Tuesday, July 21, 2009

நமீதா எடுத்த வாந்தி...


"இந்திரவிழா பார்த்ததிலேர்ந்து கண்ணுக்கு வெளியே பன்னு வச்சு கட்ன மாதிரியே இருக்கு"ன்னாரு செந்திலு. (பன்னுன்னா என்னன்னு தெரியாத ஃபாரின் தோழருங்களுக்கு ஒரு விளக்கம். இது பர்கரோட பெரியப்பா) "இருட்டு கடை அல்வாவிலே திரட்டு பாலை கலந்த மாதிரி செக்க செவேர்னு நமீதாவை காட்னாய்ங்க. ஆனா எல்லாமே வொய்டு ஆங்கிளா போச்சுரா"ன்னாரு அவரே! "ப்ளே கிரவுண்டு மாதிரி இருக்கிற பேக் ரவுண்டை, குளோஸ் அப்புல காட்டனும்னா ஸ்கிரீன் முழுக்க 'ஸ்கின்' தானேய்யா தெரிஞ்சிருக்கும்? அதனால இருக்குமோ?"ன்னு அவரே சமாதானமாகி விட, "நமீதாவை பற்றி உனக்கென்ன தெரியும்? பாக்கறதுக்கு பால்கோவா டின்னா இருந்தாலும், பழகறதுக்கு பச்ச மண்ணு தெரியுமா?"ன்னேன்.

"அதனாலதான் நம்ம பயபுள்ளங்களுக்கு மண்ண கவ்வுறதுல அவ்வளவு ஆச போலருக்கு"ன்னு செந்திலு சொன்னதை நான் ரசிக்கலே. ஏன்னா, நமீதாவோட இளகிய மனசை எதிர்லே நின்னு ரசிச்சவன் நானு. போன வாரம் கூட அவங்ககிட்டே போன்லே பேசினப்போ, "வீட்ல சிஸ்டர கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னுச்சே, அந்த பாசத்திலே பல்சரை விட்டா ஏத்துற?"ன்னு செந்திலு மேல கோவமே வந்திருச்சு.

பொய்ய நிஜம் மாதிரியும், நிஜத்தை பொய் மாதிரியும் எடுக்கிற ஏரியாவுல, தத்ரூபமா எடுக்கிறேன்னு ஒருத்தனோட தாவாங்க ட்டைய பொளந்திட்டாரு ஒரு அறிமுக இயக்குனர். பீரோவுல ஒளிஞ்சிகிட்ட திருடனை அப்படியே பீரோவோட நாலைஞ்சு பேரு து£க்கிட்டு போற மாதிரி ஷாட். திருடனா நடிக்கிறவரு, ஒரமா பீடிய ருசிச்சிட்டு இருந்தாரு. புகைக்கு நடுவிலே தன்னோட பந்தாவை நுழைச்சு அந்த இன்பத்தை துண்டிச்ச இயக்குனரு, "யோவ். அந்த பூரோவுக்குள்ளே போய் பூந்துக்கோ"ன்னாரு. டைரக்டரு சொன்னா சரிதான்னு பணியுற நல்லவங்கதானே ஜூனியர் ஆர்ட்டிஸ்டுங்க. அவரு சொன்ன மாதிரியே உள்ளே பூந்துட்டாரு நடிகரு. ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்னு குரல் கொடுத்துகிட்டே, "யோவ் து£க்குங்கய்யா பீரோவ"ன்னாரு டைரக்டரு. உள்ளே மாட்டிகிட்ட துணை நடிகரு ஓன்ன்னு அலற, மற்றவங்க து£க்க முடியாம திணற, ஷாட் ஓக்கே ஆகி கதவை திறக்கும்போது, மவுத்தை பொளந்திட்டாரு துணை நடிகரு. அப்புறம் அந்தாளை து£க்கிட்டு ஐயோ குய்யோன்னு அலறிகிட்டே ஓடினாய்ங்க ஆஸ்பத்திரிக்கு.

"அந்தாளு பீரோவுக்குள்ளே போற மாதிரி ஒரு ஷாட்டு. பிறகு அவன வெளியிலே அனுப்பிட்டு நாலு பேரு அந்த பூரோவ கஷ்டப்பட்டு து£க்குற மாதிரி ஒரு ஷாட். இப்பிடி எடுக்கறதை விட்டுட்டு இந்த கஸ்மாலம் இன்னா பண்ணுச்சு பாரு"ன்னு ஓரமா நின்ன ஸ்டுடியோ வாட்ச்மேன் வெறிபிடிச்ச மாதிரி விமர்சனம் பண்ண, அதானே?ன்னாங்க சுத்தி நின்ன அத்தனை பேரும். அந்த டைரக்டரு இப்போ என்னா பண்றாரு? ம், எங்காவது மிலிட்டிரி ஹோட்டல்ல கோழிக்கு இறக்கை புடிங்கிட்டு இருப்பாரு! அந்த படமும் வரவேயில்லை. டைரக்டரும் வெளங்கவே இல்லை.

ஆன்மாவுல ராகத்தை கலந்தா இனிக்கும். டிராமாவுல நிஜத்தை கலந்தா? உரைக்கும்! இதுக்கு நான் சொல்லப் போற உதாரணம்தான் இந்த சம்பவம்.

பம்பரக் கண்ணாலே படப்பிடிப்பு. பிரசாத் ஸ்டுடியோவுல ஒரு பாடல் காட்சிக்காக செட்டு போட்டிருந்தாங்க. பொணமா நடிச்சா கூட மூக்குல பஞ்ச சொருவிட்டு, "இப்பவே மூச்ச பிடிச்சிராதய்யா. ஷாட்ல மட்டும் இழுத்துப்பிடி"ன்னு சொல்ற கேமிராமேனுங்க வாழுற பூமி இது. ஆனா, கேமிராமேன் சரவணனுக்கு நமீதா மேல கோவமோ? அல்லது ஆட்டத் தோழிங்க மேலே ஆத்திரமோ தெரியலே. செட்டுல மூட்டை மூட்டையா கொண்டாந்து மிளகாயை கொட்ட வச்சிட்டாரு. சின்ன சின்னதா வட்ட வட்டமா கூரை செட் போட்டுருந்தாங்க. அது மேலே மிளகாயை சொட்டிட்டாய்ங்க. காரமான செவப்பு மிளகா, கண்ணை கசக்க வைக்கும் பச்ச மிளகான்னு இதுல கலர் மிக்சிங் வேற.

லட்ஸ் ஆன் ன்னு சொல்லி நாலாவது நொடி... நாகராவுல பாட்டு ஒலிக்குது. பம்பரக்கண்ணாலேன்னு பாடி ஆட வேண்டிய அத்தன பேரும், "பம்பர கண்ணாலே... பஞ்சராச்சு உன்னாலே"ன்னு பாட வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாங்க. அச்சோ குச்சோன்னு ஒரே தும்மல். கண் எரிச்சல். செட்டுக்கு வெளியே ஓடி வந்து ஆசுவாசப்படுத்திகிட்டாங்க. சாராய கடையிலே சைட் டிஷ்ஷா வைக்க வேண்டியதை, சந்தடி சாக்குல மெயின் டிஷ்ஷா ஆக்கி, அதை மூக்கு மேலேயே படைச்சிட்டாய்ங்களேன்னு புலம்பி திரியுது ஆட்ட கோஷ்டி. "எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், இங்கதான் ஷ§ட்டிங். ரிகர்சலை வேணா செட்டுக்கு வெளியே வச்சுக்கோங்க"ன்னு சொல்லிட்டாரு சரவணன்.

அப்பப்போ வெளியிலே வந்து எல்லாரும் வாந்தியெடுக்கிறாங்க. கூட்டத்தோடு கூட்டமா நமீதாவும் உவ்வேவ்... இவரோட முல்லைப்பூ மூக்கு மேலே சுள்ளிப்பூ பூத்த மாதிரி ஒரே எரிச்சல். கையோட பத்து பதினைஞ்சு கர்சீப்பை வச்சு துடைச்சுகிட்டே இருந்திச்சே தவிர, நான் வீட்டுக்கு போறேன்னோ, முடியாதுன்னோ ஒரு வார்த்தை சொல்லணுமே?

"குடிச்சிட்டு கொழுப்புக்கு வாந்தியெடுக்கிறவங்களுக்கு மத்தியிலே, பொழப்புக்கு வாந்தியெடுக்கிற எங்கள் குல தெய்வமே"ன்னு எவனாவது போஸ்டர் ஒட்டிட போறானோங்கிற பயமே வந்திருச்சு எனக்கு. ஏன்னா காலையிலேர்ந்து சாயுங்காலம் வரைக்கும் நமீதா எடுத்த வாந்திய பார்த்திருந்தா கார்ப்பரேஷன் காரங்க வாய்க்கால் வெட்டுறத்துக்கு ஒரு டென்ட்டரே விட்ருப்பாய்ங்க. ஒரு 'சாந்தி நிலையம்' மாதிரி சுத்தமா இருந்த பிரசாத் ஸ்டியோ, அன்னைக்கு மட்டும் 'வாந்தி நிலையம்' ஆயிருச்சு.

ஒருவழியா சாயங்காலம் பேக்கப். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை நடன கலைஞர்களையும் கூப்பிட்ட நமீதா, எல்லார் கையிலேயும் ரெண்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டினார். "போய் டாக்டரை பார்த்திட்டு போங்க"ன்னு நமீதா சொல்ல, அத்தனை பேரு கண்ணிலேயும் அருவி மாதிரி கண்ணீர். "இன்னைக்கு வரைக்கும் அந்த படம் சம்பந்தப்பட்ட யாரையும் குறையே சொல்லலே நமீ. இப்போ சொல்லு செந்திலு"ன்னேன்.

அவரு வள்ளுவர் கோட்டம் பக்கம் திரும்பி 'மன்னிச்சுரும்மா'ன்னு மானசீகமா கும்பிட்டாரு. ஏன்னா அங்கதானே இருக்கு நமீதா வீடு...

Tuesday, July 14, 2009

பிரபுதேவா வீட்டு மாடி...?


அடிக்கடின்னு பிளாக்குக்கு பேரு வச்சிட்டு இப்படி ஆடிக்கு ஆடிதான் பதிவு போடுறதான்னு திட்றவங்களுக்கு... இந்த லீவை ஆடித் தள்ளுபடின்னு நினைச்சுக்கோங்களேன் பிரண்ட்ஸ்!

தெருவெல்லாம் ஓடுற டிப்பர் லாரி மாதிரி, நரம்பெல்லாம் ஓடுற ரப்பர் லாரிதான் நம்ம பிரபுதேவா. நாலு மீட்டர் துணியிலே பேண்ட் தச்சு, அதுல ஒரு குழாய்லே நாட்டியத்தையும், மறு குழாய்லே நட்டுவாங்கத்தையும் ஒளிச்சு வைக்கிற அளவுக்கு கேப் வுட்டிருப்பாரு. பேண்டு சட்டைக்குள்ளே இவரு ஆடிட்டு இருப்பாரு. சட்டையும் பேண்டும் தனியா ஆடிட்டு இருக்கும். அப்படி ஒரு தொள தொள...

அந்த காலத்திலே இதே மாதிரி டிரஸ்சை போட்டுட்டு, நாய் துரத்தி நடுவீதியிலே விழுந்த இளவட்டங்க ஏராளம். போதாத குறைக்கு தலையிலே டபுள் பீன்சை கவுத்துவுட்ட மாதிரி கொத்து கொத்தா ஹேர் டிரஸ்சிங். இந்த தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சனை ஸ்ட்ராவை போட்டு உறிஞ்சு ருசிச்சிட்டு இருந்திச்சு ஊரு ஒலகமெல்லாம். அந்த பீரியட்லதான் நான் பிரபுதேவா வீட்டுக்கு போயிருந்தேன். நாக்க முக்காவுக்கெல்லாம் நாலாவது தலை முறை பாட்டனா, முக்காப்புலாங்கிற பாட்டு உறுமியடிச்சிட்டு இருந்த நேரம் அது. நான் ஏன் அங்க போனேன்?

பிரபுதேவா வீட்டு மாடியிலே ஒரு சினிமா கம்பெனி இருந்திச்சு. அவங்களுக்கு போன் அடிச்சு, "அண்ணே ஒரு விளம்பரம் வேணும். நான் இன்ன பத்திரிகையிலேர்ந்து பேசுறேன்"னு சொன்னேன். எவ்வளவு ரேட்? எத்தனையாவது பக்கத்தில் வரும் என்றெல்லாம் பேசிய பிறகு "வாங்களேன்"னாரு தயாரிப்பாளர். "அட்ரசை சொல்லுங்க"ன்னு கேட்டப்போ அவரு கொடுத்த அட்ரசு நம்ம பிரபுதேவா வீட்டோட அட்ரஸ். பாழாப்போனவய்ங்க, "மாடியிலே இருக்கேன் சாரு"ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?

சர்ருன்னு வண்டிய கொண்டு போயி அவரு வீட்டு முன்னாடி நிறுத்திட்டு கதவ தட்டி சவுண்டா குரல் கொடுத்தேன். சாரு...

யாரு... ன்னு கதவை தெறந்தது மைக்கேல் ஜாக்சனின் அப்பா, சுந்தரம் மாஸ்டர். "நான் இன்னாரு. இன்ன பத்திரிகையிலேர்ந்து வர்றேன்". அவ்வளவுதான். "வாங்க, உள்ளே வாங்க" என்றார். அமர்ந்தோம். "தம்பீய்ய்ய்ய்..."னு அவரு குரல் கொடுக்க, நெத்தி நெறய விபூதி. புத்திய உரசுற பார்வை. பக்தியா ஒரு கும்பிடுன்னு படார்னு வந்து நின்னாரு பிரபுதேவா. அட, சினிமாவுல பார்த்தா சிலம்பாட்டம். நேரா பார்த்தா எலும்பாட்டம். என்னய்யா இது?ன்னு ஒரே ஆச்சர்யம். ஆனாலும் பேட்டிய பிறகு எடுத்துக்கலாம். இதழ் வேலைய முடிக்கணும். மொதல்ல விளம்பர டிசைனை வாங்கிட்டு போயிரலாம்ங்குது புத்தி.

சார் என்ன சாப்பிடுறீங்க? / ஒன்னும் வேணாம் சார். / இல்லையில்லே, காபியாவது குடிங்க. சம்பாஷணைகள் தொடர, தொடர, விளம்பரத்துக்கு ரேட் சொன்னோம். ஆனால் பைனல் கூட பண்ணலியே? கேட்ட பணத்தை குடுப்பாரா? பாதியா குறைப்பாரான்னு மனசு ஒரே இடத்திலேயே நின்னு டப்பாங்குத்து போடுது. சர்ருன்னு ஒரே மூச்சுலே காபிய குடிச்சிட்டு, "சார் சொல்லுங்க" என்றேன் தெம்பாக. "நீங்கதான் சொல்லணும்" என்றார் மாஸ்டர்.

இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டே, "நீங்களே சொல்லுங்க சார்" என்றேன். "நானா, என்னத்தை சொல்லணும்? நீங்க ஏதாவது கேளுங்க. இவன்கிட்ட பேசணுமா? அவனையே கேளுங்க" என்றார். "சார், போன்லே பேசுனது நீங்கதானே? அப்ப நீங்களே பேசுங்க. எதுக்கு உங்க பையன்கிட்ட விடுறீங்க?" என்றேன் நான்.

"நானா? போன்லேயா? நான் எப்போ பேசினேன்? திடீர்னு வந்தீங்க. போன்லே பேசுனேன்னு சொல்றீங்க" என்றவர் குழப்பமாக எங்களை பார்க்க, குறுகுறுன்னு சிரிச்சிகிட்டே உட்கார்ந்திருந்தாரு பிரபுதேவா. "சார், அந்த சினிமா விளம்பரம்"னு நான் இழுக்க, "அட அதுவா... சரியாப்போச்சு போங்க. அந்த கம்பெனி மாடியிலே இருக்கு. ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்றார் மாஸ்டர். அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் பிரபுதேவா. இது நடந்து பல வருசம் ஆயிருச்சு. இடையிலே பலமுறை நம்ம மைக் ஜாக்சனை பார்த்திருக்கேன். பேசியிருக்கேன். ஆனா, அன்னைக்கு அவரு சிரிச்ச வெள்ளந்தி சிரிப்பு இருக்கே, அதுல பாதிய புட்டு பங்கு போட்டுருச்சு சினிமா.

நாலு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சின்ன நிகழ்ச்சியிலே அவரை பார்த்தேன். பத்திரிகைகாரங்க நாங்க பத்து பேரு மட்டும் கலந்துகிட்ட விழா அது. நாங்கள்ளாம் வருவோம்னு அவரு எதிர்பாக்கவே இல்லை போலிருக்கு. வாய புடுங்கி வயித்தெறிச்சலை கொட்டிட போறாய்ங்களோன்னு நினைச்சு அவரு ஓடுன ஓட்டம் இருக்கே... மொளகா மண்டியிலே வளைகாப்பு வச்ச மாதிரிதான்!

எலும்பை எடுத்து எந்த பக்கம் வேணும்னாலும் போட்டுக்கிற சாமர்த்தியம் இருந்தும், பொல்லாத நாக்கை பொசுக்குன்னு சுருட்டி, உள்ளே வச்சுக்கிற அளவுக்கு தொரத்தோ தொரத்துன்னு தொரத்துதேய்யா இந்த காதல்!

Wednesday, July 8, 2009

அப்பாவி கிளி ஜோசியனும், அடங்காத டிஆரும்!


போன பிறவியிலே புலிப்பாணி சித்தரா பொறந்திருப்பாரோங்கிற சந்தேகம் டிஆரை பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. "பாரப்பா பகலவனும் 10 ல் நின்று"ன்னு அவரு சித்தர் பாடலை சத்தம் போட்டு பாடும்போதெல்லாம், நாங்க வெளியிலே நின்னு மிரட்சியா கேட்போம். நாலு வரி பாடி முடிக்கறதுக்குள்ளே, "யோவ்... நான் சோதிடத்தை பதினைஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்றவன்யா, எங்கிட்டயேவா?"ன்னு யாரோ ஒரு கிளி ஜோசியனை வளைச்சு வச்சுகிட்டு அவனை 'கிலி' ஜோசியனாக்குவாரு.

நெல்ல போட்டு பசியாத்துவாய்ங்கன்னு பார்த்தா, இப்பிடி 'இடி' மாதிரி சொல்ல போட்டு வெறியேத்துறாய்ங்களேன்னு நினைச்ச அப்பாவி கிளி, கீச் கீச்சுன்னு கத்தும். உடனே நம்ம தலைவரு, "வெள்ள ரோஜாவை கிளி ஒன்ணு லவ் பண்ணுச்சாம்..."னு கிளி ஜோசியன்கிட்ட ஒரு கதைய எடுத்துவிட்டு, அவன காசு கூட கேட்க விடாதளவுக்கு பீதிய கிளப்பி பிகில் ஊதுன நாளெல்லாம் உண்டு.

"பத்தாமிடத்திலேர்ந்து குரு பார்க்கிறனே, இந்த நேரத்திலே பாத்ரூம் போவலாமா?"ன்னு ஆஸ்தான ஜோசியருகிட்டே கேட்டு, அவரையே டெரர் ஆக்குவாரு. ஜோசியரும், "அவன் பார்த்தா என்ன? நீங்க கதவ சாத்திட்டு போக வேண்டியதுதானே"ன்னு ஒரு பதில சொல்லி சமாளிப்பாரு. இப்படி நடமாடும் சென்ட்டிமென்ட் ஸ்டோராக உலா வரும் நம்ம தலைவருக்கு இக்கட்டான நேரம் ஒன்ணு வந்திச்சு. அந்த நேரத்திலே போயி சொக்காட்டான் ஆட்டம் ஆடி சூழ்நிலைய பாழாக்குன சில விசுக்கட்டான்கள் பற்றிய செய்திதான் நான் சொல்லப் போறது...

சலீம் சலீம்னு ஒரு வேலைக்காரர் இருந்தாரு அங்கே. அண்ணன் எள்ளுன்னு சொல்றதுக்கு முன்னாடி வில்லு மாதிரி வெடச்சுக்கிட்டு வேலை செய்யுறதுல கில்லாடி. ஒரு படத்திலே நம்ம தலைவருக்கு வழக்கறிஞர் வேடம். இன்விடேஷனுக்கும் பத்திரிகை விளம்பரத்துக்கும் போட்டோ எடுக்கணும். எப்பவோ ஆரம்பிச்ச பிளான், ராகு காலம் முடியறதுக்குள்ளே எடுக்கணுமேங்கிற பரபரப்பான கட்டத்துக்கு வந்திருச்சு. வக்கீல் கோட்டு, வாரியும் படியாத தலைன்னு தலைவன் வந்து நிக்கிறாரு. அப்பதான் போட்டோகிராபர் லென்சை நோண்டிக் கொண்டிருக்க, "டேய், ங்கொ..., ராகு வர இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. அதுக்குள்ளே எட்றா"ன்னு அதிரி புதிரி கௌப்புறாரு தலைவரு. "ந்தா வந்திட்டேண்ணே..."ன்னு சொன்ன போட்டோகிராபர், லென்சை சரி செய்ய, திடீர்னு யுத்த களத்திலே தலைய விட்ட சலீம், "அண்ணே வக்கிலுங்கோல்லாம் கையிலே ஒண்ணு வச்சிருப்பாங்களே, அது எங்கே?"ன்னாரு.

ஆமாண்டா, கேஸ் ஷீட்டு! டேய் எவனாவது ஓடிப்போயி ஒரு கேஷ் ஷீட்டு எடுத்திட்டு வாங்களேண்டான்னாரு டி.ஆர். தொண்டர்களும், தளபதிகளும் நாலா திசைக்கும் ஓட, வாட்சை பார்த்துக் கொண்டே "குயிக் குயிக்"குன்னு கத்திகிட்டே இருந்தாரு தலைவரு. சரியா அஞ்சாவது நிமிசம், அத்தனை பேரும் திரும்பி வந்தாய்ங்க. சொல்லி வச்ச மாதிரி எல்லார் கையிலேயும்.... கேஸ் ஷீட்டா? அட, பாழா போன கொழாப்புட்டு மண்டையனுங்க! அத்தனை பேரும் எடுத்திட்டு வந்தது கேஸ் ஷீட் இல்லை. ஆளுக்கொரு ஆடியோ கேசட்...!

அதுக்குள்ளே ராகு காலம் என்ட்ரி. பிறகென்ன, வழக்காடு மன்றம் கசாப்பு கடையானது. ஆடியோ கேசட் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் ராக ஆலாபனையோடு கொஞ்சம் பிரசாதமும் கொடுத்தனுப்பினாரு தலைவரு.

Sunday, July 5, 2009

மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...!


"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!

பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!

வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.

"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"

ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.

இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.

லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)

டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.

லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?

டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.

அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.

பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."