Monday, October 10, 2016

யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம பாபி சிம்ஹாதான்!
விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில்தான் பாபிசிம்ஹாவுக்கும் ஒரு முக்கியமான ரோல் இருந்தது. அதற்கப்புறம்தான் அவரை பற்றி உலகமும் அறிந்தது. ‘பையன் நல்லா நடிக்கிறாப்ல… நல்லா வருவாப்ல…’ என்றெல்லாம் மஹா ஜனங்கள் சொன்னதில் பாதிதான் உண்மையாச்சு. மீதி பொய்யாய் போனதற்கு பாபிசிம்ஹாவின் படப்பிடிப்பு சேட்டைகளே காரணம். ஷுட்டிங்குக்கு வருகிற விஷயத்தில் இவர் இன்னொரு சிம்பு என்று கோடம்பாக்கமே துண்டை வாயில் பொத்திக் கொண்டு பொங்கி வருவது தனிக்கதை!

http://newtamilcinema.com/flick-on-a-million/

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! நயன்தாரா ஆக்ஷன்!

தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ.
‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி. 

http://newtamilcinema.com/the-child-had-fallen-into-the-well-bore-nayanthara-action/

Friday, July 30, 2010

மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...! (மீ‌ள்‌ பதி‌வு‌)


"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!

பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!

வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.

"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"

ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.

இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.

லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)

டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.

லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?

டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.

அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.

பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."

Friday, July 2, 2010

படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌


பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. 'ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது'ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே 'அதோ டாக்டரே வந்திட்டாரேன்'னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.

ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். 'தேங்காய் உடைச்சேன். பூ வந்திச்சு. நல்ல சகுனம்'னு ஆனந்த கூத்தாட வைப்பாங்க. படம் ரிலீஸ் ஆகி நாலாவது வாரத்துல அதே புரட்யூசர், எங்காவது கோயில்ல தேங்கா பொறுக்கிட்டு இருப்பாரு. "பூ வந்திச்சே... பொருள் வந்திச்சா?"ன்னு கேட்கறதுக்கோ, நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ ஒருத்தரும் தயாரா இல்லாததால இதே ஜோசியரு அடுத்த கம்பெனியில தேங்கா உடைப்பாரு. அங்கேயும் தேங்காய்க்குள்ளே பூ இருக்கும்! ஃப்பூ... இதுக்கெல்லாம் மயங்குறமே நினைச்சு ஒதுங்கின ஒரு தயாரிப்பாளரும் இங்க இல்லாததுதான் இவங்க ஆட்டத்துக்கு காரணம். இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒரு ஆட்டம் பாம் வைக்க மாட்டியான்னு நினைச்சுட்டு இருந்த நேரத்திலதான் ஒரு ஜோசியரு மண்டையில நச்சு நச்சுன்னு கேள்வியால அடிச்சு, கிறுக்கு பிடிக்க வச்சுச்சு நயன்தாரா.

அய்யால... அது எப்போ?

மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். 'வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்'னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. 'மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்' ன்னு திரியுது ஜோடி.

இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதே'ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.

'நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்'னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. "சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?" வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.

ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. "ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு..."ன்னு இழுக்க, 'கோக்' இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, "சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா"ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, "உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?"னாரு முதல் கேள்வியாக.

என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, 'ரோஸ்'னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. "என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே"ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.

பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. "உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?" ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.

முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. "நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!"

இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். "சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க" என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு 'லாக்' போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம 'பிரசன்னம்' போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. "ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?"

"ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி"ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, "இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு"ன்னாரு விடாப்பிடியாக!

இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! "இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?"ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு எடுத்தாரே ஓட்டம்....! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி "நயன்தாரா என்ன சொன்னாங்க?"ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.

அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?

"வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!"

Saturday, June 12, 2010

அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌


தன்னை வருத்திக்கிற ஹீரோ தமிழ்சினிமாவுல யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு சொல்லிடலாம், கமல்தான்னு! அவ்வை சண்முகி மட்டுமில்ல, அன்பே சிவம்ல கூட அவரோட மேக்கப்பும் அர்ப்பணிப்பும் அற்புதம். இந்த அதிசயத்தை சிலேட்ல எழுதினாலும் அழிக்க முடியாது. சிஸ்டத்தில எழுதினாலும் வழிக்க முடியாது.

அரை கிணறு, அரை கம்பம் இதெல்லாம் அவலத்துக்கான அடையாளம். ஆனால் கமலோட அரை நு£ற்றாண்டு அனுபவம் இருக்கே, அது அரை குறையானது அல்ல. அந்த அரையும் நிறையானது! இவ்வளவு பில்டப்பும் கடைசி பாராவுல என்னாகுதுங்கிற மேட்டருக்கு வர்றதுக்கு முன்னே, அசிஸ்டென்ட் டைரக்டர்களோட அவசியத்தையும் பேசியாகணும். அனுபவத்தையும் பேசியாகணும். (ஹலோ, எங்க அதுக்குள்ளே கடைசி பாராவுக்கு ஓடுறீங்க?)

ஒட்டகத்தை உரிச்சாதான் குர்பானி. ஆனா உரிக்காமலே குர்பானியாகிற ஒரே ஜந்து அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான். விடிஞ்சா கல்யாணம், வெளக்கு வச்சா சாந்தி முகூர்த்தம்னு ஒரே நாளில் பெரிய மனுசனாக்கிடுது இல்லறம். ஆனால் இந்த அசிஸ்டென்ட்டுங்க பொழப்பு இருக்கே, விடிஞ்சா பொறப்பு. வெளக்கு வச்சாலும் பொறப்புதான். வருஷத்தை இவங்களும், வருஷம் இவங்களையும் உருட்டி உருட்டி விளையாடிக்கிட்டே இருக்கும். நல்ல வாய்ப்பு வர்றதுக்குள்ளே தல நரைச்சு போறவங்களும், குடல் இளைச்சு போனவங்களும்தான் இந்த ஃபீல்டுல ஜாஸ்தி.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு உதவி இயக்குனரானாரு. இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி அவர் ஒரு பத்திரிகையாளர். போன இடத்தில சிங்கம் மாதிரி கர்ஜிக்கறதும், எவ்வளவு பெரிய மனுசனா இருந்தாலும் கேள்விகள கேட்டு அவங்களை கிறுக்கு புடிக்க வைக்கிறதும் அவருக்கு புடிச்ச விளையாட்டு. காலம் அவரையும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக்கிருச்சு. முன்னணி டைரக்டர் ஒருத்தரிடம் உதவி இயக்குனரா சேர்ந்தாரு. ஏவிஎம்ல படப்பிடிப்பு. ஆளை பார்த்து நலம் விசாரிக்கலாம்னு போயிருந்தேன். போன இடத்தில நான் பார்த்த கோலம், மார்கழி மாசத்து மங்கல கோலமில்ல. கத்தரி வெயிலில் கட்டாந்தரையில் போட்ட தண்ணீர் கோலம். புஸ்ஸ§ன்னு வாயிலேர்ந்து பெருமூச்சு வர, ஒரு பெரிய பெட்டிய தலையில வச்சுகிட்டு அந்த யூனிட்டை சுத்தி சுத்தி ஓடி வந்துகிட்டு இருந்தாரு.

அதிர்ந்து போன நான் அவரு பொட்டிய வச்சிட்டு ஒதுங்குற வரைக்கும் காத்திருந்தேன். வந்த பிறகு என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவரு சொன்ன பதில் ஆட வச்சிருச்சு. அது பனிஷ்மென்ட்டாம். டைரக்டர் சொன்ன ஏதோ ஒரு வேலைய செய்யாம விட்டுட்டாரு. டைரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல் வச்சிருக்கிற பொட்டிய தலையில ஏத்தி, சுத்தி சுத்தி வான்னு சொல்லிட்டாரு இயக்குனரு. மண்டைய சுற்றி அறிவு வெளிச்சம் அடிச்சாலும், தொண்டைய மூடிக்கிட்டு சொன்னதை செய்யலேன்னா போயிட்டு வா ராசாதான்! அதனாலதான் பணிவா அந்த வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு நண்பர்.

இவருக்கு டைரக்டரால பிரச்சனை. சிலருக்கு ஹீரோ, ஹீரோயின்னு பலராலும் பிரச்சனை வரும். 'என்னவோ எனக்கு அவன புடிக்கல. அவன் முழியே சரியில்ல. வேற யாராவது அனுப்பி டயலாக் படிக்க சொல்லுங்க' என்று ஹீரோ காய்வார். காஸ்ட்யூம் மாத்துறதுக்குள்ளே கதவிடுக்கால பார்த்திட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணி படம் முடியுற வரைக்கும் பக்கத்திலேயே வராத மாதிரி படுத்துற ஹீரோயினுங்க இருப்பாங்க. அதுக்கு காரணம் செல்போன் கடலைக்கு இடையூறா 'ஷாட் ரெடி மேடம்'னு அடிக்கடி போயிருப்பாரு அந்த பக்கம்! இப்படி அசிஸ்டென்ட் டைரக்டருங்களுக்கு மே மாச வெயிலை மண்டைக்கு அனுப்பிட்டு, டிசம்பர் மாச மழைய கண்ணுல வரவழைப்பானுங்க, அல்லது ....ப்பாளுங்க!

கழுத்தை பிடிச்சா டை. அதுவே கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நாக்கு தள்ள வைக்கிற டைய்! சிலரோட கண்டிப்பும் இப்படிதான் இருக்கும். ஆனால் அது பர்பெக்ஷனுக்கான பாராயணம்ங்கறது போக போகதான் தெரியும். யானை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டியும் வாலாட்டின கதையா சில டைரக்டர்களும், நடிகர்களும் கோவத்தை வலிய வரவழைச்சுகிட்டு அலட்டிக்கறதும் இங்க நடக்கும். கடந்த பாராவில் நான் சொன்ன விஷயம் அப்படிதான்.

ஆனால் கலையை கருவறையா நினைக்கிற கமலுக்கும் அடிக்கடி கோவம் வரும். அவர் நடிக்கிற படத்தில யாரு வேணும்னாலும் டைரக்டரா இருக்கலாம். ஆனா காட்சியை வரையறுக்கிற அதிகாரம் கமலுக்கு மட்டும்தான். (பாலசந்தர் காலத்தை விட்ருங்க. நான் சொல்றது இப்போ) படத்தில இவர் கோட் போட்டுக் கொண்டு வர்ற காட்சியா இருக்கும். அதில ஒரு மயிரிழை சுருக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவரு அவர். ஷாட்ல கழற்றி அரை நிமிஷம் கழிச்சு திரும்ப மாட்டினா கூட அதுக்குள்ளே அயர்ன் பண்ணியிருக்கணும் அந்த கோட். இல்லைன்னா இஸ்திரி பொட்டி கோபத்தோட சம்பந்தப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டரை படுக்க வச்சு பரேட் எடுப்பாரு கமல்.

அவரு மனசில நினைக்கறதை 'மானிட்டர்' பண்ணுற அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கணும். அவரு கட்டளையிட்டு வாயை மூடுவதற்குள்ளே விஷயம் முடிஞ்சுருக்கணும். இல்லைன்னா ஒரே ஒரு பார்வையிலேயே 'ஒண்ணுக்கு' வர வைக்க முடியும் அவரால். அந்த பார்வையில கலங்கரை விளக்கமும் தெரியும். காசிமேடு அருவாளும் தெரியும். சார் அடுத்ததா என்ன சொல்லப் போறாரோன்ங்கிற அவஸ்தையிலேயே அடி வயித்தில வைப்ரேட்டரோட சுத்தி வர்ற உதவி இயக்குனர்களுக்கு அந்த படத்தின் ரிலீஸ் நேரத்திலதான் சுவாச குழாயே திறக்கும்!

அப்படியாப்பட்ட கமல் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சொன்ன பதில்தான் நான் இப்போ சொல்லப்போற விஷயம். அதை படிச்சுட்டு எங்க அந்த நாதாரின்னு விரட்டுனாலும் சரி, இவன்தாண்டா சர்தாரின்னு பாராட்டுனாலும் சரி, அது உங்க விருப்பம். கமல் நடிச்ச ஒரு படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கதை பனிப்பொழியுற ஏதோ ஒரு பிரதேசத்தில நடக்குது. காஷ்மீரோ, ஊட்டியோன்னு வச்சுக்கோங்களேன். ஆனா அப்படத்தின் விட்டுப் போன ஒரு பகுதிய சென்னையில எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா பனி பிரதேசத்தில புகை மாதிரி மிஸ்ட் நடமாடிக்கிட்டேயிருக்கும்.

பின்னணியில் இந்த 'மிஸ்ட்' வரணும்னு நினைச்ச கமல், விறகு கட்டைகளை போட்டு எரிங்கன்னு சொல்லிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம். ஷாட்ல விழாத இடத்தில கட்டைய போட்டு கற்பூரத்தை ஏத்துறதுக்குள்ளே "எங்கய்யா புகை வரலே... வேலை ஆச்சா"ன்னு பத்து முறை குரல் கொடுத்திட்டாரு கமல். அடுத்த முறை அவரு நேர்ல வந்து கத்தறதுக்குள்ளே ஊதி புகையை வர வச்சுரணும்னு நாலைஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து ஊதிகிட்டேயிருந்தாங்க. அதுக்குள்ளே பொசுக்குன்னு அங்க என்ட்ரி கொடுத்த கமல், "என்னய்யா இவ்வளவு நேரம், புகை வந்திச்சா?"ன்னு கேட்க, "ஒரு நிமிஷம் இருங்க சார்"னு சொன்னாரு அந்த உதவி இயக்குனர்.

அப்படியே கீழே குனிஞ்சு விறகு கட்டைக்கு கேட்கிற மாதிரி, "கமல்ஹாசன்....கமல்ஹாசன்... கமல்ஹாசன்"னு சத்தமா மூணு தடவ கூவுனாரு. பிறகு தலையை து£க்கி, "சார் உங்க பேர சொன்ன பிறகும் பத்த மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?"ன்னு சொல்ல, மத்த அசிஸ்டென்ட்டுகளுக்கு இப்போ பேண்ட் நனையுற அளவுக்கு பதட்டம். ஆனால் கமல் என்ன செஞ்சாரு தெரியுமா? அப்படியே அவரை தீர்க்கமா சில வினாடிகள் பார்த்திட்டு அந்த இடத்திலிருந்தே அகன்றுவிட்டார். அப்புறம் விறகு தானாக எரியுற வரைக்கும் அந்த பக்கமே வரலை!

சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ?

Friday, June 4, 2010

ரீமாசென்னும், ஒரு நாகரீக சியர்சும்...


'சோழரே...பாடுவீரோ' ன்னு நாக்கை சைசா இழுத்து, கண்ணை லைட்டா செருகி ரீமாசென் கூப்பிடும்போது பாழாப்போற பார்த்திபன் படார் தீடீர்னு ஒரு ஸ்டெப்பு வைப்பாரே, அது ஆட்டம்னு நினைக்கிறீங்க? அதெல்லாம் இல்ல. கடுகு ஒன்ணு மேல விழுந்து கடப்பாரய நசுக்குன மாதிரி ரீமாசென்னோட பார்வை தாங்கமுடியாம பார்த்திபன் போட்ட பல்லாங்குழி பரதம்! யாராயிருந்தாலும் அந்த 'லுக்'குக்கு முன்னாடி மிக்சியில போட்ட மிளகா சட்னிதான்.

மயிலுன்னு பேரு வச்சாரு பாரதிராஜா. அதுக்கு பொறுத்தமா மயிலாட்டமே இருந்தாரு ஸ்ரீதேவி. அதுக்கு பிறகு தேவதைங்கிற படத்தில நடிச்ச கீர்த்தி ரெட்டிக்கும், படத்தின் தலைப்புக்கும் அப்படி ஒரு தேவ பொருத்தம். அந்த வரிசையில மின்னலேங்கிற படத்தில அறிமுகமாகி ஆயிரம் வோல்டேஜ் அழகோட ரசிகர்களின் ப்யூசை பிடுங்கின ஒரே அழகி நம்ம ரீமாதான்.

முப்பத்திரண்டு தும்ப பூவை, வரிசைக்கு பதினாறா வகுந்து வச்சா அதுதான் அவரோட சிரிப்பு. அதுக்காக பார்க்கிறவங்க எல்லாருக்கும் தும்ப பூ பிரசாதம் கொடுத்தா தப்பா போயிரும்னு ஷ§ட்டிங் ஸ்பாட்ல உம்முன்னே நிப்பாராம் நம்ம ரீமா. இந்த உம் ஒருகட்டத்தில எரிச்சலை உண்டாக்க, வல்லவன் படத்திலே வகையா வேக வச்சாரு சிம்பு. இனிமே அந்தாளு படத்தில நடிக்கவே மாட்டேன்னு அறிக்கை விடுற அளவுக்கு சூடான ரீமா, காத்திருந்து நடிச்ச படம்தான் ஆயிரத்தில் ஒருவன். கோழி செத்தாலும் பரவால்ல, முட்டை உடையாம பார்த்துக்கோன்னானாம் ஒரு முட்டாப்பய. அப்படிதான் ரீமாசென்னை வெயில்ல போட்டு வறுத்தெடுத்தாய்ங்க படத்துல. 'அவுட் புட்' நல்லா வந்தா போதும்ங்கறதுக்காக, 'இன் புட்' கொடுக்கிற மீராவ செம திட்டு திட்டுவாராம் செல்வா. அப்படியிருந்தும் காடு மலையெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கச்சிதமா படத்தை முடிச்சு கொடுத்தது ரீமாசென்னோட பெரிய மனசு.

படம் ரிலீஸ். ஆஹான்னு பாராட்டவும், ஓஹோன்னு தாலாட்டவும் மீடியாவுக்குள்ளேயே ஒரே போட்டி. அந்தளவுக்கு ஸ்கோர் பண்ணியிருந்தாரு ரீமா. உங்க நடிப்புக்கு ஒரு ஆஸ்கர். இடுப்பு மடிப்புக்கு ஒரு ஆஸ்கர். கடைசியா வாளெடுத்து சுத்துனீங்களே, அதுக்கொன்னுன்னு பர்மா பஜார் பேட்டரி செல்லு கணக்கா ஆஸ்கர் விருதை மலிவாக்கினாய்ங்க அத்தனை பேரும்.

வண்ணத்துப்பூச்சியா இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தடவயாவது சலவைக்கு போனாதான் பளீர்னு இருக்க முடியும்ங்கறது ரீமாவோட பாலிஸி. இந்த நேரம் பார்த்துதான் பார்ட்டி எப்பம்மான்னு பரபரப்பை கிளப்புனாய்ங்க ரீமாசென்கிட்ட பிரண்ட்ஷிப்பு வச்சிருந்த கோடம்பாக்க ஹீரோக்கள். (அதாரு...?) நுனி நாக்கு இங்கிலீஸ்ல கொஞ்சூண்டு ஒயினை மிதக்க விட்டு வழுக்கி வழுக்கி பேசுறதுல கில்லாடி ஹீரோக்களும் இருக்காய்ங்க இங்க. அவங்ககிட்ட மடங்கி ஒடுங்கி மனசொடுங்கி போறதுல பல நடிகைகளுக்கு தனி கிறக்கமே உண்டு. அப்படிதான் ரீமா கிறங்குவார்னு நினைச்சுது அந்த கூட்டம்.

அன்பா கேட்டா அத்தனையும் கொடுக்கிற ரீமா, ஒரு பார்ட்டி கொடுக்க மாட்டாரா என்ன? மவுண்ட் ரோடு பக்கத்தில இருக்கிற ஐந்து நட்சத்திர ஓட்டல். வாட்ச்மேன், செக்யூரிடிங்க கூட இங்க வாஷிங்குக்கு போட்ட மாதிரியே பளிச்சுன்னு இருப்பாய்ங்க. அந்தளவுக்கு சுத்தமான ஓட்டலை அழுக்கு பண்ணுறதுக்காகவே கூடுறது நம்ம கோடம்பாக்க கூட்டத்துக்கு பிடிச்ச விளையாட்டு. டாப் ஹீரோ நாலு பேர விட்டுடுங்க. அதுக்கு அடுத்த ஸ்டெப்ல இருக்கிற ஹீரோ அத்தனை பேரும் ஒண்ணு கூடிட்டாய்ங்க. இந்த பக்கம் அந்தகால ஆன்ட்டிகளில் ஆரம்பிச்சு, இந்த கால 'அடல்ட்'டிகள் வரைக்கும் லிப்ஸ்ட்டிக் மினுமினுக்க வந்திட்டாங்க.

இந்த வாலாட்டுற திமிங்கல கூட்டத்தில வத்திப்போன கருவாடு ஒன்ணும் வந்து சேர்ந்திருச்சு. யாரு அழைச்சதுன்னும் தெரியல. எதுக்காக வந்தாருன்னும் புரியல. மார்க்கெட்ல முன்னணியில் இருந்தாதான் நேர்ல நின்று கொட்டாவி விடுறதுக்கு கூட வாய திறப்பாய்ங்க. அந்தளவுக்கு சந்தர்பவாதிங்க இவய்ங்க. அப்படி ஒரு அந்தஸ்து பேதம் தலைவிரிச்சு ஆடுற கூட்டத்தில நடிக்கிற எல்லா படத்தையும் பிளாப் படமாவே கொடுக்கிற இளம் ஹீரோதான் அந்த வந்திப்போன கருவாடு. ஒரு க்ளு. இவர் சுறா ஸ்டார் விஜய்க்கு ரொம்ப நெருக்கமான ஆளு!

கிளாஸ்களுக்கு நடுவே நடக்கிற கபடி ஆட்டத்தில, இவரோட கிளாசும் செம சறுக்கல் போட, 90 ப்ளஸ் 90 ப்ளஸ் 90 ப்ளஸ் என்று ஏறிக்கொண்டே போனது அளவு. பக்தி படமா இருந்தாலும் அதுல பதற வைக்கிற க்ளைமாக்ஸ் இல்லாம படம் முடியாது இல்லையா? இங்கயும் அப்படிதான் வந்தது அந்த பதற வைக்கிற க்ளைமாக்ஸ்.

மண்டைக்குள்ளே மங்காத்தா நடக்கிற ஸ்டேஜ் வந்திருச்சு அத்தனை பேருக்கும். கல்கி ஆசிரமத்தில கர்ண கடூரமா பக்தைகள் சிரிக்கிற கிளிப்பிங்ஸ் ஒன்று யூ ட்யூப்ல வெள்ளிவிழா கொண்டாடுதே, அதே ஸ்டைலில் அசுர சிரிப்பு சிரிச்சுகிட்டே அள்ளி அணைக்க தயாராச்சு ஒரு கூட்டம். ப்ளஸ்சும், மைனசும் கூட்டணி அமைத்துக் கொண்டு காணாமல்போக, ஸ்டடியாக நின்றது ரீமா மட்டும்தான். வந்த அழைப்பையெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டே வந்த ரீமா, பார்ட்டி ஹாலை நோட்டம் விட, வசந்த மாளிகை சிவாஜி மாதிரி, வகை தொகையில்லாம கிளாசையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தோல்விப்பட ஹீரோ.

சில அரிதான நேரங்களில் லைட் ஹவுஸ் குனிஞ்சு சுண்டலுக்கு கை நீட்டும். அதுதான் நடந்தது அங்கும்!

"அடப்பாவி. பார்ட்டிக்கு வந்து பரிதாபமா குடிக்கிறீயே, அப்படியென்ன கவலை உனக்கு? எங்கிட்ட சொல்லு"ன்னு அரை குறை தமிழ்ல ரீமாசென் ஆறுதல் சொல்ல, அதுவா... அதுவான்னு கேட்டபடியே மாருல சாஞ்சு 'கோ...'ன்னு அழ ஆரம்பிச்சாரு ஹீரோ. அவரு கண்ணை துடைக்கவும், கவலை போக்கவும் துடியா துடிச்ச ரீமா மெல்ல அவரை அணைச்சபடி 'ரஞ்சிதா வைத்தியம்' செய்ய, அத்தனை வருட தோல்விகளும் கண்ணுக்கு வராம கரைஞ்சே போனார் ஹீரோ. அதுக்கு பிறகு அவரு தெளிஞ்சு கண்ண தெறக்கும்போது பக்கத்தில் கிடந்த பஞ்சலோகத்தை அவராலேயே நம்ப முடியல.

அந்த ஜோர்லயே மறுநாள் ரீமாவுக்கு போன் அடிச்ச இளம் ஹீரோ, மறுநாள் ராத்திரியும் டாஸ்மாக் சரக்கை குடிச்சுட்டு வாந்தி எடுத்ததுக்கு காரணம், ரீமாவின் இங்கிலீஸ் திட்டுகள்தான் என்பது பல பேருக்கு தெரியாத பதி விரத ரகசியம்.

பின்குறிப்பு- கடந்த பதிவுக்கே கடைசியா க்ளு கொடுத்திருந்தேன். இந்த பதிவுக்கு ரொம்ப அலுத்துக்க வேண்டாம். நடிகர் மூன்றெழுத்து ஹீரோவின் உறவினரும் கூட!

Friday, May 28, 2010

கருப்பு நடிகை, கண்றாவி ஹீரோ!


கண்களே ரெண்டு மானிட்டர் தெரியுமான்னாரு நண்பர். அவசரப்படாதீங்க, அவரு சொன்னது கம்யூட்டரோட மானிட்டரை! பிடிச்ச நடிகையை வர்ணிக்கும்போது உணர்ச்சி ஓவராகி, வார்த்தைகளை பிரிச்சு மேயும்போதுதான் கண்கள் பற்றி இப்படி ஒரு ஒப்பீடு. இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலேயே கதைகள் படிக்கிற வசதி இருப்பதால் மானிட்டர் என்றதில் தப்பில்லை. ஏனென்றால் அந்த நடிகையின் கண்கள் இருக்கிறதே, அது சொல்லும் கதைகள் ஏராளம்!

'ஒப்பாரும் மிக்காருமில்லாத...'ன்னு மீட்டிங்ல பேசும்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரு ராதாரவி. அவங்க அப்பாரு இல்லன்னா இவரு எதுக்கு இப்படி கவலைப்படுறாருன்னு அரைகுறையா கேட்பவங்க அதிர்ந்துதான் போவாங்க. அப்படி ஒரு புகழ் மொழியோடுதான் பேசுவாரு எல்லாரையும். நான் சொல்லப் போற நடிகை இருக்காங்களே, அவங்களும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நல்ல நடிகைதான்.

வட்ட முகம், கருப்புக்கே மெருகேத்துற கலர், டயர் சைஸ் இடுப்பு என்றாலும் அதில் ஃபயர் வரவழைக்கும் கவர்ச்சி! நடிப்பில் இவங்க இன்னொரு சிவாஜி. பொம்பளை சிவாஜி என்றே வர்ணிப்பார்கள் பலரும். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் சிவாஜிக்கே 'தண்ணி' காட்டியிருப்பார் நடிகை. அட என்ன ஒரு ஒற்றுமை? இந்த வாரம் நாம் சொல்லப்போவதும் ஒரு 'தண்ணி' மேட்டர்தான்!

கஞ்சா தோட்டத்துக்கு நடுவிலே விளைஞ்ச சவுக்கு மரம், சாய்ஞ்சு சாய்ஞ்சு வளர்ந்த மாதிரி, புகழுக்கு நடுவிலேயே வளர்ந்தவராச்சா? பொசுக்குன்னு கோவம் வரும் எதுக்கெடுத்தாலும். அதாவது வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம். ஷ¨ட்டிங் ஸ்பாட்ல இவங்க கொடுக்கிற அலப்பறைக்கு அளவில்லாம போனாலும், நடிப்புக்காக பொறுத்துக்க வேண்டியதா இருந்திச்சு எல்லாத்தையும்.

பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில நடிச்சிட்டு இருந்தாங்க இந்த நடிகை. இவங்களுக்கு ஜோடியா நடிச்சது டாப் மோஸ்ட் ஹீரோக்கள் ரெண்டு பேர். அதில் ஒருத்தருக்குதான் அன்றைய தினம் ஷாட். சாயங்காலம் ஆறு மணிக்கு பேக் அப் என்றாலும், ஷாட்ல இருந்தாதான் நடிகருங்களுக்கு பிடிக்கும். அப்படியில்லாம மேக்கப்பை போட்டு உட்கார வச்சிருந்தா குள்ளமணிக்கே கூட கோவம் வரும். அன்னைக்கு பார்த்து நடிகையோட அலப்பறையில் ஒரு மணி நேரம் உட்கார வேண்டியதாப் போச்சு ஹீரோவுக்கு. எப்படி?

நடிகை குளிக்கிற மாதிரி காட்சி. திடீர்னு அங்கு வரும் ஹீரோ, அவரு குளிப்பதை பார்க்காம அப்படியே திரும்பி நின்று சில டயலாக்குகள் பேசணும். அதை குளிச்சுக்கிட்டே நடிகை கேட்கணும். மச மசன்னு நிக்காம மாராப்பை ஏத்தி கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்திட்டாரு நடிகை. தண்ணி தொட்டி, தலைசொம்பு என்று அத்தனையும் ரெடி. நடிகரும் வந்து நின்னுட்டாரு. தலைக்கு தண்ணிய ஊத்த வேண்டிய நம்ம நடிகை, அப்படியே கையை தொட்டிக்குள்ளே விட்டுட்டு குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. "ஏங்க, இப்படி குளிருது. ஒருத்தராவது வென்னீர் வைக்கணும்னு நினைக்க மாட்டீங்களா, எப்படிங்க இதில குளிக்கறது?" என்றார் அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் வள்ளுன்னு விழாத குறையாக. இதை டைரக்டரிடம் கேட்க முடியாது. ஏன்னா அது சிங்கம். இப்பவே சிங்கம்னா பீக் ல இருக்கும்போது யோசிச்சுக்கோங்க. ஆனாலும் பிரச்சனையை காதில் வாங்கிகிட்ட சிங்கம், அசிஸ்டென்டுகளை கூப்பிட்டு "யோவ், அவங்களுக்கு வென்னீர் வச்சுட்டு கூப்பிடுங்கய்யா" என்று தனக்கான சேரில் போய் உட்காந்துவிட்டார்.

உலக்கையே விழுந்தா கூட, வலக்கையால வளைச்சு ஒடிக்கிற ஹீரோ, கேவலம் ஹீரோயினோட குய்யோ முறையோவுக்கு யூனிட்டே அலறுதேன்னு செம கோவமாயிட்டாரு. குளிர்ச்சியான தண்ணி மேல விழுந்தா செத்தா போயிருவான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே தனது சீட்ல போய் உட்கார்ந்திட்டாரு. "தம்பி, எல்லாம் ஆனதும் சொல்லுங்க"ன்னு கட்டிய மாராப்போட தனது நாற்காலிக்கு போயிருச்சு நடிகை.

இந்த இடத்தில் அந்த ஷாட்டுக்கான வரைபடத்தை சொல்லியே ஆக வேண்டும்.

சுற்றிலும் கீற்று தடுப்பு. நடுவில் தொட்டி. நடிகை குளிக்கிற ஷாட் என்பதால் அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று அந்த இடத்தையே ஷாமியானா கொண்டு தடுத்திருந்தாங்க. இந்த இடத்தில்தான் தேமே என்று விறகுகளை எரியவிட்டு அந்த தொட்டியை சூடாக்கிக் கொண்டிருந்தாரு அந்த அசிஸ்டென்ட் டைரக்டர். என்ன நினைத்தாரோ, சரக்கென்று சீட்டை விட்டு எழுந்தார் ஹீரோ. நேராக வென்னீர் போடுகிற இடத்துக்கு போனார். தண்ணி சூடாயிருச்சான்னு பார்க்க வந்திருப்பாரோன்னு அசிஸ்டென்ட் நினைக்க, உஷ் என்று அவர் வாயை பொத்தினார்.

"யாரும் வராங்களான்னு பார்த்துக்கோ" என்று அந்த தடுப்புக்குள் போய்விட்டார். வென்னீர் பானை. வெளியாளுங்க கவனிக்க முடியாத தடுப்பு. உள்ள போயி ஹீரோ என்ன பண்ண போறாருன்னு லேசா எட்டிப்பார்த்த உதவி இயக்குனருக்கு உதறல் எடுத்திருச்சு. அவரு மட்டுமில்ல, ஒருத்தரும் நினைச்சுப்பார்க்க முடியாத காரியம் 'ஒன்றை' செய்து கொண்டிருந்தார் ஹீரோ. அதுவும் நடிகை குளிக்கப் போற தண்ணீர் தொட்டியில்!

சைலண்ட்டாக ரெண்டே நிமிடத்தில் காரியத்தை முடிச்சுட்டு தனது சீட்டுக்கு வந்த உட்கார்ந்தவரோட முகத்தில நிம்மதியோ நிம்மதி. கொஞ்ச நேரத்தில ஷாட். நடிகை ஆசையா தண்ணிய எடுத்து மேல ஊத்திக்கிட்டாங்க. முகம், கன்னமெல்லாம் வழிஞ்சுது ஹாட் வாட்டர். அதுக்குள்ளே இருந்த ஹாட் மேட்டர் அந்த ஹீரோவுக்கும், வென்னீர் வச்ச அசிஸ்டென்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்! உதறலோடு இந்த காட்சி எடுக்கப்படுறதை அசிஸ்டென்ட் கவனிக்க, உற்சாகமாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார் ஹீரோ.

நமக்கெப்படி தெரிஞ்சுது இந்த மேட்டர்? ஒரு 'ஹாட்' சந்திப்புல நம்பகிட்ட இதை பகிர்ந்துகிட்ட அந்த அசிஸ்டென்ட் டைரக்டரு இப்பவும் அசிஸ்டென்டாதான்யா இருக்காரு!

பின்குறிப்பு- இன்னுமா அந்த நடிகை யாருன்னு தெரியல? சரிதான் போங்க!