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் சிவாஜிக்கே 'தண்ணி' காட்டியிருப்பார் நடிகை. அட என்ன ஒரு ஒற்றுமை? இந்த வாரம் நாம் சொல்லப்போவதும் ஒரு 'தண்ணி' மேட்டர்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சா தோட்டத்துக்கு நடுவிலே விளைஞ்ச சவுக்கு மரம், சாய்ஞ்சு சாய்ஞ்சு வளர்ந்த மாதிரி, புகழுக்கு நடுவிலேயே வளர்ந்தவராச்சா? பொசுக்குன்னு கோவம் வரும் எதுக்கெடுத்தாலும். அதாவது வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம். ஷ¨ட்டிங் ஸ்பாட்ல இவங்க கொடுக்கிற அலப்பறைக்கு அளவில்லாம போனாலும், நடிப்புக்காக பொறுத்துக்க வேண்டியதா இருந்திச்சு எல்லாத்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில நடிச்சிட்டு இருந்தாங்க இந்த நடிகை. இவங்களுக்கு ஜோடியா நடிச்சது டாப் மோஸ்ட் ஹீரோக்கள் ரெண்டு பேர். அதில் ஒருத்தருக்குதான் அன்றைய தினம் ஷாட். சாயங்காலம் ஆறு மணிக்கு பேக் அப் என்றாலும், ஷாட்ல இருந்தாதான் நடிகருங்களுக்கு பிடிக்கும். அப்படியில்லாம மேக்கப்பை போட்டு உட்கார வச்சிருந்தா குள்ளமணிக்கே கூட கோவம் வரும். அன்னைக்கு பார்த்து நடிகையோட அலப்பறையில் ஒரு மணி நேரம் உட்கார வேண்டியதாப் போச்சு ஹீரோவுக்கு. எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குளிக்கிற மாதிரி காட்சி. திடீர்னு அங்கு வரும் ஹீரோ, அவரு குளிப்பதை பார்க்காம அப்படியே திரும்பி நின்று சில டயலாக்குகள் பேசணும். அதை குளிச்சுக்கிட்டே நடிகை கேட்கணும். மச மசன்னு நிக்காம மாராப்பை ஏத்தி கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்திட்டாரு நடிகை. தண்ணி தொட்டி, தலைசொம்பு என்று அத்தனையும் ரெடி. நடிகரும் வந்து நின்னுட்டாரு. தலைக்கு தண்ணிய ஊத்த வேண்டிய நம்ம நடிகை, அப்படியே கையை தொட்டிக்குள்ளே விட்டுட்டு குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. "ஏங்க, இப்படி குளிருது. ஒருத்தராவது வென்னீர் வைக்கணும்னு நினைக்க மாட்டீங்களா, எப்படிங்க இதில குளிக்கறது?" என்றார் அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் வள்ளுன்னு விழாத குறையாக. இதை டைரக்டரிடம் கேட்க முடியாது. ஏன்னா அது சிங்கம். இப்பவே சிங்கம்னா பீக் ல இருக்கும்போது யோசிச்சுக்கோங்க. ஆனாலும் பிரச்சனையை காதில் வாங்கிகிட்ட சிங்கம், அசிஸ்டென்டுகளை கூப்பிட்டு "யோவ், அவங்களுக்கு வென்னீர் வச்சுட்டு கூப்பிடுங்கய்யா" என்று தனக்கான சேரில் போய் உட்காந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக்கையே விழுந்தா கூட, வலக்கையால வளைச்சு ஒடிக்கிற ஹீரோ, கேவலம் ஹீரோயினோட குய்யோ முறையோவுக்கு யூனிட்டே அலறுதேன்னு செம கோவமாயிட்டாரு. குளிர்ச்சியான தண்ணி மேல விழுந்தா செத்தா போயிருவான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே தனது சீட்ல போய் உட்கார்ந்திட்டாரு. "தம்பி, எல்லாம் ஆனதும் சொல்லுங்க"ன்னு கட்டிய மாராப்போட தனது நாற்காலிக்கு போயிருச்சு நடிகை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் அந்த ஷாட்டுக்கான வரைபடத்தை சொல்லியே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிலும் கீற்று தடுப்பு. நடுவில் தொட்டி. நடிகை குளிக்கிற ஷாட் என்பதால் அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று அந்த இடத்தையே ஷாமியானா கொண்டு தடுத்திருந்தாங்க. இந்த இடத்தில்தான் தேமே என்று விறகுகளை எரியவிட்டு அந்த தொட்டியை சூடாக்கிக் கொண்டிருந்தாரு அந்த அசிஸ்டென்ட் டைரக்டர். என்ன நினைத்தாரோ, சரக்கென்று சீட்டை விட்டு எழுந்தார் ஹீரோ. நேராக வென்னீர் போடுகிற இடத்துக்கு போனார். தண்ணி சூடாயிருச்சான்னு பார்க்க வந்திருப்பாரோன்னு அசிஸ்டென்ட் நினைக்க, உஷ் என்று அவர் வாயை பொத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும் வராங்களான்னு பார்த்துக்கோ" என்று அந்த தடுப்புக்குள் போய்விட்டார். வென்னீர் பானை. வெளியாளுங்க கவனிக்க முடியாத தடுப்பு. உள்ள போயி ஹீரோ என்ன பண்ண போறாருன்னு லேசா எட்டிப்பார்த்த உதவி இயக்குனருக்கு உதறல் எடுத்திருச்சு. அவரு மட்டுமில்ல, ஒருத்தரும் நினைச்சுப்பார்க்க முடியாத காரியம் 'ஒன்றை' செய்து கொண்டிருந்தார் ஹீரோ. அதுவும் நடிகை குளிக்கப் போற தண்ணீர் தொட்டியில்!&lt;br /&gt;&lt;br /&gt;சைலண்ட்டாக ரெண்டே நிமிடத்தில் காரியத்தை முடிச்சுட்டு தனது சீட்டுக்கு வந்த உட்கார்ந்தவரோட முகத்தில நிம்மதியோ நிம்மதி. கொஞ்ச நேரத்தில ஷாட். நடிகை ஆசையா தண்ணிய எடுத்து மேல ஊத்திக்கிட்டாங்க. முகம், கன்னமெல்லாம் வழிஞ்சுது ஹாட் வாட்டர். அதுக்குள்ளே இருந்த ஹாட் மேட்டர் அந்த ஹீரோவுக்கும், வென்னீர் வச்ச அசிஸ்டென்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்! உதறலோடு இந்த காட்சி எடுக்கப்படுறதை அசிஸ்டென்ட் கவனிக்க, உற்சாகமாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார் ஹீரோ.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கெப்படி தெரிஞ்சுது இந்த மேட்டர்? ஒரு 'ஹாட்' சந்திப்புல நம்பகிட்ட இதை பகிர்ந்துகிட்ட அந்த அசிஸ்டென்ட் டைரக்டரு இப்பவும் அசிஸ்டென்டாதான்யா இருக்காரு!&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு- இன்னுமா அந்த நடிகை யாருன்னு தெரியல? சரிதான் போங்க! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7471013340580402215?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7471013340580402215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7471013340580402215' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7471013340580402215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7471013340580402215'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post_28.html' title='கருப்பு நடிகை, கண்றாவி ஹீரோ!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/S_-Oa1AJRKI/AAAAAAAAAYs/JHm86DDay0k/s72-c/Lady.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-1876466939603862465</id><published>2010-05-22T14:04:00.003+05:30</published><updated>2010-05-22T14:08:28.896+05:30</updated><title type='text'>அறுவுகெட்ட ப்ளேய்... மானங்கெட்ட ப்ளேய்...-வடிவேலு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S_eXrTD1KNI/AAAAAAAAAYk/1dB_LHj-AEc/s1600/Vadivelu13_b.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S_eXrTD1KNI/AAAAAAAAAYk/1dB_LHj-AEc/s320/Vadivelu13_b.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5474010642198636754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகமே உம்முன்னு இருந்தாலும், கவலையே படாம கம்முன்னு இருக்கிறவன் எப்படி நிருபனா இருக்க முடியும்? லைட்டரை எடுத்தமா, லைட்டா பத்த வச்சமான்னு இருந்தாதானே லைஃப்ல ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? நான் பார்த்த பல நிருபருங்க, கேள்வியிலேயே மாஞ்சாவைத் தடவி கரெக்டா கழுத்துக்கு நேரா பறக்க விடுவாங்க. காதறுந்தாலும் செய்தி, கழுத்தறுந்தாலும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு பரபரப்பா செய்தி வேணும். அதுக்காக என் வாய புடுங்காதீங்க"ன்னு தப்பிச்சு ஓடுற அநேக நடிகர் நடிகைகளை அன்றாடம் பாக்கிற கண்ணுதானே இது! சினிமா வட்டாரம்தான் இப்படின்னா, எனக்கு தெரிஞ்ச அரசியல் நிருபருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இது. உதட்டுக்கு மேல 'ப்ரீத்தி'ன்னு பேரு அடிக்காத குறையா பேசிக் கொண்டிருக்கிற நிருபர் அவர். "வாய்யா மிக்சி"ன்னு வாயார அழைப்பாங்க சக நிருபர்கள். அந்தளவுக்கு வாய திறந்தா லொட லொட... பேட்டிக்காக போயிருந்தாரு குமரி அனந்தனிடம். அவர் பரபரப்பா இருந்த நேரம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ்ல ஒலிக்கிற 'கோஷ்டி' கானம் இருக்கே, அது ஒவ்வொரு நாளும் வேஷ்டிய காணோம்ங்கிற மாதிரியே இருக்கும். பல வருடங்களாக நடக்கிற இந்த குருசேத்திர போர், வம்சாவளி சொத்து பத்திரம் மாதிரி! சுட சுட கைமாறுகிறதே தவிர முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நேரத்திலதான் அண்ணாக் கயிறுல அரிவாளை தொங்க விட்ட மாதிரி அபாயமா இருந்திச்சு இவரோட கேள்விகள்! இதுக்கு பதில் சொல்றதா வேண்டாமான்னு யோசிச்ச குமரி, "சரி... முதலில் டீ யை குடிச்சுட்டு பேசுவோம்"னு சொல்லிட்டு சேரை விட்டு எழுந்தார். அப்படியே ஆபிஸ் பாய்க்கு ஆர்டர் போடுற மாதிரியே, "டேய் சாருக்கு டீ வாங்கிட்டு வா..."ன்னு குரல் கொடுத்துக் கொண்டே வெளியே போனார். அவ்வளவுதான், வாசலில் நின்ற காரை ஓட்டிக் கொண்டு அப்படியே வீட்டுக்கே போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலுக்கு போன குமரி வந்திடுவார் என்று அரை மணி நேரம் காத்திருந்த நிருபருக்கு அப்புறம்தான் சந்தேகமே வந்தது. ஒருவேளை அண்ணனே பிளாஸ்கை எடுத்துக் கொண்டு கடைக்கு போயிட்டாரோ என்கிற அளவுக்கு மிகைப்பட்ட சந்தேகம் அது. (ரொம்பதான்...) நேரம் ஓடிக்கொண்டிருக்க மெல்ல தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தால் வாசலில் ஒரே ஒரு பெரிசு உட்கார்ந்து கொண்டு பழைய பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தார். "ஏங்க... அண்ணன் எங்க?" இது நிருபர். "யாரு... குமரியண்ணனதான கேக்கிறீங்க? அவரு போயி அரை மணி நேரம் ஆச்சே"ன்னாரு பெருசு. அவ்வளவுதான் ஷாக்காகி போச்சு நிருபருக்கு. நம்ம வாழ்க்கையில எத்தனையோ கேள்வி கேட்டு பதில வாங்கியிருக்கோம். ஆனால் இப்போ கிடைச்ச பதில்...? சாமீ கொடூரம்டான்னாரு மனசுக்குள்ளே.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவை பார்க்க போன இன்னொரு நிருபரின் அனுபவம் இது. வாங்கண்ணேய்...னு வடிவேலுவே வரச்சொல்லி நேரமும் கொடுத்திருந்தார். சொன்ன நேரத்தில டாண்ணு போயி நின்னுட்டாரு நிருபர். 'உட்காருங்க' என்று நியூஸ் பேப்பரை கையில கொடுத்திட்டு அவரு வேலையை பார்த்திட்டு இருந்தாரு ஆபிஸ் பாய். வாசலை பார்க்கறதும், பேப்பரை நோக்கறதுமாக நிருபரோட நிமிடங்கள் கரைஞ்சுகிட்டேயிருந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு இருந்திருந்தா வாத்து பொரியலில் இருந்து, வடகறி வரைக்கும் மரியாதை 'மணக்கும்!' இவய்ங்க ஒரு டீ குடின்னு கூட சொல்லலியேன்னு ஒரு பக்கம் எரிச்சல். வரச்சொன்ன மனுசன் டாண்ணு வரணுமா வேணாமான்னு மறுபக்கம் புகைச்சல். இப்படியே அரை மணி நேரம் போச்சு. திடீரென்று வாசல் பக்கம் வந்து நின்றது வடிவேலுவின் கார். முன் டயரை பார்த்ததும் நிருபரின் முகத்தில் நிம்மதி நம்ம சாய்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளேயிருந்து பார்த்தா முன் டயரும், கொஞ்சம் காரும் தெரியும். அவ்வளவுதான். அதை பார்த்ததற்கே இத்தனை சந்தோஷம். ஆனால் கார் வந்து நின்று பல நிமிடங்கள் ஆகியும் வைகை புயல் ஆபிசுக்குள் வருவதற்கான ஒரு சின்ன அசைவு கூட தெரியவில்லை. மறுபடியும் வாட்ச். புரட்டி புரட்டி பார்த்த பேப்பரையே திரும்ப ஒரு முறை பார்ப்பது என்று ஆயாசத்தின் உச்சத்துக்கே போனார் நிருபர். "என்னங்க இப்படி பண்றீங்க?" என்று கேட்டுவிடுகிற அளவுக்கு கோபம் கொப்பளிக்க, செல்போனை எடுத்து நம்பரை போட்டால் எதிர்முனை செம பிஸி. இப்படியே மணிக்கணக்கில் நீண்டு கொண்டிருக்க, விரல் நகத்தையெல்லாம் கடித்து துப்பியிருந்தார் நிருபர்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;முக்குல இருக்கிற கடைக்கு மூணு தெருவ சுத்தி போன மாதிரி, அனலடிக்குது நிருபருக்கு. வந்தா குறைந்த பட்ச கோவத்தையாவது காட்டிடணும் என்று முடிவெடுத்தபோதுதான் தெப்பலாக நனைந்தபடி உள்ளே வந்தார் வடிவேலு. "அறுவுகெட்ட ப்ளேய்... (பயலேவைதான் இப்படி) மானங்கெட்ட ப்ளேய்..." என்பதோடு நில்லாமல் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டே வந்து நிருபர் முன் உட்கார்ந்தார். "அண்ணேய், கோவிச்சுக்காதீங்க. பயபுள்ள ஒரு வேலைய செஞ்சுபுடுச்சு" என்றவர் ஏன் லேட் என்பதை விளக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமா ஆபிஸ் வந்ததும் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி விடுவாராம் வடிவேலு. டிரைவர் கதவை பூட்டிக் கொண்டு தம்மடிக்க கிளம்பிவிடுவார். முதலாளிக்கு எதிரே குடிக்க முடியாத ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து தணிப்பது மாதிரி ஒரே நேரத்தில் ஆறேழு சிகரெட்டை இழுத்து தள்ளிவிட்டு அப்படியே ஒரு டீயையும் குடித்துவிட்டுதான் ஆபிசுக்குள்ளேயே வருவாராம். சம்பவ தினத்தன்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாராம் வடிவேலு. இவர் காருக்குள்ளிருப்பதை  கவனிக்காத டிரைவர் 'முதலாளி இறங்கிட்டாரு'ன்னு நினைச்சு கதவை பூட்டிட்டு கிளம்பிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;போன டிரைவர் சும்மா போகாமல் ஏசியையும் ஆஃப் பண்ணிவிட்டு போனதால் வேர்த்து விறுவிறுத்துப் போன வடிவேலு, தொப்பலாக நனைந்திருந்தார் காருக்குள்ளேயே. டிரைவருக்கு போன் அடித்தால் ஊருக்கு போன் பண்ணி யாருக்கோ கடலை போட்டுக் கொண்டிருந்தாராம் அந்த மனுஷன். அந்த நேரத்தில்தான் நம்ம நிருபரின் போனும் வடிவேலுவுக்கு போயிருக்கிறது. இப்படி தொலை தொடர்பே கொலாப்ஸ் ஆகிற அளவுக்கு மூவரும் மாறி மாறி தொடர்பு கொண்டதால், அடித்த 'தம்'மை அப்படியே 'கட்' பண்ணிவிட்டு ஓடோடி வந்து கதவை திறந்தாராம் டிரைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதாண்ணே லேட்டு..."ன்னாரு வடிவேலு. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-1876466939603862465?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/1876466939603862465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=1876466939603862465' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1876466939603862465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1876466939603862465'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post_22.html' title='அறுவுகெட்ட ப்ளேய்... மானங்கெட்ட ப்ளேய்...-வடிவேலு'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S_eXrTD1KNI/AAAAAAAAAYk/1dB_LHj-AEc/s72-c/Vadivelu13_b.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-565962025655727867</id><published>2010-05-15T14:48:00.004+05:30</published><updated>2010-05-15T14:52:20.521+05:30</updated><title type='text'>ஹீரோக்களே விரும்பும் ஹீரோ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S-5nWxKYuCI/AAAAAAAAAYc/vWXxyq6IKu0/s1600/nayagan_3_1115200791303123.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S-5nWxKYuCI/AAAAAAAAAYc/vWXxyq6IKu0/s320/nayagan_3_1115200791303123.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5471424238153414690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;'துன்பம் வரும் வேளையில சிரிங்க. என்று சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க...' இப்படி துன்பம் வரும் வேளையில் சிரிப்பதற்கென்றே ஹீரோ ஒருத்தரு ஒரு உபாயம் வச்சிருந்தாரு. அது உபாயமா? அபாயமா? படிச்சிட்டு நீங்களே சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர சொன்னாலும் பேர சொல்லாதீங்கன்னு சொல்லுது ஒரு புத்தி. பேர சொன்னாலும் ஊர சொல்லாதீங்கன்னு சொல்லுது இன்னொரு புத்தி. அட, ஒன்னுமே சொல்லாதய்யான்னு வேறொரு புத்தி குறுக்கே வராத வரைக்கும் ஓகே.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ பெயரை எழுதினா நிஜமாகவே அவருக்கு சிக்கல். அதனால பெயரை மட்டும் விட்டுடலாம். ஆறடி உயரம். காபித்து£ள் கருப்பு. இதுதான் ஹீரோவோட அவுட் லுக். (க்ளு போதும்னு நினைக்கிறேன்) இவருக்கு எப்பவாவது மனசு விட்டேத்தியா இருந்திச்சுன்னா இரண்டு படங்களை உடனே பார்த்து மனசுக்கு மருதாணி போட்டுப்பாரு. இதுக்காகவே அவருடைய காரில் காஸ்ட்லியான டி.வி ஒன்றையும் ஃபிக்ஸ் பண்ணியிருந்தாரு. தன்னம்பிக்கையூட்டுற எந்த படத்தையாவது போட்டு பார்த்திருப்பாரு. அது எதுவா இருக்கும்னு நீங்க மண்டையை பிய்ச்சு, மனக்கணக்கு போட வேண்டாம். அவரு பார்க்கிற அந்த படங்கள் வேறு டைப். கெக்கேபிக்கேன்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிற ஹீரோக்களின் படங்கள்தான் அவை. ஒன்று ஏழிசை ஏந்தல், அஷ்டாவதானி, அடுக்கு மொழி பாவலன் விஜய டி.ஆர் நடித்த வீராசாமி. மற்றொன்று வீரத்தளபதி, விருந்தோம்பலரசன் ஜே.கே.ரித்தீஷ் நடித்த கானல் நீர்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெண்டு படங்களையும் ஒரு சீன் விடாமல் பார்த்துட்டு காரில் இருந்து கீழே இறங்கும்போது ஈஷா, கல்கி, நித்தி, இன்னும் சாருநிவேதிதா 'பின்னாடி' அர்ச்சனை பண்ணப்போற அத்தனை சாமியார்களிடமும் யோகா படிச்ச புத்துணர்ச்சி கிடைத்திருக்கும் அவருக்கு. அவ்வளவுதான், இந்த நாள் இனிய நாள் என்று அன்றைய தினத்தை அரட்டையிலேயே கழிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;விதிக்கு வேலி போட்டு தடுத்தாலும், புடுங்கி வச்சுட்டு புகுந்திரும் அல்லவா? அது மாதிரி ஒரு இன்சிடென்ட். ஒரு நாள் செம மூட் அவுட் ஆன கருப்பு ஹீரோ, தனது ஃபிரண்ட்ஸ் பட்டாளத்தையும் இழுத்துக்கொண்டு ஒரு பிரிவியூ தியேட்டருக்கு போனார். இத்தனை நாளும் காருக்குள்ளேயே இருந்து இந்த சூப்பர் ஸ்டாருங்களை ரசிச்சோம். அகன்ற வெண் திரையில் இவங்களை ரசிச்சா என்ன? இப்படி ஒரு 'தாட்' வந்ததுதான் தாமதம். தாட் பூட்டென்று செயலில் இறங்கிவிட்டார் ஹீரோ.&lt;br /&gt;&lt;br /&gt;தி நகரில் இருக்கும் பிரிவியூ தியேட்டர் அது. நண்பர்களோடு காரைவிட்டு இறங்கும் போது கூடவே ஒரு டாஸ்மாக் கடையையும் கீழே இறக்கினார் ஹீரோ. மருந்தில்லா மருத்துவத்தை சித்தர்கள் சொல்லிக் கொடுத்தாலும், 'மருந்து' இல்லா வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியுமா தமிழனால்? நண்டு, நத்தை, காடை, கவுதாரி ஃபிரைகளுடன் கனஜோராக இறங்கியது மேற்படி டிவிடி இரண்டும். தியேட்டரில் உள்ள புரஜக்டர் உதவியுடன் படத்தை பார்த்து பரவசப்படுறதுதான் ஹீரோவின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய ஹீரோ, சும்மா கிடக்கிற தியேட்டர். வாடகைக்கு வாடகை ஆச்சு. பெரிய ஹீரோவின் பிரண்ட்ஷிப்பும் ஆச்சு. இப்படியெல்லாம் கணக்கு போட்ட தியேட்டர் மேனேஜர் கதவை அகல திறந்து அராத்து பார்ட்டிகளை உள்ளே அனுமதிச்சார். முதல் ஷோ கானல் நீர். ரித்தீஷ் ஸ்கிரீனில் தோன்றும்போதெல்லாம் உற்சாகமாக விசில் அடித்து கொண்டாடினார் ஹீரோ. வந்த வேலையை பார்ப்போம் என்று 'உள்ளே' தள்ளிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் விஷயம் எப்படியோ ரித்தீஷ் காதுக்கு போய்விட்டது. அவ்வளவு பெரிய நடிகர் தியேட்டரை வாடகைக்கு எடுத்து நம்ம படத்தை பார்க்கிறார்னா எவ்வளவு பெரிய விஷயம். அந்த ஹீரோவுக்கு நாம மரியாதை செய்ய வேணாமா? பாண்டி பஜார்ல சொல்லி பெரிய மாலையா கட்டுங்கப்பா என்று தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் ரித்தீஷ். இந்த நேரத்தில் இவரை பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க புட்டிப்பாலுக்கு ஆசைப்பட்டால், புலிப்பாலே கொடுக்கிற அளவுக்கு வள்ளல். எம்ஜிஆருக்கு பிறகு, சினிமா தொழிலாளிங்களுக்கு பரவசத்தை கொடுக்கிற ஒரே நபர், இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் ரித்திஷ் மட்டும்தான். ஒண்ணுமில்லாத புல்லுங்க கூட, சும்மா வில்லுங்க மாதிரி விடைச்சுகிட்டு நிக்குதுன்னா இவரு தர்ற உற்சாகம்தான் அதுக்கு காரணம். அப்படிப்பட்ட மனுஷனுக்கு தன்னை நேசிக்கிற(?) ஹீரோவை சும்மா விட்டுவிட தோணுமா. தனது படை பரிவாரங்களுடன் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கே வந்திட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;மழையடிக்கிற நேரத்தில மடையும் புட்டுகிட்டா என்னாகும்? ஆடிப்போயிட்டாரு தியேட்டர் மேனேஜரு. அவசரமா உள்ளே போக வந்த ரித்தீஷை, "சார் ஒரு நிமிஷம் உட்காருங்களேன்" என்று நைசாக ஆபிஸ் ரூமில் உட்கார வச்சுட்டு உள்ளே ஓடினார். காதோடு காதாக விஷயத்தை சொல்ல, ஆடிப்போனார் ஹீரோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரம் அவசரமாக குடி மடத்தை மூடினாங்க அத்தனை பேரும். சீட்டுக்கு அடியில் சிறைபட்டன முனியாண்டி விலாஸ் ஐட்டங்கள். வாய், முகத்தையெல்லாம் துடைச்சுகிட்டு சைலண்ட்டா படத்தை ரசிக்க ஆரம்பிச்சாரு ஹீரோ. வெளியே ஓடிய மேனேஜர், சார் இப்போ உள்ளே போங்கன்னு சொன்னதும் கம்பீரமாக உள்ளே வந்தார் ரித்தீஷ். கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க ரெண்டு பேரும். கொண்டு வந்த பெரிய மாலையை போட்டு போட்டோவும் எடுத்துகிட்டாங்க. (ஹ§ம், இது வேறயா)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அந்த ஷாட்ல உங்க பர்ஃபார்மென்ஸ் அற்புதம்னு பாராட்டுனாரு ஹீரோ. என் நடிப்புக்கு நீங்கதான் டிப்ஸ் கொடுக்கணும்னாரு ரித்திஷ். இத்தனை நேரம் அங்க நடந்த கலவரத்தை பார்த்த பிரண்ட்ஸ், இந்த பரஸ்பர பாராட்டுதல்களில் அதுவரை அடித்த அத்தனை திரவியங்களின் பெருமையையும் மறந்தே போனாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு காமெடியா இருந்த ரித்தீஷ், இன்னைக்கு முக்கியமான எம்.பி!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில இவரை ஸ்கிரீன்ல பார்த்து எம்பி எம்பி குதிச்சு சிரிச்ச ஹீரோ, இன்னிக்கு எம்.பி சார்னு சொல்ற அளவுக்கு கொண்டு வந்திருச்சு காலம். அதுக்கு காரணம் வெறும் ரித்தீஷ் மட்டுமில்ல, அவருக்கே தெரியாம அவரு மனசுக்குள்ளேயிருந்து அள்ளிக் கொடுக்க வைக்கிற அந்த மகா பெரிய கர்ண மவராசன்தான்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-565962025655727867?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/565962025655727867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=565962025655727867' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/565962025655727867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/565962025655727867'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post_15.html' title='ஹீரோக்களே விரும்பும் ஹீரோ?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S-5nWxKYuCI/AAAAAAAAAYc/vWXxyq6IKu0/s72-c/nayagan_3_1115200791303123.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4041973851286260712</id><published>2010-05-12T23:11:00.002+05:30</published><updated>2010-05-12T23:15:56.335+05:30</updated><title type='text'>பீர் குடிச்ச பெருச்சாளி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/S-rpSMQ0SgI/AAAAAAAAAYU/3tm08AGg46E/s1600/ranjith-14.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/S-rpSMQ0SgI/AAAAAAAAAYU/3tm08AGg46E/s320/ranjith-14.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5470441196133566978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;காத்திருத்தல் சுகம்தான். ஆனால் எங்கே என்பதை பொறுத்துதான் அது சுகமா, சோகமா என்ற முடிவுக்கு வர முடியும். அதுவும் எங்களை மாதிரி நிருபனுங்களுக்கு கடிகார முள்ளுல காரப் பொடிய தடவுன மாதிரி ஒரு கோவமும், அலட்டலும் இருந்துகிட்டே இருக்கும். "ஏங்க... எவ்வளவு நேரம்ங்க இவய்ங்களுக்காக காத்துகிட்டு கிடக்குறது?" என்று கோவப்படும் நிருபருங்க. கோவிச்சுட்டு போனதா மட்டும் பொரணியும் இல்ல. பரணியும் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறிப்போன அப்பளத்தை மளுக்குன்னு முறிச்சிர முடியுமா? கடிகாரத்தை பார்த்து பார்த்து கர்புர்ருன்னு கோவப்பட்டாலும், நமத்துப்போன அப்பளம் மாதிரியேதான் போவுது எல்லாருடைய பொழப்பும். நான் கடவுள் பிரஸ்மீட்டுக்கு மூணு மணி நேரம் லேட்டா வந்தாரு பாலா. படமெடுக்கிற விஷயத்துலயும் அப்படிதான் என்றாலும், இந்த லேட் கோட் போடாத வக்கீல் மாதிரி கோவப்படுத்துச்சு ஒரு நிருபரை. "பாலா... உங்களுக்காக நாங்க காத்திருக்கலாம். உங்க படத்தோட ஹீரோயினுக்காக காத்திருக்கணுமா?" என்றார் கீழே விழுந்தாலும், முட்டியில சிராய்ப்பு இல்லங்கிற மாதிரியே. பாலா வரலாமாம். பாவம், அந்த பொண்ணு வரக்கூடாதாம். (பார்றா)&lt;br /&gt;&lt;br /&gt;நண்டுக்கு எட்டுக்காலு. நத்தைக்கோ வயிறுதான் நடமாட்டம்! இந்த பெரிசு சிறுசு வித்தியாசம் பத்திரிகைகாரங்களுக்கும் உண்டு. சரக்கடிக்கிறதுல துவங்கி, சைட் டிஷ் கடிக்கிற வரைக்கும் ஒரு தாய் மக்களா இருப்பாங்க சில நடிகருங்க. யாருகிட்ட தெரியுமா? முன்னணி நாளிதழ், வார இதழ் நிருபர்களிடம் மட்டும். "...தோ அண்ணனே வந்திட்டாரே"ன்னு ஆறடி உடம்பும் வளைஞ்சு நெளிஞ்சு வரவேற்கிற நாடகமெல்லாம் நடக்கும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் ஒருவருக்கு நேர்ந்த 'லேட்' மேட்டர்தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சித் என்றொரு நடிகர் இருந்தார். பிரசன்ட் டென்ஸ்சை கொஞ்சம் எரிச்சலில் ஊறப்போட்டு சொன்னால் இருக்...கி....றார் இப்போதும்! இவர் வீட்டுக்கு திடீரென்று போய்விட்டார் நம்ம நிருபர். வாசலில் வண்டியை நிறுத்தும்போதே வீட்டுக்குள் இருக்கும் ரஞ்சித்தை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டார் நிருபர். ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே போனால் ஷாக். வரவேற்றது ரஞ்சித் அல்ல. அவரது அம்மா. "தம்பி குளிக்குது. கொஞ்ச நேரம் ஆவும். உட்கார்றதுன்னா இருங்க. இல்லேன்னா அப்புறம் வாங்களேன்"னாங்க. அதனால என்ன? பரவாயில்ல. நான் இருக்கேன்னு சொல்லிட்டு வாசலில் கிடந்த சேரில் நிரம்பினார் நிருபர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடிகாரம் அது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, பொழுது போகாமல் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார் நிருபர். நேரம் ஓடியதே தவிர குளிக்கப் போன ரஞ்சித் வருவதாக காணோம். இந்த நேரத்தில் நிருபரின் பெருமையையும் நாம் சொல்லியாக வேண்டும். இவர் வந்தால்தான் ப்ரிவியூ தியேட்டரில் படமே போடுவார்கள். மற்ற நிருபர்கள் "அதான் நாங்கள்ளாம் வந்திட்டமே, படத்தை படத்தை போடக் கூடாதா" என்றால், "அண்ணன் இன்னும் வரலீங்களே" என்பார்கள். அந்தளவுக்கு முக்கியஸ்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்காவது ஏதாவது வேலையாக இவர் நடந்து போய் கொண்டிருந்தால் கூட, அண்ணன் நடந்து போறாரே என்று பதறும் விவிஐபி கள் வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றிக் கொள்கிற அளவுக்கு முன்னணி இடத்திலிருப்பவர். இப்படிப்பட்டவர்தான் ரஞ்சித் வீட்டு வாசலில் கிஞ்சித்தும் கோபம் காட்டாமல் உட்கார்ந்திருந்தார். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஓடிப்போனது இப்படியே. திடீரென்று வீட்டிலிருந்து வெளியே வந்த ரஞ்சித்தின் அம்மா, "தம்பி பாத்ரூம்ல இருக்கும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே வெளியே போயிருச்சு போல. எப்ப வரும்னு தெரியல" என்று ஒரு குண்டை போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேணாம்னு நினைச்சா உலகத்துக்கே கலகத்தை மூட்டுற ஆளு நாம. நமக்கேவா? என்று சிரித்துக் கொண்ட நிருபர், அம்மா வீசிய அணு குண்டை கோலி குண்டு மாதிரி கையில் பிடித்து திரும்பி அதே வேகத்தில் அடித்தார். "அதனால என்னம்மா? தம்பி வர்ற வரைக்கும் நான் இங்கேயே இருந்து பார்த்திட்டு போறனே..."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளேயிருந்து இந்த பதிலை கேட்ட ரஞ்சித் பீர் குடிச்ச பெருச்சாளி மாதிரியானார். ஐயய்யோ, வசமா மாட்டிக்கிட்டமோ என்று நகத்தை கடித்து துப்பினாலும், அண்ணனின் பொறுமை அரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது என்ற நம்பிக்கையும் அவருக்கு. ஒரு பந்தாவுக்காக யாரையும் காத்திருக்க வைப்பதுதான் இவரது வாடிக்கை. ஆனால் அதுவே கொஞ்சம் எல்லை மீறி விட்டதுதான் இந்த சம்பவத்தில் வேடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை அசால்டாக உட்கார்ந்திருந்த நிருபர், சந்து வழியாக கூட ரஞ்சித் வெளியே போய், மீண்டும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று பார்வையை சுழல விட்டபடி அமர்ந்துவிட்டார். போன் வந்தால் கூட அதில் பேசுகிற பொறுமையையும் இழந்து கண்காணிக்க ஆரம்பித்தார். அவரது கண்களே ஒரு லைட் ஹவுஸ் போல நாலாபுறமும் சுழல, சுழல, மிரள ஆரம்பித்தார் ரஞ்சித். இப்படியே போனது முக்கால் மணி நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சித் புத்தியில வத்திய கொளுத்தி வச்சா கூட இப்படி ஒரு புகை வராது காது வழியே. அப்படி ஒரு புகையை கக்குறாரு மனுஷன் உள்ளேயிருந்து. இருமினால் கூட எங்கேன்னு கேட்பாரோ என்ற பயத்திலேயே கழிந்தது இன்னும் முக்கால் மணி நேரம். இரண்டு பேரும் இப்படி விடாக் கண்டன் கொடாக் கண்டன்களாக நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்க, உள்ளே என்ன நடந்ததோ? பொசுக்கென்று வெளியே வந்தார் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி வெளியில போயிருச்சுன்னு நினைச்சேன். ஆனா தம்பி உள்ளதான் பெட்ரூம்ல து£ங்கிட்டு இருக்கு. நாந்தான் கவனிக்கல. வாங்க தம்பிய எழுப்பலாம்"னு நிருபரை கூப்பிட, சைலண்டாக சிரித்துக் கொண்டே உள்ளே போனார் நிருபர். நிஜமா து£ங்குனா எழுப்பலாம். இது வேறு து£க்கமாச்சே. ரொம்ப சீரியஸ் ஆக குறட்டையெல்லாம் விட்டு சூழ்நிலைக்கு யதார்த்த வண்ணமடித்தார் ரஞ்சித். ஒருவழியாக எழுந்து "அண்ணே... எப்பண்ணே வந்தீங்க. சொல்லியிருந்தா நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே" என்றார் து£க்கமும், கொட்டாவியுமாக!&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி உங்க பர்ஃபார்மென்ஸ் பிரமாதம். அத நேர்ல சொல்லலைன்னா எனக்கு து£க்கம் வராது(?) போலிருந்துச்சு. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். பெரிய ஆளா வருவ தம்பி"ன்னு நக்கலாக ஆசிர்வாதம் பண்ணிட்டு விறுவிறுவென்று வெளியே நடந்தார். பின்னாடியே "அண்ணே, இருங்க. ஒரு வாய் காபி" என்று ரஞ்சித் ஓடிவர அந்த காபியை மட்டுமல்ல, ரஞ்சித் நடித்த காப்பியங்களை கூட அதன்பின் சீண்டுவதில்லை நிருபர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரிய மனுசங்க வீட்டு உரலுக்கே இடிபடாத நம்மாளு, ஒரு சின்ன பாக்கு வெட்டிகிட்ட, மாட்டிகிட்ட இந்த சம்பவம் உங்களுக்கு எதை உணர்த்துது? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-4041973851286260712?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/4041973851286260712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=4041973851286260712' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4041973851286260712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4041973851286260712'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post_12.html' title='பீர் குடிச்ச பெருச்சாளி'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/S-rpSMQ0SgI/AAAAAAAAAYU/3tm08AGg46E/s72-c/ranjith-14.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-2509689363053787636</id><published>2010-05-08T22:48:00.003+05:30</published><updated>2010-05-08T22:55:56.077+05:30</updated><title type='text'>மிட் நைட்டில்  ஒரு மியூசிக் கம்போசிங்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/S-WeLS327hI/AAAAAAAAAYM/OllhNNtxQ9o/s1600/on-the-keyboard_size_800x600.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/S-WeLS327hI/AAAAAAAAAYM/OllhNNtxQ9o/s320/on-the-keyboard_size_800x600.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5468951239393209874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரிகமபதநி... ய சரியாச் சொன்னவங்களே அடுத்த நாள் பேப்பர்ல, அதுவும் ஆறாம் பக்கத்துல 'காணவில்லை' அந்தஸ்துக்கு வந்திர்றாங்க. இந்த லட்சணத்தில ஒரு படத்துக்கு மியூசிக் போட்டு, இரண்டாவது படத்துக்கு டைரக்டர தேடி, மூணாவது படம் வர்றதுக்குள்ளே ஆர்மோனிய பொட்டிய அடகு வைக்கிற அளவுக்குதான் இருக்குது புது இசையமைப்பாளருங்களோட போட்டியும், அவங்களை வழி நடத்துற வறுமையும்! இதுல வந்த வாய்ப்பை விடவும் முடியாம, போன இடத்துல ஆர்மோனிய பொட்டிய தொடவும் முடியாம தவிச்ச இசையமைப்பாளரோட கண்ணீர் கதைதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;ம-வில் ஆரம்பிக்கும் இவரது பெயர், ர்-ல் முடியும்னு சொன்னாலும் ஈசியா கண்டுபிடிக்க முடியாது உங்களால. அதுவும் நல்லதுக்குதான்னு அடுத்த வரிக்கு போவலாம். இவரு இசையமைச்ச முதல் படம் சுமாரா போச்சு. ஆனா சூப்பரா போச்சுன்னு விளம்பரமும் கொடுத்தாங்க. அந்த படத்துல ஒரு அரசியல்வாதியும் நடிச்சதால ஒரு டிக்கெட் வாங்கினா அதுவே இலவசம். அதுக்கொரு பிரியாணியும் இலவசம்னு படத்தை ஓட்டினாரு அவரு. சில தியேட்டர்ல முன்னாடி உட்காந்திருக்கிறவன குனிய வச்சு அவன் முதுகுல பிரியாணி பொட்டலத்தை பிரிச்சு வச்சு திங்கிற அளவுக்கு குவார்ட்டரையும் குடுத்து கொண்டாட விட்டுடாய்ங்க ரசிகருங்களை. அவரோட அடுத்த படத்துக்கும் இவர்தான் மியூசிக்குன்னு புக் பண்ணியிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படத்திலேயே நல்ல சம்பளம், கம்போசிங், மிக்சிங்குன்னு ஏராளமா செலவு பண்ணியிருந்தாரு பொலிட்டிஷியன். அதனால் இந்த படத்துக்கும் நல்லா செலவு செஞ்சு நம்ம பேர நிலை நாட்ட விட்ருவாருன்னு நம்பி தலைய ஆட்டுனாரு நம்ம மியூசிக் டைரக்டரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஈசிஆர் ரோட்ல ஒரு பிரமாதமான கெஸ்ட் அவுஸ்ல கம்போசிங்கை வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு அரசியல்வாதி. தனது வாத்திய கோஷ்டியோடு போய் சேர்ந்திட்டாரு மியூசிக் டைரக்டர். போன இடத்திலே அவருக்கு கிடைச்ச அனுபவம் இருக்கே, அதை அனுபவிச்சதுக்கு பதில் கோவேறு கழுதைக்கு குனிஞ்சு குனிஞ்சு கொலுசு கட்டியிருக்கலாம். அப்படி ஒரு பேரவஸ்தை!&lt;br /&gt;&lt;br /&gt;சர்புர்ருன்னு வண்டிங்க வந்து நின்னுச்சு. உள்ளேயிருந்து இறக்கப்பட்ட ஐட்டங்கள் எதுவும் அந்த சூழ்நிலைக்கு பொருந்தற மாதிரி இல்ல. உசிரோட கிடந்திருந்தா ஊருபட்ட புள்ளைங்களை பெத்திருக்கும். அப்படி ஒரு கிடாவை வெட்டி கொழம்பு வச்சிருந்தாய்ங்க. இந்த பக்கம் தந்து£ரியில அவிஞ்சு தகதகன்னு கெடக்குது வெடக்கோழிங்க கூட்டம். இதையெல்லாம் பார்த்த மியூசிக் டைரக்டருக்கு சரிகம வருமா, அல்லது ஜலம்தான் வருமாங்கிற அளவுக்கு நாக்குல தண்ணி வண்டி உருளுது. அந்தப்பக்கம் தலைய கூட திருப்பாமலே ஆர்மோனியத்தை தடவிக்கிட்டு இருந்தவருக்கு அடுத்ததா வந்து இறங்கின ஐட்டமும், ஆளும்தான் அதிர வைச்சுருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஐட்டத்தை விட்ருங்க. ஆள மட்டும் சொல்றேன். வடிவேலு! பவ்யமா கும்புட்டுட்டு "சாரு, நல்லாயிருக்கீங்களா"ன்னு சொல்லிகிட்டே மெத்தையில உட்காந்திட்டாரு மனுஷன். அப்படியே ஆர்மோனியத்தை பார்த்துகிட்டே ஒரு ராகத்தை எடுத்துவிட்டவரு, "என்னாப்பா இருக்குது அந்த குண்டாக்குள்ள? எடு பார்க்கலாம்"னு சொல்லிக்கிட்டே கைய விட்டாரு. வெளியே எடுக்கும்போது சரியான தொடக்கறி. அத நாக்குல விட்டு நைய பொடச்சுக்கிட்டே, "போன படத்தில ஒரு பாட்டு போட்ருந்தீங்கண்ணே, நல்லாயிருந்துச்சு. எங்க பாடுங்கண்ண்ணேய்..." னாரு. இவருக்கு எங்கயிருந்து பாட்டு வரும். வாயெல்லாம் ஊறி எச்சில்தான் வந்துச்சு. இருந்தாலும் ஆர்மோனியத்துல விரல்களை தவழவிட்டுக் கொண்டே ஒரு பாடலை பாட, எதிரே இருந்த வடிவேலு "எங்கடா அந்த கிளாசு"ன்னு கேட்டுக்கொண்டே அதை கைப்பற்றி எதையோ ஊற்றி கல்ப்பாக ஏற்ற ஆரம்பித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங் சொல்ல மறந்திட்டேன். இந்த ஜமாவுல வடிவேலு மட்டுமில்ல. அந்த அரசியல்வாதி. அவரோட நண்பர்கள்னு ஒரு நாலைஞ்சு பேரு குவிஞ்சுட்டாங்க. ஒரு சுச்சுவேஷன் சொல்றன்னு பேச ஆரம்பிச்சாரு ஒருத்தரு. அவருதான் டைரக்டரு போல. வரும்போதே நிரம்பி தளும்பி வந்திருந்தாரு மனுசன். இங்க வந்து இன்னும் நனைஞ்சுட்டாரா? ஃபுல் ஸ்டாப்பே இல்லாம ஒரு சுச்சுவேஷன் போயிட்டு இருந்திச்சு. அவரு நிறுத்தினாதானே இவரு ஆரம்பிக்க முடியும். இடையில அவரு நிறுத்தறது ஊறுகாய தொட்டு நாக்குல வச்சுக்கறதுக்கு மட்டும்தான்னு ஆயிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ளே இடையில புகுந்த வடிவேலு, "அத விடுண்ணே. அந்த காலத்துல பாகவதர் போட்ட பாட்டு இது. இதுக்கு இணையா ஒரு பாட்ட சொல்லு பாப்பம்"ன்னு ஒரு பாடலை எடுத்துவிட, "அவரு என்னா அவரு. இவர கேளு"ன்னு இந்த பக்கம் வேறொருத்தர் கிட்டப்பாவுக்கு தாவியிருந்தாரு. மாறி மாறி ரேடியோ ஸ்டேஷன திருப்பி, மண்டைக்குள்ளே கம்பிய சொருகிறாய்ங்களேன்னு கண்ணுல தண்ணியே வந்திருச்சு மியூசிக் டைரக்டருக்கு. இருந்தாலும் பாட்டுக்கு நடுவில ஒரு தொட கறிய குடுத்தா, வாய்லேர்ந்து வழியறத நிறுத்தலாம்னு நினைச்சவருக்கு பேச்சுக்கு கூட, "...ந்தா"ன்னு நீட்டல ஒருத்தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள கஷ்டப்பட்டு அத்தனை பேரையும் கதைக்குள்ள இழுத்திட்டு வந்தாரு டைரக்டர் என்று சொல்லப்பட்ட அந்த 'தண்ணி' லாரி. ஒருவழியா இவரு சுச்சுவேஷனை சொல்லி முடிக்க, ஆர்மோனிய பொட்டியில் விரல்களை மேய விட்டாரு நம்மாளு. தானே டம்மியாக சில வார்த்தைகளை போட்டு அவர் பாட பாட கண்கள் சிவந்தது வடிவேலுவுக்கு. "என்னாய்யா வரி போடுற நீ. முன்ன பின்ன கம்போசிங்(?) பண்ணியிருக்கியா? இப்படியாய்யா சுத்த தமிழ்ல பாடுவான் ஒரு மனுசன்? தள்ளுய்யா அந்தாண்ட..." என்று மியூசிக் டைரக்டரை மெத்தை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு ஆர்மோனிய பொட்டியை கைப்பற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்குரலில் பாட ஆரம்பிச்சாரு மனுசன். கைகள் கண்ணாபின்னாவென்று ஆர்மோனிய பொட்டியில் ஓட, அவரது வாய் உச்சரிச்ச வார்த்தைங்க ஒவ்வொன்ணும் காது கொள்ளாத கெட்ட வார்த்தைகள். காதுல பினாயில் விட்டு கழுவினா கூட நாலு வருஷத்துக்கு மறக்காது. அப்படி ஒரு நரகா'சுரம்'. ஒரு முழு பாடலையும் எதுகை மோனை ட்யூனோட அவரு போட்டு முடிப்பதற்குள் நம்ம மியூசிக் பார்ட்டிக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்புடீய்யா...ன்னு கேட்டு இவர் முடிக்கும்போது நைசாக எழுந்து வெளியேறியிருந்தார். என்னதான் வளர்ற மியூசிக் டைரக்டரா இருந்தாலும், ஆர்மோனிய பொட்டியிலேர்ந்து 'ஜால்ரா' சத்தமா வரும்?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-2509689363053787636?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/2509689363053787636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=2509689363053787636' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/2509689363053787636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/2509689363053787636'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post_08.html' title='மிட் நைட்டில்  ஒரு மியூசிக் கம்போசிங்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/S-WeLS327hI/AAAAAAAAAYM/OllhNNtxQ9o/s72-c/on-the-keyboard_size_800x600.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-1861062315532869448</id><published>2010-05-03T23:17:00.005+05:30</published><updated>2010-05-03T23:28:30.657+05:30</updated><title type='text'>தே‌வயா‌னி‌ என்‌ற முதலா‌ளி‌யம்‌மா‌</title><content type='html'>&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S98NI-iHsaI/AAAAAAAAAYE/I6nlLefInbc/s320/devayani.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5467102920527294882" /&gt;&lt;span class="Apple-style-span"   style=" -webkit-text-decorations-in-effect: none;  -webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; font-family:Arial, Helvetica, sans-serif;font-size:small;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; "&gt;&lt;p&gt;தாஜ்மஹால் மேல தார் ஊத்தினா கூட சுற்றுபுற ஆர்வலர்கள் சும்மாயிருப்பாங்க. ஆனா, சினிமாவுல இருக்கிற வெட்டிப்புற ஆர்வலர்களின் ஆத்திரமும், ஆதங்கமும் இன்னும் அடங்க மாட்டாம சுத்துது ஒரு காதல் ஜோடியை, ஜோடியா பார்க்கும் போதெல்லாம்! இந்த வாரம் ஒரு முன்னணி இதழில் அவங்களோட பேட்டிய படிக்கிறப்போ பெருமையா இருந்திச்சு. அப்படியே சேனலை திருப்பினா அங்கேயும் இந்த ஜோடி. காபி வித் அனுவில் டிகாஷனும் பாலுமாக கலந்து கலந்து அவங்க பேசியது நிஜமாகவே இன்பீரியாரிடி பையனுங்களுக்கு ஒரு கப் சுப்பிரியாரிடி 'சூப்' கொடுத்த மாதிரி சூப்பரோ சூப்பர்.&lt;/p&gt;&lt;p&gt;கலருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? கோலி சோடாவுல இருக்கிற கோலிக்கும் சோடாவுக்குமான சம்பந்தம்தான் அது. கோலி இல்லேன்னாலும் சோடா ருசிக்கும்! நிறம் இல்லேன்னாலும் காதல் வண்ணமயமானது. இதை பற்றியெல்லாம் யோசிக்காம, 'யாரும் யாரும் யாராகியரோ'ன்னு தள்ளிப் போகாம, இந்த ஜோடிய பிடிச்சு 'ஜோ' தனியா 'டி' தனியா ஆக்கிறனும்னு ஒரு கும்பல் ட்ரை பண்ணி கிட்டதட்ட பதினைஞ்சு வருசமாச்சு. இப்போ இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா இந்த ஜோடி பின்னி பெடலெடுக்குது. இவ்வளவு சொல்லியும் அது தேவகுமாரன், ராஜயானின்னு புரியாம போச்சுன்னா, இத படிக்கிற நீங்க சினிமா ஏரியாவுல வீக்குன்னு அர்த்தம்.&lt;/p&gt;&lt;p&gt;என் பத்திரிகை நண்பர் ஒருவருக்கு பெரிய வருத்தம். "நல்லாதாங்க பேசிட்டு இருந்தாரு. ஆனா நாலு வாரத்துக்கு முன்னாடி நம்ம மேகசின்ல ஒரு பிட்டை போட்டுட்டாய்ங்க. இப்பல்லாம் போன் அடிச்சா, எடுக்கவே மாட்டேங்கிறாரு" என்று ராஜகுமாரன் பற்றி முணுமுணுத்தார் அவர். "நானும் படிச்சேன்"னு சொல்லிட்டு சிரிச்சேன். இந்த சிரிப்புக்கு பின்னாடி ஒரு மனுசனோட 'மாரு வலி' இருக்குன்னு புரியாமலேயே. 'இப்போதெல்லாம் யாராவது காலிங் பெல் அடிச்சா அவருதான் வந்து தெறக்கிறாராம். அதுவும் மாவரைச்ச கைய கூட துடைக்காம...' என்று முடிந்திருந்தது அந்த துணுக்கு. சில துணுக்குகள்தான் இப்படி சம்பந்தப்பட்டவர்களை துணுக்குற வைக்கும். இவ்வளவுக்கு பிறகும் நண்பரிடம் நட்பு வைக்க அவர் என்ன நாலுங்கெட்டவரா என்ன?&lt;/p&gt;&lt;p&gt;"அவங்க எத்தனை அழகு? அவங்க நினைச்சிருந்தா எவ்வளவு பெரிய..." சொல்லி முடிப்பதற்குள் ராஜகுமாரன் வாயை இப்போதும் ஒரு கை பொத்துகிறதென்றால் அதுதான் தேவயானியின் காதல். இந்த ராஜகுமாரனுக்காக தேவயானி செய்த தியாகங்களை அவர்களை விட அதிகம் கவனிக்க வேண்டியது எங்களை போன்ற பத்திரிகை சிகாமணிகள்தான். அப்படி ரொம்ப கவனிச்சப்போ கிடைச்ச சின்ன நகைச்சுவை 'கேக்'தான் இப்போ நான் சொல்லப் போறது.&lt;/p&gt;&lt;p&gt;'காதலுடன்' என்றொரு படத்தை இயக்கினார் ராஜகுமாரன். தயாரிப்பு இவருடைய திருமதிதான். நாய் கழுத்துல கட்டுன பிஸ்கட் மாதிரி, ஒருத்தருக்கும் பிரயோஜனம் இல்லாம போச்சு அத்தனை முதலீடும். ஆனால் கவுரவம் வருதோ, இல்லையோ. கடன் வந்தது சுனாமி மாதிரி. அதையெல்லாம் சீரியலில் நடிச்சு சீரியஸ் ஆக அடைத்தார் தேவயானி. இவ்வளவுக்கு பிறகும், மேற்படி துணுக்கு எழுத்தாளர்களின் துன்பம் பொறுக்காமல் மீண்டும் கணவரை டைரக்டர் ஆக்கியிருக்கிறார். படத்தின் பெயர் திருமதி தமிழ். இந்த படத்தில் இன்னொரு ஆபத்து, ராஜகுமாரன்தான் ஹீரோ(?)&lt;/p&gt;&lt;p&gt;படப்பிடிப்பு ஒரு கார்டனில் நடந்து கொண்டிருந்தது. வில்லனுடன் ஹீரோ ஃபைட் பண்ணுவது போல காட்சி. அதுவும் இவர் வேகமாக ஓடிவந்து வில்லனின் முகத்தில் குத்த வேண்டும். நேஷனல் ஜியாகரபி சேனலை கோடம்பாக்க டைரக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தால், எறும்பை கூட ஹீரோவாக்கி படம் எடுப்பார்கள். அதில் யானையெல்லாம் அடிவாங்கி அலறும். ராஜகுமாரனும் இந்த சீரியஸ் நகைச்சுவைக்கு தப்பவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி காட்சிகள் எடுக்கும்போது பஞ்ச் சரியாக முகத்துக்கு அருகே வரும். ஆனால் குத்து முகத்தில் விழாது. நாலைந்து படங்கள் இயக்கிய ராஜகுமாரனுக்கு இது தெரியாமலிருக்காது. அவர் விட்ட முதல் குத்திலேயே வில்லனின் கண்ணில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. காரணம், ராஜகுமாரனின் மாவரைத்த கை(?) வலுவாக வில்லன் முகத்தை பதம் பார்த்ததுதான். லோ பட்ஜெட் படம் என்பதால் ஒரு கேமிராவைதான் ஸ்டண்ட் காட்சிகளில் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார் இவர்.&lt;/p&gt;&lt;p&gt;நாலைஞ்சு கேமிரா யூஸ் பண்ணனும் என்று ஆசைதான். ஆனால் நாய் விற்ற பணம் குரைக்காது என்றாலும், ஃபைட்டுக்கு இறைக்கிற காசு நிச்சயம் உதைக்குமே! அதனால் இதே காட்சியை வேறு வேறு கோணங்களில் எடுக்க முடிவெடுத்திருந்தார். கேமிராவை கிழக்காப்ல வச்சு ஓடிவந்து ஒரு குத்து. அப்படியே கேமிராவை மேற்காப்ல வச்சு இன்னும் வேகமா ஓடிவந்து ஒரு குத்து. மூணாவது குத்துக்கு கேமிராவை ரெடி பண்ணும்போது வில்லனுக்கு ஒரு பக்கம் வீங்கி ஐஸ் வக்கிற அளவுக்கு போயிருச்சு நிலைமை.&lt;/p&gt;&lt;p&gt;எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்த தேவயானி, (முதலாளியம்மாவாச்சே. ஸ்பாட்ல இருக்க வேணாமா?) "ஏங்க அவரு முகத்துல குத்துறீங்க? நீங்க குடுக்கிற பஞ்ச் ஒரு குறிப்பிட்ட இடத்தில நிக்க வேணாமா" என்றார் கோபமும் கொஞ்சலுமாக. இந்த ஆறுதல் வார்த்தைக்காகவே காத்திருந்த வில்லன், "அத ஏம்மா கேக்கிறீங்க. ஒவ்வொரு தடவ அவரு குத்தும்போதும் நான் சொல்லிகிட்டேதான் இருக்கேம்மா. அதுக்கு அவரு சொல்றாரு..."ன்னு சொல்லி ஒரு காரணத்தை சொல்ல, அதுவரைக்கும் இருந்த டென்ஷனை கூட மறந்திட்டு அடங்க மாட்டாம சிரிச்சுது அந்த யூனிட் மொத்தமும்!&lt;/p&gt;&lt;p&gt;"யோவ், எனக்கு கண்ணாடி போட்டாதான்யா எல்லாம் தெரியும். ஆனால் ஷ¨ட்டிங் நடக்கும்போது எப்படி போடுறது? ஒரு உத்தேசமா குத்துறேன். அதென்னவோ உன் மூஞ்சிய பேக்குது. கொஞ்சம் பொறுத்துக்கோய்யா..." இதுதான் வில்லனிடம் ராஜகுமாரன் சொன்ன பதில்.&lt;/p&gt;&lt;p&gt;முகம், கவுரவம். சில நேரங்களில் அதில் மூக்கு கண்ணாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவுரவம் !&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-1861062315532869448?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/1861062315532869448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=1861062315532869448' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1861062315532869448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1861062315532869448'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/05/blog-post.html' title='தே‌வயா‌னி‌ என்‌ற முதலா‌ளி‌யம்‌மா‌'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S98NI-iHsaI/AAAAAAAAAYE/I6nlLefInbc/s72-c/devayani.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-6442590370789818248</id><published>2010-04-30T16:45:00.001+05:30</published><updated>2010-04-30T16:48:46.202+05:30</updated><title type='text'>நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S9q8inC5qdI/AAAAAAAAAX8/4EYni3UsrSU/s1600/nayan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S9q8inC5qdI/AAAAAAAAAX8/4EYni3UsrSU/s320/nayan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465888400550242770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாயாண்டி குடும்பத்தார் படத்தோட இன்விடேஷனை பார்த்தவங்க அதை அப்படியே மடிச்சு எரவாணத்தில சொருகி வச்சிருந்தா ஒரு விஷயத்துக்கு பயன்பட்டிருக்கும். எப்பல்லாம் பசி எடுக்குதோ, அப்படியே விரிச்சு வச்சு பார்த்தா ஒரு முனியாண்டி விலாசுக்குள்ளே போயிட்டு வந்த திருப்தி இருக்கும். வேறொன்னுமில்ல. ஒரு பெரிய வாழை இலைய கொஞ்சம் கூட கட் பண்ணாம விரிச்சு வச்சு, அது கொள்ளாம கறி சோறு நிரப்பி தின்னுட்டு இருப்பாய்ங்க அண்ணன் தம்பிங்க நாலைஞ்சு பேரு. எனக்கு தெரிஞ்சு நாக்குல எச்சில் ஊற வச்ச இன்விடேஷன் அது ஒன்ணுதான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்சினிமாவும், நான் வெஜ்ஜும்னு ஒரு கட்டுரை எழுதினா வள்ளலாரே வந்து, "போதும் நிறுத்துய்யா"ன்னு சொல்ற அளவுக்கு இருக்கும். அந்தளவுக்கு நாக்குக்கு 'இடைத்தேர்தல்' அந்தஸ்து கொடுக்கிறவங்க ரொம்ப பேரு இருக்காங்க சினிமாவுல. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராமசாமி, சுப்பையா, கண்ணன்னு ஏராளமான நளபாக மன்னனுங்க வாழுற பூமிதான் நம்ம கோடம்பாக்கம். அவுட்டோர் போனா கூட, ஆடு கோழி புறா சகிதம் நமக்கு முன்னாடி அங்க போயி டேரா போட்டு நாக்குக்கு டேஸ்ட்டா ஆக்கி போடுறதுல இவங்களுக்கு இருக்கிற சந்தோஷம் இருக்கே, அதை நினைச்சாலே தனி ருசி. இதுல ராமசாமிங்கிறவரு சென்னையில் தனியா ஒரு மெஸ்சே நடத்தினார். மதியம் 12 லேர்ந்து 3 மணி வரைக்கும் இந்த ஓட்டல் இருக்கிற பக்கம் பெரிய டிராபிக் ஜாமே ஏற்படுகிற அளவுக்கு இருக்கும் இந்த ஜம் ஜம் விருந்து. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி மேட்டருக்கு வருவோம். இந்த தேவாமிர்த சாப்பாடே ஒரு கட்டத்துல போரடிக்குற அநியாயமும் நடக்கும். அப்படிதான் ஒரு அவுட்டோர்ல நடந்திச்சு. தென்காசி பக்கத்தில சத்யம் பட ஷ§ட்டிங். விஷாலும் நயன்தாராவும் நடிக்கிற காட்சிகளை ஷ§ட் பண்ணிட்டு இருந்தாங்க. பேக்கப்பும் சொல்லியாச்சு. மாலை நேரத்துல சூரியனே மயங்குது. மனுஷன் மயங்காம இருப்பானா? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"என் செலவுல எல்லாருக்கும் பார்ட்டி. வரச்சொல்லுங்கப்பா"ன்னுட்டாரு விஷால். அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்குதான் இந்த அன்பழைப்பு. தொழிலாளர்கள் அவங்கவங்க சவுகர்யத்துக்கு ஃபுல்லோ, ஆஃபோ அடிச்சுட்டு கவுந்திட்டாய்ங்க. ஏழு மணிக்கு சியர்ஸ் சொல்ல ஆரம்பிச்சவய்ங்க ராத்திரி பணிரெண்டு மணிக்கு பாட்டிலை கவுத்திட்டாய்ங்க. எல்லாரும் பேச பேச வேடிக்கை பார்த்திட்டு இருந்த முக்கியமான விவிவிவிவிஐபி நம்ம நயன்தாரா. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த நேரத்தில அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் சொன்னாரு "இங்ழ்ங்க பாழ்ர்டர் கழைல டிபழன் பிழமாதமா இழக்குழாம்..." (அதாவது இங்க பார்டர் கடையில டிபன் பிரமாதமா இருக்குமாம்!)அவ்வளவுதான். "எடுறா வண்டிய"ன்னுட்டாரு விஷால். அத்தனை பேரும் சுமோவில் ஏறிக்கொள்ள புள்ளத்தாய்ச்சி பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டு போன மாதிரி அதிர அதிர கிளம்புச்சு வண்டி. உள்ளே ஒரு இருபது பேரு இடிச்சு புடிச்சு உட்கார்ந்திட்டாங்க. ஒரு ஓரமா நம்ம நயன்தாராவும்.  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்குமுன் பார்டர் கடையை பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்தால் உங்களுக்கு சுலபமாக இருக்கும். தென்காசிக்கும், குற்றாலத்திற்கும் நடுவில் எல்லையை ஒட்டி இருக்கிற கடைதான் இந்த பார்டர் கடை. லாரி டிரைவர்களுக்கு மட்டுமல்ல, குற்றாலம் போகிற குளுகுளுவாசிகளுக்கும் இந்த ஓட்டல் சொர்க்கம். புரோட்டாவை இலையில் போட்டு, அது நீச்சலடிக்கிற மாதிரி கோழி குருமாவை ஊற்றுவது இங்கு ஸ்பெஷல். ருசி? நாக்குல தெர்மா மீட்டரை வச்சா வெடிச்சுரும். அப்படி ஒரு டேஸ்ட்! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வளவு கிறக்கத்திலும், "மேடமும் நீங்களும் சேர்ந்து வர்றீங்க. அங்க கலவரமாயிரப்போவுது"ன்னாரு ஒரு அசிஸ்டென்ட். "யோவ்... அவ்வளவு பேரையும் ஒத்த கையில சமாளிப்பேன்"னாரு விஷால். போயிட்டே இருந்தாங்க எல்லாரும். எல்லைய தாண்டிய பிறகும் பார்டர் கடை மட்டும் வரவேயில்லை. குற்றாலம் பக்கம் போக வேண்டிய டிரைவர், அரை மப்புல திருநெல்வேலி பக்கம் வண்டிய விட்டுட்டாரு. நட்ட நடு ராத்திரியில வண்டி திருநெல்வேலி டவுன்லே போயி நிக்க, திசை மாறி வந்திட்டோம்னாய்ங்க அத்தனை பேரும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"பசி புடுங்கி எடுக்குது. இங்கேயே ஏதாவது...." இப்படி ஒருவர் ஆரம்பிக்க, அவர் வாயை பொத்தியது சாட்சாத் நயன்தாராவேதான். "எனக்கு பார்டர் கடை புரோட்டாதான் வேணும்" என்றார் கொஞ்சலும், கெஞ்சலுமாக! அவ்வளவுதான். "வண்டிய ரிவர்ஸ்ல விடு. பார்த்திருவோம்" என்றார் விஷால். மறுபடியும் குலுங்கலும், சிணுங்கலுமாக 100 கிலோ மீட்டர் பின்னால் பயணிக்க ஆரம்பித்தது வண்டி. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உபரி தகவல் ஒன்று. இந்த பார்டர் கடையில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். கோழி வெந்து கொண்டிருக்கும். விருந்தாளிகள் மென்று கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த இடத்துக்குதான் விடியற்காலை 2 மணிக்கு போய் சேர்ந்தது இந்த டீம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடையை பார்த்ததும் ஹோவென்ற சந்தோஷ கூச்சலோடு இறங்கினாங்க ஒவ்வொருத்தரும். முதல்ல இறங்கிய மெட்ராசு ஆளுங்களை அலட்சியமாக கவனிச்சுட்டு கோழிக் காலை வெடுக்கென்று கடிச்சு துப்பிக் கொண்டிருந்த லாரி டிரைவருங்களுக்கு கடைசியா இறங்கிய இரண்டு பேரை பார்த்ததும், விலுக்கென்று மனசுக்குள் சந்தோஷம். இங்க பாருங்கடோய்...னு எழுந்து ஓடினாய்ங்க. அவ்வளவு பசியிலும் நல்லாயிருக்கீங்களாண்ணே என்று நலம் விசாரிச்சாரு நயன்தாரா. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரக்க பறக்க பறக்க இலையை போட்டு ஆவி பறக்க கோழி குழம்பை ஊற்றினாரு சர்வர். அதில் புரோட்டாவை மிதக்க விட்ட சர்வர் அண்ணாச்சிங்க அடுத்தடுத்து கொண்டு வந்து அடுக்கிக் கொண்டேயிருக்க, கோழி குருமா முழங்கை வரைக்கும் வழிந்தது நயன்தாராவுக்கு. ஆத்தா... எப்பூடி சாப்புடுறாங்கன்னு அத்தனை கூட்டமும் இவங்களை வேடிக்கை பார்த்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் கூட இத்தனை பரபரப்பு இருந்திருக்காது. ஆனால் இந்த பார்டர் கடையில் நயன்தாரா உட்கார்ந்த ஏரியாவில் அத்தனை பரபரப்பு. இந்த இடத்துக்கு இப்பவும் நயன்தாரா நாற்காலின்னு பேரே வச்சுருக்காங்கன்னா பாருங்களேன்.... அதில உட்கார இப்பவும் ஒரே அடிபுடிதானாம்! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-6442590370789818248?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/6442590370789818248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=6442590370789818248' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6442590370789818248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6442590370789818248'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2010/04/blog-post.html' title='நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/S9q8inC5qdI/AAAAAAAAAX8/4EYni3UsrSU/s72-c/nayan.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-3154364539824290549</id><published>2009-08-06T13:30:00.001+05:30</published><updated>2009-08-06T13:33:57.327+05:30</updated><title type='text'>குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SnqONO4qq1I/AAAAAAAAAWg/Fy51d_iEcJg/s1600-h/blindfolded.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SnqONO4qq1I/AAAAAAAAAWg/Fy51d_iEcJg/s320/blindfolded.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366758263950584658" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"எந்த நடிகன் கட்சி ஆரம்புச்சாலும் நான் எதிர்த்து எழுதுவேன்"னாரு விக்கி. ஜக்கி வாசுதேவ் குரல் கொடுத்தாலே, சாப்ட்டுட்டு வந்து கேக்கிறேன்னு எந்திருச்சு போறவனுங்க மத்தியிலே, விக்கியோட பேச்சு எவன கொக்கி போட்டு இழுக்கப் போவுது? "வுடுங்க சார். நம்ம அடிக்கிற நானு£று காப்பியிலே இருநு£று காப்பி ஓசியிலே பூடும். மிச்ச காப்பிய எரிய விட்டு, அந்த நெருப்பிலே ஒரு வாய் காப்பி கூட போட முடியாது. போவீங்களா"ன்னு சொல்லிட்டு எந்திரிச்சேன். "ஏங்க.. அவனுங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதுங்க. யாரோ எழுதிக் கொடுக்கற டயலாக்கை இவய்ங்க படிக்கிறாங்க. அப்புடி படிக்கறதை வச்சு புத்திசாலின்னு ஊரு நினைக்குது. ஆனா நான் அப்பிடி நினைக்க மாட்டேன்னு அவரு ஆவேசப்பட, "சரி, விடுங்க. கரையான் அரிக்குதுன்னு வீட்டையா சொறிஞ்சூட முடியும்"னேன் இன்னும் எடக்காக. "இப்படியெல்லாம் அவனுங்களுக்கு சாதகமா பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"ன்னு சாபம் கொடுத்தாரு விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகியே குரூப் டான்ஸ் ஆட வந்திருச்சு. இதில சாபத்தை கொண்டு போய் சட்டம் போட்டு மாட்ட வேண்டியதுதான்னு நான் மேலும் எடக்காக பேச, அடுத்தடுத்த வாரத்திலேயே விக்கியோட சாபம் சங்கு ஊதிட்டு வந்ததுதான் வேதனை!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ரொம்ப நெருக்கமான ஹீரோ அவரு. நடையா நடந்து அவர சந்திச்ச ஒரு விழா குழுவினர், சார்... நாங்க ஒரு ஃபங்ஷன் நடத்துறோம். அதிலே கண் பார்வை இல்லாதவங்களுக்கு உதவி செய்யுறோம். நீங்க அவசியம் வரணும். இன்விடேஷன்லே பேரை போட்டுர்றோம். காரு வேணும்னா வீட்டுக்கு அனுப்புறோம். ஒரு மணி நேரம். வந்திட்டு போனா போதும்னு சொல்ல, எப்போ? என்னிக்கு?ன்னு ஏராளமான கேள்வி கேட்ட ஹீரோ, "அன்னிக்கு எனக்கு ஃபேசியல் பண்ணிக்கிற வேல இருக்கு. இருந்தாலும், உங்க சோசியல் சர்வீசுக்கு முன்னாடி ஃபேசியல் மேட்டரு பெரிசு இல்லே"ன்னு சம்மதிச்சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபங்ஷன் நடக்கிற நாளும் வந்திச்சு. "சார், வந்திருங்களேன் போயிட்டு உடனே வந்திரலாம். நீங்களும் வந்தா ஏதாவது சாக்கு போக்கு சொல்லிட்டு சட்டுனு கிளம்பிரலாம்"னு என்னையும் கூப்பிட்டாரு ஹீரோ. இதுவரைக்கும் போன அரசியல் மீட்டிங்குக்கெல்லாம் சும்மா போனதில்லே. கைநிறைய கடலை. காது நெறய ருசின்னு ரசிக்கிறவன் நான். கலைஞரு, வைகோன்னு நான் போன மீட்டிங்கிலேயெல்லாம் கைத்தட்டலுக்கொரு கடலை. கர்ஜனைக்கு ஒரு பொட்டலம்னு ஒரே நேரத்திலே ரெண்டு ருசிய அனுபவிச்சிருக்கேன். ஹீரோவோட போன இந்த விழாவுல இவிய்ங்க பேசுன சொற்பொழிவ கேட்டுட்டு, கற்பிழந்த தெருநாயி மாதிரி ஓ...ன்ன்னு கதறிட்டேன்னா பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கி... உங்களோட பேனா புத்தி, சாணை புடிச்ச கத்தின்னு சத்தம் போட்டு பாராட்ட தோணுச்சு. அப்படி என்னதான் நடந்திச்சு அங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;காமராஜர் ஹால். அந்த விழா ரொம்ப நெகிழ்ச்சியா இருந்திச்சு. கண் பார்வையில்லாத சில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைச்சிருந்தாங்க. அவங்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. தங்கள் பிள்ளைகள் இறைவனோட சாபத்தையும் மீறி ஜெயித்ததை அவங்க அழுத கண்ணீரோடு பார்க்க, பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்த விழா அது. இந்த பார்வைற்றவங்களை பாராட்டவும், அவங்களுக்கு உதவி தொகை வழங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசவும்தான் இந்த மாதிரி நடிகருங்களையும் அழைச்சிருந்தாங்க. டைரக்டர் சேரன் போன்ற அறிவுலக மேதைகளும் அங்கே வந்திருந்ததால், விழா நன்றாக நடக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு நெறய இருந்திச்சு. ஆனா எல்லாத்தையும் கெடுத்தது, நான் போனேனே ஒரு ஹீரோவுடன். அவரேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இவரு பேசுவாருன்னு ஸ்டேஜ்ல அறிவிக்க, பலத்த கைத்தட்டலுடன் மைக்கை பிடிச்சாரு நம்மாளு. வேதனை என்னான்னா இவரு என்ன பேச போறாரு என்றே தெரியாம, அந்த பார்வையில்லாதவங்களும் கைதட்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க இவங்களையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்கள்ளாம் இந்த வியாதி (?) வந்ததுக்காக பெருமைப் படணும். ஏன்னா, சில பேருக்கு மெட்ராஸ் ஐ வரும். அதை பார்த்தா நமக்கும் அது தொத்திக்கும். உங்களுக்கு வந்திருக்கிற வியாதி அப்படிப்பட்டது இல்ல. அதனால் நீங்க பெருமைப்படணும்"னு ஹீரோ பேசிக்கொண்டே போக, எனக்கு நாக்க பிடுங்கிகிட்டு சாகலாமான்னு ஆயிருச்சு. இவரு கூட வந்தவன் நான்தாங்கிறதால, மேடையிலே உட்கார்ந்துகிட்டு என்னைய கேவலமா பார்க்கிறாரு சேரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விழாவை ஏற்பாடு செஞ்சவங்க எறும்புக்கு கூட தீங்கிழைக்கணும்னு நினைக்காதவங்க போலிருக்கு. மைக்க பாதியிலே பிடுங்காம இவரு பேச்சை தொடர்ந்து அனுமதிச்சாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நீரோ மன்னனை குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா, அடுத்த தீ விபத்துக்கு வயலின் வாசிச்சிருப்பானா? ஆனால், விழா குழுவினர் பெருந்தன்மையா நம்மாளுக்கு மாலையெல்லாம் போட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவரு கார்லே ஏறி போறதுக்கு பதிலா, நம்ம செருப்பை எடுத்து மேல் பாக்கெட்ல சொருகிகிட்டு வெறுங்காலோட நடக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு. விருட்டுன்னு கிளம்பி வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ பார்த்து விக்கியோட குரல் காதுல கேட்டுச்சு. "இப்படியெல்லாம் பேசுறதுக்கு எங்காவது நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி ஆவப்போவுது பாருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா விக்கி, இனிமே நீங்க வெறும் விக்கி இல்லே. முக்காலும் உணர்ந்த ஜக்கி வாசுதேவ் மாதிரி, முட்டாளுகளை உணர்ந்த விக்கி வாசுதேவ்!&lt;br /&gt;&lt;br /&gt;(பின் குறிப்பு- விக்கியோ நானோ எல்லா நடிகர்களையும் குறை சொல்லவில்லை. கலைஞானி கமல், சத்யராஜ், சரத் போன்ற அறிவுஜீவிகளும் இங்கே இருக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-3154364539824290549?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/3154364539824290549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=3154364539824290549' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/3154364539824290549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/3154364539824290549'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/08/blog-post.html' title='குப்புற போட்டு கொள்ளி கட்டையால சொறிஞ்சிருந்தா...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SnqONO4qq1I/AAAAAAAAAWg/Fy51d_iEcJg/s72-c/blindfolded.jpg' height='72' width='72'/><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7734113869409802380</id><published>2009-07-21T22:30:00.003+05:30</published><updated>2009-07-21T22:41:05.014+05:30</updated><title type='text'>நமீதா எடுத்த வாந்தி...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SmX2TPdkaNI/AAAAAAAAAWA/WjialgSdfGw/s1600-h/Namitha0801.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 310px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SmX2TPdkaNI/AAAAAAAAAWA/WjialgSdfGw/s320/Namitha0801.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5360961741882943698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இந்திரவிழா பார்த்ததிலேர்ந்து கண்ணுக்கு வெளியே பன்னு வச்சு கட்ன மாதிரியே இருக்கு"ன்னாரு செந்திலு. (பன்னுன்னா என்னன்னு தெரியாத ஃபாரின் தோழருங்களுக்கு ஒரு விளக்கம். இது பர்கரோட பெரியப்பா) "இருட்டு கடை அல்வாவிலே திரட்டு பாலை கலந்த மாதிரி செக்க செவேர்னு நமீதாவை காட்னாய்ங்க. ஆனா எல்லாமே வொய்டு ஆங்கிளா போச்சுரா"ன்னாரு அவரே! "ப்ளே கிரவுண்டு மாதிரி இருக்கிற பேக் ரவுண்டை, குளோஸ் அப்புல காட்டனும்னா ஸ்கிரீன் முழுக்க 'ஸ்கின்' தானேய்யா தெரிஞ்சிருக்கும்? அதனால இருக்குமோ?"ன்னு அவரே சமாதானமாகி விட, "நமீதாவை பற்றி உனக்கென்ன தெரியும்? பாக்கறதுக்கு பால்கோவா டின்னா இருந்தாலும், பழகறதுக்கு பச்ச மண்ணு தெரியுமா?"ன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதனாலதான் நம்ம பயபுள்ளங்களுக்கு மண்ண கவ்வுறதுல அவ்வளவு ஆச போலருக்கு"ன்னு செந்திலு சொன்னதை நான் ரசிக்கலே. ஏன்னா, நமீதாவோட இளகிய மனசை எதிர்லே நின்னு ரசிச்சவன் நானு. போன வாரம் கூட அவங்ககிட்டே போன்லே பேசினப்போ, "வீட்ல சிஸ்டர கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னுச்சே, அந்த பாசத்திலே பல்சரை விட்டா ஏத்துற?"ன்னு செந்திலு மேல கோவமே வந்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்ய நிஜம் மாதிரியும், நிஜத்தை பொய் மாதிரியும் எடுக்கிற ஏரியாவுல, தத்ரூபமா எடுக்கிறேன்னு ஒருத்தனோட தாவாங்க ட்டைய பொளந்திட்டாரு ஒரு அறிமுக இயக்குனர். பீரோவுல ஒளிஞ்சிகிட்ட திருடனை அப்படியே பீரோவோட நாலைஞ்சு பேரு து£க்கிட்டு போற மாதிரி ஷாட். திருடனா நடிக்கிறவரு, ஒரமா பீடிய ருசிச்சிட்டு இருந்தாரு. புகைக்கு நடுவிலே தன்னோட பந்தாவை நுழைச்சு அந்த இன்பத்தை துண்டிச்ச இயக்குனரு, "யோவ். அந்த பூரோவுக்குள்ளே போய் பூந்துக்கோ"ன்னாரு. டைரக்டரு சொன்னா சரிதான்னு பணியுற நல்லவங்கதானே ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க. அவரு சொன்ன மாதிரியே உள்ளே பூந்துட்டாரு நடிகரு. ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்னு குரல் கொடுத்துகிட்டே, "யோவ் து£க்குங்கய்யா பீரோவ"ன்னாரு டைரக்டரு. உள்ளே மாட்டிகிட்ட துணை நடிகரு ஓன்ன்னு அலற, மற்றவங்க து£க்க முடியாம திணற, ஷாட் ஓக்கே ஆகி கதவை திறக்கும்போது, மவுத்தை பொளந்திட்டாரு துணை நடிகரு. அப்புறம் அந்தாளை து£க்கிட்டு ஐயோ குய்யோன்னு அலறிகிட்டே ஓடினாய்ங்க ஆஸ்பத்திரிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தாளு பீரோவுக்குள்ளே போற மாதிரி ஒரு ஷாட்டு. பிறகு அவன வெளியிலே அனுப்பிட்டு நாலு பேரு அந்த பூரோவ கஷ்டப்பட்டு து£க்குற மாதிரி ஒரு ஷாட். இப்பிடி எடுக்கறதை விட்டுட்டு இந்த கஸ்மாலம் இன்னா பண்ணுச்சு பாரு"ன்னு ஓரமா நின்ன ஸ்டுடியோ வாட்ச்மேன் வெறிபிடிச்ச மாதிரி விமர்சனம் பண்ண, அதானே?ன்னாங்க சுத்தி நின்ன அத்தனை பேரும். அந்த டைரக்டரு இப்போ என்னா பண்றாரு? ம், எங்காவது மிலிட்டிரி ஹோட்டல்ல கோழிக்கு இறக்கை புடிங்கிட்டு இருப்பாரு! அந்த படமும் வரவேயில்லை. டைரக்டரும் வெளங்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மாவுல ராகத்தை கலந்தா இனிக்கும். டிராமாவுல நிஜத்தை கலந்தா? உரைக்கும்! இதுக்கு நான் சொல்லப் போற உதாரணம்தான் இந்த சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பரக் கண்ணாலே படப்பிடிப்பு. பிரசாத் ஸ்டுடியோவுல ஒரு பாடல் காட்சிக்காக செட்டு போட்டிருந்தாங்க. பொணமா நடிச்சா கூட மூக்குல பஞ்ச சொருவிட்டு, "இப்பவே மூச்ச பிடிச்சிராதய்யா. ஷாட்ல மட்டும் இழுத்துப்பிடி"ன்னு சொல்ற கேமிராமேனுங்க வாழுற பூமி இது. ஆனா, கேமிராமேன் சரவணனுக்கு நமீதா மேல கோவமோ? அல்லது ஆட்டத் தோழிங்க மேலே ஆத்திரமோ தெரியலே. செட்டுல மூட்டை மூட்டையா கொண்டாந்து மிளகாயை கொட்ட வச்சிட்டாரு. சின்ன சின்னதா வட்ட வட்டமா கூரை செட் போட்டுருந்தாங்க. அது மேலே மிளகாயை சொட்டிட்டாய்ங்க. காரமான செவப்பு மிளகா, கண்ணை கசக்க வைக்கும் பச்ச மிளகான்னு இதுல கலர் மிக்சிங் வேற.&lt;br /&gt;&lt;br /&gt;லட்ஸ் ஆன் ன்னு சொல்லி நாலாவது நொடி... நாகராவுல பாட்டு ஒலிக்குது. பம்பரக்கண்ணாலேன்னு பாடி ஆட வேண்டிய அத்தன பேரும், "பம்பர கண்ணாலே... பஞ்சராச்சு உன்னாலே"ன்னு பாட வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாங்க. அச்சோ குச்சோன்னு ஒரே தும்மல். கண் எரிச்சல். செட்டுக்கு வெளியே ஓடி வந்து ஆசுவாசப்படுத்திகிட்டாங்க. சாராய கடையிலே சைட் டிஷ்ஷா வைக்க வேண்டியதை, சந்தடி சாக்குல மெயின் டிஷ்ஷா ஆக்கி, அதை மூக்கு மேலேயே படைச்சிட்டாய்ங்களேன்னு புலம்பி திரியுது ஆட்ட கோஷ்டி. "எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், இங்கதான் ஷ§ட்டிங். ரிகர்சலை வேணா செட்டுக்கு வெளியே வச்சுக்கோங்க"ன்னு சொல்லிட்டாரு சரவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பப்போ வெளியிலே வந்து எல்லாரும் வாந்தியெடுக்கிறாங்க. கூட்டத்தோடு கூட்டமா நமீதாவும் உவ்வேவ்... இவரோட முல்லைப்பூ மூக்கு மேலே சுள்ளிப்பூ பூத்த மாதிரி ஒரே எரிச்சல். கையோட பத்து பதினைஞ்சு கர்சீப்பை வச்சு துடைச்சுகிட்டே இருந்திச்சே தவிர, நான் வீட்டுக்கு போறேன்னோ, முடியாதுன்னோ ஒரு வார்த்தை சொல்லணுமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே"&lt;/span&gt;ன்னு எவனாவது போஸ்டர் ஒட்டிட போறானோங்கிற பயமே வந்திருச்சு எனக்கு. ஏன்னா காலையிலேர்ந்து சாயுங்காலம் வரைக்கும் நமீதா எடுத்த வாந்திய பார்த்திருந்தா கார்ப்பரேஷன் காரங்க வாய்க்கால் வெட்டுறத்துக்கு ஒரு டென்ட்டரே விட்ருப்பாய்ங்க. ஒரு 'சாந்தி நிலையம்' மாதிரி சுத்தமா இருந்த பிரசாத் ஸ்டியோ, அன்னைக்கு மட்டும் 'வாந்தி நிலையம்' ஆயிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியா சாயங்காலம் பேக்கப். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை நடன கலைஞர்களையும் கூப்பிட்ட நமீதா, எல்லார் கையிலேயும் ரெண்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டினார். "போய் டாக்டரை பார்த்திட்டு போங்க"ன்னு நமீதா சொல்ல, அத்தனை பேரு கண்ணிலேயும் அருவி மாதிரி கண்ணீர். "இன்னைக்கு வரைக்கும் அந்த படம் சம்பந்தப்பட்ட யாரையும் குறையே சொல்லலே நமீ. இப்போ சொல்லு செந்திலு"ன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு வள்ளுவர் கோட்டம் பக்கம் திரும்பி 'மன்னிச்சுரும்மா'ன்னு மானசீகமா கும்பிட்டாரு. ஏன்னா அங்கதானே இருக்கு நமீதா வீடு...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7734113869409802380?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7734113869409802380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7734113869409802380' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7734113869409802380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7734113869409802380'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/07/blog-post_21.html' title='நமீதா எடுத்த வாந்தி...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SmX2TPdkaNI/AAAAAAAAAWA/WjialgSdfGw/s72-c/Namitha0801.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-9092277951278813831</id><published>2009-07-14T23:56:00.002+05:30</published><updated>2009-07-15T00:00:19.547+05:30</updated><title type='text'>பிரபுதேவா வீட்டு மாடி...?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlzOj37I4pI/AAAAAAAAAV4/dkNa29hUBbM/s1600-h/Prabhu+Deva03.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlzOj37I4pI/AAAAAAAAAV4/dkNa29hUBbM/s320/Prabhu+Deva03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5358384772366787218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிக்கடின்னு பிளாக்குக்கு பேரு வச்சிட்டு இப்படி ஆடிக்கு ஆடிதான் பதிவு போடுறதான்னு திட்றவங்களுக்கு... இந்த லீவை ஆடித் தள்ளுபடின்னு நினைச்சுக்கோங்களேன் பிரண்ட்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா. நாலு மீட்டர் துணியிலே பேண்ட் தச்சு, அதுல ஒரு குழாய்லே நாட்டியத்தையும், மறு குழாய்லே நட்டுவாங்கத்தையும் ஒளிச்சு வைக்கிற அளவுக்கு கேப் வுட்டிருப்பாரு. பேண்டு சட்டைக்குள்ளே இவரு ஆடிட்டு இருப்பாரு. சட்டையும் பேண்டும் தனியா ஆடிட்டு இருக்கும். அப்படி ஒரு தொள தொள...&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்திலே இதே மாதிரி டிரஸ்சை போட்டுட்டு, நாய் துரத்தி நடுவீதியிலே விழுந்த இளவட்டங்க ஏராளம். போதாத குறைக்கு தலையிலே டபுள் பீன்சை கவுத்துவுட்ட மாதிரி கொத்து கொத்தா ஹேர் டிரஸ்சிங். இந்த தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சனை ஸ்ட்ராவை போட்டு உறிஞ்சு ருசிச்சிட்டு இருந்திச்சு ஊரு ஒலகமெல்லாம். அந்த பீரியட்லதான் நான் பிரபுதேவா வீட்டுக்கு போயிருந்தேன். நாக்க முக்காவுக்கெல்லாம் நாலாவது தலை முறை பாட்டனா, முக்காப்புலாங்கிற பாட்டு உறுமியடிச்சிட்டு இருந்த நேரம் அது. நான் ஏன் அங்க போனேன்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவா வீட்டு மாடியிலே ஒரு சினிமா கம்பெனி இருந்திச்சு. அவங்களுக்கு போன் அடிச்சு, "அண்ணே ஒரு விளம்பரம் வேணும். நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன்"னு சொன்னேன். எவ்வளவு ரேட்? எத்தனையாவது பக்கத்தில் வரும் என்றெல்லாம் பேசிய பிறகு "வாங்களேன்"னாரு தயாரிப்பாளர். "அட்ரசை சொல்லுங்க"ன்னு கேட்டப்போ அவரு கொடுத்த அட்ரசு நம்ம பிரபுதேவா வீட்டோட அட்ரஸ். பாழாப்போனவய்ங்க, "மாடியிலே இருக்கேன் சாரு"ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;சர்ருன்னு வண்டிய கொண்டு போயி அவரு வீட்டு முன்னாடி நிறுத்திட்டு கதவ தட்டி சவுண்டா குரல் கொடுத்தேன். சாரு...&lt;br /&gt;&lt;br /&gt;யாரு... ன்னு கதவை தெறந்தது மைக்கேல் ஜாக்சனின் அப்பா, சுந்தரம் மாஸ்டர். "நான் இன்னாரு. இன்ன பத்திரிகையிலேர்ந்து வர்றேன்". அவ்வளவுதான். "வாங்க, உள்ளே வாங்க" என்றார். அமர்ந்தோம். "தம்பீய்ய்ய்ய்..."னு அவரு குரல் கொடுக்க, நெத்தி நெறய விபூதி. புத்திய உரசுற பார்வை. பக்தியா ஒரு கும்பிடுன்னு படார்னு வந்து நின்னாரு பிரபுதேவா. அட, சினிமாவுல பார்த்தா சிலம்பாட்டம். நேரா பார்த்தா எலும்பாட்டம். என்னய்யா இது?ன்னு ஒரே ஆச்சர்யம். ஆனாலும் பேட்டிய பிறகு எடுத்துக்கலாம். இதழ் வேலைய முடிக்கணும். மொதல்ல விளம்பர டிசைனை வாங்கிட்டு போயிரலாம்ங்குது புத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சார் என்ன சாப்பிடுறீங்க? / ஒன்னும் வேணாம் சார். / இல்லையில்லே, காபியாவது குடிங்க. சம்பாஷணைகள் தொடர, தொடர, விளம்பரத்துக்கு ரேட் சொன்னோம். ஆனால் பைனல் கூட பண்ணலியே? கேட்ட பணத்தை குடுப்பாரா? பாதியா குறைப்பாரான்னு மனசு ஒரே இடத்திலேயே நின்னு டப்பாங்குத்து போடுது. சர்ருன்னு ஒரே மூச்சுலே காபிய குடிச்சிட்டு, "சார் சொல்லுங்க" என்றேன் தெம்பாக. "நீங்கதான் சொல்லணும்" என்றார் மாஸ்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டே, "நீங்களே சொல்லுங்க சார்" என்றேன். "நானா, என்னத்தை சொல்லணும்? நீங்க ஏதாவது கேளுங்க. இவன்கிட்ட பேசணுமா? அவனையே கேளுங்க" என்றார். "சார், போன்லே பேசுனது நீங்கதானே? அப்ப நீங்களே பேசுங்க. எதுக்கு உங்க பையன்கிட்ட விடுறீங்க?" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானா? போன்லேயா? நான் எப்போ பேசினேன்? திடீர்னு வந்தீங்க. போன்லே பேசுனேன்னு சொல்றீங்க" என்றவர் குழப்பமாக எங்களை பார்க்க, குறுகுறுன்னு சிரிச்சிகிட்டே உட்கார்ந்திருந்தாரு பிரபுதேவா. "சார், அந்த சினிமா விளம்பரம்"னு நான் இழுக்க, "அட அதுவா... சரியாப்போச்சு போங்க. அந்த கம்பெனி மாடியிலே இருக்கு. ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்றார் மாஸ்டர். அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் பிரபுதேவா. இது நடந்து பல வருசம் ஆயிருச்சு. இடையிலே பலமுறை நம்ம மைக் ஜாக்சனை பார்த்திருக்கேன். பேசியிருக்கேன். ஆனா, அன்னைக்கு அவரு சிரிச்ச வெள்ளந்தி சிரிப்பு இருக்கே, அதுல பாதிய புட்டு பங்கு போட்டுருச்சு சினிமா.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சின்ன நிகழ்ச்சியிலே அவரை பார்த்தேன். பத்திரிகைகாரங்க நாங்க பத்து பேரு மட்டும் கலந்துகிட்ட விழா அது. நாங்கள்ளாம் வருவோம்னு அவரு எதிர்பாக்கவே இல்லை போலிருக்கு. வாய புடுங்கி வயித்தெறிச்சலை கொட்டிட போறாய்ங்களோன்னு நினைச்சு அவரு ஓடுன ஓட்டம் இருக்கே... மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-9092277951278813831?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/9092277951278813831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=9092277951278813831' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/9092277951278813831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/9092277951278813831'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/07/blog-post_14.html' title='பிரபுதேவா வீட்டு மாடி...?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlzOj37I4pI/AAAAAAAAAV4/dkNa29hUBbM/s72-c/Prabhu+Deva03.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-143536426190211816</id><published>2009-07-08T17:34:00.001+05:30</published><updated>2009-07-08T17:36:27.899+05:30</updated><title type='text'>அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SlSLrLuhQpI/AAAAAAAAAVA/hzehL556z4A/s1600-h/tr.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SlSLrLuhQpI/AAAAAAAAAVA/hzehL556z4A/s320/tr.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5356059430848905874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;போன பிறவியிலே புலிப்பாணி சித்தரா பொறந்திருப்பாரோங்கிற சந்தேகம் டிஆரை பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. "பாரப்பா பகலவனும் 10 ல் நின்று"ன்னு அவரு சித்தர் பாடலை சத்தம் போட்டு பாடும்போதெல்லாம், நாங்க வெளியிலே நின்னு மிரட்சியா கேட்போம். நாலு வரி பாடி முடிக்கறதுக்குள்ளே, "யோவ்... நான் சோதிடத்தை பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்றவன்யா, எங்கிட்டயேவா?"ன்னு யாரோ ஒரு கிளி ஜோசியனை வளைச்சு வச்சுகிட்டு அவனை 'கிலி' ஜோசியனாக்குவாரு.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்ல போட்டு பசியாத்துவாய்ங்கன்னு பார்த்தா, இப்பிடி 'இடி' மாதிரி சொல்ல போட்டு வெறியேத்துறாய்ங்களேன்னு நினைச்ச அப்பாவி கிளி, கீச் கீச்சுன்னு கத்தும். உடனே நம்ம தலைவரு, "வெள்ள ரோஜாவை கிளி ஒன்ணு லவ் பண்ணுச்சாம்..."னு கிளி ஜோசியன்கிட்ட ஒரு கதைய எடுத்துவிட்டு, அவன காசு கூட  கேட்க விடாதளவுக்கு பீதிய கிளப்பி பிகில் ஊதுன நாளெல்லாம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"பத்தாமிடத்திலேர்ந்து குரு பார்க்கிறனே, இந்த நேரத்திலே பாத்ரூம் போவலாமா?"ன்னு ஆஸ்தான ஜோசியருகிட்டே கேட்டு, அவரையே டெரர் ஆக்குவாரு. ஜோசியரும், "அவன் பார்த்தா என்ன? நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே"ன்னு ஒரு பதில சொல்லி சமாளிப்பாரு. இப்படி நடமாடும் சென்ட்டிமென்ட் ஸ்டோராக உலா வரும் நம்ம தலைவருக்கு இக்கட்டான நேரம் ஒன்ணு வந்திச்சு. அந்த நேரத்திலே போயி சொக்காட்டான் ஆட்டம் ஆடி சூழ்நிலைய பாழாக்குன சில விசுக்கட்டான்கள் பற்றிய செய்திதான் நான் சொல்லப் போறது...&lt;br /&gt;&lt;br /&gt;சலீம் சலீம்னு ஒரு வேலைக்காரர் இருந்தாரு அங்கே. அண்ணன் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடி வில்லு மாதிரி வெடச்சுக்கிட்டு வேலை செய்யுறதுல கில்லாடி. ஒரு படத்திலே நம்ம தலைவருக்கு வழக்கறிஞர் வேடம். இன்விடேஷனுக்கும் பத்திரிகை விளம்பரத்துக்கும் போட்டோ எடுக்கணும். எப்பவோ ஆரம்பிச்ச பிளான், ராகு காலம் முடியறதுக்குள்ளே எடுக்கணுமேங்கிற பரபரப்பான கட்டத்துக்கு வந்திருச்சு. வக்கீல் கோட்டு, வாரியும் படியாத தலைன்னு தலைவன் வந்து நிக்கிறாரு. அப்பதான் போட்டோகிராபர் லென்சை நோண்டிக் கொண்டிருக்க, "டேய்,  ங்கொ..., ராகு வர இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. அதுக்குள்ளே எட்றா"ன்னு அதிரி புதிரி கௌப்புறாரு தலைவரு. "ந்தா வந்திட்டேண்ணே..."ன்னு சொன்ன போட்டோகிராபர், லென்சை சரி செய்ய, திடீர்னு யுத்த களத்திலே தலைய விட்ட சலீம், "அண்ணே வக்கிலுங்கோல்லாம் கையிலே ஒண்ணு வச்சிருப்பாங்களே, அது எங்கே?"ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாண்டா, கேஸ் ஷீட்டு! டேய் எவனாவது ஓடிப்போயி ஒரு கேஷ் ஷீட்டு எடுத்திட்டு வாங்களேண்டான்னாரு டி.ஆர். தொண்டர்களும், தளபதிகளும் நாலா திசைக்கும் ஓட, வாட்சை பார்த்துக் கொண்டே "குயிக் குயிக்"குன்னு கத்திகிட்டே இருந்தாரு தலைவரு. சரியா அஞ்சாவது நிமிசம், அத்தனை பேரும் திரும்பி வந்தாய்ங்க. சொல்லி வச்ச மாதிரி எல்லார் கையிலேயும்.... கேஸ் ஷீட்டா? அட, பாழா போன கொழாப்புட்டு மண்டையனுங்க! அத்தனை பேரும் எடுத்திட்டு வந்தது கேஸ் ஷீட் இல்லை. ஆளுக்கொரு ஆடியோ கேசட்...!&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ளே ராகு காலம் என்ட்ரி. பிறகென்ன, வழக்காடு மன்றம் கசாப்பு கடையானது. ஆடியோ கேசட் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் ராக ஆலாபனையோடு கொஞ்சம் பிரசாதமும் கொடுத்தனுப்பினாரு தலைவரு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-143536426190211816?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/143536426190211816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=143536426190211816' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/143536426190211816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/143536426190211816'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/07/blog-post_08.html' title='அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SlSLrLuhQpI/AAAAAAAAAVA/hzehL556z4A/s72-c/tr.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-1491164176102064903</id><published>2009-07-05T21:42:00.004+05:30</published><updated>2009-07-05T22:20:20.616+05:30</updated><title type='text'>மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s1600-h/spiritual_comm.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s320/spiritual_comm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5355009947611153810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!&lt;br /&gt;&lt;br /&gt;பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?&lt;br /&gt;&lt;br /&gt;டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-1491164176102064903?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/1491164176102064903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=1491164176102064903' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1491164176102064903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/1491164176102064903'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/07/blog-post.html' title='மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SlDRLOALxZI/AAAAAAAAAUY/KvrK8leRW4M/s72-c/spiritual_comm.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4343072710080788097</id><published>2009-06-30T17:55:00.002+05:30</published><updated>2009-06-30T18:01:06.961+05:30</updated><title type='text'>விஜய் போட்ட முதல் உத்தரவு?!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SkoFPwzvj6I/AAAAAAAAATI/lFYsh8YQdIw/s1600-h/vijay.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SkoFPwzvj6I/AAAAAAAAATI/lFYsh8YQdIw/s320/vijay.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5353096875441360802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ரேகை தேயுற அளவுக்கு கை தட்டு. நாக்கே சுளுக்கிக்கிற அளவுக்கு விசிலடி. யாரை வேணும்னாலும் ரசி. அதுக்கு மேலே போனா வெளங்க மாட்டடா டேய்..."னு போஸ்ட் மரத்திலே முட்டுக் கொடுத்தபடி போதையில் தத்துவம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு 'ஆயுள் சந்தா' அறிவுஜீவி. விஜய் கட்சி ஆரம்பிக்க போறாருன்னு நியூஸ் வந்திச்சே, அப்பவுலேர்ந்து இப்படிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;எவனோ விட்டுட்டு போன ஊறுகாய, தொட்டு நக்கிட்டு பேசுற டாஸ்மாக் கோவாலுங்க சொல்றதெல்லாமா ஒரு விஷயம்னு பேசிட்டு இருக்கணும்? நம்ம புத்தி இப்பிடி நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டாலும், பயபுள்ளைங்க பேசுறதிலேயும் ஒரு நேர்மை இருக்கதானே செய்யுது?&lt;br /&gt;&lt;br /&gt;சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு பிரஸ்மீட். அது விஜயகாந்த் நடிச்ச ஏதோ ஒரு படம். சைதாப்பேட்டை சிக்னல் அருகே இருக்கிற அரசாங்க பில்டிங்கிலே ஷ¨ட்டிங். லைட்டு வெளிச்சத்துக்கு முன்னாடி விஜயகாந்த் வசனம் பேசிக் கொண்டிருக்க, அவரு வர்ற வரைக்கும் நாங்களெல்லாம் ஒரு ஷாமியானாவுக்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம். அந்த நேரம் பார்த்துதான் அவன் வந்தான். ஷ¨ட்டிங் நடக்கிற ஏரியாகிட்டே போனா விரட்டி விட்ருவாய்ங்கன்னு நெனச்சானோ என்னவோ, எங்க பக்கத்திலே வந்து நைசாக உட்கார்ந்தான். "சாரு, நீங்கள்ளாம் யாரு?"ன்னான் அப்பாவியாக. "ஏம்ப்பா, என்னா விஷயம்?"னாரு விக்கி. "கேப்டன்னா எனக்கு உசிரு சாரு"ன்னவன், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் அவரை ஏக்கமாக நக்கினான். விக்கிக்கு செம கோவம். பிரஸ்சுக்கு போட்ட சேர்லே ஒரு ரசிகன் வந்து உட்கார்ந்திட்டானேன்னுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோட முடிஞ்சிருந்தா பரவாயில்லை. "சாரு, நானு என் புள்ளைய து£க்கிட்டு கேப்டனோட படத்தை பார்க்க போனேன். கூட்ட நெரிசல்ல புள்ள செத்து போச்சு. அப்பவும் விடாம, படத்தை பார்த்திட்டுதான் பொணத்தோட வீட்டுக்கு போனேன்"னான். அவ்வளவுதான். அதுவரைக்கும் போனா போவுதுன்னு அவனை அனுமதிச்ச அத்தனை பேருக்கும் செம கோவம். "எந்திர்றா நாயே..."ன்னாரு விக்கி. மற்றவங்களும் சேர்ந்து கொள்ள, ஒரே தள்ளு. அடுத்த செகண்ட் ரோட்டில் இருந்தான் ரசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலுக்கு கடிச்சி வச்ச ஆப்பிளை ஏகப்பட்ட ரூவாய்க்கு ஏலம் எடுத்து, உலகத்தையே ஒரு ஆப்பிளின் கீழே கொண்டு வர நினைச்ச, நவீன அலெக்ஸ்சாண்டருங்க திரியுற பூமி இது. இங்கதான் நான் பார்த்தேன் அந்த கொடூரத்தையும். ரஜினி நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தேன். படத்திலே ஒரு போலீஸ் ரஜினிய அடிக்க, பாராவுக்கு வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருத்தரை புரட்டி எடுத்திட்டாய்ங்க சில பேரு. "எங்க தலைவரையா அடிச்சே?"ன்னு அவரை புரட்ட, "யோவ் நான் எங்கேய்யா உங்க தலைவர அடிச்சேன்?"னு ஓடிப் போனாரு தியேட்டரை விட்டே. போற வேகத்திலே அவரு பின்னாடியே விரட்டிட்டு போயி 'து££££...'ன்னு துப்பிட்டு ஓடி வந்தாரு ஒரு வெறிபிடிச்ச ரசிகரு. ஓடிப்போன போலீஸ்காரர் ஒரு படையோட திரும்பி வந்த போது, அப்பாவி ரசிகருங்கதான் மாட்னாய்ங்க. கிர்ணிப்பழமே கிழிஞ்சு தொங்குற அளவுக்கு அடிச்சி பின்னிட்டாய்ங்க. எச்சல் துப்பினவன் எஸ்கேப் ஆகிவிட, மிச்சர் தின்னவன்லாம் மாட்னான் அன்னிக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இது போன வாரத்து காமெடி. விஜய்யோட பிறந்த நாளுக்கு பிரஸ்சை கூப்பிட்டிருந்தாங்க. திரும்புற இடத்திலே எல்லாம் கொல கொலயா தலைங்க. உச்சி வெயில் வேற மண்டையிலே இறங்கி, தண்டு வடத்திலே தாளம் போடுது. எரிச்சல்ல திரண்டிருந்த ரசிகருங்க கூட்டத்தை வேற சமாளிக்க வேண்டியதா போச்சு ஒவ்வொரு நிருபருக்கும். காது பக்கத்தில வந்து கேத்தான் ஃபேன் மாதிரி காத்தடிச்சிகிட்டே கத்துறாய்ங்க தலைவா££££ன்னு! உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு உருண்டுகிட்டே போனா எப்படியிருக்கும்? அப்படி ஒரு அனுபவம் உள்ளே போவதற்குள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலே இருந்து விஜயோட முகம் தெரியுமான்னு காத்து கிடந்தவங்களுக்கு, ஒருத்தர் வந்து இறங்கியதும் உள்மனசெல்லாம் பல்பு எரிஞ்சுது. அது யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நடிகையெல்லாம் இல்லை. ஒரு ஆங்கில நாளிதழின் நிருபி. பார்க்க கொஞ்கம் ஸ்மார்ட்! வெயில் என்பதால் அன்னைக்கு பார்த்து பெரிய கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒரு நடிகை ரேஞ்சுக்கு காரிலிருந்து இறங்கினார். யாரோ ஜுனியர் ஆர்ட்டிஸ்டு போலிருக்கு. விஜயை வாழ்த்த வந்திருக்காங்கன்னு நினைச்ச செக்யூரிடி, சூனியரெல்லாம் அந்த கேட்... அந்த கேட்டு...ன்னு குச்சியை வச்சுகிட்டு லொட்டு லொட்டுன்னு அந்தம்மா பக்கத்திலே தட்ட, செம டென்ஷன் அவங்களுக்கு. "ஸ்டுப்பிட்... நான் பிரஸ்"சுன்னாரு கோவமா. பதறிப்போன செக்யூரிடி "அம்மா போங்கம்மா"ன்னு வழிவிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ளே எவனோ ஒருத்தன் வெந்த புண்ணிலே வெளக்கு மாவு படைச்சிட்டான். டேய்... அசினுடான்னு அவன் கத்த, அவ்வளவுதான். பண்ருட்டியிலேயிருந்து பறந்து வந்த பலாப்பழ கொசுங்க மாதிரி மொய்ச்சிட்டாய்ங்க. பண்ருட்டிகளின் தின்ருட்டி அட்டகாசம் ஆரம்பமாயிருச்சு. இடுக்காலே ஒருத்தன் கைய விட்டு இடுப்பை கிள்ள, அப்படியே ஆளாளுக்கு கையை விட ஆரம்பிச்சிட்டாய்ங்க. "ஸ்டுப்பிட்...நான்சென்ஸ்.. ஆ... கிள்ளுறானே..."ன்ன்னு ஒரே கூச்சல் இவங்ககிட்டேயிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை நாலைஞ்சு பேரு இதை கவனிச்சிட்டோம். படக்குன்னு பாஞ்சு நிருபியை (தொடாம) வளைச்சு பிடிச்சோம். அப்படியே காப்பாற்றி ஹாலுக்குள் கொண்டு வந்தோம். மேலு கையெல்லாம் ஒரே கிள்ளல் காயம். ரொம்ப நேரம் "ஸ்டுப்பிட்ஸ்..."னு முணுமுணுத்துகிட்டேயிருந்தாங்க நிருபி. நிருபர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் சொன்ன விஜய், இவங்க சும்மாவே இருக்கறதை கவனிச்சுட்டாரு. "என்ன மேடம். எனி கொஸ்டீன்ஸ்..."ன்னு கேட்டாரு. அவ்வளவுதான். வெறி புடிச்ச மாதிரி "நத்திங்..."ன்னுச்சு நிருபி. அவரு கிளம்புற நேரத்திலே கிட்டே போயி "என்னைய உங்க ரசிகருங்க கிள்ளிட்டாய்ங்கன்னு நிருபி சொல்ல, விஜய் போட்ட முதல் உத்தரவு, "யோவ்... இவங்களை பத்திரமா கார்லே ஏத்திவிட்ருங்க" என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருங்கால சிஎம் போட்ட முதல் உத்தரவு இப்படியா இருக்கணும்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-4343072710080788097?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/4343072710080788097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=4343072710080788097' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4343072710080788097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4343072710080788097'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_30.html' title='விஜய் போட்ட முதல் உத்தரவு?!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SkoFPwzvj6I/AAAAAAAAATI/lFYsh8YQdIw/s72-c/vijay.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7634790460541992940</id><published>2009-06-23T22:21:00.003+05:30</published><updated>2009-06-23T22:31:12.966+05:30</updated><title type='text'>பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SkEKB_dj7XI/AAAAAAAAATA/kV0HNQkfCUY/s1600-h/nadigai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 280px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SkEKB_dj7XI/AAAAAAAAATA/kV0HNQkfCUY/s320/nadigai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5350568861624429938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், இன்றைய தேதிக்கு சுமார் எட்டு லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் அவர். பெயரை சொன்னா சரியா இருக்காது. வேணும்னா ஒரு க்ளு. மூன்றெழுத்து நடிகை. கடைசி எழுத்து கா! நல்ல 'அழகி'ன்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பேட்டிக்காக போயிருந்தேன் அவரு வீட்டுக்கு. அன்னைக்கு பார்த்து வண்டி ரிப்பேர்ங்கிறதால ஆட்டோ சவாரி. பேட்டிய முடிச்சுட்டு கிளம்பும்போதுதான் அவங்க அப்பாவை பார்த்தேன். (முன்னாடியே பார்த்திருந்தா பேட்டியவே 'டிராப்' பண்ணியிருக்கலாம்) சின்ன சின்ன குவாட்டர்களா போட்டு செஞ்ச மாதிரியே இருந்தாரு மனுஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், ஒங்க பொண்ணு போட்டோவ கொடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"போட்டோவ வாங்கிட்டு போனா யாரு திருப்பி தர்றீங்க? ஏகப்பட்ட போட்டோ இப்படியே போயிருச்சு. நான் கோயமுத்து£ர் கவுண்டன்(?) என்னை யாரும் ஏமாத்த முடியாது. வேணும்னா சிடி இருக்கு. அதுவும் ஒன்னுதான் இருக்கு. காப்பி பண்ணி தரட்டுமா"ன்னாரு. கொடுங்கன்னேன். "வீட்ல கம்ப்யூட்டர் இல்லீயே? வாங்க, எங்கேயாவது காப்பி பண்ணலாம்" வண்டியை கிளப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்கும் சேர்த்து 'சரக்கு' போட்டிருப்பாரு போல, தேடி தேடி குழியிலேயே இறங்கிச்சு வண்டி. சிறிது நேரத்தில் மாட்டு வண்டிய ஓட்டுறது மாதிரியே கரடு முரடா ஓட்ட ஆரம்பிச்சாரு. "சார்... நான் வேணா நடந்தே வர்றேன். இடத்தை மட்டும் சொல்லிருங்க"ன்னேன். "ந்தா வந்திருச்சு" என்று பிரேக் அடித்து ஓரிடத்தில் நிறுத்தினார். இருவரும் உள்ளே போனோம். "சார், டிவிடி ல காப்பி பண்ண 150 ரூவா!" கடைக்காரன் சொல்ல, யோவ், நான் கோயமுத்து£ர் கவுண்டன். என்னை ஏமாத்துலாம்னு பாக்கிறீயா? வேணாம் வுடு. உட்காருங்க சார்"னு மறுபடியும் அந்த நெடும் பயணத்தை, இல்லையில்லை கொடும் பயணத்தை  துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பள்ளத்திலும் வண்டியை விடும்போதும் எனக்கு பயங்கர சிரிப்பு. பத்திரிகை துவங்கி இது எத்தனையாவது வருடம் என்பதையும், புத்தகத்தின் எண்ணிக்கையையும் குறிக்க, மலர் ஒன்று-இதழ் முப்பத்தி ரெண்டு என்பது மாதிரி அச்சிட்டிருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர் பள்ளத்தில் இறக்கும்போதும், நான் 'விரை ஒன்று வீக்கம் பத்து, பதினொன்று' என்றே கணக்கிட்டு வந்தேன். அதனால்தான் அந்த பயங்கர சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் விடுங்க. நான் நண்பர்கள் யாருட்டேயாவது ஸ்டில் வாங்கிக்கிறேன்"னு சொன்னதையும் பொருட்படுத்தாமல் விரைவாக வண்டியை செலுத்தி ஓரிடத்தில் நிறுத்தினார். 100 அடி ரோட்டில் உள்ள போட்டோ ஷாப். நல்லவேளையாக 50 ரூபாய் கேட்டார்கள். "தம்பி, நான் கோயமுத்து£ர் கவுண்டன். ஏமாந்திருவேனா? அவன்கிட்டே கொடுத்திருந்தா 150 ரூவா போயிருக்கும்"னவரு, "வாங்க, அவரு காப்பி பண்ணட்டும். பக்கத்திலே போயிட்டு வந்திருவோம்"னாரு. அவருக்கு ஏத்த மாதிரி பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்! "ஒங்களுக்கு...?" "ஒன்னும் வேணாம் சார். சீக்கிரம் போயிரலாம்"னேன். "என்ன தம்பி நீங்க? ஒரு பீராவது குடிக்கலாம். சரி விடுங்க, ஒரே ஒரு கட்டிங்"னுட்டு போனவரு திரும்பி வரும்போது, கையிலே ரெண்டு குவாட்டர் பாட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத பாட்டிலே பிரிச்சு சர சரவென்னு காலி பண்ணியவரு, ரெண்டாவது பாட்டிலை பிரிக்க திராணியில்லாம மூடி எது, கிளாஸ் எதுன்னு தெரியாத ரேஞ்சுக்கு போயிட்டாரு. இந்தாள கொண்டு போயி வீட்டுல சேர்க்கிறதா? இல்ல இப்படியே விட்டுட்டு கிளம்பிடுறதா? ஒரே குழப்பம் எனக்கு. "த...ப்ம்ம்வீ, என்..ன்ன்னன யாருழ்ம் ஏமமாழ்த்மம மொழிட்யி£து. நாழ்ன் கோழ்யமத்து£ர்ரு கழ்வுன்ன்டேன்,,..." அவ்வளவு போதையிலும் பஞ்ச் டயலாக் வேற!&lt;br /&gt;&lt;br /&gt;கோயமுத்து£ர் கவுண்டன், இப்படி கவுன் 'டவுன்' ஆவார்னு நான் நெனச்சு கூட பார்க்கலே.&lt;br /&gt;&lt;br /&gt;அவரு கையிலே இருந்த வண்டி சாவிய வாங்கி எப்படியாவது முன்னாடி உட்கார வச்சு வீட்டுக்கு கொண்டு போயிரலாம்னு நினைச்சா, மனுசன் சாவியை இருக்கமா பிடிச்சுகிட்டு தரவே இல்லை. நாம பிடுங்கி, அந்தாளு கத்தி, வம்பே வேணாம்! அந்த பொண்ணுக்கே போன் அடிச்சிர வேண்டியதுதான். விஷயத்தை சொன்னா, "சார் அப்படியே விட்டுட்டு போயிராதீங்க. எப்படியாவது வீட்டில கொண்டு வந்து சேர்த்திருங்க. ஒங்களுக்கு புண்ணியாப் போவும்"னுச்சு. இருதலைக் கொள்ளி எறும்பா இருந்தாலும் பரவாயில்லை. எறும்பைவிட சின்னதா இருக்கிற துரும்பாயிட்டேன் நான். அவரை ஆட்டோவிலே ஏத்தலாம்னு ட்ரை பண்ணினா, என்னை கடத்தப் பாக்கிறியான்னாரு பயங்கரமாக!&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லங்க. நீங்களே ஆளு யாராவது அனுப்புங்க"ன்னு சொல்லிட்டு டாஸ்மாக் இருக்கிற இடத்தையும் அடையாளம் சொல்லிட்டேன். வேறு யாராவது வருவாங்கன்னு பார்த்தா, அந்த நடிகையே பர்தா போட்டுட்டு வந்திடுச்சு. எனக்கு பரிதாபம் ஒரு பக்கம். ஆச்சர்யம் மறுபக்கம். ஆட்டோ டிரைவர் பாருக்குள்ளே போய் அந்தாள து£க்க, அவருகிட்டேயும் அதே பிரச்சனை. பெரிய போராட்டத்திற்கு பிறகு, ஏதோ கவச குண்டலத்தோடவே பொறந்த மாதிரி அவ்வளவு போதையிலும் அந்த குவார்ட்டர் பாட்டிலை விடாம புடிச்சிகிட்டு வெளியிலே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி சாவியே வாங்கி, பின்னாடியே ஓட்டிட்டு போய் வண்டிய விட்டுடலாம்னு நினைச்சு சாவியை கேட்டா, "நான் கோய..."ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக்கையும் சாவியையும் விடாம இறுக்கமா பிடிச்சுகிட்டார். அங்கே இருந்து அசிங்கப்பட வேண்டாம்னு நினைச்ச நடிகை, "சரி சார் வண்டியை அப்புறமா எடுத்துக்கலாம். நீங்க கௌம்புங்க. ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்சு"ன்னுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சிடியை வாங்கிகிட்டு ஆபிசுக்கு போயிட்டேன். மறுநாள் போன் பண்ணி "வண்டிய எப்போ எடுத்தீங்க?"ன்னு ஒரு பேச்சுக்கு கேட்டபோதுதான் ஷாக்கா இருந்திச்சு. இந்தாளு பண்ணிய களேபரத்திலே அந்த பொண்ணும் வண்டிய மறந்திருச்சு போல. மறுநாள்தான் போய் பார்த்திருக்காங்க. பார் வாசல்ல வண்டிய வச்சா எடுக்காம போற அளவுக்கு நல்லவங்க இருக்கானுங்களா என்ன? வண்டி அம்போ...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7634790460541992940?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7634790460541992940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7634790460541992940' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7634790460541992940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7634790460541992940'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_23.html' title='பாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/SkEKB_dj7XI/AAAAAAAAATA/kV0HNQkfCUY/s72-c/nadigai.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7898645786818184234</id><published>2009-06-21T00:06:00.000+05:30</published><updated>2009-06-21T00:09:35.045+05:30</updated><title type='text'>நிருபரோட மடியும், நடிகையோட இடியும்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sj0saeVPG4I/AAAAAAAAAS4/7BCrOxJg_4w/s1600-h/nalini.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 218px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sj0saeVPG4I/AAAAAAAAAS4/7BCrOxJg_4w/s320/nalini.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5349480765716372354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வடக்க சூலம், தெற்க மூலம்னு பேட்டியெடுக்க போம்போதே எச்சரிக்கறதுக்கு ஒரு பொண்டாட்டி இல்லாத பேச்சுலரா இருந்த நேரம்! (அட, நான் இல்லீங்ணா... நம்ப ஃபிரண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;"ஒங்களுக்கு என்னய்யா... ஜாலி? பக்கத்திலே உட்கார்ந்தமா, பல்ல இளிச்சிட்டு கேள்வி கேட்டமான்னுட்டு. எங்க பொழப்புதான் அகோரம்"னு அலுத்துக்கிட்டாரு ஒரு அரசியல் நிருபர். "கொஞ்சம் ஏடாகூடமா எழுதிட்டா கூட வீட்டுக்கு ஆட்டோ வரும் தெரியும்லே?"ன்னாரு. பாவம்தான். இவருக்காவது ஆட்டோ. நம்ம ஃபிரண்டுக்கு என்ன தெரியுமா? பி---ஷ்டம்?! பக்கத்திலேயே வந்து வசமா உட்காந்திட்டாரு அந்த நடிகை. இடுப்பு மட்டுமே இருவது கிலோ இருக்கும் அவருக்கு. அதை நம்ம நிருபரு தொட மேல வச்சு அழுத்திகிட்டு அவரு உட்காரவும், ஏரிக்கர பன மரம் வேறொடு மேலே விழுந்த கதையா, நகரவும் முடியாம, நசுங்கவும் பொறுக்காம தவியா தவிச்சு போயிட்டாரு நம்ம ஆளு. ஃபயர் இன்ஜினுக்கு போன் பண்ணி மீட்க வேண்டிய ஆள, சமர்த்தா பேசி, சாதுர்யமா மீட்டாரு எடிட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலியோட கூண்டுக்குள்ளே எலியாட்டம் போயி மாட்டுன நம்ம நிருபரோட கண்ணீர் கதைதான் இது. அத சொல்றதுக்கு முன்னாடி நடிகை யாருன்னு சொல்லிட்டா, நச்சுன்னு ஃபீல் பண்ணலாமே? "ஏலே லம்பர ஏலே லம்பர.."ன்னு டிஆரால அறிமுகப்படுத்தப்பட்ட கொடியிடை நாயகி நளினிதான் அவர். இப்போ எப்படியிருக்காருன்னு நான் சொல்லணுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு வார பத்திரிகை. நடிகைகளை பற்றி எழுதும்போது மட்டும் வகை தொகையில்லாம எழுதுவாங்க. ராமராஜனை பிரிஞ்சு தனியா இருக்கிறதால சந்தேக கண்ணோடு பார்த்த எடிட்டர் இவரையும் இன்னொருத்தரையும் சேர்த்து வச்சு எழுதிட்டாரு. நாகரிகமா எழுதினா போனா போவுதுன்னு போற பெரிய மனசுதான் நளினிக்கும். ஆனா, எழுதின விதம் இருக்கே, முற்றும் துறந்த முனிவியா இருந்தாலும், அக்கினியா கொதிக்கிற மாதிரி இருந்திச்சு. புத்தகம் கடைக்கு வந்து அடுத்த வாரத்திலேயே சினிமா நிருபரை கூப்பிட்டு, "கோலங்கள் தேவயானியை ஒரு பேட்டியெடுங்களேன்"னாரு எடிட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;அட, அடிக்கிற வெயில்ல குளீர்ர்ர்னு பீரு குடிக்கிற மாதிரி அசைன்ட்மென்ட்டா இருக்கே. சரி சரின்னு சொல்லிட்டு சட்டு புட்டுன்னு கிளம்புனாரு நிருபர். ஆபிஸ் சுவத்துல செவனேன்னு ஒட்டிகிட்டு கிடக்குற பல்லிக்கு கூட விஷயம் முன் கூட்டியே தெரிஞ்சுருச்சு போல. மச்சி பத்திரம்ங்கிற மாதிரியே, இச்சு இச்சுன்னுச்சாம். (சகுனத்தை பற்றியும் பின்னாடி நிருபர் நம்மகிட்ட அதிர்ந்துகிட்டாரு)&lt;br /&gt;&lt;br /&gt;வளசரவாக்கத்திலே ஒரு பங்களாவிலே ஷ¨ட்டிங். நேரிலே தேவயானியை பார்த்ததும், 'இவங்க தேவயானியில்லே, தேவதைகளுக்கே ராணி'ன்னு மனசுக்குள்ளே குயிலு வந்து ரயிலு ஓட்டுச்சு. பக்கத்திலேயே உட்கார்ந்து குளிர குளிர பேட்டி கொடுத்தாரு தேவயானி. கூடவே தன்னோட வீட்டிலேர்ந்து வந்திருந்த லஞ்ச்சையும் சேர்த்து கொடுத்து, நிருபரோட மனசிலே நிரந்தரமா வூடு கட்டிட்டாரு. கிளம்பும்போதுதான், பஞ்சாங்கத்திலே போட்டிருக்கிற மாதிரி, வடக்கே சூலம்ங்கிறது நிரூபணம் ஆச்சு நிருபருக்கு. "வந்தது வந்தீங்க, அப்படியே நம்ம நளிளியையும் ஒரு பேட்டி எடுத்திட்டு போயிருங்களேன். சந்தோஷப்படுவாங்க"ன்னு தேவ 'ராணி' சொல்ல, ஊ லல்லலலான்னாரு நிருபரு. போன வார கட்டுரையெல்லாம் தேவயானியோட தேன் குரலுக்கு முன்னாடி, மைண்டுக்கு வந்து மணியடிச்சாதானே?&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னதோட விட்றாம கேமிராவுக்கு முன்னாடி நின்னுட்டிருந்த நளினியிடம் கூட்டிட்டு போயி, "உங்களுக்காகதான் வெயிட் பண்ணுறாரு. ஒரு பேட்டி கொடுத்திருங்க"ன்னாரு. நளினியும் சந்தோஷமா மொகத்தை வச்சிகிட்டு, "எந்த பத்திரிகை?"ன்னு கேட்டாரு. இவரு பத்திரிகை பேர சொல்ல, எவ்வித ரீயாக்ஷனும் காட்டாம "வெயிட் பண்ணுங்க. வந்திர்றேன்"னு சொல்லிட்டு ஷாட்ல மூழ்கிட்டாரு. அவசரம் அவசரமா ஷாட்டை முடிச்சிட்டு வந்தவர், "வாங்க உள்ளே போயிரலாம்"னு அழைச்சிட்டு மேக்கப் ரூமுக்கு போயிட்டாரு. அங்கே அவங்க ரெஸ்ட் எடுக்க ஒரு கட்டில் வேற. நிருபரை கட்டிலில் உட்கார சொல்லிட்டு தானும் பக்கத்தில் உட்கார்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க, உட்காருங்க"ன்னு இன்னும் பக்கத்திலே அழைத்தவர், தன்னோட இருவது கிலோ சமாச்சாரத்தை நிருபரு தொடை மேல வச்சு அழுத்திகிட்டே, "எந்த பத்திரிகை?"ன்னாரு இன்னொரு தடவ. லக்கேஜை தெரியாம எறக்கி வச்சிட்டாங்க போலிருக்குன்னு நினைச்சுகிட்டே இவரு வலிய பொறுத்துகிட்டு பத்திரிகை பேரை சொன்னாரு. அவ்வளவுதான்... "போன வாரம் என்னய பத்தி எழுதினவன் எந்த தே....£ ...யன்?" என்று ஆரம்பிச்சாரு நளினி.&lt;br /&gt;&lt;br /&gt;அட, ஆமாம்ல... இந்தம்மாவை பற்றி போன வாரம் எழுதிபுட்டாங்களேய்யா. கொஞ்சம் முன்னாடி அது ஞாபகத்துக்கு வந்திருக்கலாமே? வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை தின்ன மாதிரி ஆயிருதே மூளைக்குன்னு ஒரே வருத்தம் நம்மாளுக்கு. ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு "எந்த மேட்டரு?"ன்னு இவரு திரும்பி கேட்க, "உன் புக்கை நீயே படிக்கறதில்லையா?"ன்னு ஆரம்பிச்சு, அதுக்கும் சேர்ந்தா மாதிரி அர்ச்சனைய ஆரம்பிச்சிட்டாங்க மேடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி ஒரு கட்டுரை வந்ததே எனக்கு தெரியாது. யார் யாரோ வெளியிலேந்து வந்தெல்லாம் எழுதி கொடுக்கிறாங்க. அது மட்டுமில்லீங்க. நான் வேலைக்கு சேர்ந்தே நாலு நாளுதான் ஆவுது"ன்னாரு நிருபர். பொய்யி பொய்யின்னு மனசாட்சி கூவினாலும், அந்த மனசாட்சி மேலயா இந்த இருவது கிலோ வெயிட்டும் எறங்கியிருக்கு? காலு மேல அல்லவா அத்தனை வெயிட்டும் இருக்கு? அப்பவும் ஓடிப் போயிடாம இறுக்கமா புடிச்சுகிட்டு இருந்த நளினி, "ஒங்க எடிட்டருக்கு போனை போடு"ன்னாரு. நல்ல வேளைடா, இதுக்காவது அனுமதி கொடுத்திச்சு. இனிமே எப்பிடியாவது நம்மள காப்பாத்திருவாய்ங்கங்கிற நம்பிக்கையிலே எடிட்டருக்கு போனை போட்ட நிருபரு, "சார். நான் கோலங்கள் ஷ¨ட்டிங்கிலே இருக்கேன். போன வாரம் நம்ம புக்கிலே நளினி மேடத்தை பற்றி நியூசு ஏதோ வந்திருச்சாமே? அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க. என்னைய ரூமுக்குள்ளே வச்சு பூட்டிட்டு விட மாட்டேங்கிறாங்க. என்ன நடந்ததுன்னு அவங்ககிட்டேயே சொல்லுங்க"ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;குரலை கடுமையா வச்சுகிட்ட எடிட்டர், "மேடம் நீங்க பண்ணுறது சரியில்லே, உங்களுக்கு அந்த மேட்டர்ல எதிர் கருத்து இருந்தா ஆபிசுக்கு நேரா வாங்க. பதில் சொல்றேன். இல்லைன்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்க. கோர்ட்ல பார்க்கலாம். அதை விட்டுட்டு அப்பாவி பையனை அடைச்சு வச்சிட்டு இம்சை பண்ணினா, சும்மாயிருக்க மாட்டேன். வேற மாதிரி ஆயிரும்"னு பேச, பேச, நிருபர் தொடையிலேர்ந்து வெயிட்டை நகர்த்தி வேற இடத்திலே இறக்கி வச்சாங்க நளினி. 'அப்பா, தொட தப்பியது, தொம்பிரான் புண்ணியம்'னு எழுந்து நின்னுகிட்டாரு நிருபர். (உட்காந்தாதானே திரும்ப வப்பே?)&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீங்க போகலாம்"னு நளினி உத்தரவு கொடுக்க, பாய்ந்தடித்து வெளியே ஓடி வந்தார் நிருபர். வாசலில் நின்று கொண்டிருந்த தேவயானி, "பேட்டி முடிஞ்சுருச்சா?"ன்னு சிரிச்சிகிட்டே கேட்க, "செம வெயிட்டான பேட்டிங்க"ன்னாரு நிருபர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெயிட் என்ன வெயிட்டுன்னு தேவயானிக்கு சொல்லாமலா இருந்திருப்பாங்க நளினி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7898645786818184234?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7898645786818184234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7898645786818184234' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7898645786818184234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7898645786818184234'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_20.html' title='நிருபரோட மடியும், நடிகையோட இடியும்?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sj0saeVPG4I/AAAAAAAAAS4/7BCrOxJg_4w/s72-c/nalini.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4526474635185712704</id><published>2009-06-17T22:36:00.000+05:30</published><updated>2009-06-17T22:41:53.293+05:30</updated><title type='text'>நடிகை வீட்டு போன்...?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sjkjeaxr4vI/AAAAAAAAASw/uDoE6JBALq0/s1600-h/visithra.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 193px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sjkjeaxr4vI/AAAAAAAAASw/uDoE6JBALq0/s320/visithra.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5348345037969941234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி, டிசைன் பண்ணி, போட்டோவெல்லாம் வச்சு புத்தகமா உருவாக்கி கடையிலே போட்டா எவன் வாங்குறான்? ஒண்ணுமே எழுதாம வெள்ளையா அரை குயர் நோட்டுன்னு கொடுக்கிறாய்ங்க, சொன்ன விலைக்கு வாங்கிட்டு போறானுங்களே..? அதுதான் ஆதங்கமா இருக்கு!" -சர்குலேஷன் சரியா இல்லேன்னு வருத்தப்பட்ட ஒரு சிறு பத்திரிகை ஓனரிடம் இப்படி சொல்லி அடிவாங்காம தப்பிச்சேன்னு வச்சுக்கோங்க! அப்படி ஒரு வாயி நமக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லாம் சினிமா டைரின்னு ஒரு புது ஸ்டைல் வந்திருச்சு கோடம்பாக்கத்திலே. நடிகர் நடிகைகளோட அட்ரஸ், அவங்க போட்டோன்னு கலக்கலா இருக்கும். முதல் பக்கத்தை விரிச்சா ரஜினியிலே ஆரம்பிக்கும். அப்படியே சீனியாரிடிபடி போயிட்டே இருக்கும். கொஞ்சம் நடுவாப்லே போயி பார்த்தாதான் தெரியும், பக்கெட் பக்கெட்டா ஒரே டிக்கெட்டுகளா(?) இருக்கும்! ஹ¨ம், இதெல்லாம் கலை சேவையா பண்ண வருதுங்க? நமக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் புதுசா வாடகைக்கு குடி போனாரு ஒரு வீட்டுக்கு. அதுக்கு முன்னாடி இந்த வீட்டிலே டிக்கெட்டு ஒண்ணு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் போல. போயி கொஞ்ச நாளுக்குள்ளே அர்த்த ராத்திரியிலே கதவை தட்டி, "அதுக்குள்ளே து£ங்கிட்டியா?"ன்னு கேட்டிருக்காய்ங்க இவர. அட பாவி மக்கா, என் வீட்டிலே வந்து எவன் எவனோ கேக்க கூடாத சங்கதியெல்லாம் கேக்குறாய்ங்களேன்னு பயந்து போயி, ஒரே மாசத்திலே வீட்டை காலி பண்ணிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சமயத்துல பழைய போன் நம்பருக்கு பணத்தை கட்டாம விட்டுருவாய்ங்க. அந்த நம்பர் எங்கெங்கோ மாறி நம்ம வீட்டுக்கோ, அல்லது நம்ம ஃபிரண்டு வீட்டுக்கோ வந்து சேரும். காலப்போக்குலே நமக்கு வந்து சேர்ற இந்த நம்பர் இருக்கே, சில நேரத்திலே வயித்து போக்குலே கொண்டு போய் விட்ரும். பிஎஸ்என்எல் கனெக்ஷன்ல பி ஃபார் பினாயில், என் ஃபார் நாத்தம்னு வெடிச்சாரு நண்பரு ஒருத்தர். (ஒன்னோட ஃபிரண்டு முழுக்க இப்படி சபிக்கப்பட்டவய்ங்களான்னு கேட்டுறாதீங்க மக்களே, விதி. வேறென்னுமில்லே) இவருக்கு கிடைச்ச நம்பரு, இதயம் நல்லெண்ணை விளம்பரத்திலே வருவாங்களே, சித்ரா. அவங்களோட பழைய நம்பரு. ஒருநாளு வீட்டுக்கு போனா, வாசலிலே துண்டு துண்டா கெடக்குது ரிசீவரு. என்னய்யா?ன்னு கேட்டா, "நேத்து ராத்திரி செம கோவம் வந்திருச்சு"ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லப்போற இன்னொரு ஃபிரண்டு நிஜமாவே சபிக்கப்பட்டவருதான். வையாபுரிய பேட்டியெடுத்தாலே, "விஷயம் தெரியுமா மாப்ளே, வைஸ் நேத்து போன் பண்ணுச்சு. நீங்க நம்மளோட வந்து ஒரு வா(ய்) சாப்டுதான் போவணும்னு ஒரே அடம்"னு சந்தோஷப்படுவாரு. மொக்கை பிளேடுக்கே இப்படி கெக்கே புக்கேன்னு சந்தோஷப்படுறாரே, சக்கை ஃபிகரு போன் பண்ணினா என்னாவாருன்னு நெனச்சுப்பேன். திராட்சை நழுவி தேன்ல விழுந்து, அதையெடுத்து சிலுக்கு ஊட்டுனா மாதிரி சந்தோஷப்பட்டாரு ஒரு நாளு. வேறொன்னுமில்லே, கவர்ச்சி நடிகை விசித்ராவை பேட்டியெடுக்க போனாராம். "உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்களே எனக்கு மேனேஜரா இருங்களேன்"னு கேட்டுருக்கு. பசுந்தாள் உரத்தை பரவலா அடிச்சா, சும்மா சிலுத்துக்கிட்டு நிக்குமே பயிரு, அப்படி சிலுத்துகிட்டு நின்னுது அவரோட உசிரு. (நாகரீகம்?)&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலே ஆபிஸ்லே போயி கையெழுத்து போட்டா, அப்படியே அசைன்ட்மென்டுன்னு போயிருவாரு குலதெய்வம் சன்னதிக்கு. வளர்ச்சி பணிகள், ஐந்தாண்டு திட்டம்னு ஒரே வகுத்தல், பெருக்கல் சமாச்சாரங்களா விவாதிப்பாங்க ரெணடு பேரும். எல்லாம் எத்தனை நாளைக்கு? ஒரே வாரம்தான். "அட, போங்க சார்... மானத்திலே சாணத்தை அடிச்சுப்புட்டாய்ங்க"ன்னு பதறியடிச்சுட்டு ஓடிவந்தார் ஒருநாளு. என்னாச்சு? என்னாச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லே, அவங்களை ஏதோ கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டிருக்காய்ங்க. வாங்களேன் போயிட்டு வந்திரலாம்னு நம்ம நண்பரையும் வெளியூருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க விசி. இந்த சேவைக்கு கடைக்காரங்க கொடுத்த தொகை பத்தாயிரம் ரூபாய். கூடவே போனவரை, இவருதான் மேனேஜருன்னு அறிமுகப்படுத்தியிருக்கு விசித்ரா. விழா களேபரத்திலே இருக்கும்போது, ஊரு பெரிய மனுஷன் ஒருத்தரு வந்து, "தம்பி... நம்ம பேரு?"ன்னு அன்பா விசாரிச்சிருக்காரு. இவரும் பேர சொல்லிட்டு பேச ஆரம்பிக்க, அவரு சில சந்தேகங்களை கேட்டிருக்காரு. அதுக்கு வெள்ளந்தியா இவரு பதில் சொன்னதுதான் சிக்கலுக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, பொண்ணு எவ்ளோ வாங்குது?"ன்னு அவரு கேட்டாராம். நம்மாளு விவரம் புரியாம, ஏதோ கடை திறப்பு விழாவுக்கு வர எவ்ளோன்னு கேட்கிறாரு போலிருக்குன்னு நினைச்சுகிட்டு, "பத்தாயிரம்"னு சொல்லியிருக்காரு. "ரொம்ப சீப்பா இருக்கே?"ன்னிருக்காரு பெரிசு. ஃபிரண்டு சும்மா இல்லாம, "அவங்க ரொம்ப ஆசைப்படுற டைப் இல்லே"ன்னு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. இப்படியே பேசிட்டே வந்த பெரிசு, "ரூம் நம்ம போட்டுக்கணுமா, அந்த பத்தாயிரத்திலேயே வந்திருமா?"ன்னு கேட்க, அப்பதான் புரிஞ்சிருக்கு. "அட கருமம் புடிச்சவய்ங்களா? டபுள் எம்.ஏ படிக்கணும்னு ஆசப்பட்டவன்டா நான். படிக்காமலேயே சர்டிபிகேட் வாங்க வச்சிட்டீங்களேடா"ன்னு கோ கொலேன்னு மூக்கை சிந்திட்டு, பஸ் ஏறிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க கார்லேயே போகலாம்னு 'விதி'த்திரா கூப்பிட, "பக்கத்து ஊர்லே சித்தி இருக்காங்க. பார்த்திட்டு வர்றேன்"னு கிளம்புனாராம். நேரா ரூம்லேதான் வந்து விழுந்தாரு. இப்போ கூட விசித்ராவோட படம் டி.வி ல வந்தா முதல்ல ரிமோட்ட எடுத்து ஆஃப் பண்ணிடுறாராம். "ஏண்ணே அப்படி கோவப்படுறாரு?"ன்னு அவரு பொண்டாட்டி கேக்குது. நான் என்னன்னு சொல்றது?&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு- அந்த சினிமா டைரிய வாங்கி அனுப்பு. டாலர்லே பணம் அனுப்புறேன்னு மட்டும் பின்னு£ட்டம் போட்றாதீங்க சனங்களா... நல்லாயிருப்பீங்க!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-4526474635185712704?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/4526474635185712704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=4526474635185712704' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4526474635185712704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4526474635185712704'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_5928.html' title='நடிகை வீட்டு போன்...?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sjkjeaxr4vI/AAAAAAAAASw/uDoE6JBALq0/s72-c/visithra.JPG' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-3454853459054213011</id><published>2009-06-14T22:48:00.000+05:30</published><updated>2009-06-15T12:29:23.567+05:30</updated><title type='text'>சினேகாவின் 'தங்கமான' சிரிப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SjUxM1TYS2I/AAAAAAAAASM/HJ7AB2AHKV0/s1600-h/Sneha-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 306px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SjUxM1TYS2I/AAAAAAAAASM/HJ7AB2AHKV0/s320/Sneha-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5347234229108886370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;உழவனா இருந்தாலும் சரி, ஓரடி கூட நகர முடியாத கிழவனா இருந்தாலும் சரி, சினேகாவோட சிரிப்பை 'சிரப்' மாதிரி குடிச்சிட்டு காலந்தள்ளுற ரொம்ப பேரை நானறிவேன். டெவிலுக்கெல்லாம் கோவில் கட்றாய்ங்க, தேவதைக்கு ஒரு செங்கல்லை கூட வைக்க மாட்றாங்களே?ன்னு இவய்ங்க தவிக்கிற தவிப்பு இருக்கே, ரொம்ப பரிதாபம். விட்டா அறநிலைய துறைக்கு ரத்த கையெழுத்து போட்டு மகஜர் அனுப்புவாய்ங்க போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ருட்டிய கடக்கும் போதெல்லாம் "சினேகா பொறந்த ஊருடோய்..."னு கூச்சல் போட்டு, பலாப்பழ முள்ளாள இடி வாங்குன இளைஞ்சருங்களுக்கு ஒரு தகவல். பருவ வயசிலே பல ஊரு சுத்துனாலும், இறுதி காலத்திலே இங்கதான் இருக்கணும்ங்கிறதுதான் சினேகாவோட கொள்ளை ஆசையாம். (இனிமே பண்ருட்டியிலே ரியல் எஸ்டேட் தொழில் பிச்சுக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;சினேகா நடிச்ச ஒரு படத்துக்கு போயிருந்தோம் நாங்க. (.சூ, சக்தி, அம்முலுன்னு...) படத்தோட டைரக்டரு திடீர்னு பக்கத்திலே வந்து, சார் ஏதாவது வேணுமான்னாரு. 'கேண்டீன்லேர்ந்து'ங்கிற வார்த்தைய அவரு சேர்க்காம போனதால வந்த வினை, உற்சாகமாயிட்டாரு .சூ. "சார், கேட்டா கண்டிப்பா கொடுப்பீங்களா?" கேளுங்க சார்.. -இது அவரு! "கோவிச்சுக்க கூடாது" -இது நம்ம ஆளு. சஸ்பென்சை இன்னும் நீடிக்க விடக்கூடாதுன்னு நினைச்ச டைரக்டரு, "சீக்கிரம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்திலே உங்க கையிலே இருக்கும்"னாரு. .சூ.கேட்டாரே ஒரு பரிசு...&lt;br /&gt;&lt;br /&gt;"சார், சினேகாவோட முடியிலே ஒண்ணே ஒன்ணு. போதும். நான் பர்சிலே பத்திரமா வச்சுப்பேன்...!" அவ்வளவுதான், இடைவேளையிலே எங்களை பார்த்து பக்குவமா விசாரிச்ச டைரக்டரு, படம் முடிஞ்ச பிறகும் பக்கத்திலேயே வரலே. எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்திச்சு சினேகாவோட (ஆரம்ப கால) அழகில். ஒரு பிரஸ்மீட்லே இதை அப்படியே போயி ஒரு நிருபர் சினேகாவிடம் சொல்ல, அவங்க வெட்கமா சிரிச்சது இப்பவும் கண்ணுலேயே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து பக்கத்திலே நின்று பல முறை பார்க்கிற வாய்ப்பு வந்தும், மணிக்கணக்காக ஒரே இடத்திலே இருக்கிற சூழ்நிலை அமைஞ்சும் அவங்களும் பேசாம, நானும் பேசாம போனதுக்கு ஒரு காரணம் இருந்திச்சு. நான் அவங்ககிட்டே எடுத்த ஒரு பேட்டி. விரும்புகிறேன் ரிலீஸ் ஆகாம முடங்கி கிடந்த நேரம். அது அவங்களோட முதல் படம். 'விரும்புகிறேன்' பற்றி பேச போய், நொறுங்குகிறேன்னு ஆயிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இயக்குனர் சுசி கணேசன் தனக்கு டார்ச்சர் கொடுத்தாருன்னு ஆரம்பிச்சு ஒரே கம்ப்ளைன்ட் அவரு மேலே. இறுதியா "என்னை கொல பண்ண ட்ரை பண்ணினாரு தெரியுமா?"ன்னு அவங்க சொல்ல, கிடைச்சுதுடா ஒரு கவர் ஸ்டோரின்னு ஜில்லாயிட்டேன். சைலன்ட்டா எழுந்து வந்து சுசிக்கு போன் போட்டு, "சினேகாவை கொல்ல முயற்சி செஞ்சீங்களாமே?"ன்னு கேட்க, முதலாம் பானிப்பட்டு போரை விட மோசமான போர் ஆரம்பம் ஆச்சு. சினேகாவுக்கு போனை போட்டு அவரு திட்ட, "அந்த நியூசை போடாதீங்க சாரு"ன்னு அவங்க என்னை விரட்ட, ஒரே பிடிவாதமா செய்தியை போட்டுட்டுதான் ஓய்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னை கொல்ல சதி. டைரக்டர் மீது சினேகா பரபரப்பு குற்றச்சாட்டு'ன்னு போஸ்டர் சென்னையை அலங்கரிக்க, அலங்காநல்லு£ர் காளை போனில் வந்து கொக்கரித்தது. அதுதான் சினேகா கடைசியா என்னோட பேசுனது. அதுக்கு பிறகு ஸ்ரீகாந்த் படங்களின் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்ப்பேன். ஏப்ரல் மாதத்தில், போஸ், பார்த்திபன் கனவுன்னு பல படங்களில் சேர்ந்து நடிச்சாங்க. அவரும் என்னை பார்ப்பார். ஆனால் பேசிக் கொண்டதே இல்லை. அவருக்கே தெரியாமல் அவரோட வாழ்க்கையில் விளையாடியிருக்கிறேன். (இப்போ விரிவா சொல்ல முடியலேன்னாலும், சந்தர்ப்பம் வரும்போது...)&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் ஒரு பிரஸ்மீட். சற்று லேட்டாக போனதால் பிரஸ்மீட் முடிந்து அவர் வெளியே வரும்போது நேருக்கு நேர் பார்க்கும்படி ஆனது. "நல்லாயிருக்கீங்களா?" என்றார் அதே பசுமை மாறாத சிரிப்போடு. அந்த சிரிப்பு இருக்கே, அது எதிரியாக இருந்தாலும், ஒரேயடியாக சாய்த்துவிடுகிற 'தங்கமான' சிரிப்பு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-3454853459054213011?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/3454853459054213011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=3454853459054213011' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/3454853459054213011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/3454853459054213011'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_14.html' title='சினேகாவின் &apos;தங்கமான&apos; சிரிப்பு'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SjUxM1TYS2I/AAAAAAAAASM/HJ7AB2AHKV0/s72-c/Sneha-1.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-8644020526542033445</id><published>2009-06-09T19:07:00.000+05:30</published><updated>2009-06-09T19:12:15.012+05:30</updated><title type='text'>நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Si5mUeq0yQI/AAAAAAAAASE/0T63foG_iUg/s1600-h/fathima.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Si5mUeq0yQI/AAAAAAAAASE/0T63foG_iUg/s320/fathima.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5345322309751458050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;விருகம்பாக் கம், வளசரவாக் கம், கொட்டிவாக் கம்... கொஞ்சம் கூர்ந்து கவனிச்சிட்டீங்களா? இந்த 'கம்' எல்லாம் எந்த கம் னு நெனைக்கிறீங்க? அவசரப்பட்டு தப்பா யோசிச்சிராதீங்க. இது வேற கம். "படப்பிடிப்புக்கு பங்களா இருக்கு. வர்றீங்களா"ன்னு அழைக்கிற வணக் கம்!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்திலே 'மேய்ச்சல்' நிலமா இருந்த இடத்தையெல்லாம் வளைச்சு போட்டு, நீச்சல் குளத்ததோட வீட்டை கட்டியிருக்காய்ங்க பல பேரு. அதிலே பல பங்களாக்களில் நடக்கிற இரண்டாவது விஷயம் ஷ¨ட்டிங். (முதல் விஷயம் என்னாங்கறது நமக்கெதுக்கு?) அப்படி ஒரு பங்களாவை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிற ஒரு நடிகையை பற்றிய விஷயம்தான் நான் சொல்லப் போறது. டிவிலே பேசுற பல பேரோட தமிழை கேட்டா அது உச்சரிப்பா, நச்சரிப்பான்னே தெரியாதளவுக்கு நசுங்கிப் போவுது லாங்குவேஜ். அப்படிப்பட்ட 'வரட்டு வால்' தொகுப்பாளினிகளுக்கு நடுவே, நம்ம நடிகை பேசுற தமிழ் இருக்கே... அது தித்திப்பான திரட்டுப்பால்! இப்பவும் தொலைக்காட்சியிலே அவங்க வந்தா, காதிலே ஒரு டிசம்பர் கச்சேரியே நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் கூட ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். மைக்குக்கு வலிக்காம, மனசுக்கு சுளுக்காம, குளுக்கோச காதிலே கொட்டின மாதிரி அப்படி ஒரு அழகான தொகுப்புரை. மொத்த சனமும் குத்த வச்சு உட்கார்ந்து குளுகுளுன்னு ரசிச்சிட்டு போச்சு. இவ்வளவு ரசனையும் எதுவரைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;முகம் வரைக்கும்தான். அப்படியே கேமிராவை கீழே இறக்கினால், வைட் லென்ஸ்லேதான் அடங்குவாங்க. அப்படி ஒரு சைஸ்! ஃபங்ஷன்லே பி-ரோவில் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, பின்ன்ன்ன்ன்ன்ன்னாடி ரோவில் இருந்து பார்த்தாலும் சரி. பளிச்சென்னு தெரிகிற பீரோ அவங்க! அம்மா, அக்கா கேரக்டர்னு சின்னத்திரையிலேயும், பெரிய திரையிலேயும் வூடு கட்டி அடிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சொல்லியும் யூகிக்க முடியலைன்னா, தெரிஞ்சிட்டுதான் போங்களேன். நம்ம ஃபாத்திமா பாபு. தேவாரத்தையும் திருக்குறளையும் சொல்ற விபூதி வாத்தியாரு, சமயத்திலே பிரம்பெடுத்து பின்னுற மாதிரி, இவங்களுக்குள்ளேயும் ஒரு காட்ஸில்லா வந்து கர்புர்னுச்சு. சும்மாவா பின்னே? வயித்தை கட்டி, வாய கட்டி(?) சேர்த்து வச்ச காசிலே ஒரு வூட்டை கட்டினா, ஓசியிலே உப்புமா கிண்டுறேன். கொஞ்சம் சட்டி தர்றீங்களான்னு கேட்டா சாமி வந்து ஆடாது? ஆடுச்சுய்யா ஒரு நாளு...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சீரியலுக்காக தனது பங்களா வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாங்க ஃபாத்திமா. சீரியல் தயாரிப்பாளர் யாரு தெரியுமா? ஒரே நேரத்திலே பத்து படத்துக்கு பூஜைய போட்டு இன்டஸ்ட்ரியவே கிலி பிடிக்க வச்ச பெரிய்ய்ய்ய்ய்ய கம்பெனி. புரடக்ஷன் மேனேஜரு வீட்ட சுத்தி சுத்தி வந்தாரு. "இங்கே இது இருந்திருக்கணும். அங்கே அது இருந்திருக்கணும். ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ரேட் எவ்வளவு?"ன்னாரு மொத்த வீட்டுக்கும். ஏதோ விலைக்கே வாங்குற மாதிரி கேட்டாலும், நாலே நாளு ஷ§ட்டிங்கிற்குதான் இத்தனை கேள்வி மற்றும் ஆலோசனைகள்! ஒருவழியா நாலு நாளைக்கும் சேர்த்து இருபத்தஞ்சாயிரம் பேசி ஒரு சிறு தொகையை அட்வான்சா வாங்கிட்டு ஏதோ ஒரு சேனலுக்கு 'நியூஸ் வாசிக்க' போயிட்டாங்க ஃபாத்திமா. வீட்டுக்கு மேலேயே அவங்க குடியிருக்காங்க. கீழ் போர்ஷனைதான் வாடகைக்கு விட்டிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாளு ஷ§ட்டிங் முடியுற நேரத்திலேயாவது பணம் வந்திரும்னு காத்திருந்தா, லைட்டு, செட் பிராப்பர்ட்டின்னு எல்லாத்தையும் எடுத்து வேன்லே ஏத்திட்டு இருக்காய்ங்க. போட்டிருந்த நைட்டியோடு கீழே வந்த ஃபாத்திமா "நம்ம பேமென்ட் வரலே. அதுக்குள்ளே எல்லாத்தையும் ஏத்துறீங்களே"ன்னாரு. "வரும், வந்திரும்"னு ரெண்டே வார்த்தை பேசிட்டு, ஏத்துறதிலேயே குறியா இருந்தா பு.மே!&lt;br /&gt;&lt;br /&gt;சரி வந்திரும்னு பொறுமையா இருந்த ஃபாத்திமாவுக்கு அடுத்து நடந்ததுதான் சுர்ர்ர்ர்ர்... மெல்ல தனது காரிலே ஏறிக்கிட்ட புரடக்ஷன் மேனேஜரு, "நாளைக்கு யாருகிட்டேயாவது குடுத்தனுப்புறேன். இப்போ கையிலே பணம் இல்லே"ன்னுட்டு வேகமா வண்டிய கிளப்பிட்டாரு. தன்னோட பதிலை கூட கேட்காம இப்படி விருட்டுன்னு வண்டிய கிளப்பிட்டு போனதிலே பயங்கர அப்செட் ஆன ஃபாத்திமா, போட்டிருந்த நைட்டியோடு தனது காரை கிளப்பிகிட்டு புரடக்ஷன் மேனேஜரு வண்டிய விரட்ட, வளசரவாக்கத்திலே ஆரம்பிச்சிது அந்த சேசிங்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாடி இவங்க விரட்டுறதை பார்த்திட்ட மேனேஜரு, மாட்னா நாம மேனேஜரு இல்லே, டேமேஜருதான்னு நினைச்சிட்டாரு. ஆக்சிலேட்டர அழுத்தி டிராபிக்கை கதி கலங்க அடிச்சாரு. இவங்க மட்டும் லேசுபட்டவங்களா என்ன? சோழவரம் ரேசுல, மூணு தடவ கப்பு வாங்குன ரேஞ்சுக்கு வண்டிய விரட்ட, போற வர்றவன்லாம் பொம்பளையா இது?ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஃபார்த்தும்மான்னு சொன்னாலும் கேட்கிற நிலைமையிலா இருக்காங்க ஃபாத்திமா? சர்ருபுர்ருன்னு பறக்குது வண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா ராம் தியேட்டருகிட்டே மடக்கிட்டாங்க புரடக்ஷன் மேனேஜரு வண்டிய. முன்னாடி போயி சடர்ன் பிரேக் அடிச்சு குறுக்கால வண்டிய நிறுத்த, முகமெல்லாம் வேர்க்க விறுவிறுக்க இறங்கினாரு புரடக்ஷன் மேனேஜரு. அவரு சர்வீஸ்லே இப்படி ஒரு அவமானத்தை பார்த்தே இருக்க மாட்டாரு. "ஏம்மா, நான்தானே தர்றேன்னு சொன்னேன்ல. இப்படி வண்டிய குறுக்க விட்டுட்டீங்களே, மொதல்ல வண்டிய எடுங்க"ன்னாரு. "ஓஹோ, தரமாட்டேன்னு வேற சொல்லுவியா"ன்னு கீழே இறங்கிய ஃபாத்திமாவ பார்த்திட்டு ஒரே கூட்டம். அவ்வளவு கூட்டத்திலேயும் ஆட்டோகிராப் ப்ளீஸ்னு ஒரு அசமஞ்சம், தாளு ஒன்னை எடுத்து நீட்ட, "அட போய்யா அந்தப்பக்கம்"னு தள்ளிவிட்டாங்க பாத்திமா. "பணத்தை எண்ணி வச்சுட்டு வண்டிய எடு"ன்னு ஒரே கெரகம். நைட்டியோட நின்ன இவங்களை பார்த்திட்டு ஷ¨ட்டிங் போலிருக்குன்னு இன்னும் கூட்டம் கூட, தன்னை ஜகதல பிரதாபன்னு நினைச்சு வண்டிய விரட்டிட்டு வந்தவரு தர்மசங்கடலிங்கமாயிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்தபடியே யார் யாருக்கோ போன் போட்டு பணத்தை வரவழைச்சாரு. நட்ட நடுரோட்டில் பட்டுவாடா ஆச்சு பணம். மறக்காம வவுச்சர்லே கையெழுத்தும் வாங்கினாரு ஸ்பாட்லேயே வச்சு! அன்னைக்கு நைட் அவங்க சேனல்லே செய்தி வாசிக்கும் போது இந்த செய்தியும் சொல்லுவாங்களோங்கிற அச்சம் அந்த புரடக்ஷன் மேனேஜருக்கு இருந்திருக்குமோ என்னவோ? நேர்லே பார்த்தா கேட்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-8644020526542033445?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/8644020526542033445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=8644020526542033445' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8644020526542033445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8644020526542033445'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_09.html' title='நடுங்க வைத்த, நடிகையின் சேசிங்...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Si5mUeq0yQI/AAAAAAAAASE/0T63foG_iUg/s72-c/fathima.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4018110028920203254</id><published>2009-06-07T13:02:00.000+05:30</published><updated>2009-06-07T13:09:35.643+05:30</updated><title type='text'>குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்க?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/SituZOOTJiI/AAAAAAAAAR8/FD9hXmA91FY/s1600-h/sneha.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/SituZOOTJiI/AAAAAAAAAR8/FD9hXmA91FY/s320/sneha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5344486762399082018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;....ண்ணே, மதுர திமிருங்கிற படத்துல ஒரு பாட்டெழுதியிருக்கேன். உங்க வெப்சைட்டுல ஒரு நியூச போட்டூட்ருங்கன்னு பால பாரதி கேட்டப்போ, சந்தோஷமா இருந்திச்சு. 'பாட்டு வாங்குன' ஒரு ஆளு பாட்டு எழுதினா சந்தோஷந்தானே பாலியல் பாரதி?ன்னேன்! பால பாரதிய நான் செல்லமா கூப்பிடுறது அப்படிதான். அவரும் புரிஞ்சிகிட்டு, "அண்ணே நானே அதை மறந்திட்டேன்"னாரு மறக்காம! ஆனா மறக்கக்கூடிய சமாச்சாரமா அது?&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிக்காக போற இடத்திலே என்ன கேட்கிறோம்னே தெரியாம எதையாவது கேட்டுட்டு, கண்ணு மண்ணு தெரியாம புண்ணாகிப்போயி வருவாய்ங்க சில பேரு. நம்மாளும் அப்படிதான். அன்னைக்கு நடந்த சம்பவம்...? அத சொல்றதுக்கு முன்னாடி கண்ணு, மண்ணு, புண்ணுன்னு அடுக்கு மொழியிலே சொல்லிட்டு அத பற்றி எழுதாம போனா, எழுதுற பேனாவுக்கே அழகில்லே! அதனால சொல்லிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரபல வார இதழில் அப்பதான் வேலைக்கு சேர்ந்திருந்தாரு அந்த 'சொட்டை தலை' நிருபர். லொட லொட ஆசாமிதான் இவரும். வந்த புதுசில்லையா? ஆர்வத்தை பேனாவிலே நிரப்பினாலும், அடக்கத்தை உரல்ல போட்டு குத்தோ குத்துன்னு குத்திட்டு இருந்தாரு. அமெரிக்காவ பற்றி ஒரு டவுட்டுன்னு வைங்க. "டேய், கிளின்டனுக்கு போன போடு. கேட்ருவோம்"ங்கிற அளவுக்கு இவரோட ஆர்வம் ஆர்ட்டீஷியன் லெவலுக்கு பொங்கி பிரவாகம் எடுத்து ஓடியது ஆபிஸ் எங்கும். முனிஸ்வரன் வந்தாலே முட்ட பரோட்டாவ குடுத்து சமாளிக்கிறவய்ங்க, சொட்டையோட வேகம் தாங்காம துடிச்சு போயிட்டாய்ங்க. இவரோட அழும்புக்கு தழுப்பு ஏற்படுத்தணும்ங்கிற முடிவுக்கு வந்திட்டாய்ங்க. ஒரு பெண் போலீஸ் ஆபிசர் பேர சொல்லி, அவங்ககிட்ட ஒரு பேட்டிய எடுத்திட்டு வந்திருங்கன்னாய்ங்க விவரமா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த செகன்ட் அந்த ஆபிசரு வீட்டுக்கு போன போட்டுட்டாரு நம்மாளு. நைட் ட்யூட்டி பார்த்திட்டு வந்த களைப்போ, என்னவோ, அந்தம்மா நல்லா து£ங்கிட்டு இருந்தாங்க. இருப்பு கொள்ளாம போனை அடிச்சிகிட்டே இருந்தாரு சொட்டை. கொஞ்சம் லேட்டா, வேலைக்காரி போனை எடுத்து "அம்மா து£ங்குறாங்க"ன்னு சொல்ல, "நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன். எழுப்பு"ன்னுட்டாரு நம்ம ஆளு. அட, இதையாவது சகிச்சுக்கலாம். து£க்க கலக்கத்தோட எழுந்து ரிசீவரை எடுத்த அந்தம்மாவிடம், மணி பத்தாவது. இந்நேரத்திலே குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்கன்னுட்டாரு! (வேறொன்னுமில்லே, வாயி..) "ஹே, ஹ¨ ஆர் யூ"ன்னு அந்தம்மா போன்லேயே லட்டியை சுழற்ற, மொத மொதலா ஈரக்கொலையிலே தாரு ஊத்துன வலி ஏற்பட்டுச்சு சொட்டைக்கு. தப்பா கேட்டுட்டோமோ? இதிலே மணி பத்தாவுது. இன்னும் து£க்கமான்னு கேட்ட வரைக்கும் ஓ.கே. அதுக்கு பிறகு குப்புறப்படுத்து.... ஆங் அங்கதான் தப்பு பண்ணிட்டோம் போலருக்குன்னு வினாடிய நு£றா பிரிச்சு அதுக்குள்ளே யோசிச்சிட்டாரு மனுஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம், நான் வந்து... வந்து... இந்த பத்திரிகையிலேர்ந்து... ஒரு பேட்டின்னு..." குளறி குளறி சொல்லி முடிச்சதும் "போனை வைங்க. நானே கூப்பிடுறேன்"னாங்க அந்தம்மா. அடுத்த செகன்ட் எடிட்டருக்கு போன் பறந்தது. "யாருங்க அவன்? இப்படி கேட்கிறான்"னு அவங்க சொல்ல, ரிசீவரை சாத்திய அடுத்த வினாடி எடிட்டர் டேபுளுக்கு முன்னாடி நின்னாரு சொட்டை. அவரு மனசுக்குள்ளே போட்டிருந்த தோட்டாதரணி 'செட்டை' பிரிச்சு எடுத்திட்டாரு எடிட்டர். (எல்லாமே கிசுகிசு பாணியிலே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாலைஞ்சு பேருக்கு இது தெரியும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஹ¨ம், திரும்பவும் நம்ம பாலபாரதி மேட்டருக்கு வருவோம். 'போலீஸ் செய்தி' என்ற புலனாய்வு பத்திரிகையிலே சினிமா நியூஸ் எழுதிட்டிருந்தாரு பால பாரதி. பிளேடு பக்கிரி, பிச்சுவா பரமன்கிற மாதிரி, இவரு ஸ்பீக்கர் பாரதி. ரொம்ப பேசுவாரு. பிரஸ்மீட்லே ஹீரோ ஒரு பதில சொன்னா, காதோரமா வந்து "என்ன இப்பிடி சொல்றான்? இவன பத்தி தெரியதா?"ம்பாரு ஆம்புலன்ஸ்  அவசரத்தோடு. "பிரஸ்மீட் முடிஞ்சு போம்போது இவன தனியா பார்த்து நான் குடுக்கிறேன் பாருங்க நக்கலுன்"னு அவரு சவால் விடுறதை பார்த்தா, நாளைய தந்தியிலே இதுதான் தலைப்பு செய்தியா வரும் போலங்கிற அளவுக்கு இருக்கும். ஆனா இவரு போயி அவருகிட்ட தனியா பேசுறதை கேட்டாதான் தெரியும். அது நக்கலு இல்லே, ஹீரோவோட 'நெஞ்ச நக்கலுன்னு!'&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை டிஆரை பேட்டி எடுக்க வந்திருந்தாரு பால பாரதி. நாங்கள்ளாம் வெளியே பேசிட்டு இருந்தோம். அண்ணன் வரச்சொல்லியிருக்காருன்னு எங்ககிட்ட சொல்லிட்டு உள்ளே போனாரு. பேட்டி நல்லா ஸ்மூத்தாதான் போயிட்டு இருந்திச்சு. திடீர்னு உள்ளேயிருந்து ஒரே சத்தம். "டேய், கதவை இழுத்து மூட்றா. இவனை கட்டிப்போடு. ங்கொ....ள யாருகிட்டே கேக்கிறே"ன்னு ஒரே சத்தம். ஆஹா, டிஆரோட பசிக்கு நம்மாளு பிரியாணி ஆயிட்டாரேன்னு நாங்க பதற ஆரம்பிச்சிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து நிமிஷம் காட்டுக்கூச்சல் உள்ளேயிருந்து. டிஆரோட கோவத்தை பார்த்தா, இன்னிக்கு பால பாரதிய பார்சல் கட்டிதான் வெளியே கொண்டு வரணும் போலங்கிற அளவுக்கு ஆயிருச்சு. கதவை திறந்திட்டு வெளியே வந்த டிஆர், "போடுய்யா அவங்க ஆபிசுக்கு போனை" என்றார். நாங்க மெல்ல பஞ்சாயித்திலே என்டர் ஆகி "என்னாச்சுண்ணே?" என்றோம். "இல்லய்யா, சிம்புவை நடிக்க வச்சு அதுல வர்ற வருமானத்திலேதான் நீங்க வாழுறீங்களாமேன்னு கேக்கிறான்யா"ன்னாரு அழாத குறையாக!&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மெல்ல பால பாரதிய காப்பாற்றி வெளியே கொண்டு வந்து விட்டோம். பாதி கேட் தாண்டுறதுக்குள்ளே திரும்பவும் கூப்பிட்டாரு டிஆர். "தம்பி கோவிச்சுக்காதீங்க. எமோஷனலாயிட்டேன். அப்படியெல்லாம் அண்ணன்கிட்டே கேட்க கூடாது, தெரியுமா?"ன்னு அன்பா தோளிலே கையை போட்டு, ஆறுதலா பேசியும் அனுப்பினாரு. இப்போ கூட டி.ஆர் பிரஸ்மீட்லே பால பாரதியை பேச சொல்லுங்க பார்ப்போம். ம்ஹ¨ம்...!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-4018110028920203254?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/4018110028920203254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=4018110028920203254' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4018110028920203254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4018110028920203254'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_07.html' title='குப்புற படுத்துகிட்டு என்ன பண்றீங்க?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/SituZOOTJiI/AAAAAAAAAR8/FD9hXmA91FY/s72-c/sneha.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4966695449664111123</id><published>2009-06-05T23:17:00.000+05:30</published><updated>2009-06-05T23:25:35.206+05:30</updated><title type='text'>ஃபேஸ்புக்கில் வந்த நோஸ்கட்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/Silb9PRFmlI/AAAAAAAAAR0/k-U8PxM77LI/s1600-h/chating.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/Silb9PRFmlI/AAAAAAAAAR0/k-U8PxM77LI/s320/chating.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5343903540480154194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆஹா...ஹ்! நான் என்ன எழுதப்போறேன்னு தெரியாமலேயே இப்படி குமுறிட்டீங்களே சாருங்களா? விட்டா பாக்கெட்ல கைய விட்டு, இவர திட்ட சொல்லி 'அவரு' கொடுத்ததா?ன்னு கூட கேட்டிருப்பீங்க போலிருக்கு. பத்திரிகையிலே வந்தது... பாதி காதுல கேட்டது...ன்னு இல்லாம, கொஞ்சம் நிஜமாவே எழுதலாம்னு நினைச்சேன். அவரு சாப்பிடுற கொஞ்சூண்டு டிபன்லேர்ந்து, நெஞ்சார படிக்கிற புத்தகம், அப்புறம் வீட்டிலே நடக்கிற கிருஷ்ணன் பூஜை வரைக்கும் அதிலே அடக்கம். அதுக்குள்ளே இப்படியா? மை டியர் அண்ணாஸ்... இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன். ஏன்னா, எனது நோக்கம் ஜாலியா படிக்கணும். சகஜமா சிரிக்கணும். இந்த பதிவு ரெண்டுக்கும் குண்டு வைச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா ஒன்று மட்டும் புரியுது. அவது£று பரப்பறதுல நீங்கள்ளாம் கிசுகிசு கிங்கரர்களோட ஒன்ணு விட்ட சித்தப்பாங்களா இருப்பீங்கங்கறது மட்டும்! ஓக்கே, வேற பதிவுக்கு போவலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்குட் ஒரு பக்கமும், ஃபேஸ் புக் மறுபக்கமும் வந்ததிலேர்ந்து, கன்னித்தீவு கதையிலே வர்ற கண்ணாடி மாதிரி ஆயிடுச்சு வாழ்க்கை. (எனக்கில்லே சாமீ) பக்கத்து பக்கத்து டேபிள்ளே உட்கார்ந்திருந்தாலும் ஃபேஸ் புக்லேயே பேஸ்சிக்கிறாய்ங்க ரொம்ப பேரு. நான் சொல்லப் போற நண்பருக்கு ஏராளமான நண்பர்கள். பாதி பேரு இப்படி ஃபேஸ்புக்லே வந்தவங்கதான். கம்ப்யூட்டர்லே வலைய வீசுவாரு. சுறா கிடைச்சாலும் சரி, சுள்ளான் கிடைச்சாலும் சரி. ரெண்டுமே லாபம்தான் அவர பொருத்தவரை. ஏன்னா தனது பிசினசை அது மூலம் பெருக்க என்ன வழின்னு யோசிக்கிற ஆளு அவரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஷ§ட்டிங்கிலே கேரவேன் கேரவேன்னு ஒரு ஐட்டம் இருக்கே? அதுதான் நம்ம ஆளோட பிசினஸ். ஆர்குட்லேயே ஆர்ட்டிஸ்டுகளை பிடிச்சு கலகலப்பா பேசுவாரு. அவங்க நல்ல பிரண்டானதும் ஷ§ட்டிங்கிற்கு கேரவேனை தள்ளி விட்ருவாரு. இப்படி அவரு வச்சிருக்கிற கேரவேன்கள் மாதத்திற்கு ஒரு குட்டிய போட்டு, (ஐ மீன் பல்கி பெருகி) இன்னைக்கு அவரு கையிலே அரை டஜன் கேரவேன்கள் ஓடிட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு வாரத்துக்கு முன்னாடி, ஃபேஸ்புக்லே ஒரு யங் ஹீரோவோட பேர போட்டு 'சர்ச்' பண்ணியிருக்காரு மனுஷன். இவரு கெட்ட நேரம் போட்டவுடனேயே கிடைச்சிட்டாரு அவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சார்ட்டிங்லே, "ஹலோ சார் குட் மார்னிங்..."னு டைப் பண்ணிட்டு வெயிட் பண்ணிய நேரத்தில் இருப்பு கொள்ளாம நகத்தை கடிச்சிட்டு இருக்கும்போதே, எதிர்முனையிலிருந்து பளிச்சென்று வந்துச்சு பதில். "...மார்னிங்!"&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோதான். சந்தோஷத்தில் பயங்கரமா மிதக்க ஆரம்பிச்சாரு பிரண்டு. பின்னே...? இவரு ட்ரை பண்ணிய அந்த யங் ஹீரோ பயங்கர மன்மதன். அவரு யாரையும் மதிக்க மாட்டாரு. நமக்கெல்லாம் அவரு ஃபிரண்டாவறதே கஷ்டம்னெல்லாம் உரைப்பு சட்டினியை உள் மனசிலே தடவி வச்சிருந்தாய்ங்க இவரோட பிரண்ட்ஸ். இந்த நிலைமையிலே ஹீரோவிடமிருந்து உடனே ஒரு குட் மார்னிங் வந்தால்? ஆடிப்போயிட்டாரு மனுஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேங்க்ஸ்... அப்பிடின்னு டைப் பண்ணி அனுப்பிட்டு மறுபடியும் விட்டுப் போன விரலை எடுத்து நுனிப்பல்லிலே வச்சு நகத்தை கடிச்சிட்டு இருந்தாரு. அடுத்த செகன்ட் மறுமுனையிலிருந்து மன்மத ரிப்ளை! "ஓக்கே..." இப்போ மறுபடியும் கீ போர்டில் கபடி ஆட ஆரம்பிச்சாரு ஃபிரண்டு. "சார், நான் ஸோ அண் ஸோ. என்னோட பிசினஸ் இன்னது. உங்களுக்கு கேரவேன் வேணும்னா சொல்லுங்க. பிரமாதமா உங்களுக்காகவே டிசைன் பண்ணி தர்றேன்"னு இவரு டைப் பண்ணி என்ட்டர் கொடுத்திட்டு வெயிட் பண்ணினார். "எங்கே மீட் பண்ணலாம். எப்போ வர்றீங்க?"ன்னு அடுத்தடுத்து பதிலா வரப்போவுதுன்னு இவரு கற்பனையிலே மிதக்க, எதிர்முனையிலிருந்து வந்தது பதில்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னன்னு? அதை எப்படி சொல்றது? வந்தது மூன்றெழுத்தில் அமைந்த சரியான கெட்ட வார்த்தை. அட, சு....க்கு நு£றாக்கிட்டியேடா என்னோட இமேஜைன்னு நொறுங்கிப் போன நண்பர், சிஸ்டத்தை குளோஸ் பண்ணினாரு. அன்னையிலேர்ந்து இந்த மாதிரி 'சிஸ்டத்தை' அவரு ஃபாலோ பண்றதே இல்லைங்கிறதை நான் சொல்லணுமா என்ன?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-4966695449664111123?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/4966695449664111123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=4966695449664111123' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4966695449664111123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/4966695449664111123'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_05.html' title='ஃபேஸ்புக்கில் வந்த நோஸ்கட்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_feKwFSgneu0/Silb9PRFmlI/AAAAAAAAAR0/k-U8PxM77LI/s72-c/chating.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-8798119754597482612</id><published>2009-06-04T22:21:00.000+05:30</published><updated>2009-06-04T22:26:45.963+05:30</updated><title type='text'>ரஜினி, நல்லவரா? கெட்டவரா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sif8oyBD_AI/AAAAAAAAARs/1U0xSL-rwv0/s1600-h/rajini01.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 297px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sif8oyBD_AI/AAAAAAAAARs/1U0xSL-rwv0/s320/rajini01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5343517260449577986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரஜினி கலந்துகிட்ட பங்ஷன்... முன்வரிசையில் அவரு வந்து உட்கார்ந்ததும், டிரான்ஸ்பார்மர் வெடிச்சா ஒரு வெளிச்ச மழை விழுமே, அப்படி விழுந்தன பிளாஷ்கள்! இட்லி மாவுல, பரோட்டா சுட்ட மாதிரி எகனை மொகனையா சுத்திகிட்டு நிக்கிறாங்க ஆளுங்க. "ஒழுங்கா நின்னு படம் எடுங்க. இல்லே ஓரமா நின்னு வழிவிடுங்க"ன்னு விவிஐபிங்க கோவிச்சுகிட்டாலும், 'அண்ணாமலைக்கு முன்னாடி நீங்கள்ளாம் யாருடா சுண்ணாம்பு கட்டிங்க?'ன்னு சுர்ர்ர்றாவுறாய்ங்க நம்ம போட்டோகிராபர்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க அப்படியே போயி அங்க உட்கார்ந்திரலாம்"னு நான் ஒரு கணக்கு போட்டு நண்பனை அழைத்தேன். (பேரு அவசியமா?) "வேணாம்ங்க, முன்னாடி ரஜினி சார் இருக்காரு. இப்படியே போயிரலாம்"னு கழுத்தை சுத்தி காதோரத்துக்கு வழி சொன்னாரு நண்பர். "ஏங்க குறுக்கால போறது எப்படி? நீங்க வேற எங்கேயோ வழி சொல்றீங்களே"ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே நான் போக நினைத்த அந்த இடத்தில் நாலு சீட்டு ஃபுல். "அட வாங்க"ன்னு அவரை கையை பிடிச்சு இழுக்கும்போது அவரு சொன்னாரு, "அவர பார்த்தா அந்த பழைய பயம் இப்பவும் வந்து தொலையுதுங்க"ன்னாரு. "எந்த பயங்ம்க"ன்னு நான் கேட்க முடியாது. ஏன்னா, அது நடந்த ரெண்டாவது நாளு எங்கிட்ட சொல்லி ஒரு லிட்டர் வேர்த்திருந்தாரு அந்த நண்பர். சரி விடுங்கன்னு நானும் அவரும் கூட்டத்திலே பஞ்சாமிர்தம் ஆகி, சீட்லே உட்காரும்போது எனக்கும் ஒரு லிட்டர் வேர்வை காலி.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னா சம்பவம்? நண்பர் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர். ரஜினி படம் ஒன்றில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தார். பத்திரிகையிலேர்ந்து போயி அந்த படத்திலே வேலை பார்த்தது இவரு மட்டும்தான். வேலைக்கு சேர்ந்த மொத நாளே, பத்திரிகைகாரன்ங்கிற அந்த படவா ராஸ்கோலை மனசுக்குள்ளே போட்டு புதைச்சுட்டு சேலம் குட்டி சாமியாரு மாதிரி முகம் மனசெல்லாம் தேஜஸ் வழிய மாறிட்டாரு நம்ம ஆளு.&lt;br /&gt;&lt;br /&gt;பேரீச்சம் பழ கொட்டையா இருந்தாலும் எலி புழுக்கையா இருக்குமோன்னு பார்க்கிற ஜாதியல்லவா? எலி புழுக்கையே மேட்டரா கிடைச்சிருச்சு ஒரு முறை. பிரிச்சு நெளிச்சு பேரீச்சம் பழம் ஆக்கிட்டாய்ங்க. ஏதோ ஒரு பத்திரிகையிலே என்னமோ மாதிரி எழுதிட்டாய்ங்க. எல்லா பத்திரிகையும் ஒன்னு விடாம படிக்கிற ஆளு போலருக்கு ரஜினி. அதையும் படிச்சு தொலைச்சிட்டாரு. "அசிஸ்டென்ட்டுகளை வரச்சொல்லுங்க. விசாரிக்கணும்"னு சொல்லிட்டாராம். அருணாசலா கெஸ்ட் ஹவுஸ். ராத்திரி எட்டு மணி.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டி ஏரியிலே ஜட்டிய கழட்டிட்டு எறக்கிவிட்ட மாதிரி வெட வெடன்னு நிக்கிறாய்ங்க அஞ்சு பேரும். அப்படியே மேல கீழ அவங்களை பார்த்த ரஜினி, "இதிலே யாரோ ஒருத்தன்தான் அந்த வேலைய செஞ்சிருக்கணும். நான் அவன மட்டும்தான் திட்டுறேன். எவன் தப்பு பண்ணினானோ, அது அவனுக்கே போகட்டும்"னு திட்ட ஆரம்பிச்சாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;யானை வயித்திலே திருவோடு செஞ்சு, அதிலே எருமாட்டு கருவாட்ட போட்டு தாளிச்ச மாதிரி, மணக்க மணக்க வாசம். காது ரெண்டையும் குப்புன்னு அடைச்ச அந்த வாசத்தை கை நீட்டி பொத்திக்கவும் முடியாம, அட கருமம் புடிச்சவய்ங்களா, ஏண்டா எழுதி தொலைச்சீங்க? நான் மேட்டரை சொல்லியிருந்தா கூட ஆறிருக்கும். ஆனா சொல்லாத விஷயத்துக்கு வெஷம் கக்கி வீசுறாரேங்கிற வேதனை நண்பருக்கு. பதினைஞ்சு நிமிஷம் பொழிஞ்ச மழையிலே தொப்பலா நனைஞ்சு உத்தரவுக்காக நிக்கிறாய்ங்க மறுபடியும். "போவலாம் நீங்க. இப்பவும் சொல்றேன். இது யாரு போயி பத்திரிகையிலே சொன்னானோ, அவனுக்கு மட்டும்தான்"னாராம் ரஜினி. அந்த பத்திரிகை நண்பரோடதான் அந்த விழாவுக்கு போயிருந்தேன். படம் முழுக்க இந்த பயத்தோடதான் வேலை பார்த்தாராம் நண்பர். நல்லவேளையா அதே வீரியத்தோட வேற மேட்டர்கள் வரலே. வந்திருந்தா பயபுள்ள 'பஸ்ப்பம்' ஆயிருப்பாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹே, தலைவனோட சீப்பு, ஆ... தலைவனோட பவுடருன்னு எல்லாத்தையும் எடுத்து கோக்கு மாக்கா யூஸ் பண்ணிட்டு ரஜினி ரூம்லேயே "ஆஹ்ஹா தலைவனோட சேரு"ன்னு அதிலே உட்கார்ந்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷை, அப்போதான் ரூமுக்குள்ளே வந்த மாதிரி கண்டும் காணாம இருந்தவருதான் ரஜினி. அது நடந்து இருபது வருஷம் இருக்கும். பணக்காரன் படத்தப்போ நானும் வெங்கடேஷ§ம் ரஜினிய பார்க்க போயிருந்தப்போ நடந்த சம்பவம் அது. 'திரைச்சிற்பி ரஜினி' என்ற பத்திரிகையை ரஜினிக்காகவே பிரத்யேகமாக நடத்திட்டு இருந்தாங்க. அதிலே வெங்கடேஷ் பொறுப்பாசிரியர். அடியேன் டிசைனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி கதைகள் நிறைய கேட்டிருக்கேன். சிலவற்றை கேட்க கேட்க சுகம். சிலவற்றை கேட்க கேட்க, --------? இந்த இருபது வருஷத்திலே நான் அவதானித்த ரஜினியின் இன்னொரு பக்கம் எப்படி? சொல்லட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும் தயாரா சில பொக்கேக்களையும், சில செங்கற்களையும் வைச்சுக்கோங்க. பாசமா கையிலே தர ஒன்ணு. ரோசமா நெஞ்சிலே வீச ஒன்ணு. இனி பதிவுகளின் இடையிடையே ரஜினியும் வருவார்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-8798119754597482612?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/8798119754597482612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=8798119754597482612' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8798119754597482612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8798119754597482612'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_04.html' title='ரஜினி, நல்லவரா? கெட்டவரா?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sif8oyBD_AI/AAAAAAAAARs/1U0xSL-rwv0/s72-c/rajini01.jpg' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-7945697049448817773</id><published>2009-06-03T22:59:00.000+05:30</published><updated>2009-06-03T23:13:18.098+05:30</updated><title type='text'>கிளிய வளர்த்து மிக்சியிலே போட்டு ஆட்டிட்டாய்ங்களே...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sia0uRh2xbI/AAAAAAAAARc/SWzC_WXB_30/s1600-h/Keerthi-Chawla-.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sia0uRh2xbI/AAAAAAAAARc/SWzC_WXB_30/s320/Keerthi-Chawla-.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5343156714994058674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒட்டுமொத்த சனத்தையும் ஒன்னா நிக்க வச்சி, "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறீயே, உம் பேரு கட்டப்புள்ளையா"ன்னு கேளுங்க! "ஆமா"ன்னு சொல்ற கெட்டப்புள்ள வர்கம்யா இது...! ஒரு படத்தோட ப்ரீவியூவுக்கு வந்திருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், "இப்பிடி ஒரு மூஞ்சை ஹீரோவா போட்டிருக்காங்களே, இதுக்கு ஒரு கோடி ரூவாய்க்கு பிலிம்மை வாங்கி பிரிச்சு பிரிச்சு போட்டு வெளையாடியிருக்கலாமே"ன்னாரு வேதனையோட.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆரு, சிவாஜி, எஸ்எஸ்ஆரு, முத்துராமன்னு அழகனுங்களா பார்த்த அவரு கண்ணுக்கு இப்போ வர்ற மூஞ்சுங்க எல்லாம், மூஞ்சூறு மாதிரி தெரிஞ்சாலும் ஆச்சர்யமில்லே. எனக்கு தெரிஞ்சு, கண்ணுக்குள்ளே இரண்டு 'டாஸ்மாக்' கடையையே தெறந்து வச்சுகிட்டு இருக்கிற நடுவயசு ஆளுங்க சிலர், "நேத்து கூட ஒரு கம்பெனியில பேசிட்டு வந்திருக்கேன். இந்த ஜப்ஜெட்டுக்கு(?) நீதான்யா பொருத்தமான ஹீரோன்னு சொன்னாங்க"ன்னு மனசாட்சி மேல மண்ணெண்ணைய ஊத்திக்கிட்டு பேசுவாய்ங்க. ஒனக்கென்னடா ராசா, கொஞ்சம் முன்னாடி மெட்ராசுக்கு வந்திருந்தா இந்நேரம் ஒனக்கும் ஆயிரம் மன்றம் திறந்திருப்பானுங்கல்ல...ன்னு அதிலே நெருப்புக்குச்சியை கிழிச்சு வைப்பான் உற்ற தோழன். எல்லாம் ஒரு 'சியர்ஸ்' செய்யுற மாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sia1czIEsqI/AAAAAAAAARk/Gx0SVMJa638/s1600-h/selvan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sia1czIEsqI/AAAAAAAAARk/Gx0SVMJa638/s320/selvan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5343157514286707362" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;&lt;span&gt;இன்னும்&lt;/span&gt;&lt;/span&gt; சில பேரு, மஞ்ச மஞ்சேர்னு சட்டைய போட்டுகிட்டு, மாரு, கையின்னு வெளிச்சம் படுற இடத்திலே எல்லாம் ரோஸ் பவுடரை அப்பிகிட்டு வாய்ப்புக்காக நிக்கிறதையும் பார்த்திருக்கேன். "ஒரு சீன்லே வந்திட்டு போற மாதிரி ஒரு ரோல் இருக்கு. பண்றீங்களா?"ன்னு கேட்டு பாருங்க. இருட்டுற வரைக்கும் வெயிட் பண்ணி நாம போகும் போது சந்திலே இருந்து கல்லை விட்டு எறிஞ்சிருவாய்ங்க! நாகேஷ¨ சிரிப்பு, நம்பியாரு மொரைப்பு மாதிரி, இவங்க கூடவே பொறந்தது இந்த ஹீரோ மிதப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், பாடல், இசை, நடிப்புன்னு வரிசை கட்டி அடிக்கிற வெறியோட திரிவாய்ங்க பல பேரு. எல்லாத்தையும் ஒரு பேப்பரில் எழுதி வச்சுகிட்டு வர்ற இவங்களிடம், "இந்த சைக்கிள் டோக்கன், டீ டோக்கன் ரெண்டுத்தையும் விட்டுட்டீங்களே"ன்னு வெறுப்பேத்தி அனுப்புற புரடக்ஷன் மேனேஜருங்களையும் பார்த்திருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களுக்கு முன்னாடி நான் பார்த்த போஸ்டரில் இருந்த நபர், ஒருவேளை ஜெயிக்கலாம். வெற்றிகரமான கதையோடு வந்திருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே "எதுக்குய்யா இப்பிடி சோதிக்கிறாரு?"ன்னு கேட்டவங்கதான் அதிகம். 'மாக்கான்'ங்கிற படத்தோட போஸ்டர்தான் அது. கதைக்காகதான் ஹீரோ, ஹீரோவுக்காக கதை இல்லைங்கிற கொள்கையிலே நம்பிக்கை உள்ளவன் நான். ஒருவேளை இந்த கதைக்கு அவரு பொருத்தமா இருப்பாரோ என்னவோ? ஆனா இந்த படம் ஓடிட்டா அவரோட அடுத்த படம் என்னவா இருக்கும்? எப்பிடி இருக்கும்? ஃபாரின்லே போயி டூயட்டெல்லாம் ஆடுவாரோங்கிற பயம் தன்னால வர்றது இயற்கைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபாரினுக்கு போயி ஆடுறதுக்கே வெட்கமா இருக்குங்க. அந்த ஊரு சினிமாவிலே இந்த மாதிரி ஆடறதையெல்லாம் அவங்க பார்த்திருக்க மாட்டாங்களா? நம்மளையே உத்து உத்து பார்க்கிறப்போ, ரொம்ப சங்கோஜமா இருக்கும்"னு ஒரு தடவ சொன்னாரு சத்யராஜ். ஒரு படத்திலே ஃபாரின்லே போயி 'போர்ட்டர்'கள் போடுற சிவப்பு கலர் டிரஸ்சோட ஆடுவாரு விஜய். அவர கவனிக்கறதை விட்டுட்டு அங்க வேடிக்கை பார்க்கிற ஜனங்களோட ரீயாக்ஷனை கவனிச்சவங்களுக்கு தெரியும். நம்மள்ளாம் அவங்க கண்ணுக்கு எவ்ளோ பெரிய ஜோக்கர்ஸ் என்று. ஏதுக்குய்யா இந்த கொல வெறின்னு கேட்டா, அந்நிய செலவாணி, அது இதுன்னு புரியாத லாங்குவேஜ்லே சமாளிக்கிறாய்ங்க. இந்த விஷயத்திலே நாமெல்லாம் அன்னிய 'கொலை'வாணிங்கன்னா சரியா இருக்குமோ?!&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டமணி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துக்காக வெளிநாட்டுக்கு போயிருந்தாங்க. ஷ¨ட்டிங் எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் ஜனங்க கூடிட்டாங்க. அவங்களுக்கு பயங்கர ஆர்வம். ஹீரோ வந்ததும் அவரை பார்க்கணும். ஆட்டோகிராஃப் வாங்கணும் என்று. அடிக்கடி "ஹீரோ வந்திட்டாரா?"ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம். திடீர்னு வந்து நின்னாரு கவுண்டர். "இவருதான் ஹீரோ"ன்னு ஜனங்களுக்கு அறிமுகப்படுத்த, காத்திருந்தவங்கள்ளாம் இங்கிலீஷ்லேயே காறித்துப்பிட்டு போனதா சொல்லி சிரிச்சாரு அந்த பட கம்பெனிக்கு ரொம்ப வேண்டியவரு ஒருத்தரு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, மாக்கான் விஷயத்துக்கு வருவோம். ராஜ்கிரணுக்கு ஜோடி மீனாவான்னு கேட்டு முள்ளம்பன்றி சூப்பை குடிச்ச அதே சனங்க, அந்த படத்தை மாங்கு மாங்குன்னு பார்த்து ரசிச்சதை 'மாக்கான்' விஷயத்துக்கு முன்னோடியா சொல்றாங்க. நல்லதாவே நடக்கட்டும். ஒரே வருத்தம்னா அது இதுதான். ரிப்போர்ட்டருங்களை அண்ணான்னு பாசமா கூப்பிடுற கீர்த்தி சாவ்லாதான் திருமதி மாக்கானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிய வளர்த்து கூண்டுல அடைச்சாலும் பரவால்ல, மிக்சியிலே போட்டு ஆட்டிட்டீங்களேய்யா....?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-7945697049448817773?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/7945697049448817773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=7945697049448817773' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7945697049448817773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/7945697049448817773'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post_03.html' title='கிளிய வளர்த்து மிக்சியிலே போட்டு ஆட்டிட்டாய்ங்களே...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/Sia0uRh2xbI/AAAAAAAAARc/SWzC_WXB_30/s72-c/Keerthi-Chawla-.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-6293864920159155285</id><published>2009-06-01T22:35:00.000+05:30</published><updated>2009-06-01T22:37:35.507+05:30</updated><title type='text'>சாக்ரட்டீஸ்களின் சந்தைக் கடை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SiQKkiAfKYI/AAAAAAAAARU/lXBywQYpy0Q/s1600-h/kudi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 256px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SiQKkiAfKYI/AAAAAAAAARU/lXBywQYpy0Q/s320/kudi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5342406680688667010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;வடபழனி சூர்யா ஆஸ்பிடல் ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தா, ஃப்ளாப் கொடுத்த நேற்றைய இயக்குனருலேர்ந்து, 'கிளாப்' அடிக்கிற இன்றைய துணை இயக்குனர் வரைக்கும் பார்க்கலாம். பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக் பார்! பொய்யெல்லாம் அவுத்து எறிஞ்சிட்டு வெள்ளந்தியா பேசுற அந்த கடை, சத்தியமா சொல்றேன்... சாக்ரடீஸ்கள் கூடுற சந்தைக் கடை!&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ளே, ஒரு கதை சொல்றேன் கேளு"ன்னு அந்த போதையிலும், ரீரெக்கார்டிங்கோட சொல்ற, ஷங்கர் மணிரத்னத்தையெல்லாம் அங்கே ஏராளமா பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 'நாட்' மட்டும் சொல்றேன். கேளுங்கன்னு ஆரம்பிச்சு, ஒரு குயர் 'நோட்' அளவுக்கு 'நாட்'டை மட்டுமே சொல்ற நண்பர்களோடுதான் இப்பவும் பழகுறேன். "ஏண்ணே, இரண்டரை மணி நேர படத்துக்கு நாலு மணி நேரம் கதை சொல்றீங்களே, வெளங்குமா இது?"ன்னு கேட்க ஆசைப்பட்டாலும், அதுக்கு ஒரு பதில சொல்றேன்னு இன்னும் ஒரு மணி நேரத்தை காலி பண்ணினா என்னாவறது? "சூப்பர்..."னு ஒரு வார்த்தைய சொல்லிட்டு ஓடிப்போன நாளு நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தாதான் கதை சொல்ல வரும்னு நடந்துகிட்டே கதை சொல்வாரு ஒருத்தர். ஆக்ஷன் சீன் சொல்லும்போது மேலே பாஞ்சு பிராண்டிட்டு 'ஸாரி'ன்னு ஒரு வார்த்தையை எடுத்து பிராண்டின இடத்திலே தடவிட்டு போவாரு இன்னொருத்தர். அழுகாச்சி சீன்லே மூக்கை சிந்தி, நம்ம சட்டையிலேயே தொடச்சுட்டு "நல்லா 'சிந்தி'ச்சு சொல்லுங்க, நல்லாயிருக்கா இல்லியா?"ம்பாரு வேறொருத்தர். இப்படி நடமாடும் தியேட்டர்களை என் தோளில் தொங்கவிட்டுட்டு இருக்கிற தங்கமான புள்ள நான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்திலேயே கொடுமை என்னான்னா குடிகாரன் பேச்சை குடிக்காம கேட்கிறதுதான். அதைவிட கொடுமை சினிமா கதை கேட்கிறதுதான்! இது என்னோட தாழ்மையான அபிப்பிராயம். ஆனா கதை சொல்லும்போதே நமது விரலையும் பிடிச்சு இழுத்திட்டு போயி கதைக்குள்ளே கரைய வைக்கிற ஏராளமான நண்பர்களையும் பார்த்திருக்கேன். அப்படி கதை சொல்ற அற்புதமான ஆளுதான் 'தினந்தோறும்' நாகராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;முரளி-சுவலட்சுமி நடிச்ச 'தினந்தோறும்' என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவிலே ஒரு விடிவெள்ளின்னு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சந்தோஷப்பட்டுட்டு இருந்தப்போ, 'குடி' கொள்ளின்னு பேரு வாங்கிட்டாரு மனுஷன். ஒரே படத்தின் மூலம் வந்த வெற்றி தலைகால் புரியாம அவரை ஆட வச்சுது. காலை அரும்பி பகலெல்லாம் ஃபுல்லாகி பாழாப் போனாரு மனுஷன். ஒருநாள் இதே சூர்யா ஆஸ்பிடல் வாசல் பக்கமா நின்னு வேடிக்கை பார்த்தப்போதான் அந்த அதிர்ச்சி! ஆறேழு ஃபுல் பாட்டிலை அந்தரத்திலே நிக்க வைச்ச மாதிரி ஒரு ஆளு. வேற யாருமில்லே, நம்ம நாகராஜ்தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;கையிலே ஒரு கிளாசை வச்சிகிட்டு பக்கத்திலே நின்ன பையனோட உச்சந்தலையை பிடிச்சு பக்கத்திலே இழுத்தாரு. ஐயோ பாவம், அந்த பையன் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் போலிருக்கு. வலியை பொறுத்திக்கிட்டு அவரு பக்கத்திலே தலையை கொண்டு போனாரு. அதுவரைக்கும் எனக்கு தெரியாது, அந்த அசிஸ்டென்ட் டைரக்டருதான் நாகராஜோடே மெயின் டிஷ்ஷ§க்கு, சைட் டிஷ்ஷ¨ன்னு! மூச்சை வேகமா உள்ளே இழுத்து உச்சந்தலையை முகர்ந்தார். அந்த வாசனை போறதுக்குள்ளே ஒரே கல்ப்பா உள்ளே இறக்குனாரு அந்த சரக்கை! இப்படி சரக்குள்ள ஒரு இயக்குனர் கையிலே 'சரக்கை' கொடுத்தே சாய்ச்சுது விதி.&lt;br /&gt;&lt;br /&gt;"காலையிலே வாங்க, ஈவினிங் வரைக்கும் இருந்து சீன் சொல்லுங்க, போம்போது ஒரு ஃபுல் தர்றேன்"னு சொல்லியே நாகராஜை 'கல்ப்பா' அடிச்சுது தமிழ்சினிமா. எத்தனையோ வெற்றிப்படங்களின் நல்ல நல்ல சீன்கள் நாகராஜுடையதாகவும் இருக்கலாம். எல்லாவற்றின் விலையும் சில பல ஃபுல்கள் மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ சமீபத்திலே ஒரு சினிமா கம்பெனியிலே நாகராஜை பார்த்தேன். இளைத்து பென்சில் போல இருந்தார். "எல்லாத்தையும் விட்டுட்டேன். இப்போ பல மணி நேரம் நிக்கணும்னு நினைச்சாலும் நிக்க முடியலே. ஆனா, எப்படியாவது பழையபடி நின்னு காட்டணும்னு ஆசையும் வெறியும் இருக்கு"ன்னாரு அடங்காத தாகத்தோடு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாகம், 'அந்த' தாகம் இல்லேங்கிறது மட்டும்தான் நிறைவான நிம்மதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-6293864920159155285?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/6293864920159155285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=6293864920159155285' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6293864920159155285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6293864920159155285'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/06/blog-post.html' title='சாக்ரட்டீஸ்களின் சந்தைக் கடை!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SiQKkiAfKYI/AAAAAAAAARU/lXBywQYpy0Q/s72-c/kudi.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-5268758622321197918</id><published>2009-05-30T23:06:00.000+05:30</published><updated>2009-05-30T23:10:22.578+05:30</updated><title type='text'>புகைச்சல் விட்ட, நகைச்சுவை திலகம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SiFvG8Mo4oI/AAAAAAAAARM/qLVxgekklVw/s1600-h/vivek-.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 270px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SiFvG8Mo4oI/AAAAAAAAARM/qLVxgekklVw/s320/vivek-.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5341672798067155586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;சந்தர்ப்பம் கிடைச்சா, இந்துத்வாவை சந்துல நுழைச்சு சந்தோஷப்பட நான் ஒன்றும் இராம.கோபாலன் இல்லே! ஆனா அவரையும் என்னையும் சந்திக்க வச்சாரு பத்மஸ்ரீ விவேக்! ஏன்? எதற்கு? எப்படி? என்னாச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி மொத்தமா கேள்விகள எடுத்து மூஞ்சுக்கு நேரா எறிஞ்சாலும், அந்த அவமானத்தை நினைக்கும்போது பதிலே சொல்ல முடியாதளவுக்கு மைனஸ் ஆகுது மனசு. அது ஒரு முத்திப் போன கத்திரி சீசன். அக்கினி வெயில்ல ஆளே பஞ்சராகிட்டிருக்காங்க அங்கங்கே! அந்த நேரத்திலே நானும் நண்பர் பாலுவும் ஒரு பைக்லே ஏறிகிட்டு (நாறிகிட்டுன்னும் படிக்கலாம், அவ்வளவு வேர்வை) விவேக்கை பார்க்க போனோம். "பிரசாத் ஸ்டுடியோவிலேதான் இருக்காரு. போனா பார்க்கலாமே"ன்னு புதை குழிக்கு வழி சொன்ன அந்த பொல்லாத 'கொலிக்ஸ்' கன்னத்திலே பொளிச்சுன்னு அறைஞ்சிருக்கணும். (வந்த பிறகாவது)&lt;br /&gt;&lt;br /&gt;"நேரம் இருந்தா ஏதாவது எழுதிக்கொடுங்களேன்"னு 'குங்குமம்' எடிட்டர் சாருப்பிரபா கேட்டதாலே விவேக்கை சந்திக்க போனேன். அதுக்கு முன்னாடி குங்குமத்திலே என்ன நடந்ததுன்னே தெரியாம போனதால வந்த விளைவு அது. ஒரு படத்திலே மனோகராவில் வரும் நீதிமன்ற வசனத்தை அப்படியே ஸ்டைலா அடிச்சிருப்பாரு விவேக். அது சம்பந்தமா பேட்டியும் கொடுத்திருந்தாராம் குங்குமத்துக்கு. "சிவாஜியால் எனக்கு பெருமை"ன்னு விவேக் சொல்ல, "என்னால் சிவாஜிக்கு பெருமை"ன்னு மாத்தி எழுதிட்டாய்ங்க. சும்மா இல்லாம, 'என்னால் சிவாஜிக்கு பெருமை'ன்னு டைட்டிலும் வச்சுட்டு சன் டி.வியிலேயும் ஒரு நாளைக்கு முப்பது வாட்டி திருப்பி திருப்பி சொல்லவும் விவேக்கோட போனுக்கு ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் வந்து ஒரே காச்மூச்! அவ்வளவுதான்... உடம்பெல்லாம் பைல்ஸ் வந்த மாதிரி ஓன்ன்ன்ன்னு அலற ஆரம்பிச்சிட்டாரு விவேக். (தப்பில்லையே?)&lt;br /&gt;&lt;br /&gt;எலியே எரவாணத்திலே சிக்கிக்கிட்டு தொங்குது, இதுலே கரப்பான் பூச்சி போயி வாலை நக்குனா என்னாவும்? என் நிலைமையும் அப்படிதான் இருந்திச்சு. விவேக்கிடம் போய் "குங்குமத்துக்காக ஒரு இன்டர்வியூ"ன்னு வாயை திறந்தேன். அவ்வளவுதான், அத்தனை ஆத்தாவும் மொத்தமா ஏறுனா மாதிரி மூஞ்சை வச்சிகிட்டு "எங்கேர்ந்து?"ன்னாரு. நான் திரும்பவும் "குங்குமம்"னு சொல்லவும், உதடு உண்டி வில்லு ஆயிருச்சு விவேக்குக்கு! வையாபுரி உடம்புலே ஓம்பூரிய ஒட்ட வைச்சா மாதிரி உடம்பை விறைச்சுக்கிட்டு அப்படியே எந்திருச்சாரு. வாயிலேர்ந்து சரோஜாதேவி புத்தகத்திலே வருமே, முக்கியமான 'மேட்டர்களோட' பேரு. அதுவா வந்து கொட்டுது. அவ்வளவும் என்னையில்லே, என்னைய அனுப்பியதா அவரு நினைச்சுக்கிட்டிருந்த சாருப்பிரபாவை! "அவன் பண்ணின வேலையாலே நான் சந்திச்ச பிரச்சனை கொஞ்சமா, நஞ்சமா? இவ்வளவும் பண்ணிட்டு ஆளு அனுப்புறானா, பேட்டிக்கு?&lt;br /&gt;நான் நினைச்சா என்னாவும் தெரியுமா? தொலைச்சிருவேன்"னு பாய, நான் "சார் என்னைய அவரு அனுப்பலே"ன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு பிறகாவது என்னை உட்கார வைச்சி பேசியிருக்கலாம். நானும் பாலுவும் நின்னுகிட்டே இருந்தோம். பொதுவா பேட்டின்னு ரிப்போர்ட்டர்ஸ் போனா முதலில் உட்கார சொல்ற வழக்கம் எல்லா நடிகர் நடிகைகளுக்கும் உண்டு. சேர் இல்லேன்னா அவங்களும் எழுந்து நிப்பாங்க. சேர் வந்த பிறகு நம்மோடு சேர்ந்து உட்காருவாங்க. இப்படியே பழகிய எனக்கு விவேக் கொடுத்த மரியாதை, ரொம்ப கேவலமாக பட்டது. அப்படியே திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தா அவ்வளவு பேரும் எங்களையே பார்த்திட்டு இருந்தாங்க. "சார் பேட்டி வேணாம்னா விடுங்க. அதுக்குப்போயி எதுக்கு இவ்வளவு பேசுறீங்க? தைரியம் இருந்தா சாருபிரபாகிட்டே போயி பேசுங்களேன்"னேன். "இப்பதான் அவன் ஆபிசுக்கே நேரா போயி காதெல்லாம் நாறி போற மாதிரி திட்டிட்டு வர்றேன். பின்னாடியே ஆளு அனுப்புறானா?"ன்னாரு மறுபடியும்! (அட, இது வேறயா....? தெரியாம போச்சேடா சொக்கா...)&lt;br /&gt;&lt;br /&gt;விருட்டுன்னு கோவிச்சுகிட்டு வெளியே வந்தோம் நானும் பாலுவும். (இப்போ பாலு தினமலர்லே இருக்கார். அப்போ அவரும் ரொம்ப கோவப்பட முடியாதபடி ஒரு இன்டர்நெட் பத்திரிகையிலே இருந்தார்) வண்டியிலே வரும்போது விவேக் மாதிரியே குரலை மாத்தி என் முகத்தை பார்த்து பாலு சொன்னாரு. "அண்ணே சொம்பு ரொம்ப நசுங்கியிருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல பாலு, யாரு சொம்பு நசுங்குதுன்னு பாருங்க"ன்னு அப்போதைக்கு பதிலை சொன்னாலும், உள்ளுக்குள்ளே ஒரு காட்டுமிராண்டி கோவணத்தை அவுத்து போட்டுட்டு குய்யோ முறையோன்னு ஆடுறான். ராவெல்லாம் யோசிக்சு காலையிலே ஒரு முடிவுக்கு வந்தேன். இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் வீட்டுக்கு அப்பாயின்ட்மென்ட்டே வாங்காம போயிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, ஒரு பேட்டி?"&lt;br /&gt;&lt;br /&gt;"உட்காருங்க தம்பி. பேரு என்னா?" பேச ஆரம்பிச்சாரு பெரியவரு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கோ தாவி சினிமாவிலே வந்து நின்னுச்சு மேட்டர். நமக்கும் அதுதானே டார்கெட்? "ஐயா, எல்லா படத்திலேயும் இந்து மதத்தை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குறாரே விவேக், அவரை கண்டிச்சு போராட்டம் எதுவும் நடத்த மாட்டீங்களா?"ன்னு நான் கேட்க, அதுக்காகவே காத்திருந்தது காவி சிங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, நெறய பேரு எங்கிட்டவும் சொன்னாங்க. நான் சினிமா பார்க்கிற பழக்கம் இல்லேன்னாலும் அவங்க சொல்றதை பார்த்தா அவன் ரொம்பதான் பேசுறான். இனிமேலாவது அவன் இந்து மதத்தை இழிவு படுத்தறதை நிறுத்தணும். இல்லைன்னா, அவன் எங்கெல்லாம் ஷ§ட்டிங் போறானோ, அங்கே எங்க அமைப்பு போயி செருப்பை வீசும்"னாரு. அந்த வார்த்தையை கேட்கும்போதே நெஞ்சிலே நீலகிரி தைலத்தை தடவிய மாதிரி கு­ளுகுளுன்னு இருந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;செருப்படி விஷயத்தை 'ஹைலைட்' பண்ணி ஒரு சினிமா பத்திரிகையில் பெரிய கவர் ஸ்டோரியாக எழுதி வெளியிட்டேன். அவ்வளவுதான்... அலறி அடித்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு ஓடினார் விவேக். "என்னையும் இராம.கோபாலனையும் நீங்கதான் சந்திக்க வைக்கணும்" விவேக்கின் வேண்டுகோளை அப்படியே ஏற்று இருவரையும் சந்திக்க வைத்தது ஆ.வி. அந்த பேட்டியில்தான் முதன் முதலாக தன்னை ஆத்திகன் என்றும், வடபழனி கோவிலுக்கு வாரம் தவறாமல் போகிறவன் என்றும் ஒப்புக் கொண்டார் விவேக்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு வந்ததும், அவரை பாராட்டி தமிழ்சினிமா.காம் இணைய இதழில் மனசார வாழ்த்தி தலையங்கம் எழுதியதும் நான்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நம்ம கோவாச்சி...? அது அப்பவே போச்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-5268758622321197918?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/5268758622321197918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=5268758622321197918' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5268758622321197918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5268758622321197918'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_30.html' title='புகைச்சல் விட்ட, நகைச்சுவை திலகம்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SiFvG8Mo4oI/AAAAAAAAARM/qLVxgekklVw/s72-c/vivek-.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-6808760156856911011</id><published>2009-05-26T16:48:00.000+05:30</published><updated>2009-05-26T16:51:14.981+05:30</updated><title type='text'>'காரேறி வந்த காட்டேரிங்க'</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/ShvQcFuCFzI/AAAAAAAAARE/j5Wt6-VIZok/s1600-h/Devikruba-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 260px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/ShvQcFuCFzI/AAAAAAAAARE/j5Wt6-VIZok/s320/Devikruba-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340090964168021810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த ஃபங்ஷனுக்கு போனாலும், 'காரேறி வந்த காட்டேரிங்க' மாதிரியே வர்ற நடிகைகளை பார்த்தா ஏன்தான் இப்படி வர்றாங்களோன்னு தோணும். தலைவிரி கோலத்தோட வர்ற அவங்கள, கொல வெறியோட பார்க்கும்போதெல்லாம், கோலி சோடாவ தட்டிவிட்ட மாதிரி குபுக்குன்னு கிளம்பும் வேதனை! ஏன் இப்படி வரணும்? தலைய குளிச்சோமா, முழம் பூவ வச்சோமான்னு வந்தா, குலதெய்வமேன்னு கொண்டாடுறதுக்குதான் நாங்க இருக்கோம்ல? (சர்ர்ர்ரி... சரி)&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் 'பயம் அறியான்'னு ஒரு படத்தோட பிரஸ்மீட். ஹீரோயினும் அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. கண்ணு எது, கடவாயி எதுன்னே புரியாத அளவுக்கு கூந்தல விரிச்சு முன்னாடி போட்டுகிட்டு வந்திருந்திச்சு பொண்ணு. அட, அவங்க அம்மாவாவது பொண்ணுக்கு புத்தி சொல்லக்கூடாதான்னு அந்த பக்கம் திரும்புனா, வயசுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஜீன்சையும், வாயுக்கு சம்பந்தமில்லாத ஒரு லிப்ஸ்டிக்கையும் போட்டுட்டு அந்தம்மா இருந்த கோலம், பயங்கரம்ம்ம்ம்டா சாமீய்! தெனோமும் இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கறதாலதான் படத்துக்கு 'பயம் அறியான்'னு டைட்டில் வச்சிட்டாய்ங்க போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தலை நெறய கொண்டை, அதை சுத்தி சுத்தி மல்லிப்பூன்னு களையா வர்ற நடிகைகள் யாராவது இருக்காங்களா? அவசரப்படாதீங்க, நெஞ்சை புடிச்சிட்டு யோசிச்சாலும் ஒருத்தர் மொகம்தான் கண்ணுக்குள்ளே நிக்குது. அது, பழம் தின்னு கொட்டைய போட்டு, அந்த கொட்டையையும் தின்னு பழத்தை போட்ட பரவை முனியம்மாதான்! நானும் பார்க்கிறேன். இந்தம்மாவுக்கு பிறகு வேற யாருக்குமே இப்படி வர்ற துணிச்சல் இல்லே. இன்னொரு அம்மா இருந்திச்சு. அது தேனி குஞ்சரம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆருக்கு ஜோடியா நடிச்ச ரெண்டு நடிகைகளை அன்னைக்கு ஒரு விழாவிலே பார்த்தேன். டிஎன்ஏ டெஸ்ட்டை யூஸ் பண்ணிதான் இந்த தொல்பொருள் தோழிகளோட வயசை கண்டுபிடிக்க முடியும் போலிருக்கு. அந்தளவுக்கு மேக்கப். 'ஒட்டடை பலத்திலேதான் உத்திரமே நிக்குது'ன்னாரு நாகேஷ். அது மாதிரி, லிப்ஸ்ட்டிக்கும், பேன்கேக்கும் இல்லேன்னா இவங்க ரெண்டு பேருக்குமே வயலின் வாசிச்சிருக்கும் வருஷம்! அப்படி ஒரு 'மேக்கப்' பலத்தோட வந்திருந்தாங்க! என்ன சொல்ல வர்றேன்னா, இவங்க கூட தலையை விரிச்சு போட்டுட்டுதான் வந்திருந்தாங்க அந்த விழாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் ஏரியாவிலே ஆம்பளைக்கு என்ன வேலைன்னு நீங்க கோவப்பட்டாலும் சரி. இவரை பத்தி இந்த இடத்திலே சொல்லியே ஆகணும். (இங்கே சொல்லாம வேற எங்கே போயி சொல்லுறதாம்?) கூட்டம் நடக்கிற இடத்துக்கெல்லாம் கூந்தல விரிச்சு போட்டுட்டு வர்ற இன்னொரு நபர் நம்ம மன்சூரலிகான். மொணக்குன்னு முன்னாடி குனிஞ்சு மொத்த முடியையும் நெத்திக்கு கொண்டு வருவாரு. அடுத்த நொடியே படக்குன்னு பின் பக்கம் சாஞ்சி எல்லாத்தையும் பின்னாடி கொண்டு போவாரு. இந்த 'சீசா' விளையாட்டுல சின்னா பின்னமாவும் மொத்த கூந்தலும். அப்படியே தலைக்குள்ளே விரலை விட்டு சிக்கெடுப்பாரு. பிறகு மறுபடியும் மொணக்குன்னு முன்னாடி... படக்குன்னு பின்னாடி... பொறந்து ஆறே மாசத்துல தலை நின்னுடுமாம் குழந்தைங்களுக்கு. நாற்பத்தி ஆறு வயசு ஆன பிறகும் தலை நிக்காத ஒரே குழந்தை நம்ம மன்சூருதான் போலிருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கூந்தல் பராமரிப்புல தங்க மெடலே வாங்குற அளவுக்கு 'ஹேர் போன' நம்ம தமிழ்சினிமா மோகினிங்களுக்கு சரியா வேப்பிலை அடிக்க மாட்டியா கடவுளேன்னு நான் வேண்டிக்கிட்ட நாளாவது நாளு அந்த சம்பவம் நடந்திச்சு. இதே மாதிரி ஒரு விழாவுக்கு வந்திருந்தாரு நம்ம கார்த்திகா. கருவாப்பையா கருவாப்பையான்னு 'கரு கலையுற' வேகத்துக்கு ஒரு ஆட்டம் ஆடுவாரே, அவரேதான்!&lt;br /&gt;&lt;br /&gt;காட்டேறிங்களுக்குதான் கவலையில்லே, இவர மாதிரி தேவதைகளுக்கு என்ன வந்திச்சாம்? அன்னைக்கு பார்த்து இவரும் கூந்தல கூட்டமா அள்ளி போட்டுகிட்டு வந்திருந்தாரு. நிகழ்ச்சக்கு கொஞ்சம் லேட்டா வந்ததால உருப்படியான எடத்திலே உட்கார வைக்க முடியாம திணறுன விழா ஆளுங்க, ஓடிப்போயி இரண்டு சேரை து£க்கிட்டு வந்து போட்டாங்க. கார்த்திகாவுக்கு ஒன்ணு. அவங்க அம்மாவுக்கு ஒன்ணு. அது மரத்திலே செஞ்ச மடக்குற நாற்காலி.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவை இறுதி வரைக்கும் இருந்து ரசிச்ச கார்த்திகா, கடைசியா எழுந்திருக்கும்போதுதான் "அம்ம்ம்ம்ம்ஆன்..."னு கத்துச்சு. மடக்குற இடத்திலே மாட்டிகிச்சு கூந்தல். அதுக்குள்ளே பாஞ்சு போயி, பரவசமா காப்பாத்த இறங்கிச்சு ஒரு கோஷ்டி. முடியை பிரிச்சுவிட்ட அடுத்த நிமிஷமே கார்த்திகா "லலலலல்ல்லலா..." பாடுவாங்கன்னு நெனப்பு போலிருக்கு. நல்ல வேளையா அவங்க அம்மாவே கூந்தலுக்கும் சேதமில்லாம, கார்த்திகாவுக்கும் வலியில்லாம பிரிச்சுவிட, 'தேங்ஸ்'னு காப்பாத்த வந்தவங்களை கை கூப்பி வணங்கிட்டு, கப்புன்னு ஓடிப்போச்சு கார்த்திகா. இப்படி ஆயிருச்சேங்கிற வெட்கம்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கூட கார்த்திகா அப்படியே விரிச்சு போட்டுட்டுதான் வர்றாரு. அதென்னவோ பாஞ்சாலி சபதம் மேல, நம்ம பாஞ்சாலிங்களுக்கு அப்படி ஒரு விருப்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு- இந்த பதிவு, நான் பெண்ணுரிமைக்கு எதிரானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்கவும். நான் அப்படிப்பட்டவன் அல்ல!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-6808760156856911011?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/6808760156856911011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=6808760156856911011' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6808760156856911011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6808760156856911011'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_26.html' title='&apos;காரேறி வந்த காட்டேரிங்க&apos;'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/ShvQcFuCFzI/AAAAAAAAARE/j5Wt6-VIZok/s72-c/Devikruba-1.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-5348960514888705799</id><published>2009-05-24T14:55:00.000+05:30</published><updated>2009-05-24T14:59:16.594+05:30</updated><title type='text'>பார்த்திபன் வீசிய பந்துகள்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/ShkTPGKuUoI/AAAAAAAAAQ8/bc_Qua7I3JM/s1600-h/15parthiban.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 237px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/ShkTPGKuUoI/AAAAAAAAAQ8/bc_Qua7I3JM/s320/15parthiban.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5339319983298990722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்சினிமாவிலே டி.ராஜேந்தர் ஒரு அஷ்டாவதானின்னா, பார்த்திபன் ஒரு நஷ்டாவதானி! இவரு எடுக்கிறதெல்லாம், பாக்ஸ் ஆபிஸ் படமா இருக்கனும்னுதான் நினைப்போம். ஆனா, எல்லாமே 'ஃபால்ஸ்' ஆபிஸ் படமா இருக்கும்! ஆனாலும் மனுசனை எந்த விழாவிலே பார்த்தாலும், "உற்சாகமே... உன் பேர்தான் பார்த்திபனா?"ன்னு கேட்க தோணும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாயால 'சிலம்பம்' சுத்துற ஆளு பார்த்திபன். வார்த்தை சித்தர் வலம்புரிஜான் மாதிரி, இவரு வார்த்தை அக்தர்! வீசுற ஒவ்வொரு பந்துமே ராக்கெட் வேகத்திலே போய், ஜாக்கெட்லதான் விழும்! மேடையிலே பார்த்திபன் இருந்தார்னா, சுமார் நடிகையா இருந்தாலும், ஜிலீர்னு மாறி ச்சில்லுன்னு சிரிச்சே ஆகணும். அப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் இவருகிட்டேயிருந்து. ஒருமுறை அனுஹாசன் மேடையிலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிட்டு இருந்தார். மேடையேறிய பார்த்திபன், "இந்த நிகழ்ச்சியை அனு அனுவா ரசிக்கிறேன்"னு ஏக்கமா அனுஹாசனை பார்க்க, புரிஞ்சிட்டு கைதட்டின ரசிகர்களோடு சேர்ந்து, தன்னையே மறந்து கைதட்டினார் அனு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆயுதம் விக்கிறவங்க, அவங்ககிட்டே இருக்கிற துப்பாக்கி பீரங்கியெல்லாம் கொடுத்திட்டு, இங்கேயிருந்து எதையாவது வாங்கிட்டு போக நினைச்சா, சினேகாவோட சிரிப்பை மட்டும் அனுப்பி வைக்கலாம். ஏன்னா, அதுதான் உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்"னாரு பார்த்திபன். பக்கத்திலே இருந்த சினேகா பளீர்னு சிரிக்க, அந்த நேரத்திலே கரண்ட் ஆஃப் ஆகியிருந்தாலும் காப்பாற்றியிருக்கும் சினேகாவின் சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபனின் 'எல்லை மீறிய' பயங்கரவாதம் ஒன்றை நேரில் பார்த்து ஆடிப் போயிட்டேன். அந்தம்மா ஒரு முக்கியமான அரசியல் கட்சியிலே மிகவும் முக்கியமானவர். அழகோ அழகு! மேடை ஏறிய பார்த்தி, அந்தம்மாவை வர்ணிக்க ஆரம்பிச்சுட்டார். அவங்க பார்வையிலே கோபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நல்லவேளை, புரிஞ்சுகிட்டாரு புதுமை பித்தன். (வீட்டுக்கு போன பிற்பாடு அர்சனை, ஆறு கால பூஜையெல்லாம் நடந்திருக்கும்ங்கிறது என்னோட யூகம்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் சூரியனுக்கே 'டார்ச்' அடிக்கிற பார்த்திபனோட வாழ்க்கை மட்டும் இருட்டா போச்சு! கருத்துப்போன பார்த்திபனுக்கு கட்டி தங்கமான்னு பல்லு வெளக்காத பயலுக எல்லாம் பாஞ்சு பாஞ்சு கண்ணு வச்சதாலதான், இல்லறம்ங்கிறதுல 'ரம் இல்'லாம போச்சு போலிருக்கு. ஒசரத்திலே உரியை கட்டி, அதிலே தாராளமாக தயிரையும் வச்சு, தாவி தாவி தின்னுக்கோன்னு ஆண்டவனே ஆஃபர் வச்சுட்டான் இந்த பார்த்திப பூனைக்கு. ஹ¨ம்... என்னதான் செய்வாரு அவரும்? (இதுக்கும் மேல ரொம்ப போனா, சீதாயணத்தையும் சேர்த்து எழுதணும் என்பதால் இத்தோடு நிற்க!)&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியெல்லாம் பேசுறீங்களே, எப்பிடி சார்?"னு கேட்டேன் ஒருமுறை அவரிடம். அது ஸ்கூல்லே படிக்கும்போது ஆரம்பிச்சுதுன்னு அந்த வரலாறை வாசிக்க ஆரம்பிச்சாரு பார்த்தி. எட்டாவது படிக்கும் போது ஆங்கில பாடம் எடுத்திட்டு இருந்தாராம் வாத்தியாரு. 'நெய்தர்', 'நார்' என்ற இரண்டு இங்கிலீஷ் வார்த்தையும் எப்படி 'யூஸ்' பண்ணுறதுன்னு கிளாஸ். அப்போ பார்த்து இவரு பையிலே வச்சுருந்த மாம்பழத்தை நைசா கடிச்சிகிட்டே கிளாசை கவனிச்சாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கவனிச்ச வாத்தியாரு, செம்மையா இவரை 'கவனிச்ச'தோடு, "எப்பிடிடா இருந்திச்சு மாம்பழம்?"னு கேட்க, இவரு சொன்னாராம். "நெய்தர் காய், நார் பழம்"னு! இந்த பதிலை எதிர்பார்க்காத வாத்தியாரு கிளாஸ் பசங்க அத்தனை பேரையும் எழுந்து நின்று கைதட்ட சொல்ல, அங்கே ஆரம்பிச்சுது பார்த்திப குசும்புகள்! திடீர்னு கருப்பண்ணசாமி சிலைய அனுப்பி வைப்பாரு நிருபர்களுக்கு. இன்னொரு முறை மாடர்ன் காலண்டர் வரும் அவருகிட்டேயிருந்து. இப்படி வருஷத்துக்கு மூணு முறையாவது தனது இருப்பை பொறுப்பா சொல்லிட்டு இருக்கிற பார்த்தி, இப்போதெல்லாம் ஒரு விசிட்டிங் கார்டு கூட அனுப்பறதில்லே. (டப்பு வேகலே போலிருக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் வருகிற இவரது பேட்டிகளில், ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற செய்தி கட்டாயம் இடம் பெறும். ஒரு முறை பார்த்திபனிடம், "ஏன் சார்? தத்தெடுத்திட்டீங்க. சந்தோஷம். அதுக்காக ஒரு பேட்டி தவறாம இதையே சொன்னா, அந்த பையன் வளர்ந்த பிறகு உங்களை அப்பான்னு கூப்பிட சங்கடப் பட மாட்டானா? என்னதான் இருந்தாலும் நாம அநாதைங்கிற உணர்வுதானே அவனுக்கு வரும்"னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பார்த்திபன், இனிமே அப்படி எந்த பேட்டியிலேயும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு நன்றின்னாரு. இப்பவும் அதை கடைபிடிக்கிறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நான் இவரை பற்றி எழுதின படுமோசமான விமர்சன கட்டுரை ஒன்றை தனது ஆபிஸ் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டி, என் எழுத்துக்கும் மரியாதை கொடுத்ததை எப்படி எடுத்துக்கொள்வது? (பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே டைப் போலிருக்கு) இவரை பற்றி வெளிவந்த தப்பு தப்பான செய்திகளை மட்டுமே சீக்கிரம் ஒரு தொகுப்பாக வெளியிடப் போறாராம். நம்ம கட்டுரையும் இருக்கும்னு நம்புறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-5348960514888705799?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/5348960514888705799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=5348960514888705799' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5348960514888705799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5348960514888705799'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_24.html' title='பார்த்திபன் வீசிய பந்துகள்...'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/ShkTPGKuUoI/AAAAAAAAAQ8/bc_Qua7I3JM/s72-c/15parthiban.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-6988676244152446217</id><published>2009-05-21T17:52:00.000+05:30</published><updated>2009-05-21T21:38:28.914+05:30</updated><title type='text'>"தம்பி உசுரோடதான்யா இருக்காரு"</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/ShVIzytY3nI/AAAAAAAAAQ0/BjkAMlK9YuI/s1600-h/prabaharan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 220px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/ShVIzytY3nI/AAAAAAAAAQ0/BjkAMlK9YuI/s320/prabaharan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5338252987940265586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;'தம்பி' இருக்காருன்னு 'நம்பி' இருந்த ஜனங்க மனசிலே கம்பிய பழுக்க வச்சு காயப்பட வைச்சிட்டாய்ங்க! நாலு நாளா ஊருபட்ட ரிப்போட்டர்கள் கிட்டே நாக்கு உலர விசாரிச்சதிலே நறுக்குன்னு சொல்லிட்டாங்க, "தம்பி உசுரோடதான்யா இருக்காரு"ன்னு! அதிலும் நக்கீரன்ல அவரே அந்த நியூசை படிக்கிற மாதிரி ஸ்டில்லு! இது போட்டோ ஷாப் வேலைன்னு தெரிஞ்சாலும், அத பார்த்ததிலேர்ந்து நரம்பெல்லாம் 'பிரம்பு' மாதிரி நட்டுகிட்டு நிக்குது, நன்றி கோபாலண்ணே...!&lt;br /&gt;&lt;br /&gt;மீசையிலேர்ந்து ஒத்த முடிய புடுங்கி காவலுக்கு போட்டு வச்சிட்டு, காட்டுலே 'உடும்பு சூப்பு' குடிச்சிட்டு இருந்தப்போ ஒரு அமீபா கூட உள்ளே வரலே. அதே வீரப்பன் செத்துட்டாருன்னு தெரிஞ்சதும், ஒகேனக்கல் வரைக்கும் வந்து நக்கலடிச்சுட்டு போறாரு கன்னட எடியூரப்பா. இதே கதைதானாம் இப்போ கொழும்பிலேயும். தமிழருங்க கடையெல்லாம் சூறையாடுறதா செய்தி வருது. இருமறதுக்கே பயப்படுற பசங்கள்ளாம் உறுமுராய்ங்களாம்... தம்பி, சீக்கிரம் வெளியே வா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடுதலைப்படை தலைவன் அவ்வளவு எளிதாக சிக்கிக் கொள்வாரா? தலையிலே ஊறுகிற ரெண்டு பேனுங்க சந்திச்சிக்கிட்டா கூட இப்படி கேள்வியா கேட்டு கிளியர் பண்ணிக்குதுங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி படிச்ச பேட்டி இது. அந்த போலீஸ் அதிகாரியோட பேரு மறந்து போச்சு. அவரே முன்னணி இதழ் ஒன்றில் இந்த பேட்டிய கொடுத்திருந்தாரு. பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த நேரமாம் அது. ஒரு புல்லட் வச்சிருந்தாராம் தம்பி. (அந்த புல்லட் இல்லே, இரு சக்கர வாகனம்) அதிலேதான் சென்னையை சுற்றி வருவதெல்லாம். தம்பியை கண்காணிக்க சொல்லி, இந்த போலீஸ் அதிகாரிக்கு அசைன்மென்ட் கொடுத்திருந்தாங்களாம் உளவுத்துறையில்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணு நாளா பிரபாகரன் போற இடமெல்லாம் போயிருக்காரு அதிகாரி. சரியா மூணாவது நாள். புல்லட்டில் போயிட்டு இருந்த பிரபாகரன், சோழா ஓட்டல் அருகில் போனதும் வண்டிய நிறுத்திட்டாரு. பின்னாடியே போன அதிகாரியும், கிட்டதட்ட 100 அடி து£ரத்திலே வண்டிய நிறுத்திட்டு அவரு போகட்டும். ஃபாலோ பண்ணலாம்னு வெயிட் பண்ணுறாரு. இப்படியே பத்து நிமிஷம் போச்சு. இரண்டு பேருமே நகர்றதா இல்லை. பையிலே இருந்து ஒரு தம்மை பத்த வச்சுட்டு வேற பக்கம் திரும்பி குப் குப்புன்னு புகையை விட்ட அதிகாரி, ஒரு சிகரெட்டை முழுசா இழுத்திட்டு திரும்பினா...? பக்கத்திலே பிரபாகரன். "என்ன சார்?"னு தோளில் கையை போட்டு அதிகாரியோட பேர சொல்லி பேச ஆரம்பிச்சாராம். "நான் உங்களை மூணு நாளா கவனிச்சுட்டு வர்றேன். என்னை ஃபாலோ பண்றீங்க. வேணாம். இனிமேலும் ஃபாலோ பண்ணினா வேற மாதிரி விளைவுகளை சந்திப்பீங்க"ன்னாராம். அந்த சம்பவத்தை பல வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த அந்த அதிகாரி "அந்தாளுக்கு உடம்பு முழுக்க கண்" என்று வியந்திருந்தார். எப்பவுமே அலர்ட்டா இருக்கிற ஒரு போர்ப்படை தலைவன், எப்படி கடைசி நேரத்தில் இப்படிப் போய் மாட்டிக் கொள்வான்? லாஜிக் இடிக்குதே!&lt;br /&gt;&lt;br /&gt;விடுங்க, ஃபாலோ பண்ற விஷயத்தை பேச ஆரம்பிச்சதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. நாம சிரிச்சு ரொம்ப நாளாச்சுங்கிறதால, இந்த சிரிப்பு ஸ்பெஷல்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் கொலைக்கு சில வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் இது. நான் தராசு புலனாய்வு இதழில் வொர்க் பண்ணிட்டு இருந்த நேரம்.... ஒரு க்ரைம் சீரியல் எழுத ஆரம்பிச்சிருந்தாரு ஆசிரியர் ஷ்யாம். அங்கே சுகுமார்னு ஒரு நபர். ஆபிஸ் பாய், அக்கவுன்டன்ட், பில் கலெக்டர், மானேஜர்னு எல்லா வேலைகளையும் கலந்து கட்டி செய்யுற ஆல் இன் அழகுராஜா இவரு. இன்பிரியாரிடி காம்ப்ளக்ஸ், சுப்பிரியாரிடி காம்ப்ளக்ஸ்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவரு, சின்சியாரிடி காம்ப்ளக்ஸ்(?) உள்ள ஆளு. ஷ்யாம் 'ம்' ன்னு சொன்னா, அதுக்கும் ஒரு அர்த்தம் கண்டுபிடிச்சு ஒரு வேலையை செஞ்சுட்டு வந்து நிக்கிற தங்க தளபதி.&lt;br /&gt;&lt;br /&gt;இவரிடம்தான் ஒரு வேலை சொன்னார் ஷ்யாம். "யோவ், போயி வித விதமா துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் ஏதாவது இருந்தா வாங்கிட்டு வா. லே-அவுட் பண்ணும்போது யூஸ் ஆவும்"னாரு. சின்சியரா மவுண்ட்ரோட்லே இருக்கும் புக் ஸ்டால் ஒன்றுக்கு போன சுகுமார், "துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் எங்கே கிடைக்கும்? எந்த ரேக்லே வச்சிருக்கீங்க?" என்று கேட்டாரு. ஆளு ஒரு மாதிரி இருக்காரு. துப்பாக்கி படம் போட்ட புக்ஸ் கேட்கிறார். விடுதலைப்புலியா இருப்பாரோன்னு நினைச்ச கடை ஆளுங்க, "இன்னைக்கு ஸ்டாக் இல்லே. நாளைக்கு வாங்க. கலெக்ட் பண்ணி வச்சுருக்கோம்"னு சொல்லிட்டு, விஷயத்தை போலீஸ் காதிலே போட்டுட்டாங்க. சரியா, சுகுமார் வர்ற நேரமா மஃப்ட்டியிலே வந்திருச்சு போலீஸ். உடனே பிடிச்சா இவரு மட்டும்தான் மாட்டுவாரு. இவரை ஃபாலோ பண்ணினா, ஒரு கூட்டத்தையே பிடிக்கலாமேன்னு அவங்க நினைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நைசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. வெயிலு ஓவரா இருக்கு. ஓரு பீர் போட்டுட்டு போனா சுகமா இருக்குமேன்னு கடைக்குள்ளே பூந்திட்டாரு சுகுமார். போலீசும் நைசா பின்னாடியே போச்சு. பீர் அடிச்சிட்டு அப்படியே எழுந்து வெளியே போன சுகுமார், பக்கத்திலேதானே மோட்சம் தியேட்டர் இருக்கு. ஒரு 'பிட்' படம் பார்க்கலாமேன்னு உள்ளே போயிட்டாரு. இப்போதான் போலீசுக்கே பெரும் குழப்பம். என்னடா, போராளின்னு நினைச்சா இவன் சோக்காலியா இருப்பாம் போலிருக்கேன்னு நினைச்சுது. ஆனாலும், நம்ம ஃபாலோ பண்ணுறதை தெரிஞ்சுகிட்டு வித்தை காட்டுறானோன்னும் டவுட். விடாம இரண்டு நாளா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரே குழப்பம் அவங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தராசு ஆபிசுக்கு போறான். செக்ஸ் படம் பார்க்குறான். தண்ணியடிக்கிறான். மறுபடியும் துப்பாக்கி சம்பந்தமாக புத்தகங்களை பிளாட் பார்ம் கடையிலே தேடி திரியுறான். யாராக இருக்கும்?னு பயங்கர கன்பியூஷன். கடைசியா தராசு ஆசிரியரிடமே சொல்லி எச்சரிச்சுடுவோம். அவரும் அலர்ட்டா இருப்பாரேங்கிற நோக்கத்திலே ஒரு நாள் ஆபிசுக்கே வந்திட்டாங்க. விஷயத்தை முதல் நாளில் இருந்தே ஆரம்பிச்சு விபரமாக சொல்ல சொல்ல, விழுந்து விழுந்து சிரிச்சாரு ஷ்யாம். "இவரா பாருங்க"ன்னு பெல் அடிச்சு சுகுமாரை உள்ளே கூப்பிட்டாரு. அவங்களும் இவருதான்னு அடையாளம் காட்டினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;"இவரு எங்க ஆபிஸ்லே வொர்க் பண்றவர். நான்தான் துப்பாக்கி சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிட்டு வரச்சொன்னேன்" என்று விளக்கிய ஷ்யாம், "இவரு பிட்டு படம் பார்க்கறதை போட்டு கொடுத்திட்டீங்க. நன்றி"ன்னாரு. அப்போ சுகுமார் முகத்தை பார்க்கணுமே?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-6988676244152446217?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/6988676244152446217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=6988676244152446217' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6988676244152446217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/6988676244152446217'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_21.html' title='&quot;தம்பி உசுரோடதான்யா இருக்காரு&quot;'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/ShVIzytY3nI/AAAAAAAAAQ0/BjkAMlK9YuI/s72-c/prabaharan.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-5041529939604026695</id><published>2009-05-19T21:55:00.000+05:30</published><updated>2009-05-19T21:56:23.570+05:30</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தையே உலுக்கிய ஒரு 'வீர மரணம்' என்னையும் அதிர வைத்திருப்பதால், பதிவுகள் போடுகிற மனநிலையில் இல்லை.  ஓரிரு நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் எழுதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு மன்னிக்கவும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-5041529939604026695?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/5041529939604026695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=5041529939604026695' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5041529939604026695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5041529939604026695'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_19.html' title=''/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-5127021936762397580</id><published>2009-05-17T15:56:00.000+05:30</published><updated>2009-05-17T16:02:24.111+05:30</updated><title type='text'>பிரகாஷ்ராஜின் ''ச்செல்லங்கள்...''</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg_nnFgJYSI/AAAAAAAAAQs/eWq4OOGx79I/s1600-h/prakashraj1184832416.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 277px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg_nnFgJYSI/AAAAAAAAAQs/eWq4OOGx79I/s320/prakashraj1184832416.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5336738742135251234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ச்செல்ல்ல்ல்ல்ல்ல்லோம்..., நான் அப்பிடி சொல்லலையே செல்ல்ல்ல்ல்லோல்ம்"னு நிருபர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பிரகாஷ்ராஜ் பதில் சொன்னப்போ, புதுசா சினிமா ரிப்போர்ட்டிங்குக்கு 'ஷிப்ட்' ஆகி வந்திருந்த ஒரு அரசியல் நிருபருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு. பிரஸ்மீட் முடிஞ்சதும், "என்னங்க இந்தாளு, ஒரு ரிப்போர்ட்டரை ச்செல்லம்ன்றாரு. இவங்களும் சும்மாயிருக்காய்ங்க. ஒன்னுமே புரியலேயே?"ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே எல்லாமே அப்படிதான். "என்னா தலைவா? நேத்தெல்லாம் து£க்கமே இல்லை போலிருக்கு, கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு? அவுட்டோர்லே போய் இன்டோர் கேம் ஆடிட்டீங்களா?"ன்னு கேஷ¨வலா பொடி மட்டைய மூக்குக்கு நேரா நீட்டி 'தும்ம' வைப்பாய்ங்க நம்ம ரிப்போர்ட்டருங்க. பெரிசா கண்டுக்க மாட்டாய்ங்க ஹீரோக்களும். அதுக்கு பதிலா இப்படி கூட்டத்திலே போட்டு குமுறும்போது நம்மாளுகளும் திருப்பி கண்டுக்க மாட்டாய்ங்க. இது ஒரு மாதிரி உலகம்ங்க"ன்னு சொல்லி புரிய வெச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பூஞ்சிட்டு கன்னங்களேன்னு ஓடிவந்து, பொன் வண்ண கிண்ணங்களை பரப்பி வைக்கிற அநேக ஹீரோக்கள், வளர்ந்தப்புறம், "போங்கடாங்"னு போறது சினிமாவிலேதான்!&lt;br /&gt;&lt;br /&gt;டூயட்னு பேரு போட்ட டாடா சீராவிலே, 'சீசாவை' நிரப்பிக்கிட்டு ரிப்போர்ட்டருங்களோட ரூமுக்கே வந்து 'தண்ணீரா' அன்பு செலுத்துற பிரகாஷ்ல ஆரம்பிச்சு, "ஹேய்..."னு வினாடியிலே கைகுலுக்கி வேற பக்கம் திரும்பிகிட்டு 'வென்னீரா' வெறுப்பு காட்டுற பிரகாஷ் வரைக்கும் பார்த்துகிட்டேதான் இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷ்ராஜ் வில்லனா? ஹீரோவா? குணச்சித்திர நடிகரா? காமெடியனா?ன்னு கேட்டா, எல்லாந்தான்னு சொல்லுவான் ரசிகன். பக்கத்திலே இருந்து பார்க்கிற எங்களை கேட்டாலும் "புரியலையே எசமான்"னுதான் சொல்லுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் குடும்ப நல கோர்ட்டுக்கு வந்திருந்தாரு பிரகாஷ்ராஜ். அதுவும் தனது 'குடும்பத்தோட(!?) எல்லாம் விவாகரத்துக்காகதான். "ச்செல்லோம்"னு எத்தனை தடவ பொண்டாட்டிய கூப்பிட்டிருப்பாரு? அத விடுங்க, பாசத்தை பாக்கெட்ல அடைச்சுட்டு வந்ததை கண்ணால பார்த்து, கண்ணு வச்சவன் நானு. டைரக்டர் பாலா கல்யாணத்துக்கு மதுரைக்கு வந்திருந்த பிரகாஷ்ராஜ், "வாங்கடா அம்மா மெஸ்சுக்கு போகலாம்"னு தரணியையும், ஸ்ரீகாந்தையும் கூட்டிட்டு கௌம்புனாரு. கூடவே நானும்! (அழைக்கப்பட்ட விருந்தாளியாகதான்!)&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலே கும்பிடுறதுக்கு மீனாட்சின்னா, கொட்டிக்கறதுக்கு அம்மா! வறுத்து வச்ச மட்டனையும், வாட்டி வச்ச சிக்கனையும் போட்டோ எடுத்து மாட்டியிருப்பாய்ங்க. கூடவே, தமிழே உணவுன்னு வாழுர வைரமுத்துவோட போட்டோவும், கிராமமே க்ளாஸ்னு தமிலிஷ்லே பேசுற பாரதிராஜாவோட போட்டோவும் மாட்டியிருப்பாய்ங்க. இவங்க மட்டுமில்லே, ஒட்டுமொத்த கோலிவுட்டும் அங்கதான் இருக்கும். போட்டோவிலே பின்னாடி இவங்களும், முன்னாடி மூணு அடி நீள இலையும் இருக்கிற மாதிரியே எடுத்திருப்பாய்ங்க எல்லா போட்டோவையும். தமிழ்சினிமாவிலே ரொம்ப பேரு இங்கே போயி நாக்கை நனைச்சவங்கதான்! அப்படிப்பட்ட அம்மாவிலே பறக்கிறதையும், பாயறதையும் பறந்து பறந்து சாப்பிட்டு முடிச்சிட்டு, மறக்காம பிரியாணி பார்சல் வாங்கிக்கிட்டாரு பிரகாஷ்ராஜ். "ச்செல்லத்துக்கு பிடிக்கும்"னு அவரு சொன்னது அவரோட லலிதகுமாரிய! சூடு ஆறுவதற்குள்ளே ஃபிளைட் புடுச்சு சென்னைக்கு ஓடி போனப்போ என் கண்ணுக்கு தெரிஞ்ச பிரகாஷ்ராஜை ஒரு கேரக்டரா பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவ பேட்டிக்காக வீட்டுக்கு போயிட்டேன். தரையிலே உட்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். காலே மரத்துப் போச்சு. முடிச்சுட்டு எழும்போது 'ஸ்லிப்' ஆயிருச்சு காலு. அவ்வளவுதான், பாஞ்சு பிடிச்சுகிட்ட பிரகாஷ், "கொஞ்சம் கால நனைங்க. சரியாயிடும்"னு தண்ணி எடுக்க ஓடினாரே, அப்போ அவர வேற ஒரு கேரக்டரா பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கரு.பழனியப்பன் கல்யாணத்திலே வெளியே நின்னு ஜாலியா பேசிட்டு இருந்தவருகிட்டே ஓடிவந்து ஆட்டோகிராப் கேட்ட 20 வயசு பையனை, "பேசிட்டு இருக்கேன்லே..."னு சொல்லிகிட்டே விரட்டிப் பிடிச்சு முதுகுல செம்மையா அறைஞ்ச பிசாசு குணத்தையும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமா நடிக்கிற நல்ல நடிகன்னு ஊரு ஒலகமே சொல்லுது. இப்போ சொல்லுங்க, அவரு எங்கே நடிக்கிறாரு?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-5127021936762397580?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/5127021936762397580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=5127021936762397580' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5127021936762397580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/5127021936762397580'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_17.html' title='பிரகாஷ்ராஜின் &apos;&apos;ச்செல்லங்கள்...&apos;&apos;'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg_nnFgJYSI/AAAAAAAAAQs/eWq4OOGx79I/s72-c/prakashraj1184832416.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-2882309323250642755</id><published>2009-05-16T22:41:00.000+05:30</published><updated>2009-05-16T22:56:46.141+05:30</updated><title type='text'>அஜீத் என்ற நிராயுதபாணி?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg72rK5tAcI/AAAAAAAAAQk/O7bZfLKZMVY/s1600-h/ajith2.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336473830001803714" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg72rK5tAcI/AAAAAAAAAQk/O7bZfLKZMVY/s320/ajith2.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;திரும்ப திரும்ப அஜீத்துதானா? வேற மேட்டருக்கு போய்யா...ன்னு பின்னாடி தார்குச்சியால 'நறுக்' போட்ட கலையரசன்ங்கிற நண்பருக்கு, "அலோவ், ஸாரு... இந்த மேட்டர மட்டுமாவது சொல்லி முடிச்சிரலாம்னு நெனக்கிறேன். மேலே போலாமா...?"&lt;br /&gt;&lt;br /&gt;எங்க விட்டேன்? ஆங்... நார்த் மெட்ராஸ்லே! துக்கத்துக்கு போன அஜீத்தை, வெக்கத்த பார்க்காம விரட்டி விரட்டி ஆட்டோகிராஃப் கேட்டுச்சு மக்க படைங்க! "இங்கே இருந்தா டிஸ்டிரப் பண்ணுவாங்க. நீங்க கௌம்புங்க"ன்னு இறந்தவரோட பிள்ளை வந்து ரிக்வெஸ்ட் பண்ண, அப்படியே டெட் பாடியோட முகத்தை பார்த்து பிளாஷ்பேக்குக்கு போனாரு அஜீத். கண்ணிலே விழுந்த கவலை து£சியை கையால துடைக்கும்போதே, அந்த கெட்ட நாள் மூளைக்குள் பாஸ் ஆகி, ஒரு குண்டான் நிறைய குளோரோபாஃர்ம் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தையிலே நின்னா தராசு. பண்ணையிலே நின்னா மிராசுன்னு வாழ்ந்த மனுசனை, நிராயுத பாணியா நிக்க வச்சுது நேரம்! ஜாதகத்தை ரொம்பவே நம்புற மனுசன் அவரு. ஆனாலும், தன்னோட கனவு படமா நம்பிக்கிட்டு இருந்த 'நான் கடவுள்' படத்திலே இருந்து நீக்கப்படுவாருன்னு ஒரு சோசியன் கூட முன்கூட்டியே சொல்லலே அவரிடம். "வாங்கிய அட்வான்சை இன்னிக்கு இரவுக்குள்ளே திருப்பி கொடுத்திருங்க"ன்னு சொல்லிட்டாங்க. அதை கூட புரட்டி கொடுத்திரலாம். ஆனா படம்? வண்டியை எடுத்துகிட்டு ராத்திரி முழுக்க அலைஞ்சாங்க தலயும் நிழலும். சினிமாவிலே மட்டும்தான் நன்றியை சப்பாத்தியா சுட்டு நாகரீகத்தை சைட் டிஷ்ஷா வச்சுகிட்டு 'சரக்கு' அடிப்பாய்ங்க! போன இடத்திலே எல்லாம் "அட நாலு நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே"ன்னு உச் கொட்டினாய்ங்க. கடைசியா அவரு தட்டிய இடம், இதோ இங்கே டெட் பாடியா கிடக்கிறாரே... இவரு வீட்டு கதவை!&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல ஜில்லுன்னு தண்ணி. பிறகுதான் மற்றதெல்லாம்னு சொன்னவரு, அடுத்த அரை மணி நேரத்திலே ஜில்லுன்னு குளிர வைச்சாரு அஜீத்தை. பெட்டி நிறைய பணம். அதுவும் கேட்ட பணத்தில் சில்லரை குறையாமல்! "போய் கொடுங்க. மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்" அப்படிப்பட்ட மனுஷன் செத்துக் கிடக்கும்போது கூட்டத்துக்கும் கோஷத்துக்கும் அஞ்சி ஓடுறதா? "வேணாம். நான் இருக்கேனே"ன்னாரு அஜீத். ஆனாலும் விடாப்பிடியாக கெஞ்சினார் செத்துப்போனவரோட பிள்ளை. காரை எடுத்துக்கொண்டு டிரைவ் இன் ஹோட்டலுக்கு வந்தவர், வீட்டுக்கு போக வேணாம். எடுக்கிற நேரத்திலேயாவது போவோம்னு அங்கேயே காருக்குள்ளே உட்கார்ந்திருந்தாரு. சரியா எடுக்கிற நேரத்திலே மறுபடியும் போய் கலந்து கொண்டவர், நடந்தே சுடுகாடு வரைக்கும் போனார். வாக்கிங்கையே கார்லே போற சில பணக்கார சேட்டுங்க, அஜீத் நடந்து வர்றதை ஆச்சர்யமா பார்த்தாங்க. இவரு கலந்துகிட்டதாலேயே சவ ஊர்வலம் பேரணியானது.&lt;br /&gt;&lt;br /&gt;'கடவுள்' கஷ்டத்தை கொடுப்பான். சந்தோஷத்தை கொடுப்பான். அஜீத்துக்கு அட்வான்சை கொடுத்திருந்தான். பணத்த வாங்கிய மறுநாளே அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு, அப்படியே காரை நேரா அடையார் கேட்லே இருக்கிற சலு£னுக்கு விட சொன்னார் அஜீத். தோள் வரைக்கும் வளர்ந்திருந்த முடியை நறுக்க சொல்லும் போது அவரை அறியாமல் கண் கலங்கினார். சும்மாவா பின்னே? பரமசிவம் படத்துக்காக பி.வாசு இந்த முடியை வெட்ட சொன்னப்போ கூட, "இல்லை சார். நான் கடவுள் என்னோட கனவுப்படம். அந்த படத்துக்காக வளர்க்கிற இந்த முடியை வெட்ட மாட்டேன்"னு சொன்னவரு, இப்போ கண்ணுக்கு எதிரே விழுற முடியை பார்க்கும்போது நிஜமாவே கண்கலங்கினாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சார் கண்ணுல பட்ருச்சா?ன்னு கவலையோட கேட்ட சலு£ன் காரருக்கு அஜீத் சொன்ன பதில் "ஆமாம் கண்ணு பட்ருச்சு!" இப்பவும் அஜீத் 'நான் கடவுள்' படத்தை பார்க்கவே இல்லையாம். பார்க்கலாம்னு அழைச்ச நண்பர்களிடம் அவரு சொன்னா வார்த்தை,&lt;br /&gt;&lt;br /&gt;"நான், கடவுளை பார்த்திட்டேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல வேண்டிய லட்சம் கோபங்களை ஒரே ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். அஜீத் சொன்ன இந்த ஒரு வாக்கியத்திற்குள் இருந்தது லட்சமா, கோடியா...? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-2882309323250642755?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/2882309323250642755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=2882309323250642755' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/2882309323250642755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/2882309323250642755'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_16.html' title='அஜீத் என்ற நிராயுதபாணி?'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_feKwFSgneu0/Sg72rK5tAcI/AAAAAAAAAQk/O7bZfLKZMVY/s72-c/ajith2.bmp' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-965981571703166143</id><published>2009-05-14T20:42:00.000+05:30</published><updated>2009-05-14T20:48:08.793+05:30</updated><title type='text'>அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sgw2BQwjgHI/AAAAAAAAAQU/CK0f7iXUe1U/s1600-h/ajith-500x750.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 214px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sgw2BQwjgHI/AAAAAAAAAQU/CK0f7iXUe1U/s320/ajith-500x750.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335699053833584754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;விட்டா, அஜீத்துக்கு மன்றம் தெறக்கிறோம்... வர்றீயளான்னு யாராவது கேட்டாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லே. அப்படி நானும், சூரியனும் மாத்தி மாத்தி மருவாதி பண்ணிட்டு இருக்கோம் 'தல'ய்க்கு!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? எதுக்கு?ன்னு ஓய்வு பெற்ற நீதிபதிய வச்சு விசாரிக்க சொல்லிறாதீங்கப்பு. சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே? அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள்! ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா! கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...&lt;br /&gt;&lt;br /&gt;எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)&lt;br /&gt;&lt;br /&gt;போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-965981571703166143?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/965981571703166143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=965981571703166143' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/965981571703166143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/965981571703166143'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_14.html' title='அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/Sgw2BQwjgHI/AAAAAAAAAQU/CK0f7iXUe1U/s72-c/ajith-500x750.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-8264878863209576661</id><published>2009-05-13T21:26:00.000+05:30</published><updated>2009-05-13T21:32:05.958+05:30</updated><title type='text'>மீனாவின் 'இடை' தேர்தல்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SgruJT2ds7I/AAAAAAAAAQE/Udh4V305yMg/s1600-h/meena.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 228px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SgruJT2ds7I/AAAAAAAAAQE/Udh4V305yMg/s320/meena.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335338552288719794" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் சந்திச்ச அநேக நடிகைகளுக்கு 'குரலு மேல உரல' போட்டா மாதிரி 'பயங்கர' வாய்ஸ்! பல நடிகைகங்க அண்டங்காக்கா கொண்டக்காரிகளா இல்லேன்னாலும், அண்டங்காக்கா தொண்டக்காரிகளா இருந்தாங்க! இப்படிப்பட்ட சிம்மக்குரலிகளிடம் பேட்டியெடுக்க போனில் அப்பாயின்ட்மென்ட் வாங்கும்போது அது நிஜ 'அப்பா'யின்மென்ட் ஆகி, நான் டிஸ் அப்பாயின்மென்ட் ஆன கதையெல்லாம் உண்டு. எதிர்முனை 'ஹலோ'விடம் ரொம்ப கேஷ§வலா, "சார் உங்க பொண்ணை கொஞ்சம் கூப்பிடுங்களேன்"னு சொல்லுவேன். "பொண்ணுதான் பேசுறேன். சொல்லுங்க"ன்னு கேட்கிற பாக்கியம், இந்த பேனாக்காரனுக்கு மட்டுமே வாய்ச்ச பெருத்த அசௌகர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களுக்கு மத்தியிலே இவரை மட்டும்தான் இப்படி கேட்க தோணும். "நடிகை மீனா, உங்க குரலென்ன நந்தவனத் தேனா?"&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அங்க்கிள்னு கூப்பிட்டுகிட்டே ஓடிவர்ற அந்த குழந்தை மீனா, உருண்டு திரண்டு ஊரையே மயங்க வைச்சப்போவும் அதே மழலைக் குரல்தான். கண்ணை மூடிட்டு குரலை மட்டும் கேட்டா, இப்பவும் படுக்கையிலே 'மூச்சா' போவாங்களோன்னு சந்தேகம் வரும்ன்னா பாருங்களேன்! (ஓவராயிருச்சோ? விடுங்க பார்த்துக்கலாம்...)&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தல் நடந்தா மொத்த ஜனங்களின் பார்வையும் அந்த ஒரு தொகுதியிலேயே இருக்குமே? அப்படி மொத்த சினிமாக்காரர்களின் பார்வையும் மீனாவின் 'இடை' தேர்தலில் குவிஞ்சு கிடந்த நேரம் அது. ஒருபக்கம் பார்த்திபன் கவிதை எழுதுறாரு. 'மீனே கண்ணா? கண்ணே மீனா?' அப்பிடின்னு! இன்னொரு பக்கம் 'தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு'ன்னு மீனாவ வர்ணிச்சு எழுதிய சினிமா பாட்டை முன்னணி டைரக்டர் ஒருத்தரு தினமும் திருக்குறள் மாதிரி ஒப்பிக்கிறாரு. "ஹே, அது... வந்து... மீனா... என்னத்த சொல்றது... அவங்க..."ன்னு கார்த்திக் கடலை முட்டாயி மெல்லுராரு. சொன்னவன் பாதி பேரு. சொல்லாதவன் மீதி பேருன்னு எல்லாரையும் சேதுவாக்கிட்டு, அழகிய அலையா மீனா உலா வந்த நேரத்திலேதான் நான் அவங்களை பார்க்க போயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SgruRMPDReI/AAAAAAAAAQM/mYRqFMxGrzM/s1600-h/meena_35.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 317px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SgruRMPDReI/AAAAAAAAAQM/mYRqFMxGrzM/s320/meena_35.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335338687683315170" border="0"&gt;&lt;/a&gt;&lt;font&gt;&lt;span&gt;இங்க்&lt;/span&gt;&lt;/font&gt; பில்லர்லே இங்கிலீஷை நிரப்பி, அதிலே ரெண்டு சொட்டை தமிழ் குடுவையிலே விட்டு, கலக்கி கலக்கி மீனா பேசுனதிலே, பேனாவ பிரிச்சு குறிப்பெடுக்கவும் மறந்து போச்சு எனக்கு. அவரு மேல ஒரு டைரக்டரு பிரியமா இருக்கறதாகவும், இரண்டு பொண்ணுக்கு அப்பாவான அவரு, இவரு நெனப்புல வீட்டுக்கே கூட போகாம ஆபிஸ்லேயே து£ங்குறதாவும் கேள்விப்பட்டதை மீனாட்ட கேட்டா, "ஐயோ பாவம்"னு சொல்லிட்டு "அப்பிடியா"ன்னும் கேட்டுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னணி வார இதழ்லே இவரையும், அவரையும் இணைச்சு வர்ற கிசுகிசுவை (அதுவும் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ...) படிச்சீங்களான்னு கேட்டுட்டு அவரு வாயையே பார்த்தேன். "படிச்சேன். ஏன்தான் இப்படி எழுதறாங்களோ? அதிலே கொஞ்சம் கூட உண்மையில்லே தெரியுமா?"ன்னுச்சு. "உண்மையில்லேங்கறது எனக்கும் தெரியும்"னு நான் சொன்னதும், படக்குன்னு எழுந்து உட்கார்ந்த மீனா, "அப்புறம் ஏன் எழுதுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்"னுச்சு அப்பாவியாக.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன உண்மையை நெசமாவே தெரியாதது மாதிரி கேட்டுச்சா, அல்லது தெரிஞ்சே நடிச்சுதாங்கிறது மீனாவுக்கே வெளிச்சம். "அந்த பத்திரிகை ரிப்போர்ட்டரை ஒரு நாளு கேட்டேன். இப்படி எழுதறீங்களே, அதெல்லாம் நெசந்தானா?"ன்னு. "அது பெரிய இம்சை தம்பி. அத எதுக்கு இப்போ கேக்கிறீங்க"ன்னு ஒரு பதில சொல்லிட்டு எஸ்கேப் ஆக பார்த்தாரு. 'செல்லமா' அவரு 'மீசையை' பிடிச்சு இழுத்து கேட்டப்போ, அவரு சொன்னதுதான் இது"ன்னு நான் ஒரு விஷயம் சொன்னேன். அதை ரொம்ப அதிர்ச்சியோட கேட்டுச்சு மீனா.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, அவங்களுக்குள்ளே லவ்வு இருக்கா, இல்லையான்னே தெரியலே. ஆனா அந்த பையன்தான், 'அண்ணே... எங்களை பற்றி அடிக்கடி கிசுகிசு எழுதுங்கண்ணே'ன்னு கேட்டுகிட்டே இருக்காரு. ஒரு வேளை ஒன் சைடு லவ்வா இருக்கும் போலிருக்கு. நாம இப்படி போட, போட, அது மனசுல ஏதாவது ஆச வருமான்னு பார்க்கிறாரு போலிருக்கு. நமக்கென்ன, ஒரு செய்தியாச்சுன்னு போயிட்டு இருக்கு அந்த கிசுகிசு"ன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இத அப்பிடியே மீனாவிடம் நான் போட்டுக் கொடுக்க (இதுதான் சரியான வார்த்தையா இருக்கும்னு நெனக்கிறேன்) கொஞ்சம் அதிர்ச்சிதான் அந்த நிலா முகத்திலே. "அப்பிடியா சார். நெசமா அப்பிடி சொன்னாரா? நான் அந்த டைரக்டரையே நேரா கேக்குறேன். இத சும்மா விட மாட்டேன்"னுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு பிறகு நேருக்கு நேரா பேசுனாங்களா? கணக்கை நேராக்கிக்கிட்டாங்களா?ன்னு எனக்கு தெரியாது. காலம் வேகமா ஓடியதில் மீனாவுக்கு முப்பத்தியாறு வயசாயிருச்சு. வித்யாசாகர்னு ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரை கல்யாணம் செய்து கொள்ளப் போறதாகவும், அவரு மீனாவோட சொத்துக்கு ஆசை படாதவராகவும் இருக்கறதா சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மீனான்னு ஒரு மிகப் பெரிய சொத்து கிடைக்கும்போது, மத்ததெல்லாம் பம்மாத்துங்கிறதுதான் என்னோட அபிப்ராயம். வேணும்னா அந்த புதுமாப்பிள்ளை கோடம்பாக்கத்திலே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி பார்க்கட்டுமே?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3757488726380323430-8264878863209576661?l=adikkadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://adikkadi.blogspot.com/feeds/8264878863209576661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3757488726380323430&amp;postID=8264878863209576661' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8264878863209576661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3757488726380323430/posts/default/8264878863209576661'/><link rel='alternate' type='text/html' href='http://adikkadi.blogspot.com/2009/05/blog-post_13.html' title='மீனாவின் &apos;இடை&apos; தேர்தல்!'/><author><name>anthanan</name><uri>http://www.blogger.com/profile/09137674508348881214</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SbVUFwuRqwI/AAAAAAAAAEs/P4dg_Xsyofg/S220/anthanan02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_feKwFSgneu0/SgruJT2ds7I/AAAAAAAAAQE/Udh4V305yMg/s72-c/meena.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-9029267101296617532</id><published>2009-05-12T16:43:00.000+05:30</published><updated>2009-05-12T16:57:08.267+05:30</updated><title type='text'>டிஆரும், மன்சூரும்.... எலக்ஷன் 'சிரிப்பு'க் கட்டுரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SglbMF5kXSI/AAAAAAAAAP0/b-HqnPZ1HZA/s1600-h/tr.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_feKwFSgneu0/SglbMF5kXSI/AAAAAAAAAP0/b-HqnPZ1HZA/s320/tr.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5334895496897256738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நெட்டையனும், குட்டையனும் நீராட போனாங்களாம்! குட்டையனுக்கு அலையிலே கண்டம். நெட்டையனுக்கு 'நீரே' கண்டம். வெளங்கிரும்டா கூட்டணின்னு பாலமன் ஆப்பைய்யா சொல்ல, பக்கத்திலே இருந்து 'கெக்கேபிக்கேன்'னு சிரிச்சான் தமிழன். ஆப்பையா சொன்னது எத பத்தி? மன்சூரும், டிஆரும் ஒண்ணா கூட்டணி வச்சாங்களே அத பத்தி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ராகு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; கால நேரத்திலே ரூமை சாத்திட்டு , லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு இருட்டிலே யாருகிட்டேயும் பேசாம உட்கார்ந்திருப்பாரு டி.ஆர். லைட் எறிஞ்சா உள்ளே ஆளு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு கஷ்ட காலம் உள்ளே வந்திருமாம்! அதுக்காகதான் இந்த லைட்ஸ் ஆஃப்!&lt;br /&gt;&lt;br /&gt;"லைட்ஸ் ஆன்..."னு கம்பீரமா குரல் கொடுக்கிற ஒரு டைரக்டர் ராவு காலத்துக்கு பயந்து இப்படி 'ஆஃப் காலமா' இருக்கறது எனக்கே பொறுக்காம "¬ட்டை ஆஃப் பண்ணிட்டு இருட்லே உட்கார்ந்தா எல்லாம் சரியாயிடுமா, அது எப்பிடிண்ணே...?"னு கேட்டேன். (இதான் மேண்டிலான்னு செந்தில் கேப்பாரே அப்பிடி) "சார்... எம்.ஏ படிச்சவங்கிற முறையிலேயும், சோதிடத்தை ஆராய்ச்சி பண்றவங்கிற முறையிலேயும் சொல்றேன்" (இந்த இரண்டு முறையிலேயும் இல்லாம சும்மா சொன்னாலே என் காதுல விழும்னு சொல்ல ஆசதான். &lt;span&gt;&lt;span&gt;ஆனாலு
