Friday, July 30, 2010

மழைத்துளி பாட்டு... மவனே நீ மாட்டு...! (மீ‌ள்‌ பதி‌வு‌)


"தலைவா, ஒரு ஆள அனுப்பி வைக்கிறேன். நம்ம பத்திரிகையிலே ஒரு மேட்டர் பண்ணி வுடுங்க"ன்னாரு ஃபிரண்டு ராஜ்கணேஷ். பாலைவன சோலை சந்திரசேகருல பாதியும், மாயாண்டி குடும்பத்தார் சிங்கம்புலி மீதியுமா வந்திறங்குனான் மனுசன். ஹைடெக் ஆசாமியா இருப்பானோன்னு நினைச்சு "லயோலா காலேஜ் கிரவுண்டுக்கு நாலு மணிக்கு மேலே வரச்சொல்லுங்க. ஃபிரீயா பேசலாம்"னு சொல்லி நானே, என் சீட்ல முள்ளு வச்சிகிட்டேன். லயோலாவ உருவாக்கின ஃபாதர் உசிரோட இருந்திருந்தா லபோ திபோன்னு வயித்தில அடிச்சிகிட்டு வாந்தியா எடுத்திருப்பாரு. ஹ¨ம்... பயங்கரம்ப்பா அது!

பழைய எஸ்.டி வண்டியிலே வந்திறங்குனான் ஆளு. இதுக்கு ஸ்பேர் பாட்செல்லாம் கூட இப்போ எங்கியுமே கெடக்கிறதில்லையே... இத வச்சு எப்படிய்யா வண்டி ஓட்றேன்னு கேட்கவும் பயம். ஒரு ரவுண்டு ஓட்டிப் பாருன்னு கொடுத்திட்டா? கிக்கர்ல ஆரம்பிச்சி மிர்ரர் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாத்திலேயும் ஆன்மீக ஜோதி பளபளன்னு தெரிய, புன்னகையோடு இறங்கினான். "எங்கேர்ந்து வர்றீங்க?"ன்னேன் ஒரு பேச்சுக்கு. "ம்... வடலு£ர்லேந்து..."ன்னு சொல்லிட்டு ஒரு பீடியை எடுத்து வாயிலே ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டே, "ஐ யம் வள்ளலார்"னு கை நீட்டினான். குலுக்கணுமாம்! பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். ஒரு பீடி ஃபேக்டரியை கொளுத்தி விட்டுட்டு பக்கத்திலேயே நின்ன மாதிரி அப்படி ஒரு நாத்தம். வெள்ளையும் இல்லாத பழுப்பிலும் சேராத கலரில் வேட்டி!

வடலு£ர்லேர்ந்து வர்றேன். வள்ளலார்னு வேற சொல்றான். ஆளு ஒரு டைப்பா இருக்கானேன்னு யோசிக்கும் போதே, ஆமாம்ங்கிற மாதிரியே அடுத்த வார்த்தை வந்திச்சு அந்தாளுகிட்டேயிருந்து. "கை கொடுத்தீங்களே, என்ன புரிஞ்சிகிட்டீங்க?"ன்னான். "முதல் அறிமுகம். கை கொடுத்தேன். வேற என்ன புரியணும்?"னேன். "நான் கை குலுக்கும் போது ஒங்க உடம்புல ஒரு ரச வாதம் வந்திருந்திருக்குமே?"ன்னான். அடப்பாவி, இந்த பீடி நாத்தம் புடிச்ச கையிலேர்ந்து ரச வாதமா வரும்? ரசம் வாசம் கூட வராதுன்னு நினைச்சுகிட்டு, "நேரடியாக சொல்லிடுங்க பிரதர். நான் என்ன செய்யணும்"னேன்.

"வள்ளலார் மறுபடியும் பிறந்திட்டாருன்னு ஒரு நியூஸ் போடணும்!"

ஆஹா, அவனா நீயி...? உதடெல்லாம் காஞ்சு உள் நாக்கு ஒட்டிப் போச்சு எனக்கு. அடப்பாவி, ஃபேமிலியோடு சினிமாவுக்கு போயிருந்திருக்கலாம். இங்கே வந்து மாட்ட வச்சிட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே, ஃபிரண்டுக்கு சாபம் கொடுத்தேன்.

இருந்தாலும், ஒண்ணுமே புரியாத மாதிரி, "எங்கே பிறந்திருக்காரு வள்ளலாரு? வடலு£ர்லேவா? அல்லது பக்கத்துல வேற ஏதாவது கிராமத்திலா? நார்மல் டெலிவரியா? இல்லே சிசேரியனா?"ன்னு அடுக்கடுக்கா நான் கேட்க, கடுகடுப்பா ஆச்சு அவன் முகம். "கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம். இந்த உலகம் என்னை புரிஞ்சிக்கலே. நியூஸ் போடுவீங்கன்னு வந்தா நீங்களுமா?"ன்னான். "புரிய வைக்கட்டுமா நான் யாருன்னு?" கொடாப்புல போட்ட வாழைத்தாரு, ஒரே ஒரு மணி நேரத்திலே பழுக்கிற மாதிரி, என்னைய பழுக்க வைக்க அவன் ட்ரை பண்ணுனான்னு சொல்றது தப்பு. பலவந்தம் பண்ணினான்.

லபக்குன்னு ஒரே பாய்ச்சலா தன்னோட பைக்கை தாண்டி அந்த பக்கம் குதிச்சு, பேக்குக்குள்ளே கைய விட்டான். வெளியே எடுத்தபோது ஒரு டேப் ரெக்கார்டர். இதுல வள்ளலார் பேச்சு இருக்குமோ? அவரே இதிலே வந்து நான்தான் இவன்னு சொல்லுவாரோ? ஏகப்பட்ட ஐயமும், லேசுபட்ட பீதியுமாக நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "இப்ப மழை வரும் பாரு"ன்னான். வாங்க போங்கன்னு பேசிட்டு இருந்தவன், இப்படி அறிமுகமான நாலாவது நிமிஷத்திலே வா போ ன்னு பேசுவான்னு நான் எதிர்பார்க்கலே. இருந்தாலும், பேசுறது வள்ளலாரா இருக்குமோன்னு எனக்கே ஒரு டவுட். "வள்ளலார் என்ன வானிலை ஆராய்ச்சி மையத்திலா வேல பார்த்தாரு, இப்படி வானிலை அறிக்கை சொல்றதுக்கு?"ன்னு அடுத்த கேள்விய நான் கேட்க, கண்ணுலே பொறி பறக்குது மனுஷனுக்கு. "டேய், பார்றா இப்போ"ன்னான். (இதுக்கு முன்னாடி சொன்ன வா போவே தேவலாம்)

டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணுற வரைக்கும் நான் அப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை. மழை வந்திச்சா என்ன? மண்ணாங்கட்டி. ஏ.ஆர்.ரஹ்மானோட பாட்டுதான் வந்திச்சு. 'மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம். ஆலாலகண்டா, ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க...'ன்னு ரஹ்மான் மியூசிக்லே ஒரு பாடல் வருமே? அதை ஓடவிட்டுட்டு ஓட்டத்துக்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிச்சான் இடுப்பை. பயங்கரமான ஆட்டம். என்னத்தே கன்னையாவுக்குள்ளே பத்மினிய எறக்கிவிட்ட மாதிரி அப்படி ஒரு ஆட்டம்.

லயோலா கிரவுண்டிலே சாயங்கால நேரத்திலே வாக்கிங் போக வந்த பெரிய மனுஷன்லாம் பேஸ்த் அடிச்சுப்போயி பார்க்கிறாங்க. அங்கே விளையாடிட்டு இருந்த பசங்கள்ளாம் ஹோ....ன்னு கத்திகிட்டே ஓடியார்றாங்க. பின்னே நாலு முழத்திலே வேட்டிய கட்டிகிட்டு ஒருத்தன் தையதக்கான்னு ஆடிட்டு இருந்தா, சும்மாவா போவாய்ங்க?

டீசன்டான காலேஜ்குள்ளே, டேலன்ட்டான ஆளுங்களே வர பயப்படுற காலத்திலே, இப்படி ஒரு தற்குறி, மெர்க்குரி பல்ப்பா மின்னுரானே?ன்னு எனக்கு டவுட். ஏன்னா, ஓடிவந்த இள வயசு பசங்க, "இன்னும் நல்லா ஆடு தலைவா"ன்னு உற்சாகப்படுத்துராய்ங்க. வாக்கிங் போற பெரிசுங்களும், வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்க்குதுங்க. ஆட்டம் முடிஞ்சு "நான்தான் வள்ளலார்"னு சொல்லி அந்தாளு கூட்டத்தை நோக்கி தனது பிரசங்கத்தை துவங்க, சர்டிபிகேட்ல வெள்ளாளர்ங்கிற ஜாதியை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த பசங்க, ஏதோ சாதிய பத்தி பிரசங்கம் பண்ண வந்த ஆளு போலிருக்குடான்னு கலைய ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேர்ந்து நானும் கலைய, மழைத்துளி நிற்கவே இல்லை.

அவசரப்படாதீங்க. டேப்ரெக்கார்டர்ல 'மழைத்துளி...' பாட்டு நிற்கலேன்னு சொல்ல வந்தேன். ஆமா, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னேன் பிரேம்ஜி ஸ்டைலில்.

பின்குறிப்பு-இவரை அனுப்பிய ராஜ்கணேஷிடம், "என்ன நண்பா இப்படி பண்ணிட்டீங்களே?"ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னாரு. "தலைவா, ரொம்ப நாள் இம்சை. நீங்களும் அனுபவிக்கட்டுமேன்னுதான்..."

Friday, July 2, 2010

படுத்‌துட்‌டு போ‌ங்‌களே‌ன்‌ -பகீ‌ர்‌ நயன்‌தா‌ரா‌


பத்துல சனி. பக்கத்திலேயே சந்திரன். எதுத்தாப்ல ராகு. ஏழு வீடு தள்ளி புதன்னு நம்மள சுத்தி எப்பவும் கெரகங்களோட செக்யூரிடிதான்! சில நேரங்கள்ல இந்திராகாந்தியை போட்டு தள்ளின மாதிரி அதுல சிலது நம்மளை போட்டு தள்ற கொடுமையும் நடக்கும். முன்னெல்லாம் கிராம புறங்களில் ஆர்ஐஎம்பி ன்னு ஒரு ராஜ வைத்தியர் சைக்கிள்ல கிளம்புவாரு. 'ஜுரம் வாந்தி பேதிக்கு வைத்தியம் பாக்குறது'ன்னு சத்தம் போட்டு கூவாத குறைதான். மற்றபடி அவரு அடிக்கிற சைக்கிள் பெல்லை காதால கேட்டே 'அதோ டாக்டரே வந்திட்டாரேன்'னு சந்தோஷப்பட்டவங்களும், குணமாகி குத்த வச்சவங்களும் உண்டு. இப்படி குப்புற கிடந்த சமுதாயம் இன்னைக்கு லேசா நிமிர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரைக்கும் வந்திருச்சு.

ஆனா சில ராஜ வைத்தியருங்க சாமர்த்தியத்துல இன்னும் குப்புறதான் கிடக்கு கோடம்பாக்கம். இந்த வைத்தியருங்க செய்யுறது வைத்தியம் இல்ல. கிரகங்களை சொல்லி கிறுக்கு பிடிக்க வைக்கிற பைத்தியம்! ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஒரு ஆஸ்தான ஜோசியரு இருப்பாரு. பூஜையில ஆரம்பிச்சு, ரிலீஸ் டேட் வரைக்கும் இவங்க சொல்றதுதான் டைம். 'தேங்காய் உடைச்சேன். பூ வந்திச்சு. நல்ல சகுனம்'னு ஆனந்த கூத்தாட வைப்பாங்க. படம் ரிலீஸ் ஆகி நாலாவது வாரத்துல அதே புரட்யூசர், எங்காவது கோயில்ல தேங்கா பொறுக்கிட்டு இருப்பாரு. "பூ வந்திச்சே... பொருள் வந்திச்சா?"ன்னு கேட்கறதுக்கோ, நாரை உறிச்சு நடு மண்டைய பொளக்கறதுக்கோ ஒருத்தரும் தயாரா இல்லாததால இதே ஜோசியரு அடுத்த கம்பெனியில தேங்கா உடைப்பாரு. அங்கேயும் தேங்காய்க்குள்ளே பூ இருக்கும்! ஃப்பூ... இதுக்கெல்லாம் மயங்குறமே நினைச்சு ஒதுங்கின ஒரு தயாரிப்பாளரும் இங்க இல்லாததுதான் இவங்க ஆட்டத்துக்கு காரணம். இந்த ஆட்டத்துக்கெல்லாம் ஒரு ஆட்டம் பாம் வைக்க மாட்டியான்னு நினைச்சுட்டு இருந்த நேரத்திலதான் ஒரு ஜோசியரு மண்டையில நச்சு நச்சுன்னு கேள்வியால அடிச்சு, கிறுக்கு பிடிக்க வச்சுச்சு நயன்தாரா.

அய்யால... அது எப்போ?

மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். 'வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்'னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா கொடுத்து தள்ளுறாரு. 'மேட் ஃபார் ஈச். மேல் முழுக்க இச்' ன்னு திரியுது ஜோடி.

இந்த நேரத்துலதான் ஈரத்துணிய இடுப்புல கட்டிக்கிட்டு, மாரு தெரிய வந்து நின்னாரு அந்த ஜோசியரு. 'இங்கே நோட்டீஸ் ஒட்டாதே'ன்னு எவனாவது எழுதிட்டு போற அளவுக்கு நெத்தி முழுக்க வெள்ளையா விபூதி. அது மத்தியில சிக்னல் மாதிரி சிவப்பு குங்குமம். கழுத்தில கிடக்கிற உத்திராட்சம் ஒவ்வொண்ணும் செங்கல்லு சைசு. பார்த்தாலே படக்குன்னு எழுந்து படீர்னு கால்ல விழுற அளவுக்கு ஒரு நடமாடும் திருக்கோயிலா இருந்தாரு மனுசன்.

'நடக்கறத சொல்லுவாரு. சொல்றதுதான் நடக்கும். இவரு வாய தொறந்தா சத்தியம். வயிறு வலிச்சா பத்தியம்'னு என்னென்னவோ சொல்லி நயன்தாரா ரூமுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. "சில பர்சனல் கேள்விங்க இருக்கும். நாங்க எதுக்கு இங்க?" வெளியே நிக்குறோம் என்றபடி விடை பெற்றுக் கொண்டார்கள் ஜோசியரை கொண்டு வந்து விட்ட புண்ணியவான்கள்.

ரூமிற்குள் இவரை கையெடுத்து கும்பிட்ட நயன்தாரா, கால்ல விழுறத பிறகு வச்சுப்போம்னு நினைச்சுது போலிருக்கு. "ஐயா, உட்காருங்க. சாப்பிடுறதுக்கு..."ன்னு இழுக்க, 'கோக்' இருந்தா கொடுங்களேன்னாரு ஜோசியரு. கொண்டு வந்த கோக்கை திருவோட்ல ஊற்றி அவரு குடிக்கிற அழகை ரசிச்ச நயன்தாரா, "சாமி கோக்கு குடிக்கறதே தப்பு. அதை திருவோட்ல ஊத்தி குடிக்கறது அதவிட தப்பில்லையா"ன்னுச்சு. சாதாரண நடிகைன்னு நினைச்சா பொண்ணு விவரமான பார்ட்டியா இருக்குதேன்னு நினைச்ச ஜோசியரு, நான் ரெண்டு மூணு கேள்வி கேட்பேன். சரியா சொல்லணும்னு சொல்லிட்டு, "உங்களுக்கு என்னா பூ பிடிக்கும்?"னாரு முதல் கேள்வியாக.

என்னவோ சொல்லப் போறாருன்னு நினைச்ச நயன்தாரா, 'ரோஸ்'னு ஆங்கிலத்தில் பதில் சொல்லிட்டு அவரு வாயையே பாத்திட்டு இருந்திச்சு ஆர்வமா! கண்ணை மூடி, கதவிடுக்கில விரல விட்ட மாதிரி வாய்க்குள்ளேயே குய்முய்னு முணுமுணுத்த ஜோதிடர், வாயை திறந்த போது அப்படி ஒரு அபஸ்வரம் கேட்கும்னு நயன்தாரா நினைச்சுக்கூட பார்க்கல. "என்னங்கம்மா இது? தப்பான ரூட்ல போறிங்களே? உங்க காதல் கரையேறாதே"ன்னாரு முதல் ரீலிலேயே க்ளைமாக்சை போட்ட மாதிரி.

பொசுக்குன்னு வந்த கோவத்தை அடக்கிக்கிட்ட நயன்தாரா, மெல்ல சிரிச்சுகிட்டே எப்படி சொல்றீங்கன்னாரு. "உங்க வீடு எந்த திசையில இருக்குங்கம்மா?" ஜோசியரு தான் சொல்ல வந்ததை இன்னும் ருசு படுத்த நினைச்சாரு போல. அடுத்த கேள்வியை ராக்கெட் வேகத்தில வீசுனாரு.

முதலில் அவர் ஜோசிய பலன் கேட்டே எரிச்சலில் இருந்த நயன், இந்த கேள்விக்கு பதில் சொல்லணுமான்னு நினைச்சு, கொஞ்சம் ஏடா கூடமாவே பேச ஆரம்பிச்சுச்சு. "நார்த் கேட், சவுட் என்ட்ரன்ஸ்!"

இப்படி ஒருத்தன் வீடு கட்டுவானான்னு கூட யோசிக்காத ஜோஸ், நெத்தியில இருக்கிற வெள்ளை சுவத்தை சுரண்டிக் கொண்டே, கண்களை மூடி மூணு காத து£ர யோசனைக்கு போனார். "சந்தேகமே இல்ல. அவன் மூலம் நீங்க இப்போ சுமந்துகிட்டு இருக்கீங்க" என்று அடுத்த ராக்கெட்டை வீச, நயன்தாரா கண்களுக்குள்ளே இப்போ காளியாத்தா என்ட்ரி. இருந்தாலும் இவர கூப்பிட்டு வந்த நபருக்காகவும், பெரிசோட தோற்றத்துக்கும் மதிப்பு கொடுத்து உதட்டுக்கு 'லாக்' போட்டார். அப்படியெல்லாம் இல்லீயே என்று சிம்ப்ளாக ஒரு பதிலை சொன்னார். இருந்தாலும் அடுத்த கேள்விய இந்தாளு கேட்கும்போது நாம சொல்ற பதிலில் இந்தாளு இந்த ரூமுக்குள்ளேயே இருக்கக் கூடாது என்று மட்டும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

ஆட்டுக்கு வாலு அரையடி. அனகோண்டாவுக்கு அத்தனையுமே வாலுதான்ங்கிற மாதிரி பொருத்தமா வாயக்கொடுத்தாரு ஜோசியரு. இந்த ஒரு கேள்விதான். அப்புறம் நம்ம 'பிரசன்னம்' போட்டு பார்த்திரலாம். எல்லாம் நல்லபடியா நடக்கணும் தாயேன்னு மேலே தொங்குற சீலிங் பேனுக்கு வணக்கம் சொல்லிட்டு அடுத்த கேள்விய கேட்டாரு. "ஏம்மா, உங்க பெட்ரூம்ல என்ன கலர் பல்ப் எரியுது?"

"ஏன் சாமி, இதெல்லாம் ஒரு கேள்வியா? இத வச்செல்லாம் ஜோசியம் சொல்லிட முடியுமா? ஏதோ பிரசன்னமோ என்னமோ சொன்னீங்களே, அத பார்த்து சொல்லிடுங்க சாமி"ன்னு சொல்லியும் கேட்காத ஜோசியரு, "இல்லங்கம்மா நல்லா யோசிச்சு சொல்லுங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு"ன்னாரு விடாப்பிடியாக!

இன்னும் கொஞ்ச நேரம் இந்தாளு இங்க இருந்தா, பெட்டிகோட்ல இருந்து, பெட்ஷீட் வரைக்கும் என்ன கலர்னு கேட்பானோங்கிற பயமும், காதலுக்கு கல்லறை கட்டிருவானேங்கிற அச்சமும் மாறி மாறி தாக்க, வேணாம் விடுங்க சாமின்னாரு உறுதியா! "இல்லங்கம்மா, நீங்க சொன்னா ஒங்க எதிர்காலத்துக்கு நல்லது. எனக்கு பணமெல்லாம் கூட வேணாம். வந்ததுக்கு சரியா சொல்லணுமில்லயா?"ன்னாரு ஜோசியரு. கோவத்துக்கு அதுவரைக்கும் போட்டு வச்சிருந்த தாழ்ப்பாளை நைசாக திறந்துவிட்ட நயன்தாரா, பெட்ரூம்ல என்ன பல்பு எரியுதுன்னு கேட்டாரே, அந்த கேள்விக்கு படார்னு ஒரு பதில சொல்ல, ஜோசியரு எடுத்தாரே ஓட்டம்....! வெளியே நின்ன ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவரை விரட்டிகிட்டே போயி "நயன்தாரா என்ன சொன்னாங்க?"ன்னு கேட்க, அவரு சொன்னதை அப்படியே சொல்லிட்டு ஓடிப்போனாரு ஜோசியரு. அதுல ஒருத்தரு சொன்னதுதான் காத்து வழியா கசிஞ்சு நம்ம காது வரைக்கும் வந்திச்சு.

அப்படி என்ன பொல்லாத பதில சொன்னாரு நயன்தாரா?

"வேணும்னா வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன். தெரியும்!"

Saturday, June 12, 2010

அரை‌ கி‌ணறு, அரை‌ கம்‌பம்‌, அப்‌பு‌றம்‌... கமல்‌ஹா‌சன்‌


தன்னை வருத்திக்கிற ஹீரோ தமிழ்சினிமாவுல யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு சொல்லிடலாம், கமல்தான்னு! அவ்வை சண்முகி மட்டுமில்ல, அன்பே சிவம்ல கூட அவரோட மேக்கப்பும் அர்ப்பணிப்பும் அற்புதம். இந்த அதிசயத்தை சிலேட்ல எழுதினாலும் அழிக்க முடியாது. சிஸ்டத்தில எழுதினாலும் வழிக்க முடியாது.

அரை கிணறு, அரை கம்பம் இதெல்லாம் அவலத்துக்கான அடையாளம். ஆனால் கமலோட அரை நு£ற்றாண்டு அனுபவம் இருக்கே, அது அரை குறையானது அல்ல. அந்த அரையும் நிறையானது! இவ்வளவு பில்டப்பும் கடைசி பாராவுல என்னாகுதுங்கிற மேட்டருக்கு வர்றதுக்கு முன்னே, அசிஸ்டென்ட் டைரக்டர்களோட அவசியத்தையும் பேசியாகணும். அனுபவத்தையும் பேசியாகணும். (ஹலோ, எங்க அதுக்குள்ளே கடைசி பாராவுக்கு ஓடுறீங்க?)

ஒட்டகத்தை உரிச்சாதான் குர்பானி. ஆனா உரிக்காமலே குர்பானியாகிற ஒரே ஜந்து அசிஸ்டென்ட் டைரக்டருங்கதான். விடிஞ்சா கல்யாணம், வெளக்கு வச்சா சாந்தி முகூர்த்தம்னு ஒரே நாளில் பெரிய மனுசனாக்கிடுது இல்லறம். ஆனால் இந்த அசிஸ்டென்ட்டுங்க பொழப்பு இருக்கே, விடிஞ்சா பொறப்பு. வெளக்கு வச்சாலும் பொறப்புதான். வருஷத்தை இவங்களும், வருஷம் இவங்களையும் உருட்டி உருட்டி விளையாடிக்கிட்டே இருக்கும். நல்ல வாய்ப்பு வர்றதுக்குள்ளே தல நரைச்சு போறவங்களும், குடல் இளைச்சு போனவங்களும்தான் இந்த ஃபீல்டுல ஜாஸ்தி.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு உதவி இயக்குனரானாரு. இந்த தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி அவர் ஒரு பத்திரிகையாளர். போன இடத்தில சிங்கம் மாதிரி கர்ஜிக்கறதும், எவ்வளவு பெரிய மனுசனா இருந்தாலும் கேள்விகள கேட்டு அவங்களை கிறுக்கு புடிக்க வைக்கிறதும் அவருக்கு புடிச்ச விளையாட்டு. காலம் அவரையும் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆக்கிருச்சு. முன்னணி டைரக்டர் ஒருத்தரிடம் உதவி இயக்குனரா சேர்ந்தாரு. ஏவிஎம்ல படப்பிடிப்பு. ஆளை பார்த்து நலம் விசாரிக்கலாம்னு போயிருந்தேன். போன இடத்தில நான் பார்த்த கோலம், மார்கழி மாசத்து மங்கல கோலமில்ல. கத்தரி வெயிலில் கட்டாந்தரையில் போட்ட தண்ணீர் கோலம். புஸ்ஸ§ன்னு வாயிலேர்ந்து பெருமூச்சு வர, ஒரு பெரிய பெட்டிய தலையில வச்சுகிட்டு அந்த யூனிட்டை சுத்தி சுத்தி ஓடி வந்துகிட்டு இருந்தாரு.

அதிர்ந்து போன நான் அவரு பொட்டிய வச்சிட்டு ஒதுங்குற வரைக்கும் காத்திருந்தேன். வந்த பிறகு என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவரு சொன்ன பதில் ஆட வச்சிருச்சு. அது பனிஷ்மென்ட்டாம். டைரக்டர் சொன்ன ஏதோ ஒரு வேலைய செய்யாம விட்டுட்டாரு. டைரக்ஷனுக்கு தேவையான மெட்டீரியல் வச்சிருக்கிற பொட்டிய தலையில ஏத்தி, சுத்தி சுத்தி வான்னு சொல்லிட்டாரு இயக்குனரு. மண்டைய சுற்றி அறிவு வெளிச்சம் அடிச்சாலும், தொண்டைய மூடிக்கிட்டு சொன்னதை செய்யலேன்னா போயிட்டு வா ராசாதான்! அதனாலதான் பணிவா அந்த வேலையை செஞ்சுகிட்டு இருந்தாரு நண்பர்.

இவருக்கு டைரக்டரால பிரச்சனை. சிலருக்கு ஹீரோ, ஹீரோயின்னு பலராலும் பிரச்சனை வரும். 'என்னவோ எனக்கு அவன புடிக்கல. அவன் முழியே சரியில்ல. வேற யாராவது அனுப்பி டயலாக் படிக்க சொல்லுங்க' என்று ஹீரோ காய்வார். காஸ்ட்யூம் மாத்துறதுக்குள்ளே கதவிடுக்கால பார்த்திட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணி படம் முடியுற வரைக்கும் பக்கத்திலேயே வராத மாதிரி படுத்துற ஹீரோயினுங்க இருப்பாங்க. அதுக்கு காரணம் செல்போன் கடலைக்கு இடையூறா 'ஷாட் ரெடி மேடம்'னு அடிக்கடி போயிருப்பாரு அந்த பக்கம்! இப்படி அசிஸ்டென்ட் டைரக்டருங்களுக்கு மே மாச வெயிலை மண்டைக்கு அனுப்பிட்டு, டிசம்பர் மாச மழைய கண்ணுல வரவழைப்பானுங்க, அல்லது ....ப்பாளுங்க!

கழுத்தை பிடிச்சா டை. அதுவே கொஞ்சம் இறுக்கி பிடிச்சா நாக்கு தள்ள வைக்கிற டைய்! சிலரோட கண்டிப்பும் இப்படிதான் இருக்கும். ஆனால் அது பர்பெக்ஷனுக்கான பாராயணம்ங்கறது போக போகதான் தெரியும். யானை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டியும் வாலாட்டின கதையா சில டைரக்டர்களும், நடிகர்களும் கோவத்தை வலிய வரவழைச்சுகிட்டு அலட்டிக்கறதும் இங்க நடக்கும். கடந்த பாராவில் நான் சொன்ன விஷயம் அப்படிதான்.

ஆனால் கலையை கருவறையா நினைக்கிற கமலுக்கும் அடிக்கடி கோவம் வரும். அவர் நடிக்கிற படத்தில யாரு வேணும்னாலும் டைரக்டரா இருக்கலாம். ஆனா காட்சியை வரையறுக்கிற அதிகாரம் கமலுக்கு மட்டும்தான். (பாலசந்தர் காலத்தை விட்ருங்க. நான் சொல்றது இப்போ) படத்தில இவர் கோட் போட்டுக் கொண்டு வர்ற காட்சியா இருக்கும். அதில ஒரு மயிரிழை சுருக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவரு அவர். ஷாட்ல கழற்றி அரை நிமிஷம் கழிச்சு திரும்ப மாட்டினா கூட அதுக்குள்ளே அயர்ன் பண்ணியிருக்கணும் அந்த கோட். இல்லைன்னா இஸ்திரி பொட்டி கோபத்தோட சம்பந்தப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டரை படுக்க வச்சு பரேட் எடுப்பாரு கமல்.

அவரு மனசில நினைக்கறதை 'மானிட்டர்' பண்ணுற அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கணும். அவரு கட்டளையிட்டு வாயை மூடுவதற்குள்ளே விஷயம் முடிஞ்சுருக்கணும். இல்லைன்னா ஒரே ஒரு பார்வையிலேயே 'ஒண்ணுக்கு' வர வைக்க முடியும் அவரால். அந்த பார்வையில கலங்கரை விளக்கமும் தெரியும். காசிமேடு அருவாளும் தெரியும். சார் அடுத்ததா என்ன சொல்லப் போறாரோன்ங்கிற அவஸ்தையிலேயே அடி வயித்தில வைப்ரேட்டரோட சுத்தி வர்ற உதவி இயக்குனர்களுக்கு அந்த படத்தின் ரிலீஸ் நேரத்திலதான் சுவாச குழாயே திறக்கும்!

அப்படியாப்பட்ட கமல் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சொன்ன பதில்தான் நான் இப்போ சொல்லப்போற விஷயம். அதை படிச்சுட்டு எங்க அந்த நாதாரின்னு விரட்டுனாலும் சரி, இவன்தாண்டா சர்தாரின்னு பாராட்டுனாலும் சரி, அது உங்க விருப்பம். கமல் நடிச்ச ஒரு படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். கதை பனிப்பொழியுற ஏதோ ஒரு பிரதேசத்தில நடக்குது. காஷ்மீரோ, ஊட்டியோன்னு வச்சுக்கோங்களேன். ஆனா அப்படத்தின் விட்டுப் போன ஒரு பகுதிய சென்னையில எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா பனி பிரதேசத்தில புகை மாதிரி மிஸ்ட் நடமாடிக்கிட்டேயிருக்கும்.

பின்னணியில் இந்த 'மிஸ்ட்' வரணும்னு நினைச்ச கமல், விறகு கட்டைகளை போட்டு எரிங்கன்னு சொல்லிட்டாரு அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம். ஷாட்ல விழாத இடத்தில கட்டைய போட்டு கற்பூரத்தை ஏத்துறதுக்குள்ளே "எங்கய்யா புகை வரலே... வேலை ஆச்சா"ன்னு பத்து முறை குரல் கொடுத்திட்டாரு கமல். அடுத்த முறை அவரு நேர்ல வந்து கத்தறதுக்குள்ளே ஊதி புகையை வர வச்சுரணும்னு நாலைஞ்சு பேரு ஒண்ணு சேர்ந்து ஊதிகிட்டேயிருந்தாங்க. அதுக்குள்ளே பொசுக்குன்னு அங்க என்ட்ரி கொடுத்த கமல், "என்னய்யா இவ்வளவு நேரம், புகை வந்திச்சா?"ன்னு கேட்க, "ஒரு நிமிஷம் இருங்க சார்"னு சொன்னாரு அந்த உதவி இயக்குனர்.

அப்படியே கீழே குனிஞ்சு விறகு கட்டைக்கு கேட்கிற மாதிரி, "கமல்ஹாசன்....கமல்ஹாசன்... கமல்ஹாசன்"னு சத்தமா மூணு தடவ கூவுனாரு. பிறகு தலையை து£க்கி, "சார் உங்க பேர சொன்ன பிறகும் பத்த மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?"ன்னு சொல்ல, மத்த அசிஸ்டென்ட்டுகளுக்கு இப்போ பேண்ட் நனையுற அளவுக்கு பதட்டம். ஆனால் கமல் என்ன செஞ்சாரு தெரியுமா? அப்படியே அவரை தீர்க்கமா சில வினாடிகள் பார்த்திட்டு அந்த இடத்திலிருந்தே அகன்றுவிட்டார். அப்புறம் விறகு தானாக எரியுற வரைக்கும் அந்த பக்கமே வரலை!

சரி அந்த அசிஸ்டென்ட் என்ன பண்றாரு இப்போ? அன்னையோட வீட்டுக்கு போனவரு எந்த மெஸ்ல அடுப்பூதிகிட்டு இருக்காரோ?

Friday, June 4, 2010

ரீமாசென்னும், ஒரு நாகரீக சியர்சும்...


'சோழரே...பாடுவீரோ' ன்னு நாக்கை சைசா இழுத்து, கண்ணை லைட்டா செருகி ரீமாசென் கூப்பிடும்போது பாழாப்போற பார்த்திபன் படார் தீடீர்னு ஒரு ஸ்டெப்பு வைப்பாரே, அது ஆட்டம்னு நினைக்கிறீங்க? அதெல்லாம் இல்ல. கடுகு ஒன்ணு மேல விழுந்து கடப்பாரய நசுக்குன மாதிரி ரீமாசென்னோட பார்வை தாங்கமுடியாம பார்த்திபன் போட்ட பல்லாங்குழி பரதம்! யாராயிருந்தாலும் அந்த 'லுக்'குக்கு முன்னாடி மிக்சியில போட்ட மிளகா சட்னிதான்.

மயிலுன்னு பேரு வச்சாரு பாரதிராஜா. அதுக்கு பொறுத்தமா மயிலாட்டமே இருந்தாரு ஸ்ரீதேவி. அதுக்கு பிறகு தேவதைங்கிற படத்தில நடிச்ச கீர்த்தி ரெட்டிக்கும், படத்தின் தலைப்புக்கும் அப்படி ஒரு தேவ பொருத்தம். அந்த வரிசையில மின்னலேங்கிற படத்தில அறிமுகமாகி ஆயிரம் வோல்டேஜ் அழகோட ரசிகர்களின் ப்யூசை பிடுங்கின ஒரே அழகி நம்ம ரீமாதான்.

முப்பத்திரண்டு தும்ப பூவை, வரிசைக்கு பதினாறா வகுந்து வச்சா அதுதான் அவரோட சிரிப்பு. அதுக்காக பார்க்கிறவங்க எல்லாருக்கும் தும்ப பூ பிரசாதம் கொடுத்தா தப்பா போயிரும்னு ஷ§ட்டிங் ஸ்பாட்ல உம்முன்னே நிப்பாராம் நம்ம ரீமா. இந்த உம் ஒருகட்டத்தில எரிச்சலை உண்டாக்க, வல்லவன் படத்திலே வகையா வேக வச்சாரு சிம்பு. இனிமே அந்தாளு படத்தில நடிக்கவே மாட்டேன்னு அறிக்கை விடுற அளவுக்கு சூடான ரீமா, காத்திருந்து நடிச்ச படம்தான் ஆயிரத்தில் ஒருவன். கோழி செத்தாலும் பரவால்ல, முட்டை உடையாம பார்த்துக்கோன்னானாம் ஒரு முட்டாப்பய. அப்படிதான் ரீமாசென்னை வெயில்ல போட்டு வறுத்தெடுத்தாய்ங்க படத்துல. 'அவுட் புட்' நல்லா வந்தா போதும்ங்கறதுக்காக, 'இன் புட்' கொடுக்கிற மீராவ செம திட்டு திட்டுவாராம் செல்வா. அப்படியிருந்தும் காடு மலையெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கச்சிதமா படத்தை முடிச்சு கொடுத்தது ரீமாசென்னோட பெரிய மனசு.

படம் ரிலீஸ். ஆஹான்னு பாராட்டவும், ஓஹோன்னு தாலாட்டவும் மீடியாவுக்குள்ளேயே ஒரே போட்டி. அந்தளவுக்கு ஸ்கோர் பண்ணியிருந்தாரு ரீமா. உங்க நடிப்புக்கு ஒரு ஆஸ்கர். இடுப்பு மடிப்புக்கு ஒரு ஆஸ்கர். கடைசியா வாளெடுத்து சுத்துனீங்களே, அதுக்கொன்னுன்னு பர்மா பஜார் பேட்டரி செல்லு கணக்கா ஆஸ்கர் விருதை மலிவாக்கினாய்ங்க அத்தனை பேரும்.

வண்ணத்துப்பூச்சியா இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தடவயாவது சலவைக்கு போனாதான் பளீர்னு இருக்க முடியும்ங்கறது ரீமாவோட பாலிஸி. இந்த நேரம் பார்த்துதான் பார்ட்டி எப்பம்மான்னு பரபரப்பை கிளப்புனாய்ங்க ரீமாசென்கிட்ட பிரண்ட்ஷிப்பு வச்சிருந்த கோடம்பாக்க ஹீரோக்கள். (அதாரு...?) நுனி நாக்கு இங்கிலீஸ்ல கொஞ்சூண்டு ஒயினை மிதக்க விட்டு வழுக்கி வழுக்கி பேசுறதுல கில்லாடி ஹீரோக்களும் இருக்காய்ங்க இங்க. அவங்ககிட்ட மடங்கி ஒடுங்கி மனசொடுங்கி போறதுல பல நடிகைகளுக்கு தனி கிறக்கமே உண்டு. அப்படிதான் ரீமா கிறங்குவார்னு நினைச்சுது அந்த கூட்டம்.

அன்பா கேட்டா அத்தனையும் கொடுக்கிற ரீமா, ஒரு பார்ட்டி கொடுக்க மாட்டாரா என்ன? மவுண்ட் ரோடு பக்கத்தில இருக்கிற ஐந்து நட்சத்திர ஓட்டல். வாட்ச்மேன், செக்யூரிடிங்க கூட இங்க வாஷிங்குக்கு போட்ட மாதிரியே பளிச்சுன்னு இருப்பாய்ங்க. அந்தளவுக்கு சுத்தமான ஓட்டலை அழுக்கு பண்ணுறதுக்காகவே கூடுறது நம்ம கோடம்பாக்க கூட்டத்துக்கு பிடிச்ச விளையாட்டு. டாப் ஹீரோ நாலு பேர விட்டுடுங்க. அதுக்கு அடுத்த ஸ்டெப்ல இருக்கிற ஹீரோ அத்தனை பேரும் ஒண்ணு கூடிட்டாய்ங்க. இந்த பக்கம் அந்தகால ஆன்ட்டிகளில் ஆரம்பிச்சு, இந்த கால 'அடல்ட்'டிகள் வரைக்கும் லிப்ஸ்ட்டிக் மினுமினுக்க வந்திட்டாங்க.

இந்த வாலாட்டுற திமிங்கல கூட்டத்தில வத்திப்போன கருவாடு ஒன்ணும் வந்து சேர்ந்திருச்சு. யாரு அழைச்சதுன்னும் தெரியல. எதுக்காக வந்தாருன்னும் புரியல. மார்க்கெட்ல முன்னணியில் இருந்தாதான் நேர்ல நின்று கொட்டாவி விடுறதுக்கு கூட வாய திறப்பாய்ங்க. அந்தளவுக்கு சந்தர்பவாதிங்க இவய்ங்க. அப்படி ஒரு அந்தஸ்து பேதம் தலைவிரிச்சு ஆடுற கூட்டத்தில நடிக்கிற எல்லா படத்தையும் பிளாப் படமாவே கொடுக்கிற இளம் ஹீரோதான் அந்த வந்திப்போன கருவாடு. ஒரு க்ளு. இவர் சுறா ஸ்டார் விஜய்க்கு ரொம்ப நெருக்கமான ஆளு!

கிளாஸ்களுக்கு நடுவே நடக்கிற கபடி ஆட்டத்தில, இவரோட கிளாசும் செம சறுக்கல் போட, 90 ப்ளஸ் 90 ப்ளஸ் 90 ப்ளஸ் என்று ஏறிக்கொண்டே போனது அளவு. பக்தி படமா இருந்தாலும் அதுல பதற வைக்கிற க்ளைமாக்ஸ் இல்லாம படம் முடியாது இல்லையா? இங்கயும் அப்படிதான் வந்தது அந்த பதற வைக்கிற க்ளைமாக்ஸ்.

மண்டைக்குள்ளே மங்காத்தா நடக்கிற ஸ்டேஜ் வந்திருச்சு அத்தனை பேருக்கும். கல்கி ஆசிரமத்தில கர்ண கடூரமா பக்தைகள் சிரிக்கிற கிளிப்பிங்ஸ் ஒன்று யூ ட்யூப்ல வெள்ளிவிழா கொண்டாடுதே, அதே ஸ்டைலில் அசுர சிரிப்பு சிரிச்சுகிட்டே அள்ளி அணைக்க தயாராச்சு ஒரு கூட்டம். ப்ளஸ்சும், மைனசும் கூட்டணி அமைத்துக் கொண்டு காணாமல்போக, ஸ்டடியாக நின்றது ரீமா மட்டும்தான். வந்த அழைப்பையெல்லாம் தட்டிக்கழித்துக் கொண்டே வந்த ரீமா, பார்ட்டி ஹாலை நோட்டம் விட, வசந்த மாளிகை சிவாஜி மாதிரி, வகை தொகையில்லாம கிளாசையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தோல்விப்பட ஹீரோ.

சில அரிதான நேரங்களில் லைட் ஹவுஸ் குனிஞ்சு சுண்டலுக்கு கை நீட்டும். அதுதான் நடந்தது அங்கும்!

"அடப்பாவி. பார்ட்டிக்கு வந்து பரிதாபமா குடிக்கிறீயே, அப்படியென்ன கவலை உனக்கு? எங்கிட்ட சொல்லு"ன்னு அரை குறை தமிழ்ல ரீமாசென் ஆறுதல் சொல்ல, அதுவா... அதுவான்னு கேட்டபடியே மாருல சாஞ்சு 'கோ...'ன்னு அழ ஆரம்பிச்சாரு ஹீரோ. அவரு கண்ணை துடைக்கவும், கவலை போக்கவும் துடியா துடிச்ச ரீமா மெல்ல அவரை அணைச்சபடி 'ரஞ்சிதா வைத்தியம்' செய்ய, அத்தனை வருட தோல்விகளும் கண்ணுக்கு வராம கரைஞ்சே போனார் ஹீரோ. அதுக்கு பிறகு அவரு தெளிஞ்சு கண்ண தெறக்கும்போது பக்கத்தில் கிடந்த பஞ்சலோகத்தை அவராலேயே நம்ப முடியல.

அந்த ஜோர்லயே மறுநாள் ரீமாவுக்கு போன் அடிச்ச இளம் ஹீரோ, மறுநாள் ராத்திரியும் டாஸ்மாக் சரக்கை குடிச்சுட்டு வாந்தி எடுத்ததுக்கு காரணம், ரீமாவின் இங்கிலீஸ் திட்டுகள்தான் என்பது பல பேருக்கு தெரியாத பதி விரத ரகசியம்.

பின்குறிப்பு- கடந்த பதிவுக்கே கடைசியா க்ளு கொடுத்திருந்தேன். இந்த பதிவுக்கு ரொம்ப அலுத்துக்க வேண்டாம். நடிகர் மூன்றெழுத்து ஹீரோவின் உறவினரும் கூட!

Friday, May 28, 2010

கருப்பு நடிகை, கண்றாவி ஹீரோ!


கண்களே ரெண்டு மானிட்டர் தெரியுமான்னாரு நண்பர். அவசரப்படாதீங்க, அவரு சொன்னது கம்யூட்டரோட மானிட்டரை! பிடிச்ச நடிகையை வர்ணிக்கும்போது உணர்ச்சி ஓவராகி, வார்த்தைகளை பிரிச்சு மேயும்போதுதான் கண்கள் பற்றி இப்படி ஒரு ஒப்பீடு. இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலேயே கதைகள் படிக்கிற வசதி இருப்பதால் மானிட்டர் என்றதில் தப்பில்லை. ஏனென்றால் அந்த நடிகையின் கண்கள் இருக்கிறதே, அது சொல்லும் கதைகள் ஏராளம்!

'ஒப்பாரும் மிக்காருமில்லாத...'ன்னு மீட்டிங்ல பேசும்போதெல்லாம் அடிக்கடி சொல்வாரு ராதாரவி. அவங்க அப்பாரு இல்லன்னா இவரு எதுக்கு இப்படி கவலைப்படுறாருன்னு அரைகுறையா கேட்பவங்க அதிர்ந்துதான் போவாங்க. அப்படி ஒரு புகழ் மொழியோடுதான் பேசுவாரு எல்லாரையும். நான் சொல்லப் போற நடிகை இருக்காங்களே, அவங்களும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நல்ல நடிகைதான்.

வட்ட முகம், கருப்புக்கே மெருகேத்துற கலர், டயர் சைஸ் இடுப்பு என்றாலும் அதில் ஃபயர் வரவழைக்கும் கவர்ச்சி! நடிப்பில் இவங்க இன்னொரு சிவாஜி. பொம்பளை சிவாஜி என்றே வர்ணிப்பார்கள் பலரும். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் சிவாஜிக்கே 'தண்ணி' காட்டியிருப்பார் நடிகை. அட என்ன ஒரு ஒற்றுமை? இந்த வாரம் நாம் சொல்லப்போவதும் ஒரு 'தண்ணி' மேட்டர்தான்!

கஞ்சா தோட்டத்துக்கு நடுவிலே விளைஞ்ச சவுக்கு மரம், சாய்ஞ்சு சாய்ஞ்சு வளர்ந்த மாதிரி, புகழுக்கு நடுவிலேயே வளர்ந்தவராச்சா? பொசுக்குன்னு கோவம் வரும் எதுக்கெடுத்தாலும். அதாவது வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம். ஷ¨ட்டிங் ஸ்பாட்ல இவங்க கொடுக்கிற அலப்பறைக்கு அளவில்லாம போனாலும், நடிப்புக்காக பொறுத்துக்க வேண்டியதா இருந்திச்சு எல்லாத்தையும்.

பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில நடிச்சிட்டு இருந்தாங்க இந்த நடிகை. இவங்களுக்கு ஜோடியா நடிச்சது டாப் மோஸ்ட் ஹீரோக்கள் ரெண்டு பேர். அதில் ஒருத்தருக்குதான் அன்றைய தினம் ஷாட். சாயங்காலம் ஆறு மணிக்கு பேக் அப் என்றாலும், ஷாட்ல இருந்தாதான் நடிகருங்களுக்கு பிடிக்கும். அப்படியில்லாம மேக்கப்பை போட்டு உட்கார வச்சிருந்தா குள்ளமணிக்கே கூட கோவம் வரும். அன்னைக்கு பார்த்து நடிகையோட அலப்பறையில் ஒரு மணி நேரம் உட்கார வேண்டியதாப் போச்சு ஹீரோவுக்கு. எப்படி?

நடிகை குளிக்கிற மாதிரி காட்சி. திடீர்னு அங்கு வரும் ஹீரோ, அவரு குளிப்பதை பார்க்காம அப்படியே திரும்பி நின்று சில டயலாக்குகள் பேசணும். அதை குளிச்சுக்கிட்டே நடிகை கேட்கணும். மச மசன்னு நிக்காம மாராப்பை ஏத்தி கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்திட்டாரு நடிகை. தண்ணி தொட்டி, தலைசொம்பு என்று அத்தனையும் ரெடி. நடிகரும் வந்து நின்னுட்டாரு. தலைக்கு தண்ணிய ஊத்த வேண்டிய நம்ம நடிகை, அப்படியே கையை தொட்டிக்குள்ளே விட்டுட்டு குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. "ஏங்க, இப்படி குளிருது. ஒருத்தராவது வென்னீர் வைக்கணும்னு நினைக்க மாட்டீங்களா, எப்படிங்க இதில குளிக்கறது?" என்றார் அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் வள்ளுன்னு விழாத குறையாக. இதை டைரக்டரிடம் கேட்க முடியாது. ஏன்னா அது சிங்கம். இப்பவே சிங்கம்னா பீக் ல இருக்கும்போது யோசிச்சுக்கோங்க. ஆனாலும் பிரச்சனையை காதில் வாங்கிகிட்ட சிங்கம், அசிஸ்டென்டுகளை கூப்பிட்டு "யோவ், அவங்களுக்கு வென்னீர் வச்சுட்டு கூப்பிடுங்கய்யா" என்று தனக்கான சேரில் போய் உட்காந்துவிட்டார்.

உலக்கையே விழுந்தா கூட, வலக்கையால வளைச்சு ஒடிக்கிற ஹீரோ, கேவலம் ஹீரோயினோட குய்யோ முறையோவுக்கு யூனிட்டே அலறுதேன்னு செம கோவமாயிட்டாரு. குளிர்ச்சியான தண்ணி மேல விழுந்தா செத்தா போயிருவான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே தனது சீட்ல போய் உட்கார்ந்திட்டாரு. "தம்பி, எல்லாம் ஆனதும் சொல்லுங்க"ன்னு கட்டிய மாராப்போட தனது நாற்காலிக்கு போயிருச்சு நடிகை.

இந்த இடத்தில் அந்த ஷாட்டுக்கான வரைபடத்தை சொல்லியே ஆக வேண்டும்.

சுற்றிலும் கீற்று தடுப்பு. நடுவில் தொட்டி. நடிகை குளிக்கிற ஷாட் என்பதால் அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று அந்த இடத்தையே ஷாமியானா கொண்டு தடுத்திருந்தாங்க. இந்த இடத்தில்தான் தேமே என்று விறகுகளை எரியவிட்டு அந்த தொட்டியை சூடாக்கிக் கொண்டிருந்தாரு அந்த அசிஸ்டென்ட் டைரக்டர். என்ன நினைத்தாரோ, சரக்கென்று சீட்டை விட்டு எழுந்தார் ஹீரோ. நேராக வென்னீர் போடுகிற இடத்துக்கு போனார். தண்ணி சூடாயிருச்சான்னு பார்க்க வந்திருப்பாரோன்னு அசிஸ்டென்ட் நினைக்க, உஷ் என்று அவர் வாயை பொத்தினார்.

"யாரும் வராங்களான்னு பார்த்துக்கோ" என்று அந்த தடுப்புக்குள் போய்விட்டார். வென்னீர் பானை. வெளியாளுங்க கவனிக்க முடியாத தடுப்பு. உள்ள போயி ஹீரோ என்ன பண்ண போறாருன்னு லேசா எட்டிப்பார்த்த உதவி இயக்குனருக்கு உதறல் எடுத்திருச்சு. அவரு மட்டுமில்ல, ஒருத்தரும் நினைச்சுப்பார்க்க முடியாத காரியம் 'ஒன்றை' செய்து கொண்டிருந்தார் ஹீரோ. அதுவும் நடிகை குளிக்கப் போற தண்ணீர் தொட்டியில்!

சைலண்ட்டாக ரெண்டே நிமிடத்தில் காரியத்தை முடிச்சுட்டு தனது சீட்டுக்கு வந்த உட்கார்ந்தவரோட முகத்தில நிம்மதியோ நிம்மதி. கொஞ்ச நேரத்தில ஷாட். நடிகை ஆசையா தண்ணிய எடுத்து மேல ஊத்திக்கிட்டாங்க. முகம், கன்னமெல்லாம் வழிஞ்சுது ஹாட் வாட்டர். அதுக்குள்ளே இருந்த ஹாட் மேட்டர் அந்த ஹீரோவுக்கும், வென்னீர் வச்ச அசிஸ்டென்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்! உதறலோடு இந்த காட்சி எடுக்கப்படுறதை அசிஸ்டென்ட் கவனிக்க, உற்சாகமாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார் ஹீரோ.

நமக்கெப்படி தெரிஞ்சுது இந்த மேட்டர்? ஒரு 'ஹாட்' சந்திப்புல நம்பகிட்ட இதை பகிர்ந்துகிட்ட அந்த அசிஸ்டென்ட் டைரக்டரு இப்பவும் அசிஸ்டென்டாதான்யா இருக்காரு!

பின்குறிப்பு- இன்னுமா அந்த நடிகை யாருன்னு தெரியல? சரிதான் போங்க!

Saturday, May 22, 2010

அறுவுகெட்ட ப்ளேய்... மானங்கெட்ட ப்ளேய்...-வடிவேலு


உலகமே உம்முன்னு இருந்தாலும், கவலையே படாம கம்முன்னு இருக்கிறவன் எப்படி நிருபனா இருக்க முடியும்? லைட்டரை எடுத்தமா, லைட்டா பத்த வச்சமான்னு இருந்தாதானே லைஃப்ல ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? நான் பார்த்த பல நிருபருங்க, கேள்வியிலேயே மாஞ்சாவைத் தடவி கரெக்டா கழுத்துக்கு நேரா பறக்க விடுவாங்க. காதறுந்தாலும் செய்தி, கழுத்தறுந்தாலும் செய்தி.

"உங்களுக்கு பரபரப்பா செய்தி வேணும். அதுக்காக என் வாய புடுங்காதீங்க"ன்னு தப்பிச்சு ஓடுற அநேக நடிகர் நடிகைகளை அன்றாடம் பாக்கிற கண்ணுதானே இது! சினிமா வட்டாரம்தான் இப்படின்னா, எனக்கு தெரிஞ்ச அரசியல் நிருபருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இது. உதட்டுக்கு மேல 'ப்ரீத்தி'ன்னு பேரு அடிக்காத குறையா பேசிக் கொண்டிருக்கிற நிருபர் அவர். "வாய்யா மிக்சி"ன்னு வாயார அழைப்பாங்க சக நிருபர்கள். அந்தளவுக்கு வாய திறந்தா லொட லொட... பேட்டிக்காக போயிருந்தாரு குமரி அனந்தனிடம். அவர் பரபரப்பா இருந்த நேரம் அது.

காங்கிரஸ்ல ஒலிக்கிற 'கோஷ்டி' கானம் இருக்கே, அது ஒவ்வொரு நாளும் வேஷ்டிய காணோம்ங்கிற மாதிரியே இருக்கும். பல வருடங்களாக நடக்கிற இந்த குருசேத்திர போர், வம்சாவளி சொத்து பத்திரம் மாதிரி! சுட சுட கைமாறுகிறதே தவிர முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நேரத்திலதான் அண்ணாக் கயிறுல அரிவாளை தொங்க விட்ட மாதிரி அபாயமா இருந்திச்சு இவரோட கேள்விகள்! இதுக்கு பதில் சொல்றதா வேண்டாமான்னு யோசிச்ச குமரி, "சரி... முதலில் டீ யை குடிச்சுட்டு பேசுவோம்"னு சொல்லிட்டு சேரை விட்டு எழுந்தார். அப்படியே ஆபிஸ் பாய்க்கு ஆர்டர் போடுற மாதிரியே, "டேய் சாருக்கு டீ வாங்கிட்டு வா..."ன்னு குரல் கொடுத்துக் கொண்டே வெளியே போனார். அவ்வளவுதான், வாசலில் நின்ற காரை ஓட்டிக் கொண்டு அப்படியே வீட்டுக்கே போய்விட்டார்.

வாசலுக்கு போன குமரி வந்திடுவார் என்று அரை மணி நேரம் காத்திருந்த நிருபருக்கு அப்புறம்தான் சந்தேகமே வந்தது. ஒருவேளை அண்ணனே பிளாஸ்கை எடுத்துக் கொண்டு கடைக்கு போயிட்டாரோ என்கிற அளவுக்கு மிகைப்பட்ட சந்தேகம் அது. (ரொம்பதான்...) நேரம் ஓடிக்கொண்டிருக்க மெல்ல தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தால் வாசலில் ஒரே ஒரு பெரிசு உட்கார்ந்து கொண்டு பழைய பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தார். "ஏங்க... அண்ணன் எங்க?" இது நிருபர். "யாரு... குமரியண்ணனதான கேக்கிறீங்க? அவரு போயி அரை மணி நேரம் ஆச்சே"ன்னாரு பெருசு. அவ்வளவுதான் ஷாக்காகி போச்சு நிருபருக்கு. நம்ம வாழ்க்கையில எத்தனையோ கேள்வி கேட்டு பதில வாங்கியிருக்கோம். ஆனால் இப்போ கிடைச்ச பதில்...? சாமீ கொடூரம்டான்னாரு மனசுக்குள்ளே.

வடிவேலுவை பார்க்க போன இன்னொரு நிருபரின் அனுபவம் இது. வாங்கண்ணேய்...னு வடிவேலுவே வரச்சொல்லி நேரமும் கொடுத்திருந்தார். சொன்ன நேரத்தில டாண்ணு போயி நின்னுட்டாரு நிருபர். 'உட்காருங்க' என்று நியூஸ் பேப்பரை கையில கொடுத்திட்டு அவரு வேலையை பார்த்திட்டு இருந்தாரு ஆபிஸ் பாய். வாசலை பார்க்கறதும், பேப்பரை நோக்கறதுமாக நிருபரோட நிமிடங்கள் கரைஞ்சுகிட்டேயிருந்திச்சு.

வடிவேலு இருந்திருந்தா வாத்து பொரியலில் இருந்து, வடகறி வரைக்கும் மரியாதை 'மணக்கும்!' இவய்ங்க ஒரு டீ குடின்னு கூட சொல்லலியேன்னு ஒரு பக்கம் எரிச்சல். வரச்சொன்ன மனுசன் டாண்ணு வரணுமா வேணாமான்னு மறுபக்கம் புகைச்சல். இப்படியே அரை மணி நேரம் போச்சு. திடீரென்று வாசல் பக்கம் வந்து நின்றது வடிவேலுவின் கார். முன் டயரை பார்த்ததும் நிருபரின் முகத்தில் நிம்மதி நம்ம சாய்ஸ்!

உள்ளேயிருந்து பார்த்தா முன் டயரும், கொஞ்சம் காரும் தெரியும். அவ்வளவுதான். அதை பார்த்ததற்கே இத்தனை சந்தோஷம். ஆனால் கார் வந்து நின்று பல நிமிடங்கள் ஆகியும் வைகை புயல் ஆபிசுக்குள் வருவதற்கான ஒரு சின்ன அசைவு கூட தெரியவில்லை. மறுபடியும் வாட்ச். புரட்டி புரட்டி பார்த்த பேப்பரையே திரும்ப ஒரு முறை பார்ப்பது என்று ஆயாசத்தின் உச்சத்துக்கே போனார் நிருபர். "என்னங்க இப்படி பண்றீங்க?" என்று கேட்டுவிடுகிற அளவுக்கு கோபம் கொப்பளிக்க, செல்போனை எடுத்து நம்பரை போட்டால் எதிர்முனை செம பிஸி. இப்படியே மணிக்கணக்கில் நீண்டு கொண்டிருக்க, விரல் நகத்தையெல்லாம் கடித்து துப்பியிருந்தார் நிருபர்!

முக்குல இருக்கிற கடைக்கு மூணு தெருவ சுத்தி போன மாதிரி, அனலடிக்குது நிருபருக்கு. வந்தா குறைந்த பட்ச கோவத்தையாவது காட்டிடணும் என்று முடிவெடுத்தபோதுதான் தெப்பலாக நனைந்தபடி உள்ளே வந்தார் வடிவேலு. "அறுவுகெட்ட ப்ளேய்... (பயலேவைதான் இப்படி) மானங்கெட்ட ப்ளேய்..." என்பதோடு நில்லாமல் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டே வந்து நிருபர் முன் உட்கார்ந்தார். "அண்ணேய், கோவிச்சுக்காதீங்க. பயபுள்ள ஒரு வேலைய செஞ்சுபுடுச்சு" என்றவர் ஏன் லேட் என்பதை விளக்க ஆரம்பித்தார்.

வழக்கமா ஆபிஸ் வந்ததும் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி விடுவாராம் வடிவேலு. டிரைவர் கதவை பூட்டிக் கொண்டு தம்மடிக்க கிளம்பிவிடுவார். முதலாளிக்கு எதிரே குடிக்க முடியாத ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து தணிப்பது மாதிரி ஒரே நேரத்தில் ஆறேழு சிகரெட்டை இழுத்து தள்ளிவிட்டு அப்படியே ஒரு டீயையும் குடித்துவிட்டுதான் ஆபிசுக்குள்ளேயே வருவாராம். சம்பவ தினத்தன்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாராம் வடிவேலு. இவர் காருக்குள்ளிருப்பதை கவனிக்காத டிரைவர் 'முதலாளி இறங்கிட்டாரு'ன்னு நினைச்சு கதவை பூட்டிட்டு கிளம்பிட்டாரு.

போன டிரைவர் சும்மா போகாமல் ஏசியையும் ஆஃப் பண்ணிவிட்டு போனதால் வேர்த்து விறுவிறுத்துப் போன வடிவேலு, தொப்பலாக நனைந்திருந்தார் காருக்குள்ளேயே. டிரைவருக்கு போன் அடித்தால் ஊருக்கு போன் பண்ணி யாருக்கோ கடலை போட்டுக் கொண்டிருந்தாராம் அந்த மனுஷன். அந்த நேரத்தில்தான் நம்ம நிருபரின் போனும் வடிவேலுவுக்கு போயிருக்கிறது. இப்படி தொலை தொடர்பே கொலாப்ஸ் ஆகிற அளவுக்கு மூவரும் மாறி மாறி தொடர்பு கொண்டதால், அடித்த 'தம்'மை அப்படியே 'கட்' பண்ணிவிட்டு ஓடோடி வந்து கதவை திறந்தாராம் டிரைவர்.

"அதாண்ணே லேட்டு..."ன்னாரு வடிவேலு.

Saturday, May 15, 2010

ஹீரோக்களே விரும்பும் ஹீரோ?


'துன்பம் வரும் வேளையில சிரிங்க. என்று சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க...' இப்படி துன்பம் வரும் வேளையில் சிரிப்பதற்கென்றே ஹீரோ ஒருத்தரு ஒரு உபாயம் வச்சிருந்தாரு. அது உபாயமா? அபாயமா? படிச்சிட்டு நீங்களே சொல்லுங்களேன்.

ஊர சொன்னாலும் பேர சொல்லாதீங்கன்னு சொல்லுது ஒரு புத்தி. பேர சொன்னாலும் ஊர சொல்லாதீங்கன்னு சொல்லுது இன்னொரு புத்தி. அட, ஒன்னுமே சொல்லாதய்யான்னு வேறொரு புத்தி குறுக்கே வராத வரைக்கும் ஓகே.

ஹீரோ பெயரை எழுதினா நிஜமாகவே அவருக்கு சிக்கல். அதனால பெயரை மட்டும் விட்டுடலாம். ஆறடி உயரம். காபித்து£ள் கருப்பு. இதுதான் ஹீரோவோட அவுட் லுக். (க்ளு போதும்னு நினைக்கிறேன்) இவருக்கு எப்பவாவது மனசு விட்டேத்தியா இருந்திச்சுன்னா இரண்டு படங்களை உடனே பார்த்து மனசுக்கு மருதாணி போட்டுப்பாரு. இதுக்காகவே அவருடைய காரில் காஸ்ட்லியான டி.வி ஒன்றையும் ஃபிக்ஸ் பண்ணியிருந்தாரு. தன்னம்பிக்கையூட்டுற எந்த படத்தையாவது போட்டு பார்த்திருப்பாரு. அது எதுவா இருக்கும்னு நீங்க மண்டையை பிய்ச்சு, மனக்கணக்கு போட வேண்டாம். அவரு பார்க்கிற அந்த படங்கள் வேறு டைப். கெக்கேபிக்கேன்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிற ஹீரோக்களின் படங்கள்தான் அவை. ஒன்று ஏழிசை ஏந்தல், அஷ்டாவதானி, அடுக்கு மொழி பாவலன் விஜய டி.ஆர் நடித்த வீராசாமி. மற்றொன்று வீரத்தளபதி, விருந்தோம்பலரசன் ஜே.கே.ரித்தீஷ் நடித்த கானல் நீர்!

இந்த ரெண்டு படங்களையும் ஒரு சீன் விடாமல் பார்த்துட்டு காரில் இருந்து கீழே இறங்கும்போது ஈஷா, கல்கி, நித்தி, இன்னும் சாருநிவேதிதா 'பின்னாடி' அர்ச்சனை பண்ணப்போற அத்தனை சாமியார்களிடமும் யோகா படிச்ச புத்துணர்ச்சி கிடைத்திருக்கும் அவருக்கு. அவ்வளவுதான், இந்த நாள் இனிய நாள் என்று அன்றைய தினத்தை அரட்டையிலேயே கழிப்பார்.

விதிக்கு வேலி போட்டு தடுத்தாலும், புடுங்கி வச்சுட்டு புகுந்திரும் அல்லவா? அது மாதிரி ஒரு இன்சிடென்ட். ஒரு நாள் செம மூட் அவுட் ஆன கருப்பு ஹீரோ, தனது ஃபிரண்ட்ஸ் பட்டாளத்தையும் இழுத்துக்கொண்டு ஒரு பிரிவியூ தியேட்டருக்கு போனார். இத்தனை நாளும் காருக்குள்ளேயே இருந்து இந்த சூப்பர் ஸ்டாருங்களை ரசிச்சோம். அகன்ற வெண் திரையில் இவங்களை ரசிச்சா என்ன? இப்படி ஒரு 'தாட்' வந்ததுதான் தாமதம். தாட் பூட்டென்று செயலில் இறங்கிவிட்டார் ஹீரோ.

தி நகரில் இருக்கும் பிரிவியூ தியேட்டர் அது. நண்பர்களோடு காரைவிட்டு இறங்கும் போது கூடவே ஒரு டாஸ்மாக் கடையையும் கீழே இறக்கினார் ஹீரோ. மருந்தில்லா மருத்துவத்தை சித்தர்கள் சொல்லிக் கொடுத்தாலும், 'மருந்து' இல்லா வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியுமா தமிழனால்? நண்டு, நத்தை, காடை, கவுதாரி ஃபிரைகளுடன் கனஜோராக இறங்கியது மேற்படி டிவிடி இரண்டும். தியேட்டரில் உள்ள புரஜக்டர் உதவியுடன் படத்தை பார்த்து பரவசப்படுறதுதான் ஹீரோவின் திட்டம்.

பெரிய ஹீரோ, சும்மா கிடக்கிற தியேட்டர். வாடகைக்கு வாடகை ஆச்சு. பெரிய ஹீரோவின் பிரண்ட்ஷிப்பும் ஆச்சு. இப்படியெல்லாம் கணக்கு போட்ட தியேட்டர் மேனேஜர் கதவை அகல திறந்து அராத்து பார்ட்டிகளை உள்ளே அனுமதிச்சார். முதல் ஷோ கானல் நீர். ரித்தீஷ் ஸ்கிரீனில் தோன்றும்போதெல்லாம் உற்சாகமாக விசில் அடித்து கொண்டாடினார் ஹீரோ. வந்த வேலையை பார்ப்போம் என்று 'உள்ளே' தள்ளிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.

அதற்குள் விஷயம் எப்படியோ ரித்தீஷ் காதுக்கு போய்விட்டது. அவ்வளவு பெரிய நடிகர் தியேட்டரை வாடகைக்கு எடுத்து நம்ம படத்தை பார்க்கிறார்னா எவ்வளவு பெரிய விஷயம். அந்த ஹீரோவுக்கு நாம மரியாதை செய்ய வேணாமா? பாண்டி பஜார்ல சொல்லி பெரிய மாலையா கட்டுங்கப்பா என்று தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் ரித்தீஷ். இந்த நேரத்தில் இவரை பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும்.

நீங்க புட்டிப்பாலுக்கு ஆசைப்பட்டால், புலிப்பாலே கொடுக்கிற அளவுக்கு வள்ளல். எம்ஜிஆருக்கு பிறகு, சினிமா தொழிலாளிங்களுக்கு பரவசத்தை கொடுக்கிற ஒரே நபர், இப்போதைக்கு கோடம்பாக்கத்தில் ரித்திஷ் மட்டும்தான். ஒண்ணுமில்லாத புல்லுங்க கூட, சும்மா வில்லுங்க மாதிரி விடைச்சுகிட்டு நிக்குதுன்னா இவரு தர்ற உற்சாகம்தான் அதுக்கு காரணம். அப்படிப்பட்ட மனுஷனுக்கு தன்னை நேசிக்கிற(?) ஹீரோவை சும்மா விட்டுவிட தோணுமா. தனது படை பரிவாரங்களுடன் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கே வந்திட்டாரு.

மழையடிக்கிற நேரத்தில மடையும் புட்டுகிட்டா என்னாகும்? ஆடிப்போயிட்டாரு தியேட்டர் மேனேஜரு. அவசரமா உள்ளே போக வந்த ரித்தீஷை, "சார் ஒரு நிமிஷம் உட்காருங்களேன்" என்று நைசாக ஆபிஸ் ரூமில் உட்கார வச்சுட்டு உள்ளே ஓடினார். காதோடு காதாக விஷயத்தை சொல்ல, ஆடிப்போனார் ஹீரோ.

அவசரம் அவசரமாக குடி மடத்தை மூடினாங்க அத்தனை பேரும். சீட்டுக்கு அடியில் சிறைபட்டன முனியாண்டி விலாஸ் ஐட்டங்கள். வாய், முகத்தையெல்லாம் துடைச்சுகிட்டு சைலண்ட்டா படத்தை ரசிக்க ஆரம்பிச்சாரு ஹீரோ. வெளியே ஓடிய மேனேஜர், சார் இப்போ உள்ளே போங்கன்னு சொன்னதும் கம்பீரமாக உள்ளே வந்தார் ரித்தீஷ். கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க ரெண்டு பேரும். கொண்டு வந்த பெரிய மாலையை போட்டு போட்டோவும் எடுத்துகிட்டாங்க. (ஹ§ம், இது வேறயா)

அந்த ஷாட்ல உங்க பர்ஃபார்மென்ஸ் அற்புதம்னு பாராட்டுனாரு ஹீரோ. என் நடிப்புக்கு நீங்கதான் டிப்ஸ் கொடுக்கணும்னாரு ரித்திஷ். இத்தனை நேரம் அங்க நடந்த கலவரத்தை பார்த்த பிரண்ட்ஸ், இந்த பரஸ்பர பாராட்டுதல்களில் அதுவரை அடித்த அத்தனை திரவியங்களின் பெருமையையும் மறந்தே போனாங்க.

அன்னைக்கு காமெடியா இருந்த ரித்தீஷ், இன்னைக்கு முக்கியமான எம்.பி!

ஒரு காலத்தில இவரை ஸ்கிரீன்ல பார்த்து எம்பி எம்பி குதிச்சு சிரிச்ச ஹீரோ, இன்னிக்கு எம்.பி சார்னு சொல்ற அளவுக்கு கொண்டு வந்திருச்சு காலம். அதுக்கு காரணம் வெறும் ரித்தீஷ் மட்டுமில்ல, அவருக்கே தெரியாம அவரு மனசுக்குள்ளேயிருந்து அள்ளிக் கொடுக்க வைக்கிற அந்த மகா பெரிய கர்ண மவராசன்தான்.

Wednesday, May 12, 2010

பீர் குடிச்ச பெருச்சாளி


காத்திருத்தல் சுகம்தான். ஆனால் எங்கே என்பதை பொறுத்துதான் அது சுகமா, சோகமா என்ற முடிவுக்கு வர முடியும். அதுவும் எங்களை மாதிரி நிருபனுங்களுக்கு கடிகார முள்ளுல காரப் பொடிய தடவுன மாதிரி ஒரு கோவமும், அலட்டலும் இருந்துகிட்டே இருக்கும். "ஏங்க... எவ்வளவு நேரம்ங்க இவய்ங்களுக்காக காத்துகிட்டு கிடக்குறது?" என்று கோவப்படும் நிருபருங்க. கோவிச்சுட்டு போனதா மட்டும் பொரணியும் இல்ல. பரணியும் இல்ல.

ஆறிப்போன அப்பளத்தை மளுக்குன்னு முறிச்சிர முடியுமா? கடிகாரத்தை பார்த்து பார்த்து கர்புர்ருன்னு கோவப்பட்டாலும், நமத்துப்போன அப்பளம் மாதிரியேதான் போவுது எல்லாருடைய பொழப்பும். நான் கடவுள் பிரஸ்மீட்டுக்கு மூணு மணி நேரம் லேட்டா வந்தாரு பாலா. படமெடுக்கிற விஷயத்துலயும் அப்படிதான் என்றாலும், இந்த லேட் கோட் போடாத வக்கீல் மாதிரி கோவப்படுத்துச்சு ஒரு நிருபரை. "பாலா... உங்களுக்காக நாங்க காத்திருக்கலாம். உங்க படத்தோட ஹீரோயினுக்காக காத்திருக்கணுமா?" என்றார் கீழே விழுந்தாலும், முட்டியில சிராய்ப்பு இல்லங்கிற மாதிரியே. பாலா வரலாமாம். பாவம், அந்த பொண்ணு வரக்கூடாதாம். (பார்றா)

நண்டுக்கு எட்டுக்காலு. நத்தைக்கோ வயிறுதான் நடமாட்டம்! இந்த பெரிசு சிறுசு வித்தியாசம் பத்திரிகைகாரங்களுக்கும் உண்டு. சரக்கடிக்கிறதுல துவங்கி, சைட் டிஷ் கடிக்கிற வரைக்கும் ஒரு தாய் மக்களா இருப்பாங்க சில நடிகருங்க. யாருகிட்ட தெரியுமா? முன்னணி நாளிதழ், வார இதழ் நிருபர்களிடம் மட்டும். "...தோ அண்ணனே வந்திட்டாரே"ன்னு ஆறடி உடம்பும் வளைஞ்சு நெளிஞ்சு வரவேற்கிற நாடகமெல்லாம் நடக்கும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் ஒருவருக்கு நேர்ந்த 'லேட்' மேட்டர்தான் இது.

ரஞ்சித் என்றொரு நடிகர் இருந்தார். பிரசன்ட் டென்ஸ்சை கொஞ்சம் எரிச்சலில் ஊறப்போட்டு சொன்னால் இருக்...கி....றார் இப்போதும்! இவர் வீட்டுக்கு திடீரென்று போய்விட்டார் நம்ம நிருபர். வாசலில் வண்டியை நிறுத்தும்போதே வீட்டுக்குள் இருக்கும் ரஞ்சித்தை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டார் நிருபர். ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே போனால் ஷாக். வரவேற்றது ரஞ்சித் அல்ல. அவரது அம்மா. "தம்பி குளிக்குது. கொஞ்ச நேரம் ஆவும். உட்கார்றதுன்னா இருங்க. இல்லேன்னா அப்புறம் வாங்களேன்"னாங்க. அதனால என்ன? பரவாயில்ல. நான் இருக்கேன்னு சொல்லிட்டு வாசலில் கிடந்த சேரில் நிரம்பினார் நிருபர்.

கடிகாரம் அது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, பொழுது போகாமல் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தார் நிருபர். நேரம் ஓடியதே தவிர குளிக்கப் போன ரஞ்சித் வருவதாக காணோம். இந்த நேரத்தில் நிருபரின் பெருமையையும் நாம் சொல்லியாக வேண்டும். இவர் வந்தால்தான் ப்ரிவியூ தியேட்டரில் படமே போடுவார்கள். மற்ற நிருபர்கள் "அதான் நாங்கள்ளாம் வந்திட்டமே, படத்தை படத்தை போடக் கூடாதா" என்றால், "அண்ணன் இன்னும் வரலீங்களே" என்பார்கள். அந்தளவுக்கு முக்கியஸ்தர்.

எங்காவது ஏதாவது வேலையாக இவர் நடந்து போய் கொண்டிருந்தால் கூட, அண்ணன் நடந்து போறாரே என்று பதறும் விவிஐபி கள் வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றிக் கொள்கிற அளவுக்கு முன்னணி இடத்திலிருப்பவர். இப்படிப்பட்டவர்தான் ரஞ்சித் வீட்டு வாசலில் கிஞ்சித்தும் கோபம் காட்டாமல் உட்கார்ந்திருந்தார். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஓடிப்போனது இப்படியே. திடீரென்று வீட்டிலிருந்து வெளியே வந்த ரஞ்சித்தின் அம்மா, "தம்பி பாத்ரூம்ல இருக்கும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே வெளியே போயிருச்சு போல. எப்ப வரும்னு தெரியல" என்று ஒரு குண்டை போட்டார்.

வேணாம்னு நினைச்சா உலகத்துக்கே கலகத்தை மூட்டுற ஆளு நாம. நமக்கேவா? என்று சிரித்துக் கொண்ட நிருபர், அம்மா வீசிய அணு குண்டை கோலி குண்டு மாதிரி கையில் பிடித்து திரும்பி அதே வேகத்தில் அடித்தார். "அதனால என்னம்மா? தம்பி வர்ற வரைக்கும் நான் இங்கேயே இருந்து பார்த்திட்டு போறனே..."

உள்ளேயிருந்து இந்த பதிலை கேட்ட ரஞ்சித் பீர் குடிச்ச பெருச்சாளி மாதிரியானார். ஐயய்யோ, வசமா மாட்டிக்கிட்டமோ என்று நகத்தை கடித்து துப்பினாலும், அண்ணனின் பொறுமை அரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது என்ற நம்பிக்கையும் அவருக்கு. ஒரு பந்தாவுக்காக யாரையும் காத்திருக்க வைப்பதுதான் இவரது வாடிக்கை. ஆனால் அதுவே கொஞ்சம் எல்லை மீறி விட்டதுதான் இந்த சம்பவத்தில் வேடிக்கை.

அதுவரை அசால்டாக உட்கார்ந்திருந்த நிருபர், சந்து வழியாக கூட ரஞ்சித் வெளியே போய், மீண்டும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று பார்வையை சுழல விட்டபடி அமர்ந்துவிட்டார். போன் வந்தால் கூட அதில் பேசுகிற பொறுமையையும் இழந்து கண்காணிக்க ஆரம்பித்தார். அவரது கண்களே ஒரு லைட் ஹவுஸ் போல நாலாபுறமும் சுழல, சுழல, மிரள ஆரம்பித்தார் ரஞ்சித். இப்படியே போனது முக்கால் மணி நேரம்.

ரஞ்சித் புத்தியில வத்திய கொளுத்தி வச்சா கூட இப்படி ஒரு புகை வராது காது வழியே. அப்படி ஒரு புகையை கக்குறாரு மனுஷன் உள்ளேயிருந்து. இருமினால் கூட எங்கேன்னு கேட்பாரோ என்ற பயத்திலேயே கழிந்தது இன்னும் முக்கால் மணி நேரம். இரண்டு பேரும் இப்படி விடாக் கண்டன் கொடாக் கண்டன்களாக நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்க, உள்ளே என்ன நடந்ததோ? பொசுக்கென்று வெளியே வந்தார் அம்மா.

"தம்பி வெளியில போயிருச்சுன்னு நினைச்சேன். ஆனா தம்பி உள்ளதான் பெட்ரூம்ல து£ங்கிட்டு இருக்கு. நாந்தான் கவனிக்கல. வாங்க தம்பிய எழுப்பலாம்"னு நிருபரை கூப்பிட, சைலண்டாக சிரித்துக் கொண்டே உள்ளே போனார் நிருபர். நிஜமா து£ங்குனா எழுப்பலாம். இது வேறு து£க்கமாச்சே. ரொம்ப சீரியஸ் ஆக குறட்டையெல்லாம் விட்டு சூழ்நிலைக்கு யதார்த்த வண்ணமடித்தார் ரஞ்சித். ஒருவழியாக எழுந்து "அண்ணே... எப்பண்ணே வந்தீங்க. சொல்லியிருந்தா நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே" என்றார் து£க்கமும், கொட்டாவியுமாக!

"தம்பி உங்க பர்ஃபார்மென்ஸ் பிரமாதம். அத நேர்ல சொல்லலைன்னா எனக்கு து£க்கம் வராது(?) போலிருந்துச்சு. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். பெரிய ஆளா வருவ தம்பி"ன்னு நக்கலாக ஆசிர்வாதம் பண்ணிட்டு விறுவிறுவென்று வெளியே நடந்தார். பின்னாடியே "அண்ணே, இருங்க. ஒரு வாய் காபி" என்று ரஞ்சித் ஓடிவர அந்த காபியை மட்டுமல்ல, ரஞ்சித் நடித்த காப்பியங்களை கூட அதன்பின் சீண்டுவதில்லை நிருபர்.

பெரிய மனுசங்க வீட்டு உரலுக்கே இடிபடாத நம்மாளு, ஒரு சின்ன பாக்கு வெட்டிகிட்ட, மாட்டிகிட்ட இந்த சம்பவம் உங்களுக்கு எதை உணர்த்துது?

Saturday, May 8, 2010

மிட் நைட்டில் ஒரு மியூசிக் கம்போசிங்!


சரிகமபதநி... ய சரியாச் சொன்னவங்களே அடுத்த நாள் பேப்பர்ல, அதுவும் ஆறாம் பக்கத்துல 'காணவில்லை' அந்தஸ்துக்கு வந்திர்றாங்க. இந்த லட்சணத்தில ஒரு படத்துக்கு மியூசிக் போட்டு, இரண்டாவது படத்துக்கு டைரக்டர தேடி, மூணாவது படம் வர்றதுக்குள்ளே ஆர்மோனிய பொட்டிய அடகு வைக்கிற அளவுக்குதான் இருக்குது புது இசையமைப்பாளருங்களோட போட்டியும், அவங்களை வழி நடத்துற வறுமையும்! இதுல வந்த வாய்ப்பை விடவும் முடியாம, போன இடத்துல ஆர்மோனிய பொட்டிய தொடவும் முடியாம தவிச்ச இசையமைப்பாளரோட கண்ணீர் கதைதான் இது.

ம-வில் ஆரம்பிக்கும் இவரது பெயர், ர்-ல் முடியும்னு சொன்னாலும் ஈசியா கண்டுபிடிக்க முடியாது உங்களால. அதுவும் நல்லதுக்குதான்னு அடுத்த வரிக்கு போவலாம். இவரு இசையமைச்ச முதல் படம் சுமாரா போச்சு. ஆனா சூப்பரா போச்சுன்னு விளம்பரமும் கொடுத்தாங்க. அந்த படத்துல ஒரு அரசியல்வாதியும் நடிச்சதால ஒரு டிக்கெட் வாங்கினா அதுவே இலவசம். அதுக்கொரு பிரியாணியும் இலவசம்னு படத்தை ஓட்டினாரு அவரு. சில தியேட்டர்ல முன்னாடி உட்காந்திருக்கிறவன குனிய வச்சு அவன் முதுகுல பிரியாணி பொட்டலத்தை பிரிச்சு வச்சு திங்கிற அளவுக்கு குவார்ட்டரையும் குடுத்து கொண்டாட விட்டுடாய்ங்க ரசிகருங்களை. அவரோட அடுத்த படத்துக்கும் இவர்தான் மியூசிக்குன்னு புக் பண்ணியிருந்தாங்க.

முதல் படத்திலேயே நல்ல சம்பளம், கம்போசிங், மிக்சிங்குன்னு ஏராளமா செலவு பண்ணியிருந்தாரு பொலிட்டிஷியன். அதனால் இந்த படத்துக்கும் நல்லா செலவு செஞ்சு நம்ம பேர நிலை நாட்ட விட்ருவாருன்னு நம்பி தலைய ஆட்டுனாரு நம்ம மியூசிக் டைரக்டரு.

ஈசிஆர் ரோட்ல ஒரு பிரமாதமான கெஸ்ட் அவுஸ்ல கம்போசிங்கை வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு அரசியல்வாதி. தனது வாத்திய கோஷ்டியோடு போய் சேர்ந்திட்டாரு மியூசிக் டைரக்டர். போன இடத்திலே அவருக்கு கிடைச்ச அனுபவம் இருக்கே, அதை அனுபவிச்சதுக்கு பதில் கோவேறு கழுதைக்கு குனிஞ்சு குனிஞ்சு கொலுசு கட்டியிருக்கலாம். அப்படி ஒரு பேரவஸ்தை!

சர்புர்ருன்னு வண்டிங்க வந்து நின்னுச்சு. உள்ளேயிருந்து இறக்கப்பட்ட ஐட்டங்கள் எதுவும் அந்த சூழ்நிலைக்கு பொருந்தற மாதிரி இல்ல. உசிரோட கிடந்திருந்தா ஊருபட்ட புள்ளைங்களை பெத்திருக்கும். அப்படி ஒரு கிடாவை வெட்டி கொழம்பு வச்சிருந்தாய்ங்க. இந்த பக்கம் தந்து£ரியில அவிஞ்சு தகதகன்னு கெடக்குது வெடக்கோழிங்க கூட்டம். இதையெல்லாம் பார்த்த மியூசிக் டைரக்டருக்கு சரிகம வருமா, அல்லது ஜலம்தான் வருமாங்கிற அளவுக்கு நாக்குல தண்ணி வண்டி உருளுது. அந்தப்பக்கம் தலைய கூட திருப்பாமலே ஆர்மோனியத்தை தடவிக்கிட்டு இருந்தவருக்கு அடுத்ததா வந்து இறங்கின ஐட்டமும், ஆளும்தான் அதிர வைச்சுருச்சு.

ஐட்டத்தை விட்ருங்க. ஆள மட்டும் சொல்றேன். வடிவேலு! பவ்யமா கும்புட்டுட்டு "சாரு, நல்லாயிருக்கீங்களா"ன்னு சொல்லிகிட்டே மெத்தையில உட்காந்திட்டாரு மனுஷன். அப்படியே ஆர்மோனியத்தை பார்த்துகிட்டே ஒரு ராகத்தை எடுத்துவிட்டவரு, "என்னாப்பா இருக்குது அந்த குண்டாக்குள்ள? எடு பார்க்கலாம்"னு சொல்லிக்கிட்டே கைய விட்டாரு. வெளியே எடுக்கும்போது சரியான தொடக்கறி. அத நாக்குல விட்டு நைய பொடச்சுக்கிட்டே, "போன படத்தில ஒரு பாட்டு போட்ருந்தீங்கண்ணே, நல்லாயிருந்துச்சு. எங்க பாடுங்கண்ண்ணேய்..." னாரு. இவருக்கு எங்கயிருந்து பாட்டு வரும். வாயெல்லாம் ஊறி எச்சில்தான் வந்துச்சு. இருந்தாலும் ஆர்மோனியத்துல விரல்களை தவழவிட்டுக் கொண்டே ஒரு பாடலை பாட, எதிரே இருந்த வடிவேலு "எங்கடா அந்த கிளாசு"ன்னு கேட்டுக்கொண்டே அதை கைப்பற்றி எதையோ ஊற்றி கல்ப்பாக ஏற்ற ஆரம்பித்திருந்தார்.

ஆங் சொல்ல மறந்திட்டேன். இந்த ஜமாவுல வடிவேலு மட்டுமில்ல. அந்த அரசியல்வாதி. அவரோட நண்பர்கள்னு ஒரு நாலைஞ்சு பேரு குவிஞ்சுட்டாங்க. ஒரு சுச்சுவேஷன் சொல்றன்னு பேச ஆரம்பிச்சாரு ஒருத்தரு. அவருதான் டைரக்டரு போல. வரும்போதே நிரம்பி தளும்பி வந்திருந்தாரு மனுசன். இங்க வந்து இன்னும் நனைஞ்சுட்டாரா? ஃபுல் ஸ்டாப்பே இல்லாம ஒரு சுச்சுவேஷன் போயிட்டு இருந்திச்சு. அவரு நிறுத்தினாதானே இவரு ஆரம்பிக்க முடியும். இடையில அவரு நிறுத்தறது ஊறுகாய தொட்டு நாக்குல வச்சுக்கறதுக்கு மட்டும்தான்னு ஆயிருச்சு.

அதுக்குள்ளே இடையில புகுந்த வடிவேலு, "அத விடுண்ணே. அந்த காலத்துல பாகவதர் போட்ட பாட்டு இது. இதுக்கு இணையா ஒரு பாட்ட சொல்லு பாப்பம்"ன்னு ஒரு பாடலை எடுத்துவிட, "அவரு என்னா அவரு. இவர கேளு"ன்னு இந்த பக்கம் வேறொருத்தர் கிட்டப்பாவுக்கு தாவியிருந்தாரு. மாறி மாறி ரேடியோ ஸ்டேஷன திருப்பி, மண்டைக்குள்ளே கம்பிய சொருகிறாய்ங்களேன்னு கண்ணுல தண்ணியே வந்திருச்சு மியூசிக் டைரக்டருக்கு. இருந்தாலும் பாட்டுக்கு நடுவில ஒரு தொட கறிய குடுத்தா, வாய்லேர்ந்து வழியறத நிறுத்தலாம்னு நினைச்சவருக்கு பேச்சுக்கு கூட, "...ந்தா"ன்னு நீட்டல ஒருத்தரும்.

அதுக்குள்ள கஷ்டப்பட்டு அத்தனை பேரையும் கதைக்குள்ள இழுத்திட்டு வந்தாரு டைரக்டர் என்று சொல்லப்பட்ட அந்த 'தண்ணி' லாரி. ஒருவழியா இவரு சுச்சுவேஷனை சொல்லி முடிக்க, ஆர்மோனிய பொட்டியில் விரல்களை மேய விட்டாரு நம்மாளு. தானே டம்மியாக சில வார்த்தைகளை போட்டு அவர் பாட பாட கண்கள் சிவந்தது வடிவேலுவுக்கு. "என்னாய்யா வரி போடுற நீ. முன்ன பின்ன கம்போசிங்(?) பண்ணியிருக்கியா? இப்படியாய்யா சுத்த தமிழ்ல பாடுவான் ஒரு மனுசன்? தள்ளுய்யா அந்தாண்ட..." என்று மியூசிக் டைரக்டரை மெத்தை ஓரமாக தள்ளிவிட்டுவிட்டு ஆர்மோனிய பொட்டியை கைப்பற்றினார்.

பெருங்குரலில் பாட ஆரம்பிச்சாரு மனுசன். கைகள் கண்ணாபின்னாவென்று ஆர்மோனிய பொட்டியில் ஓட, அவரது வாய் உச்சரிச்ச வார்த்தைங்க ஒவ்வொன்ணும் காது கொள்ளாத கெட்ட வார்த்தைகள். காதுல பினாயில் விட்டு கழுவினா கூட நாலு வருஷத்துக்கு மறக்காது. அப்படி ஒரு நரகா'சுரம்'. ஒரு முழு பாடலையும் எதுகை மோனை ட்யூனோட அவரு போட்டு முடிப்பதற்குள் நம்ம மியூசிக் பார்ட்டிக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருந்தது.

எப்புடீய்யா...ன்னு கேட்டு இவர் முடிக்கும்போது நைசாக எழுந்து வெளியேறியிருந்தார். என்னதான் வளர்ற மியூசிக் டைரக்டரா இருந்தாலும், ஆர்மோனிய பொட்டியிலேர்ந்து 'ஜால்ரா' சத்தமா வரும்?

Monday, May 3, 2010

தே‌வயா‌னி‌ என்‌ற முதலா‌ளி‌யம்‌மா‌

தாஜ்மஹால் மேல தார் ஊத்தினா கூட சுற்றுபுற ஆர்வலர்கள் சும்மாயிருப்பாங்க. ஆனா, சினிமாவுல இருக்கிற வெட்டிப்புற ஆர்வலர்களின் ஆத்திரமும், ஆதங்கமும் இன்னும் அடங்க மாட்டாம சுத்துது ஒரு காதல் ஜோடியை, ஜோடியா பார்க்கும் போதெல்லாம்! இந்த வாரம் ஒரு முன்னணி இதழில் அவங்களோட பேட்டிய படிக்கிறப்போ பெருமையா இருந்திச்சு. அப்படியே சேனலை திருப்பினா அங்கேயும் இந்த ஜோடி. காபி வித் அனுவில் டிகாஷனும் பாலுமாக கலந்து கலந்து அவங்க பேசியது நிஜமாகவே இன்பீரியாரிடி பையனுங்களுக்கு ஒரு கப் சுப்பிரியாரிடி 'சூப்' கொடுத்த மாதிரி சூப்பரோ சூப்பர்.

கலருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்? கோலி சோடாவுல இருக்கிற கோலிக்கும் சோடாவுக்குமான சம்பந்தம்தான் அது. கோலி இல்லேன்னாலும் சோடா ருசிக்கும்! நிறம் இல்லேன்னாலும் காதல் வண்ணமயமானது. இதை பற்றியெல்லாம் யோசிக்காம, 'யாரும் யாரும் யாராகியரோ'ன்னு தள்ளிப் போகாம, இந்த ஜோடிய பிடிச்சு 'ஜோ' தனியா 'டி' தனியா ஆக்கிறனும்னு ஒரு கும்பல் ட்ரை பண்ணி கிட்டதட்ட பதினைஞ்சு வருசமாச்சு. இப்போ இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா இந்த ஜோடி பின்னி பெடலெடுக்குது. இவ்வளவு சொல்லியும் அது தேவகுமாரன், ராஜயானின்னு புரியாம போச்சுன்னா, இத படிக்கிற நீங்க சினிமா ஏரியாவுல வீக்குன்னு அர்த்தம்.

என் பத்திரிகை நண்பர் ஒருவருக்கு பெரிய வருத்தம். "நல்லாதாங்க பேசிட்டு இருந்தாரு. ஆனா நாலு வாரத்துக்கு முன்னாடி நம்ம மேகசின்ல ஒரு பிட்டை போட்டுட்டாய்ங்க. இப்பல்லாம் போன் அடிச்சா, எடுக்கவே மாட்டேங்கிறாரு" என்று ராஜகுமாரன் பற்றி முணுமுணுத்தார் அவர். "நானும் படிச்சேன்"னு சொல்லிட்டு சிரிச்சேன். இந்த சிரிப்புக்கு பின்னாடி ஒரு மனுசனோட 'மாரு வலி' இருக்குன்னு புரியாமலேயே. 'இப்போதெல்லாம் யாராவது காலிங் பெல் அடிச்சா அவருதான் வந்து தெறக்கிறாராம். அதுவும் மாவரைச்ச கைய கூட துடைக்காம...' என்று முடிந்திருந்தது அந்த துணுக்கு. சில துணுக்குகள்தான் இப்படி சம்பந்தப்பட்டவர்களை துணுக்குற வைக்கும். இவ்வளவுக்கு பிறகும் நண்பரிடம் நட்பு வைக்க அவர் என்ன நாலுங்கெட்டவரா என்ன?

"அவங்க எத்தனை அழகு? அவங்க நினைச்சிருந்தா எவ்வளவு பெரிய..." சொல்லி முடிப்பதற்குள் ராஜகுமாரன் வாயை இப்போதும் ஒரு கை பொத்துகிறதென்றால் அதுதான் தேவயானியின் காதல். இந்த ராஜகுமாரனுக்காக தேவயானி செய்த தியாகங்களை அவர்களை விட அதிகம் கவனிக்க வேண்டியது எங்களை போன்ற பத்திரிகை சிகாமணிகள்தான். அப்படி ரொம்ப கவனிச்சப்போ கிடைச்ச சின்ன நகைச்சுவை 'கேக்'தான் இப்போ நான் சொல்லப் போறது.

'காதலுடன்' என்றொரு படத்தை இயக்கினார் ராஜகுமாரன். தயாரிப்பு இவருடைய திருமதிதான். நாய் கழுத்துல கட்டுன பிஸ்கட் மாதிரி, ஒருத்தருக்கும் பிரயோஜனம் இல்லாம போச்சு அத்தனை முதலீடும். ஆனால் கவுரவம் வருதோ, இல்லையோ. கடன் வந்தது சுனாமி மாதிரி. அதையெல்லாம் சீரியலில் நடிச்சு சீரியஸ் ஆக அடைத்தார் தேவயானி. இவ்வளவுக்கு பிறகும், மேற்படி துணுக்கு எழுத்தாளர்களின் துன்பம் பொறுக்காமல் மீண்டும் கணவரை டைரக்டர் ஆக்கியிருக்கிறார். படத்தின் பெயர் திருமதி தமிழ். இந்த படத்தில் இன்னொரு ஆபத்து, ராஜகுமாரன்தான் ஹீரோ(?)

படப்பிடிப்பு ஒரு கார்டனில் நடந்து கொண்டிருந்தது. வில்லனுடன் ஹீரோ ஃபைட் பண்ணுவது போல காட்சி. அதுவும் இவர் வேகமாக ஓடிவந்து வில்லனின் முகத்தில் குத்த வேண்டும். நேஷனல் ஜியாகரபி சேனலை கோடம்பாக்க டைரக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தால், எறும்பை கூட ஹீரோவாக்கி படம் எடுப்பார்கள். அதில் யானையெல்லாம் அடிவாங்கி அலறும். ராஜகுமாரனும் இந்த சீரியஸ் நகைச்சுவைக்கு தப்பவில்லை.

இப்படி காட்சிகள் எடுக்கும்போது பஞ்ச் சரியாக முகத்துக்கு அருகே வரும். ஆனால் குத்து முகத்தில் விழாது. நாலைந்து படங்கள் இயக்கிய ராஜகுமாரனுக்கு இது தெரியாமலிருக்காது. அவர் விட்ட முதல் குத்திலேயே வில்லனின் கண்ணில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. காரணம், ராஜகுமாரனின் மாவரைத்த கை(?) வலுவாக வில்லன் முகத்தை பதம் பார்த்ததுதான். லோ பட்ஜெட் படம் என்பதால் ஒரு கேமிராவைதான் ஸ்டண்ட் காட்சிகளில் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார் இவர்.

நாலைஞ்சு கேமிரா யூஸ் பண்ணனும் என்று ஆசைதான். ஆனால் நாய் விற்ற பணம் குரைக்காது என்றாலும், ஃபைட்டுக்கு இறைக்கிற காசு நிச்சயம் உதைக்குமே! அதனால் இதே காட்சியை வேறு வேறு கோணங்களில் எடுக்க முடிவெடுத்திருந்தார். கேமிராவை கிழக்காப்ல வச்சு ஓடிவந்து ஒரு குத்து. அப்படியே கேமிராவை மேற்காப்ல வச்சு இன்னும் வேகமா ஓடிவந்து ஒரு குத்து. மூணாவது குத்துக்கு கேமிராவை ரெடி பண்ணும்போது வில்லனுக்கு ஒரு பக்கம் வீங்கி ஐஸ் வக்கிற அளவுக்கு போயிருச்சு நிலைமை.

எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்த தேவயானி, (முதலாளியம்மாவாச்சே. ஸ்பாட்ல இருக்க வேணாமா?) "ஏங்க அவரு முகத்துல குத்துறீங்க? நீங்க குடுக்கிற பஞ்ச் ஒரு குறிப்பிட்ட இடத்தில நிக்க வேணாமா" என்றார் கோபமும் கொஞ்சலுமாக. இந்த ஆறுதல் வார்த்தைக்காகவே காத்திருந்த வில்லன், "அத ஏம்மா கேக்கிறீங்க. ஒவ்வொரு தடவ அவரு குத்தும்போதும் நான் சொல்லிகிட்டேதான் இருக்கேம்மா. அதுக்கு அவரு சொல்றாரு..."ன்னு சொல்லி ஒரு காரணத்தை சொல்ல, அதுவரைக்கும் இருந்த டென்ஷனை கூட மறந்திட்டு அடங்க மாட்டாம சிரிச்சுது அந்த யூனிட் மொத்தமும்!

"யோவ், எனக்கு கண்ணாடி போட்டாதான்யா எல்லாம் தெரியும். ஆனால் ஷ¨ட்டிங் நடக்கும்போது எப்படி போடுறது? ஒரு உத்தேசமா குத்துறேன். அதென்னவோ உன் மூஞ்சிய பேக்குது. கொஞ்சம் பொறுத்துக்கோய்யா..." இதுதான் வில்லனிடம் ராஜகுமாரன் சொன்ன பதில்.

முகம், கவுரவம். சில நேரங்களில் அதில் மூக்கு கண்ணாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவுரவம் !

Friday, April 30, 2010

நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....


மாயாண்டி குடும்பத்தார் படத்தோட இன்விடேஷனை பார்த்தவங்க அதை அப்படியே மடிச்சு எரவாணத்தில சொருகி வச்சிருந்தா ஒரு விஷயத்துக்கு பயன்பட்டிருக்கும். எப்பல்லாம் பசி எடுக்குதோ, அப்படியே விரிச்சு வச்சு பார்த்தா ஒரு முனியாண்டி விலாசுக்குள்ளே போயிட்டு வந்த திருப்தி இருக்கும். வேறொன்னுமில்ல. ஒரு பெரிய வாழை இலைய கொஞ்சம் கூட கட் பண்ணாம விரிச்சு வச்சு, அது கொள்ளாம கறி சோறு நிரப்பி தின்னுட்டு இருப்பாய்ங்க அண்ணன் தம்பிங்க நாலைஞ்சு பேரு. எனக்கு தெரிஞ்சு நாக்குல எச்சில் ஊற வச்ச இன்விடேஷன் அது ஒன்ணுதான்.

தமிழ்சினிமாவும், நான் வெஜ்ஜும்னு ஒரு கட்டுரை எழுதினா வள்ளலாரே வந்து, "போதும் நிறுத்துய்யா"ன்னு சொல்ற அளவுக்கு இருக்கும். அந்தளவுக்கு நாக்குக்கு 'இடைத்தேர்தல்' அந்தஸ்து கொடுக்கிறவங்க ரொம்ப பேரு இருக்காங்க சினிமாவுல.

ராமசாமி, சுப்பையா, கண்ணன்னு ஏராளமான நளபாக மன்னனுங்க வாழுற பூமிதான் நம்ம கோடம்பாக்கம். அவுட்டோர் போனா கூட, ஆடு கோழி புறா சகிதம் நமக்கு முன்னாடி அங்க போயி டேரா போட்டு நாக்குக்கு டேஸ்ட்டா ஆக்கி போடுறதுல இவங்களுக்கு இருக்கிற சந்தோஷம் இருக்கே, அதை நினைச்சாலே தனி ருசி. இதுல ராமசாமிங்கிறவரு சென்னையில் தனியா ஒரு மெஸ்சே நடத்தினார். மதியம் 12 லேர்ந்து 3 மணி வரைக்கும் இந்த ஓட்டல் இருக்கிற பக்கம் பெரிய டிராபிக் ஜாமே ஏற்படுகிற அளவுக்கு இருக்கும் இந்த ஜம் ஜம் விருந்து.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த தேவாமிர்த சாப்பாடே ஒரு கட்டத்துல போரடிக்குற அநியாயமும் நடக்கும். அப்படிதான் ஒரு அவுட்டோர்ல நடந்திச்சு. தென்காசி பக்கத்தில சத்யம் பட ஷ§ட்டிங். விஷாலும் நயன்தாராவும் நடிக்கிற காட்சிகளை ஷ§ட் பண்ணிட்டு இருந்தாங்க. பேக்கப்பும் சொல்லியாச்சு. மாலை நேரத்துல சூரியனே மயங்குது. மனுஷன் மயங்காம இருப்பானா?

"என் செலவுல எல்லாருக்கும் பார்ட்டி. வரச்சொல்லுங்கப்பா"ன்னுட்டாரு விஷால். அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்குதான் இந்த அன்பழைப்பு. தொழிலாளர்கள் அவங்கவங்க சவுகர்யத்துக்கு ஃபுல்லோ, ஆஃபோ அடிச்சுட்டு கவுந்திட்டாய்ங்க. ஏழு மணிக்கு சியர்ஸ் சொல்ல ஆரம்பிச்சவய்ங்க ராத்திரி பணிரெண்டு மணிக்கு பாட்டிலை கவுத்திட்டாய்ங்க. எல்லாரும் பேச பேச வேடிக்கை பார்த்திட்டு இருந்த முக்கியமான விவிவிவிவிஐபி நம்ம நயன்தாரா.

அந்த நேரத்தில அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் சொன்னாரு "இங்ழ்ங்க பாழ்ர்டர் கழைல டிபழன் பிழமாதமா இழக்குழாம்..." (அதாவது இங்க பார்டர் கடையில டிபன் பிரமாதமா இருக்குமாம்!)அவ்வளவுதான். "எடுறா வண்டிய"ன்னுட்டாரு விஷால். அத்தனை பேரும் சுமோவில் ஏறிக்கொள்ள புள்ளத்தாய்ச்சி பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டு போன மாதிரி அதிர அதிர கிளம்புச்சு வண்டி. உள்ளே ஒரு இருபது பேரு இடிச்சு புடிச்சு உட்கார்ந்திட்டாங்க. ஒரு ஓரமா நம்ம நயன்தாராவும்.

அதற்குமுன் பார்டர் கடையை பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்தால் உங்களுக்கு சுலபமாக இருக்கும். தென்காசிக்கும், குற்றாலத்திற்கும் நடுவில் எல்லையை ஒட்டி இருக்கிற கடைதான் இந்த பார்டர் கடை. லாரி டிரைவர்களுக்கு மட்டுமல்ல, குற்றாலம் போகிற குளுகுளுவாசிகளுக்கும் இந்த ஓட்டல் சொர்க்கம். புரோட்டாவை இலையில் போட்டு, அது நீச்சலடிக்கிற மாதிரி கோழி குருமாவை ஊற்றுவது இங்கு ஸ்பெஷல். ருசி? நாக்குல தெர்மா மீட்டரை வச்சா வெடிச்சுரும். அப்படி ஒரு டேஸ்ட்!

அவ்வளவு கிறக்கத்திலும், "மேடமும் நீங்களும் சேர்ந்து வர்றீங்க. அங்க கலவரமாயிரப்போவுது"ன்னாரு ஒரு அசிஸ்டென்ட். "யோவ்... அவ்வளவு பேரையும் ஒத்த கையில சமாளிப்பேன்"னாரு விஷால். போயிட்டே இருந்தாங்க எல்லாரும். எல்லைய தாண்டிய பிறகும் பார்டர் கடை மட்டும் வரவேயில்லை. குற்றாலம் பக்கம் போக வேண்டிய டிரைவர், அரை மப்புல திருநெல்வேலி பக்கம் வண்டிய விட்டுட்டாரு. நட்ட நடு ராத்திரியில வண்டி திருநெல்வேலி டவுன்லே போயி நிக்க, திசை மாறி வந்திட்டோம்னாய்ங்க அத்தனை பேரும்.

"பசி புடுங்கி எடுக்குது. இங்கேயே ஏதாவது...." இப்படி ஒருவர் ஆரம்பிக்க, அவர் வாயை பொத்தியது சாட்சாத் நயன்தாராவேதான். "எனக்கு பார்டர் கடை புரோட்டாதான் வேணும்" என்றார் கொஞ்சலும், கெஞ்சலுமாக! அவ்வளவுதான். "வண்டிய ரிவர்ஸ்ல விடு. பார்த்திருவோம்" என்றார் விஷால். மறுபடியும் குலுங்கலும், சிணுங்கலுமாக 100 கிலோ மீட்டர் பின்னால் பயணிக்க ஆரம்பித்தது வண்டி.

உபரி தகவல் ஒன்று. இந்த பார்டர் கடையில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். கோழி வெந்து கொண்டிருக்கும். விருந்தாளிகள் மென்று கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த இடத்துக்குதான் விடியற்காலை 2 மணிக்கு போய் சேர்ந்தது இந்த டீம்.

கடையை பார்த்ததும் ஹோவென்ற சந்தோஷ கூச்சலோடு இறங்கினாங்க ஒவ்வொருத்தரும். முதல்ல இறங்கிய மெட்ராசு ஆளுங்களை அலட்சியமாக கவனிச்சுட்டு கோழிக் காலை வெடுக்கென்று கடிச்சு துப்பிக் கொண்டிருந்த லாரி டிரைவருங்களுக்கு கடைசியா இறங்கிய இரண்டு பேரை பார்த்ததும், விலுக்கென்று மனசுக்குள் சந்தோஷம். இங்க பாருங்கடோய்...னு எழுந்து ஓடினாய்ங்க. அவ்வளவு பசியிலும் நல்லாயிருக்கீங்களாண்ணே என்று நலம் விசாரிச்சாரு நயன்தாரா.

அரக்க பறக்க பறக்க இலையை போட்டு ஆவி பறக்க கோழி குழம்பை ஊற்றினாரு சர்வர். அதில் புரோட்டாவை மிதக்க விட்ட சர்வர் அண்ணாச்சிங்க அடுத்தடுத்து கொண்டு வந்து அடுக்கிக் கொண்டேயிருக்க, கோழி குருமா முழங்கை வரைக்கும் வழிந்தது நயன்தாராவுக்கு. ஆத்தா... எப்பூடி சாப்புடுறாங்கன்னு அத்தனை கூட்டமும் இவங்களை வேடிக்கை பார்த்தது.

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் கூட இத்தனை பரபரப்பு இருந்திருக்காது. ஆனால் இந்த பார்டர் கடையில் நயன்தாரா உட்கார்ந்த ஏரியாவில் அத்தனை பரபரப்பு. இந்த இடத்துக்கு இப்பவும் நயன்தாரா நாற்காலின்னு பேரே வச்சுருக்காங்கன்னா பாருங்களேன்.... அதில உட்கார இப்பவும் ஒரே அடிபுடிதானாம்!