
பேசிக்கலா அவரு ஒரு கவிஞர். அவர் எழுதுற கவிதைகளை சின்னப்பிள்ளைகளோ, பெண்களோ படிக்க முடியாதுன்னாலும், அதுக்குன்னு ஒரு கூட்டம் மயங்கிக் கிடக்கும். (இருபது வயதில் முலையுண்டு காம்பில்லை, நாற்பது வயதில் காம்புண்டு முலையில்லை... இவரோட கவிதைக்கு இது ஒரு பருக்கைன்னா பார்த்துக்கோங்களேன்)
"இப்போ குடிக்கறதில்லை"ன்னாரு எங்கிட்ட. சந்தோஷமா இருந்திச்சு. ஏன்னா அவரு ஒரு 'நீர் வாழ்' தாவரம்! எது இல்லேன்னாலும் இருப்பாரு. அது இருக்கணும் அவருக்கு. நான் துவக்கத்தில் வொர்க் பண்ணிக் கொண்டிருந்த பத்திரிகைக்கு அடிக்கடி வருவாரு. கைநிறைய பேப்பரை அள்ளி பப்ளிஷரிடம் கொடுப்பாரு. அத்தனையும் மேலே நான் சொன்னேனே, அதே டைப் கவிதைகள். கையோடு சுட சுட பணம் கொடுக்கணும். வாங்கிட்டு போயி, குடிப்பாரு. குடிச்சிட்டு எழுதுவாரு. மறுபடியும் வருவாரான்னு கேட்காதீங்க. கட்டாயம் வருவாரு.
இவருக்கு உதிரியா உதிரியா கொடுக்கறதுக்கு பதிலா, இவரையே எடிட்டராக்கி ஒரு பத்திரிகை நடத்தினா என்ன என்ற முடிவுக்கே வந்திட்டாரு பப்ளிஷர். ஒரு முறை இவரு வர லேட்டாயிருச்சுன்னு கூப்பிட ஆளனுப்பினாங்க. போன பையன் திரும்பி வந்து "அவரு இப்போ வர மாட்டாருங்க"ன்னான். என்னடான்னு கேட்டதுக்கு அவன் சொன்னான், "அவரு இப்போதான் வீட்டிலே இருக்கிற காலி பாட்டிலையெல்லாம் கவுத்து சொட்டு சொட்டா தீர்த்தம் புடிக்கிறாரு. அவரு ரூம்லே ஆயிரம் பாட்டிலாவது இருக்கும். அவரு எப்போ கவுத்து, எப்போ வந்து...." ஒரு ஃபுல் வாங்கித் தரேன்னு பையன் கூப்பிட்டிருந்தாலும் அவர் வந்திருக்க மாட்டார். ஏன்னா, விக்ரமாதித்யன் அப்படிதான்!
ஒருமுறை என்னிடம் கேட்டார். இந்த உலகத்திலேயே சிறந்த கவிஞர்கள் மூணு பேரு யாரு? இந்த கேள்வியின் போது அவர் குழறுகிற அளவுக்கு குடிச்சிருந்தாரு. பாரதியார்... ம், பாரதிதாசன்.... ம், கண்ணதாசன்.
'.......ரு' நான்யா! நான்தான். அவர் குடித்திருக்காவிட்டாலும் இப்படி சொல்லக் கூடியவர்தான். ஆனாலும் அவர் மேல் எங்களுக்கு பெரும் மரியாதை உண்டு. சில விஷயங்களை வெளிப்படையா பேசுவாரு. அவரு தங்கியிருக்கிற காம்பவுண்டில் வரிசையாக வீடு. சாயங்கால நேரத்தில் தலைகால் புரியாம போகிற இவர், தனது வேட்டியை கூட அங்கங்கே தொலைத்துவிட்டு போவார். தலை தெறிக்க ஓடுவார்கள் காம்பவுண்ட் பெண்கள்.
மறுநாள் நேற்றைய பாசிசத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பொழுது புலரும். ச்சும்மா தும்பை பூ போல வேட்டி சட்டையோடு வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். தண்ணீர் எடுக்கும் பெண்களிடம், என்ன தங்கச்சி... பாக்காமலே போறீங்க என்பார் வெள்ளந்தியாக. இவர்கள் அனைவரும் முதல் நாள் இவரை பார்த்து தெறித்து ஓடிய பெண்கள்! சொல்லவா முடியும், முதல் நாள் அட்டகாசத்தை. இல்லேண்ணே... என்றபடியே நகர்வார்கள் பெண்கள்.
சரி, விக்ரமாதித்யனை எங்கே பார்த்தேன்? இரண்டு நாட்கள் போகட்டும் சொல்கிறேன்...
2 comments:
enna ore suspense? sikkiram sollunga enge paarthingannu
I can guess. You should have seen him at bar :)
Post a Comment