Friday, July 30, 2010

மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...! (மீ‌ள்‌ பதி‌வு‌)


"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!

பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!

வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.

"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"

ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.

இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.

லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)

டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.

லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?

டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.

அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.

பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."

Friday, July 2, 2010

படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌


பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. 'ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது'ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே 'அதோ டாக்டரே வந்திட்டாரேன்'னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.

ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். 'தேங்காய் உடைச்சேன். பூ வந்திச்சு. நல்ல சகுனம்'னு ஆனந்த கூத்தாட வைப்பாங்க. படம் ரிலீஸ் ஆகி நாலாவது வாரத்துல அதே புரட்யூசர், எங்காவது கோயில்ல தேங்கா பொறுக்கிட்டு இருப்பாரு. "பூ வந்திச்சே... பொருள் வந்திச்சா?"ன்னு கேட்கறதுக்கோ, நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ ஒருத்தரும் தயாரா இல்லாததால இதே ஜோசியரு அடுத்த கம்பெனியில தேங்கா உடைப்பாரு. அங்கேயும் தேங்காய்க்குள்ளே பூ இருக்கும்! ஃப்பூ... இதுக்கெல்லாம் மயங்குறமே நினைச்சு ஒதுங்கின ஒரு தயாரிப்பாளரும் இங்க இல்லாததுதான் இவங்க ஆட்டத்துக்கு காரணம். இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒரு ஆட்டம் பாம் வைக்க மாட்டியான்னு நினைச்சுட்டு இருந்த நேரத்திலதான் ஒரு ஜோசியரு மண்டையில நச்சு நச்சுன்னு கேள்வியால அடிச்சு, கிறுக்கு பிடிக்க வச்சுச்சு நயன்தாரா.

அய்யால... அது எப்போ?

மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். 'வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்'னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. 'மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்' ன்னு திரியுது ஜோடி.

இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதே'ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.

'நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்'னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. "சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?" வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.

ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. "ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு..."ன்னு இழுக்க, 'கோக்' இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, "சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா"ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, "உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?"னாரு முதல் கேள்வியாக.

என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, 'ரோஸ்'னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. "என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே"ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.

பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. "உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?" ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.

முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. "நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!"

இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். "சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க" என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு 'லாக்' போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம 'பிரசன்னம்' போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. "ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?"

"ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி"ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, "இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு"ன்னாரு விடாப்பிடியாக!

இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! "இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?"ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு எடுத்தாரே ஓட்டம்....! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி "நயன்தாரா என்ன சொன்னாங்க?"ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.

அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?

"வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!"