Saturday, May 16, 2009

அஜீத் என்ற நிராயுதபாணி?


திரும்ப திரும்ப அஜீத்துதானா? வேற மேட்டருக்கு போய்யா...ன்னு பின்னாடி தார்குச்சியால 'நறுக்' போட்ட கலையரசன்ங்கிற நண்பருக்கு, "அலோவ், ஸாரு... இந்த மேட்டர மட்டுமாவது சொல்லி முடிச்சிரலாம்னு நெனக்கிறேன். மேலே போலாமா...?"

எங்க விட்டேன்? ஆங்... நார்த் மெட்ராஸ்லே! துக்கத்துக்கு போன அஜீத்தை, வெக்கத்த பார்க்காம விரட்டி விரட்டி ஆட்டோகிராஃப் கேட்டுச்சு மக்க படைங்க! "இங்கே இருந்தா டிஸ்டிரப் பண்ணுவாங்க. நீங்க கௌம்புங்க"ன்னு இறந்தவரோட பிள்ளை வந்து ரிக்வெஸ்ட் பண்ண, அப்படியே டெட் பாடியோட முகத்தை பார்த்து பிளாஷ்பேக்குக்கு போனாரு அஜீத். கண்ணிலே விழுந்த கவலை து£சியை கையால துடைக்கும்போதே, அந்த கெட்ட நாள் மூளைக்குள் பாஸ் ஆகி, ஒரு குண்டான் நிறைய குளோரோபாஃர்ம் கொடுத்தது.

சந்தையிலே நின்னா தராசு. பண்ணையிலே நின்னா மிராசுன்னு வாழ்ந்த மனுசனை, நிராயுத பாணியா நிக்க வச்சுது நேரம்! ஜாதகத்தை ரொம்பவே நம்புற மனுசன் அவரு. ஆனாலும், தன்னோட கனவு படமா நம்பிக்கிட்டு இருந்த 'நான் கடவுள்' படத்திலே இருந்து நீக்கப்படுவாருன்னு ஒரு சோசியன் கூட முன்கூட்டியே சொல்லலே அவரிடம். "வாங்கிய அட்வான்சை இன்னிக்கு இரவுக்குள்ளே திருப்பி கொடுத்திருங்க"ன்னு சொல்லிட்டாங்க. அதை கூட புரட்டி கொடுத்திரலாம். ஆனா படம்? வண்டியை எடுத்துகிட்டு ராத்திரி முழுக்க அலைஞ்சாங்க தலயும் நிழலும். சினிமாவிலே மட்டும்தான் நன்றியை சப்பாத்தியா சுட்டு நாகரீகத்தை சைட் டிஷ்ஷா வச்சுகிட்டு 'சரக்கு' அடிப்பாய்ங்க! போன இடத்திலே எல்லாம் "அட நாலு நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே"ன்னு உச் கொட்டினாய்ங்க. கடைசியா அவரு தட்டிய இடம், இதோ இங்கே டெட் பாடியா கிடக்கிறாரே... இவரு வீட்டு கதவை!

மொதல்ல ஜில்லுன்னு தண்ணி. பிறகுதான் மற்றதெல்லாம்னு சொன்னவரு, அடுத்த அரை மணி நேரத்திலே ஜில்லுன்னு குளிர வைச்சாரு அஜீத்தை. பெட்டி நிறைய பணம். அதுவும் கேட்ட பணத்தில் சில்லரை குறையாமல்! "போய் கொடுங்க. மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்" அப்படிப்பட்ட மனுஷன் செத்துக் கிடக்கும்போது கூட்டத்துக்கும் கோஷத்துக்கும் அஞ்சி ஓடுறதா? "வேணாம். நான் இருக்கேனே"ன்னாரு அஜீத். ஆனாலும் விடாப்பிடியாக கெஞ்சினார் செத்துப்போனவரோட பிள்ளை. காரை எடுத்துக்கொண்டு டிரைவ் இன் ஹோட்டலுக்கு வந்தவர், வீட்டுக்கு போக வேணாம். எடுக்கிற நேரத்திலேயாவது போவோம்னு அங்கேயே காருக்குள்ளே உட்கார்ந்திருந்தாரு. சரியா எடுக்கிற நேரத்திலே மறுபடியும் போய் கலந்து கொண்டவர், நடந்தே சுடுகாடு வரைக்கும் போனார். வாக்கிங்கையே கார்லே போற சில பணக்கார சேட்டுங்க, அஜீத் நடந்து வர்றதை ஆச்சர்யமா பார்த்தாங்க. இவரு கலந்துகிட்டதாலேயே சவ ஊர்வலம் பேரணியானது.

'கடவுள்' கஷ்டத்தை கொடுப்பான். சந்தோஷத்தை கொடுப்பான். அஜீத்துக்கு அட்வான்சை கொடுத்திருந்தான். பணத்த வாங்கிய மறுநாளே அட்வான்சை திருப்பி கொடுத்திட்டு, அப்படியே காரை நேரா அடையார் கேட்லே இருக்கிற சலு£னுக்கு விட சொன்னார் அஜீத். தோள் வரைக்கும் வளர்ந்திருந்த முடியை நறுக்க சொல்லும் போது அவரை அறியாமல் கண் கலங்கினார். சும்மாவா பின்னே? பரமசிவம் படத்துக்காக பி.வாசு இந்த முடியை வெட்ட சொன்னப்போ கூட, "இல்லை சார். நான் கடவுள் என்னோட கனவுப்படம். அந்த படத்துக்காக வளர்க்கிற இந்த முடியை வெட்ட மாட்டேன்"னு சொன்னவரு, இப்போ கண்ணுக்கு எதிரே விழுற முடியை பார்க்கும்போது நிஜமாவே கண்கலங்கினாரு.

சார் கண்ணுல பட்ருச்சா?ன்னு கவலையோட கேட்ட சலு£ன் காரருக்கு அஜீத் சொன்ன பதில் "ஆமாம் கண்ணு பட்ருச்சு!" இப்பவும் அஜீத் 'நான் கடவுள்' படத்தை பார்க்கவே இல்லையாம். பார்க்கலாம்னு அழைச்ச நண்பர்களிடம் அவரு சொன்னா வார்த்தை,

"நான், கடவுளை பார்த்திட்டேன்!"

சொல்ல வேண்டிய லட்சம் கோபங்களை ஒரே ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். அஜீத் சொன்ன இந்த ஒரு வாக்கியத்திற்குள் இருந்தது லட்சமா, கோடியா...?

20 comments:

சரவணகுமரன் said...

அய்யோ பாவம் :-(

Anonymous said...

ayya anthanan avaragale...naan naal thavaraamal thangal valaipathivai padikum paditha paamaran...aanaaal enekennavao thaangalum , udayasooriyanum overaaga "ajith" pugal paaduvathupol thodrugirathu..kooduthalaaga meena pugal kooda :) - xavi

♫சோம்பேறி♫ said...

:-(

Sridhar said...

பாலா செய்த வேலைக்கு கூலி உண்டு அதுவும் சீக்கிரமா.நல்ல கலைஞனை தொல்லை படுத்தியதற்காக அந்த கஞ்சாகுடிக்கி அவஸ்தை படுவான்.

butterfly Surya said...

என்ன நடந்தது..?? ஏன் நீக்கப்பட்டால் அதையும் சொன்னால் தேவலை..??

ராகவன் said...

என்ன நடந்தது..?? ஏன் நீக்கப்பட்டார் அதையும் சொன்னால் தேவலை..//

அதானே!!!

premkumar said...

என்ன நடந்தது..?? ஏன் நீக்கப்பட்டார் அதையும் சொன்னால் தேவலை..//

Please tell me sir

கண்ணா.. said...

நல்ல வேலை தல தப்பிச்சார்...

படத்துல ஆர்யாவுக்கு ஒன்னும் பெருசா ஸ்கோப் இல்லை...இதுக்கு மூணு வருசம் எல்லாம் சுத்த வேஸ்ட்..

வினோத் கெளதம் said...

:((

Anonymous said...

என்ன நடந்தது..?? ஏன் நீக்கப்பட்டார் அதையும் சொன்னால் தேவலை..//

கலையரசன் said...

//திரும்ப திரும்ப அஜீத்துதானா? வேற மேட்டருக்கு போய்யா...ன்னு
பின்னாடி தார்குச்சியால 'நறுக்' போட்ட கலையரசன்ங்கிற நண்பருக்கு//

நன்றி தலைவா!
நான் சொன்ன விருப்பத்தை கவனிச்சு,
பதிவுல என்னை பற்றி எழுதியதற்கு
மிகிழ்ச்சி! மிகிழ்ச்சி!!

உங்ககிட்டேருந்து நிறைய வெரைட்டி பதிவு
எதிர்பார்த்த உங்க ரசிகன் நான்..
அதனால அப்படி சொல்லிட்டேன்,
எதும் மனசுல வச்சிக்காதீங்க!

M Bharat Kumar said...

Anthanan annanannaaaaaeeeee,


Ennai Azha Vachuteenga.............Thalai Vaazhga.........

Agni said...

it reminds me.. nandri maRappathu nandrandu...

Ajith avargalin nalUllathai solvathu inga niraya paerkku pidikalai pOla... :-(

ThalaFan said...

Iam an ardent fan of Ajith....It is good to know his humble genuine nature...

Please post somethimg about your Srikanth too..(Avar kitta erukkaradhalae edhuvum ezhudha maattenghala..)

SUBBU said...

//"அஜீத் என்ற நிராயுதபாணி?"//

:((

நங்கள் இருக்கிறோம் துனைக்கு.

sugan karthik said...

sir, aen andha padathula irundhu thalaya thookinaanga adhayum sollunga thalaiva.....

gopi said...

thakka samayathi ajithukku udhavi saidha andha magaan yaarunu solla mudiyuma

Unknown said...

bala nallairukkamattan

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

மிக மிக தாமதமாகத்தான் இந்தப் பதிவை நான் படித்தேன். 'நான் தெரிந்தே செய்த தவறு' என்று பாலா சொன்னாலும் பணம் என்று வரும்போது யாரை வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்காதவனாகத்தான் இருக்கிறான் சினிமாக்காரன். பாலா முதலில் ஒரு சினிமாக்காரன். அப்புறம்தான் கலைஞன். மனிதனாக இல்லாமல் மானுடம் பற்றி எதனை படங்கள் எடுத்தால்தான் என்ன? 'நான் கடவுள்' பார்த்த போது எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

Ruthra said...

தல தல தான்